Sunday, October 22, 2017

மன்னி ........

"மன்னி " (அண்ணி) என்பது ஒரு நல்ல உறவு.
ஒரு நடுத்தரத்துக்கு கீழே இருந்த, 9 பிறந்து, 7 வளர்ந்த குடும்பத்தின், கடைசி குழந்தையாக, செல்லமாக, சலுகைகளுடன், வளர்க்கப்பட்டு,....அம்மா, அப்பா, 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தின், முதல் மருமகளாக அனுப்பப்பட்டு...."மன்னி" என்று நாலு கீழ் கிளைகள் அழைத்த பொது...மகிழ்ந்துதான் போனேன் !! எவ்வளவு இனிமையான பொறுப்புகள்
விடி காலையில் நான் செய்து கொடுக்கும் tiffin ஐ , ஆசையோடு சாப்பிட்டு college க்கு செல்லும் பெரிய மைத்துனன்...
"மன்னி, record எழுதி குடுங்களேன் " என்று என் திறமையை மதித்து , வேலை கொடுத்த நாத்தனார்...
"மன்னி சாதம் ஊட்டட்டும் " என்று சாப்பிட்ட 7 வயது மச்சினன்....
எனக்கு ஏதாவது உடம்பு முடிய வில்லை என்றால் உண்மையான பாசத்தோடு , இன்றும் பதறும் இந்த உறவுகள் !!
வீட்டிலே ஒருபுது உறவு வளைய வருவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட குடும்பம்...!!
50 வருடங்களுக்கு அப்புறமும் , இன்னமும் "மன்னி" என்று கூப்பிடும் குரலில் பாசம் தெரிகிறது....
kaalam antha paasatthai koottatthaan seithirukkirathu... kuraya villai !!
இப்போதும் சந்தோஷப்படுகிறேன்....
முதல் மாட்டுப்பெண்ணாக , பெரிய மன்னியாக , மச்சினர் குழந்தைகளுக்கு பெரியம்மாவாக , நாத்தனார் குழந்தைகளுக்கு மாமியாக ...இன்றளவும் நிலைத்திருக்கும் உறவுகள் !! இதை ஒரு Blessing என்றுதான் நினைக்கிறேன் !!!

No comments:

Post a Comment