Saturday, October 28, 2017

Photo......





பழைய நாட்களில் photo எடுக்கும் வழக்கம் அவ்வளவாக கிடையாது.
தஞ்சாவூரில், எனக்கு சுமார் 5 வயது இருக்கும்போது, அப்பா, ஒரு group photo எடுக்க decide பண்ணினார்.
நாங்க sisters எல்லாம் ஒரே துணியில், பாவாடை, சட்டை , தாவணி...uniform !! (நான் மட்டும், அதே துணியில், என் life லேயே போட்ட ஒரே கவுன் !!)
eldest sister புடவை.
என் சின்ன அண்ணா.. நல்ல சட்டை இல்லை என்று ஒரே அழுகை... கண்ணெல்லாம் சிகப்பு ! போட்டோவிலும் தெரியும் !
என் அம்மா அந்த போட்டோவில் super look !! she must have been around 37/38 yrs. (i have separated it & saved)
கல்யாணத்துக்குப்பிறகு பிறகு, எங்கப்பா உத்தரவு படி, முதல் வேலை...
Mount Road G.K.Vale இல், நின்று கொண்டு ஒரு full size photo & பாதி (bust size) photo ...
right side daughter or d' in law... left side s' in law or son. .... same pose !!
எல்லாரும் எடுத்து ஒரு காப்பி அப்பாவுக்கு...
அப்பா ஆத்தில்.. ஹால் சுவற்றில் வரிசையாக.. ஒவ்வொருத்தருக்கும் இரண்டு போட்டோ... age order இல் மாட்டப்பட்டிருக்கும்...
half - one row... full one row...
இதை தவிர...
M.S.Subbulakshmi, D.K.Pattammaal, N.C.Vasanthakokila, U.R.Jeevarathinam !!
(coming to think of it, why no male singer like GNB, Madurai Mani Iyer, Semmangudi, Ariyakkudi .. etc. who were very famous then ??)
நான், என் கல்யாண reception saree, Black beeds necklace போட்டு எடுத்திருந்தேன்.
என் புக்காத்தில் அந்த மாதிரி எடுக்கும் பழக்கம் இல்லை..
(with great difficulty i got permission to take the photo for my father's sake 5 months after marriage !!)
என் படத்தை பார்த்ததும்.. மாமியாருக்கு தன பெண் எடுக்க வில்லையே என்று ஆதங்கம்.
3 years முன்னாடி கல்யாணமாகி, 2 வயது குழந்த இருந்த , என் நாத்தனாரை வர சொல்லி, அதே புடவை, அதே ரவிக்கை, அதே கருகமணி மாலை, அதே போல் ஒற்றை பின்னல், நிறைய மல்லிகை பூ (இரண்டு பக்கமும் தெரிய வேண்டும் !!) ... அதே G.K.Vale இல், அதே மாதிரி இரண்டு போட்டோ எடுக்க வைத்தார் !!
அடுத்த நாத்தனாருக்கு, 5 வருடம் கழித்து கல்யாணம். அந்த புடவையை பத்திரமாக வைத்திருந்து...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
7 வருடங்கள் கழித்து... மச்சினர் கல்யாணம்...
அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!
25 வருடங்களுக்கு பிறகு, என் கடைசி மச்சினனுக்கு கல்யாணம் ஆனபோது...
அப்பா... அந்த புடவை இல்லை...!! (உழைத்து உழைத்து உயிரை விட்டு விட்டது !!)

1 comment: