Monday, October 30, 2017

cooking tips - 1

காலையில், முதல் காரியமாக, காப்பி கலந்து, ஆற்றி, நுரையுடன், எல்லார்க்கும் முன்னாடி, (husband எழுந்துட்டா கூட குடுக்க கூடாது), பதட்ட படாம, சாப்பிட்டு, வேலையை ஆரம்பிக்கவும் !!!!!
1. சேப்பங்கிழங்கை முதல் நாளே 3/4 பாகம் வேக வைத்து (குக்கர் இல் அல்ல), உரித்து, கட் பண்ணி fridge இல் வைத்து, மறு நாள், அதில் உப்பு, பெருங்காயம், சாம்பார் பவுடர், மஞ்சள் போடி கலந்து, பிசிறி, கொஞ்ச நேரம் வைத்து, தாளித்த பின், போட்டு கலந்து, சில நிமிடங்களுக்கு அப்புறம், transfer to a shallow non-stick frying pan... spread... ஒத்தை ஒத்தையாக..சிம் இல் வைத்து, அப்படியே விட்டு விட்டால், கொஞ்ச நேரத்தில் crisp கரி தயார்.
வாழை, உருளை,சேனை இதை எல்லாம் கூட தளித்த பின் transfer to a shallow non-stick frying pan... spread...
2. பருப்பு உசிலிக்கு முதல் நாளே அரைத்து, இட்லி தட்டில் ஊற்றி, வெட்டில் வைத்து, எடுத்து, fridge இல் வைத்து, மறு நாள் உதிர்த்து உசித்தால், என்னை அதிகம் இல்லாமல், உசிலிக்கலாம்.
3 . சாம்பாருக்கு அரைக்க வறுக்கும்போது, ரொம்ப வறுக்காமல், 75 % வறுத்தால் போதும் வாசனையாக இருக்கும்
4 . இட்லி க்கு வெங்காய சாம்பார் செய்யும்போது, அரைப்பதற்கு, தனியா, பொட்டுக்கடலை (கடலை பருப்புக்கு பதில்), வெங்காயம், தேங்காய் - பச்சையாக (வறுக்காமல்) அரைத்து, கடுகு, வெந்தயம், மி.வற்றல் தாளித்து, சின்ன வெங்காயம் வதக்கி புளி குறைவாக விட்டு, ஒரு தக்காளி கட் பண்ணி போட்டு, வெந்த காரட் ஒன்று போட்டு (நறுக்கி தாங்க..!!!), சாம்பார் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து, ரொம்ப நேரம் கொதிக்க விடாமல், பருப்பு, அரைத்த விழுது சேர்த்து, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
5 . பருப்பு போடும்போது, வெந்த பருப்பை மிக்ஸ் யில் ஒரு சுற்று அரைத்து விடுவேன். ரசம், சாம்பாரில், முழித்து பார்க்காமல் இருக்கும்.
6 . ஊத்தப்பத்துக்கு , பச்சை அரிசி ஒரு கப், புழுங்கல் அரிசி ஒரு கப் ஊற வைத்து, துவரம் பருப்பு 3 / 4 கப், வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஊறவைத்து, தனி தனி ஆக, அரைத்து, (பருப்பு, வெந்தயம் கொட கொட ன்னு அரைக்கணும்) , உப்பு சேர்த்து, கலந்து, கொஞ்சம் அதிகமாக புளிக்க வைத்து, சின்ன தாக வெட்டிய தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை , துருவிய காரட் எல்லாம் தனி தனியாக வைத்துக்கொண்டு, கல்லில் கெட்டியாக தோசை ஊற்றி, veg தூவி, சிம் இல் வைத்து, எக்ஸ்ட்ரா எண்ணெய் ஊற்றி, திருப்பி போட்டு, நன்றாக வேக வைத்து, கொத்த மல்லி சட்னி உடன் சாப்பிடவும். (சரஸ்வதி, கரென்ட் போவற்கு முன்னாள் சட்னி அரைக்கவும் !!)
7 . சப்பாத்திக்கு செய்த கரி, salad ஏதாவது மிஞ்சினால், கவலை வேண்டாம். மிக்ஸ் இல் அரைத்து, stuffed பராத்தா செய்யலாம்
இதை எல்லாம் படித்து, முத்து லக்ஷ்மி மாதிரி "அதான் எனக்கு தெரியுமே, அதான் எனக்கு தெரியுமே" என்று சொல்கிறவர்கள், "அதாங்க எனக்கு தெரியாது" என்கிறமாதிரி ஏதாவது எழுதலாம். !!!!!

No comments:

Post a Comment