Wednesday, January 10, 2018

APPA......




அப்பா பிறந்தது 1899 . January 11. 'சேத்தூர்' கிராமம். காரைக்கால் கிட்ட. தஞ்சாவூர் ஜில்லா படிச்சது அங்கேயே ஏதோ ஸ்கூல் - 9 கிளாஸ் வரைக்கும்.
பிரிட்டிஷ் கால படிப்பு... இங்கிலீஷ் எல்லாம் ரொம்ப நன்னா இருந்திருக்கணும். அப்பாக்கு Maths தான் பிடித்தது.
மாயவரத்தில் அப்பாவோட மாமா .. காவிரிக் கரையில அக்ரஹாரத்தில பெரிய வீடு... என்ன அப்பா ஒரு தரம் அழைச்சிண்டு போயிருக்கா..
அப்பா, ஹை ஸ்கூல் படிச்சது மாமாவாத்துல தங்கி...
அப்போல்லாம் இது ரொம்ப சகஜம்... உறவுக்காராத்துல தங்கி படிக்கிறது...
சாப்பாட்டுக்கு காசு குடுக்கறது, அவா திட்டராளா, அடிக்கராளான்னு பாக்கறது, சாப்பாடு சரியா போடராளா ன்னு கவலைப் படறது... ஒண்ணும் கிடையாது...
அவாத்து வழக்கம் என்னவோ அதத்தான் தங்கி படிக்கிற குழந்தையும் follow பண்ணும்... எதிலும் வித்தியாசம் பாராட்ட மாட்டா..
அம்மா அப்பாவ விட்டு இருக்கானே ன்னு கொஞ்சறதும் இல்ல... நமக்கு பாரமா இருக்கானே ன்னு மனசால கூட நேனைக்கறதும் இல்ல.
அப்பா, குத்தமாகவோ, சோகமாகவோ அல்லது ஸ்பெஷல் ஆகவோ தன் மாயவரம் life பத்தி சொன்னது இல்ல. ஏன்னா.. எல்லாமே நார்மலா தான் உணர்ந்திருக்கா !!

காவிரியில் தினமும் மணிக்கணக்கில் நீச்ச்சலடித்தது பத்தி நெறைய சொல்லி இருக்கா.
S.S.L.C. பாஸ் பண்ணினதும்  Intermediate படிக்க, அப்பா மெட்ராஸ் போயிருக்கா.. பிரெசிடென்சி காலேஜ் ... 1916 ல , ஒரு குக்கிராமத்திலேர்ந்து, அப்பாக்கு எப்படி அந்த தைர்யம் வந்துது... அதுவும் படிக்காத அம்மா அப்பா ஆத்துலேர்ந்து !!
அப்போ அப்பாவோட பெரிய அக்காக்கு கல்யாணம் ஆயிடுத்து.அத்தை மெட்ராஸ் ல குடுத்தனம்....
அப்பா B . A . Mathsபடிச்சுட்டு , Law சேந்தா.. அது முடிக்க முடிக்க கல்யாணம்ஆயிடுத்து. அம்மாவ  சேத்தூர்ல  விட்டுட்டு, அப்பா govt ல சர்வேயர் ஆ வேலைக்குசேந்தா. அதிலேயே இருந்திருந்தா, நல்ல நெலமைக்கு வந்திருப்பா... நான் சொல்றதுபணத்தாலே. ஆனா அப்பாக்கு teaching தான் புடிச்சுதாம். அதானாலே, Saidapet  teachers காலேஜ் ல சேந்து B . T . பண்ணி இருக்கா.
தஞ்சாவூருல Girls' Christian School la Maths Teacher aa வேலை பண்ணஆரம்பிச்சா.. 1923 ல. 1959 ல... 36 வருஷ சர்வீசோடretireஆனா....
படித்து முடிக்கும் வரை ... நாலு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை...
வேலைக்குப் போகும்போது, எட்டு முழம் வேஷ்டி, அரைக்கை சட்டை, மேலே அங்கவஸ்திரம்...

அப்பாவுக்கு நிறைய ஞானம். நிறைய படிப்பா. படித்ததை எங்களோடு ஷேர் பண்ணிப்பா.
கர்நாடக சங்கீதம் expert . ஆனால் முறையாக படித்தது இல்லை. கேள்வி ஞானம். ஹார்மோனியம் , கோட்டு வாத்யம் ரொம்ப நன்னா வாசிப்பா.

எலெக்ட்ரிக்கல் வேலை எல்லாம் தானே செய்வா. செருப்பு தைப்பது முதற்கொண்டு எல்லாம் தானே.
அப்பாவ பத்தி எல்லாம் சொல்லனும்னா, ஒரு தனி புக் எழுதணும்... அவ்வளவுஇருக்கு...
அந்த மாதிரி அப்பா கிடைக்கக் குடுத்து வெச்சிருக்கணும்.

அப்போ, அப்பாவோட அடுத்த தங்கைக்கு பாட்டி அவசர அவசரமா கல்யாணம் நிச்சயம் பண்ணிஇருக்கா. மாப்பிள்ளை ஏற்கனவே கல்யாணம் ஆனவர். பெரிய பணக்காரர். அத்தை ரொம்பசிகப்பாகவும் அழகாகவும் இருப்பா. 16 வயசு ஆயிடுத்துன்னு பாட்டிக்கு அவசரம்.அத்திம்பேர், இந்த ஊருக்கு தற்செயலா வந்து, அத்தைய பாத்துட்டு, கல்யாணம்பண்ணித்தரச்சொல்லி ஒத்த கால்ல நின்னாராம்... தெரிஞ்சே, ரெண்டாம் தாரமா, செலவில்லாமகல்யாணம் பண்ணலாம்னு  நெனச்சு ஒரே வாரத்துல கல்யாணம் பண்ணி அனுப்பிச்சுட்டாளாம் .அப்பாக்கு ஒரே கோபம்.
அதை விட கொடுமை... அத்தைய அவர் தனி வீட்டில் வைக்க, மூத்தாள், கடுப்பாகி சண்டைபோட .. அத்தைக்கும் சமத்து போறாது... தனக்குன்னுஒண்ணும் இல்லாம ஒரு வருஷத்துல ,அம்மாவத்துக்கு வந்துட்டா... அதுக்கப்புறம் ஒரு வருஷம் கூட அவர் உயிரோட இல்ல.வயத்து வலின்னு படுத்தவர், எவ்வளவு சொல்லி அனுப்பியும்போகாம அவர் இறந்து போனப்புறம்அத்தை போய், காரியத்தை முடிச்சுட்டு வந்துட்டாளாம்... அப்புறம் தான்பிரளயம்...
பாட்டி, ரொம்பப் பிடிவாதம்... அப்பாக்கு தெரியாம, அத்தைய, நார்மடி புடவை கட்டவெச்சு, கோலம் பண்ணிட்டா. அதுக்கு கோபப்பட்டுண்டு அப்பா கடைசி வரைக்கும் பாட்டிகிட்ட பேசவே இல்லையாம்.
கடைசி அத்தையையும்பாட்டி, பட்டுக் கோட்டையில், ஒரு மிராசுதாரருக்கு, ரெண்டாம்தாரமாக குடுத்துட்டா. ஆனா, அங்கே பிரச்சனை இல்லை. முதல் தாரம் உயிரோட இல்லை.
இதுக்கெல்லாம் காரணம் தாத்தாவின் பொறுப்பில்லாத்தனம்... பணம் அழித்தவிதம்...
விதவையான அத்தைக்கு, சொத்தெல்லாம் கிடைக்கல்ல... ஆனா, மூத்தாளோட முதல் பிள்ளை, அத்தைய விட வயசு அதிகம், அவர் ஒரு  ஞாய தர்மத்துக்குக் கட்டுப் பட்டு, வருஷத்துக்கு 10 கலம் நெல்லு, 800 ரூ. பணம் குடுத்தார். நாங்க எல்லாம் மெட்ராஸ் வந்தப்புறம் கூட அதுதொடர்ந்தது. விலை வாசி ஏற,அவரே, நெல்லை நிறுத்தி விட்டு, பணமும் சேர்த்துக்குடுத்தார். அவருக்கப்புறம் அவர் பிள்ளை வந்து குடுப்பார். அத்தை செத்துப் போன பொதுகூட அவர் வந்திருக்கார். எவ்வளவு நேர்மை !!!

பாட்டி, தாத்தாக்கு அப்புறமா , எங்க அத்தை தனியா அந்தவீட்டுல இருந்தா...
நான் லீவுக்கு போயிருக்கேன்...
எங்கக்காக்கு மேலாத்து குஞ்சலா ரொம்ப friend . அங்க எல்லாம திசைய வெச்சுமேலாம், கீழாம், அப்புறம், எதித்தாம், கோடி ஆம் ன்னு அடையாளங்கள்...

நாங்க போனா, அத்தை நன்னா சமைச்சு போடுவா... வெறகு அடுப்புல, கல்ல போட்டு, சின்னதா எரிய  விட்டு, பட்டு பட்டா தோச வாத்து போடுவா.. அத்தை வெச்சிருந்த அந்தசின்ன நல்லெண்ண ஜாடி கூட எனக்கு படம் மாதிரி நன்னா ஞாபகம் இருக்கு !! பாக்குமரத்துல அவ்வளவு பாக்கு காச்சிருக்கும். அத பறிச்சு, கொட்ட பாக்கு எடுப்பா..

ஒரு தடவ, அத்தை தனியா இருக்கறச்சே, வருஷப் பணம் வந்தத ஒரு திருடன்பாத்துட்டான்... ராத்திரி அத்தைகொல்லை கதவ திறந்து போகரச்சே... அத்தை வாயில துணிஅடச்சு, கைய கட்டிப் போட்டுட்டு, பணத்த எடுத்துண்டு போயிட்டான்.. அத்தைக்கு நெஞ்சுவலி வந்துடுத்து... செய்தி வந்து அப்பா போய், அத்தைய தஞ்சாவூருக்கே அழைச்சிண்டுவந்துட்டா...
அப்புறம் கடைசி வரைக்கும் அத்தை எங்க கூடத்தான்...

அப்பா வீட்டை வாடைகைக்கு விட்டுட்டு, மாந்தோப்ப குத்தகைக்கு விட்டா... குத்தகைகாரன் சரியா பணம் தரல்லேன்னு, 1955  ல இருக்கும்னு நெனைக்கிறேன்... அந்த மாந்தோப்பவித்துட்டா... 800 ரூபாய்க்கு... அம்மா அதை அப்படியே பவுன் காசா மாத்திவெச்சுட்டா... பவுன் 40 ரூ ன்னு 20 பவுன் வந்துது.

வீடு மட்டும் வாடகைக்கு... 1980 கள்ல  வாடகை 5 ரூ. அதுவும் ஒழுங்கா வராது...வீட்ட 5000 ரூ க்கு வித்துட்டா... எங்க கிட்ட சொல்லி இருந்தா நாங்க யாராவது அதஇன்னும் மேல குடுத்து வாங்கி இருப்போம்...
பெரிய அண்ணாக்கு ஒரே கோபம்...என்னாட்டமா எங்க எல்லாருக்கும் இந்த பழசெல்லாம்பசுமையான நினைவுகள்...
அண்ணா கேஸ் போடப்போறேன் ன்னு பய முறுத்தி, வாங்கினவா பயந்து போய் .. அப்புறம்நாங்க எல்லாரும்கையெழுத்து  போட்டுக் குடுத்துட்டோம்...
ஒரு 10 வருஷம் முன்னே நான் போனேன்.. அந்த மாமி, ரொம்ப ஆசையா, எனக்குபோன்விட்டா எல்லாம் குடுத்து, வெத்திலை பாக்குல 10 ரூ வெச்சுக் குடுத்தா...
இப்ப போன மாதம் போனப்ப, அந்த மாமி இல்ல... வீடு பெண், மாப்பிள்ளைக்கு... முன்பக்கம் மாத்தி கட்டிட்டா... கொல்லை பக்கம் மட்டும் அப்படியே இருக்கு... பாக்குமரமும் இருக்கு... !!