Monday, October 9, 2017

பிறந்தநாள்.....

3ம் தேதி பிறந்தநாள். அன்று ரொம்பவும் அம்மா அப்பா ஞாபகம்.
நான் செல்ல மகளாக இருந்ததுமல்லாமல், மாத முதலில் பிறந்த நாள் வருவதால், அப்பாவுக்கு எனக்கு ஏதாவது வாங்கி தருவதில் மகிழ்ச்சி.
நான் S.S.L.C. படிக்கும்போது, ஸ்கூல் கடைசி வருஷம் என்பதால் அப்பாக்கு எனக்கு புது ட்ரெஸ் வாங்கித்தர ஆசை. ஆனால் பண வசதி இல்லை. அப்பா அதற்காக அழுதது, இப்போதும் பசுமையாக நினைவில் இருந்து அழுத்துகிறது. வழக்கம் போல தீபாவளி பாவாடை தாவணியை போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கு போனேன்.
டிசம்பர் சீசனில் ரோஜாப்பூ நிறைய . சீப்பாக கிடைக்கும். என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா 1 அணாவுக்கு 25 ரோஜாப்பூ என்று 50 பூ வாங்கி (ரோஸ் நிறம் மட்டும்-பாக்கி கலர் ரோஜா வெல்லாம் நான் அப்போது பார்த்ததே இல்லை) - பிளாஸ்டிக் கவர் எல்லாம் கிடையாது - ஆதலால் வழக்கமான மஞ்சள் துணிப்பையில் போட்டு தருவாள். எல்லா டீச்சருக்கும் குடுப்பேன். எல்லோரும் அதை வைத்துக் கொள்ளும்போது பெருமையாக இருக்கும். சாகலேட் பழக்கம் எல்லாம் கிடையாது.
ஆனாலும் அப்போது இருந்த சந்தோஷம் இப்பொது என்ன வாங்கிக் கொண்டாலும் கிடையாது. அம்மா, அப்பா பாசத்துக்கு ஈடேது??

No comments:

Post a Comment