Monday, October 9, 2017

பதினெட்டாம்பெருக்கு

காவேரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு
இந்த ஐந்து நதிகளும்... திருவையாறில்...தஞ்சாவூருக்கு மிக அருகில்...
இதை எதற்கு இங்கே சொல்கிறேன் ?
பதினெட்டாம்பெருக்கு வருகிறது. இது அனேமாக பெண்களை முன்னிறுத்தி செய்வதுதான்...
காவிரியில் புதுத் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாய்ந்து வரும்..
அதை கொண்டாடி, காவிரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கலந்த சாதங்கள் கட்டி எடுத்துக்கொண்டு, இருப்பதற்குள் நல்ல ட்ரெஸ் போட்டுக்கொண்டு, மருதாணி இட்டு, வளையல், மாலைகள், கதம்பம் பூ அலங்காரங்களுடன், குடும்பம் குடும்பமாக ஏதாவது ஒரு நதிக்கரைக்கு போவோம்...மாலை 5 மணிக்கு...வெயில் தாழ.
நடந்துதான் போவோம்...
அங்கு... எவ்வளவு குடும் ங்கள்...மகிழிச்சி ததும்ப, சிரித்த முகத்துடன்..!! குழந்தைகள் எல்லாரும் சேர்ந்து ஓடி பிடித்து விளையாட்டு ஆரம்பமாகிவிடும்..
Brahmin அல்லாத community களில் சில பழக்கங்கள் உண்டு...
அகல் ஏற்றி நதியில் விடுதல்; தாலி சரடு மாற்றுதல்; பெண்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்தல் ...இப்படி.
(ஆண்கள் எல்லாம் DUMMY தான் .. சாப்பாடு உண்டு... செலவு, அழைத்து போய் வருவது எல்லாம் அவர்கள் பொறுப்பு .. அவர்களையும் சில சௌகரியங்களுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் !! )
அப்புறம் என்ன... பகிர்ந்து உண்ணுதல் தான்... கையில் தாமரை இல்லை, தையல் இல்லை வைத்து, அளவு தெரியாமல் சாப்பிட்டு, கல்யாணம் ஆன பெண்கள் வெற்றிலை பாக்கு போட்டு வாய் சிவந்து.. (கட்டிக்கொடுத்த சோறும், கத்துக்கொடுத்த வித்தையும் எத்தனை நாளைக்கு !!!)
இந்த ஒரு நாள் மகிழ்ச்சி.. ஒரு ஆண்டு தாங்கி.. அடுத்த ஆடி பிறக்கும்போது... சந்தோஷமாக எதிர் நோக்க வைக்கும்.
பெண்களே.. எந்த ஊரில் இருந்தாலும்.. உறவுகளை / நட்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள்... இப்போதே plan பண்ணுங்கள்.. ஆளுக்கு ஒன்று என்று சமையல் வேலையே பகிர்ந்து கொள்ளுங்கள்... நதி, குளம், ஏறி.. ஒன்றும் இல்லை என்றால்..இருக்கவே இருக்கிறது மொட்டை மாடி...
திறந்த வெளிதான் சந்தோஷம்.. இயற்கையோடு ஒன்ற முடியும்.. !!
அந்த ஒரு நாள் ஆபீஸ், வேலை, tension எல்லாவற்றையும் விட்டு, மறந்து., நல்ல ட்ரெஸ், நகைகள் போட்டு, வயதை மறந்து... கூடி கும்மி அடித்து கொண்டாடினால்.. புது ரத்தம் உடலில் பெருகும்...
ஒரு சின்ன அட்வைஸ் ...
Traditional பட்டு புடவை, சின்ன பெண்களுக்கு பாவாடை, சட்டை, தாவணி, நகைகள்
தலை நிறைய பூ, கை நிறைய வளையல், மனம் நிறைய சந்தோஷம், வாய் நிறைய சிரிப்பு... இவற்றுடன் கொண்டாடுங்கள் !
தலையில் வைக்கும் ஒரு முழம் மல்லிகை பூ, நம் மனதை மிக சந்தோஷமாக வைக்கும்... என் அனுபவத்தில் உணர்ந்தது !!

2 comments:

  1. தலையைப் பின்னினால் தானே பூ வைத்து மகிழ! தலையோ விரிந்து இருக்கும், இல்லைனா பாப் கட்! :(

    ReplyDelete
  2. தஞ்சை ஜில்லாவா நீங்க? காவிரிக்கரை!

    ReplyDelete