Tuesday, November 21, 2017

Fashion & VK

Fashion ன்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ நான். காலேஜ் சேந்தப்புரம் ஒரே மலைப்பு city  பெண்களைப் பார்த்து. தெரியாதது மட்டுமில்லை.. நெறைய பிடிக்காது.. (வளர்ப்பு அப்படி).. கட்டுப்படி ஆகாது.. அதனால் அதைப்பத்தி யோசிச்சதே இல்லை.
காலேஜில் P.U.C யில் பாவாடை தாவணி, B.Sc. யிலிருந்து புடவை compulsory.

காலேஜ் வேலைக்குப் போனப்புறம், புடவை தலைப்பு, நீளும், குறையும், ஆனால் யாரும் பின்னு குத்தி பாக்க முடியாது. சல்வார் கமீஸ் போட யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த குட்டை தலைப்பை மட்டும் follow பண்ணினேன்.. எப்போ? அநேகமாக அந்த பேஷன் முடியிற தருவாயில். "ஹமேஷா தஸ் கதம் பீச்சே" அதாவது.. பத்தடி பின்னே..
80, 90 களில் ப்ளௌஸ் pattern மாற ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பயம்...
"நான் நீள கைக்கு போகையில், குட்டை கை தான் வந்தது...
குட்டை கை போகையில் (தையல் காரரை பிடித்து, அத்தனை கையையும் வெட்டி, தைத்து, அட்டகாசம் அடித்து) ..... பஃப் கை வந்தது.
இது சூட் ஆகுமா என்று, trial பாத்து, மாறும்போது, பேஷன் உம் மாறி விட்டது. அதுக்காக தூக்கிப் போட முடியுமா... எப்போதும் போல் அவுட் of பேஷன் தான்.

என்னோட டைலர் அதுக்கும் மேல. நான் ஏதாவது மாறுதல் சொன்னால் "கொஞ்சம் கை நீளத்தை குறை,நெக் back ஐ. கொஞ்சம் இறக்கு" ன்னு சொல்லிட்டு வந்தால், அதற்கு நேர் மாறாக, கொஞ்சம் நீள கை, கழுத்து வரை கழுத்து.. இப்படி "ஏன்" என்று கேட்டால், "அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் மா" என்று, நான் என்னவோ சினிமாவில் சில்க் ஸ்மிதா மாதிரி act பண்ணப்போறேன். அதை தடுக்கணும் என்ற முடிவோட இருப்பான். யாரை எதிர்க்க முடியும் ? கோச்சுண்டா, அடுத்தது சாக்கை இரண்டு பக்கம் தையல் போட்டார் போல் இருக்கும்.

ஒரே ஒரு தடவை, சுமார் 6 வருஷத்துக்கு முன்ன, ஒரு துணி குடுத்து, படம் எல்லாம் வரஞ்சு, "தோளில் 3 சின்ன மடிப்பு; சின்ன பஃப்; குட்டை கை; கை விளிம்பில் கொஞ்சம் அகல பைப்பிங்" என்று சொல்லி குடுத்தேன். எனக்குள் மகா சந்தோஷம், முதல் முறை நானே பாஷனாக இருக்கப் போறேன் என்று.
அவனுக்கு புரியல்லே, தெரியல்லே ன்னா சொல்லி இருக்கலாம் இல்லையா? "அதெல்லாம் உங்களுக்கு சூட் ஆகாது" ன்னுட்டான். பேசாம வந்துட்டேன்.
இதில் கொடுமை என்னன்னா.. சரவணன்-மீனாக்ஷி யில் மீனாக்ஷி அதே மாதிரி போட்டுண்டு வரா!! எனக்கு எப்படி இருக்கும்? அநேகமாக, என் தையல் காரன் தான் நான் குடுத்த படத்தை வைத்து தைத்திருப்பான்.

சரி; இவனை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒரு லேடி , டிசைனுக்காக பரிசு எல்லாம் வாங்கியவள்; அவள் கிட்ட போனா, "கவலையை விடுங்கோ, நான் உங்களை அப்படியே மாத்திடறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டு, ஒரு நல்ல பட்டுப் புடவை சட்டையை, தைத்துக் கொடுத்தாள். ஆசையாக போட்டா... சட்டைக்கு முதுகு பக்கம் துணியே காணும் !! 2 இன்ச் துணி கீழே.. தடிமனான கயிறு மேலே.. !!
இதை போடப் பிடிக்குமா? அப்படியே கிடந்தது... இதில் தையல் காரரை குற்றம் சொல்ல என்ன வேண்டி இருக்கு??
இப்போ அதே கலர்ல துணி வாங்கி, ஜரிகை மட்டும் கட் பண்ணி வைத்து, தைத்துக் கொண்டேன்.
எனக்கு freedom for dressing 1947 க்கு பதில் 1997 இல் கிடைத்தது. சல்வாரில் ஆரம்பித்தேன். அதிலும், குட்டை டாப், டைட் leggings இதெல்லாம் கிடையாது. அனார்கலி, அமராவதி, லைலா ஒன்றும் கிடையாது.
ஒரு வழியாக அதெல்லாம் பழகி, மூன்று பேரக் குழந்தைகளுக்கு பாட்டி ஆனப்புறம், "why not jeans & top" ன்னு யோசிக்கரச்சே... அதை செயல் படுத்தரதுக்குள்ள, உடம்புக்குக் கூட பிடிக்காமல், என்னை தடுப்பதற்காக, கண்டபடி குண்டாயிட்டேன்.
இப்ப, மரியாதையா, காட்டன் புடவை, கொஞ்சம் லூசாக தைத்த சட்டை (இன்றைய லூஸ் நாளைய டைட்) என்று போகிறது வாழ்க்கை.

Sunday, November 19, 2017

ஏமாந்தவ .......

என் நெத்தியில ஏமாந்தவ ன்னு எழுதி 'பச்சக்' ன்னு ஒட்டி இருக்கு போல இருக்கு.
வீடியோ டேப் வந்த புதுசு. சிங்கபூர்லேர்ந்து பிளேயர் வாங்கி வந்தாச்சு. ஒரு பையன் டேப் எடுத்துண்டு வருவான். "அம்மா, இந்த படத்துல கதை சூப்பர்; இதுல டைரக்ஷன் பிரமாதம்; இதுல பாட்டெல்லாம் ஓஹோ ..." இப்படி சொல்லியே மூணு சினிமா டேப் குடுப்பான். என் குழந்தைகள் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்களை நம்பாமல், அந்த பையனை நம்பி வாங்குவேன். இப்படி வாங்கித்தான் விசு, மனோரமா, எஸ்.வி.சேகர் படம் 'சிதம்பர ரகசியம்' - மனோரமா ஒரு குட்டை பாவாடையுடன் ... பார்த்து நொந்தோம். ஆனாலும் புத்தி வரவில்லை.
இதே போல் - ஸ்ரீலங்கா போன பொது ... ஒரு ஆயுர்வேத தைலங்கள் கடையில் அந்த கைட் நிறுத்த (கமிஷன், கமிஷன்) , அந்த கடை சேல்ஸ் பையன் நெத்தியில், தோளில், எண்ணெய் தடவி அமுக்கி விட... ஒரே ஆர்வக் கோளாறில், 10,000 Rs. பழுத்தது. சென்னை வந்து பிரித்து பார்த்தால் எல்லாம், நம்ம கேரளா சமாச்சாரங்கள். இதில், அதிக விலை கொடுத்தது சந்தன எண்ணைக்கு. மனதிற்குள் ஒரே கற்பனை - சந்தோஷம். தண்ணீரில் சொட்டு விட்டு குளித்தால் நாள் முழுவதும் வாசனை என்று. முதல் நாள் மிகப் பெருமையாக, கொஞ்சம் தாராளமாக விட்டு குளித்தால், உடம்பெல்லாம் ஒரே பிச்சுக்..பிச்சுக். ஒவ்வொரு பாட்டிலாக வேலைக்காரிக்கு குடுத்து (எப்படி யூஸ் பண்ணனும்னு கிளாஸ் வேற) , கடைசியாக, ஒரு மாதம் முன்பு, சந்தன எண்ணையும் கை மாறியது !!
இப்போதைய கதைக்கு வருவோம்.
டெட் ஸீ யில் குளித்து, அடி கருப்பு மண்ணை உடம்பு பூரா பூசிக்கொண்டு, அரை மணி காய்ந்து, குளித்து, ஏக சந்தோஷம் ! அந்த கைட், இந்த மண்ணை தினமும் பூசி குளித்தால், டாக்டர், ஆஸ்பத்திரி, மருந்து ஒன்றும் வேண்டாம். எங்கம்மாவுக்கு ஹார்ட் கோளாறு, மனைவிக்கு மூட்டு வலி, குழந்தைகளின் ஜலதோஷம், இருமல் எல்லாத்துக்கும் ஒரே வைத்தியம் இதுதான் என்று ரீல் சுத்த, நாங்கள் அப்படியே வேத வாக்காக நம்பி... அவன் "இங்கே எல்லாம் வாங்காதீங்க; நான் நல்ல கடைக்கு கூட்டிண்டு போகிறேன்" என்று சொல்லி (கமிஷன், கமிஷன்) ஒரு கடையில் கொண்டு விட்டான்.
அங்கே சால்ட்... வித விதமான கலர், வாசனையுடன். "தோல் வியாதி எல்லாம் பறந்து விடும். காலை வெந்நீரில் சால்ட் போட்டு பத்து நிமிஷம் உக்காந்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்" என்று மானாவாரியாக கடைக்காரன் பேச (ஒரு பெரிய கடை முழுதும் 'டெட் ஸீ ப்ராடக்ட்ஸ்' ... இது மாதிரி நூற்றுக்கணக்கான கடைகள். நிஜமாக அதிலிருந்து எடுக்கப் பட்டிருந்தால், ஸீ வற்றி, காய்ந்து, மணல் கூட இல்லாமல், பாறையாக இருந்திருக்கும் !!) . இதை தவிர 'குழ, குழ' கருப்பு மண்.
சிகப்பழகு க்ரீமிலிருந்து , என்னென்னவோ. உடனே எங்களுக்கு, நுரையீரல் பாதிப்பால் ௦௦ அவதிப்படும் ஒன்று விட்ட அண்ணா, தோல் வியாதியால் தவிக்கும் இரண்டு விட்ட அக்கா, மூட்டு வலி ஆரம்பித்துள்ள எங்கள் மகள், ஸ்கின் அலர்ஜி உள்ள பேத்தி .. என்று உறவுகள் மனதில் வரிசை கட்டி நிற்க, எங்களை யோசிக்க விடாமல் கடைக்காரன், "ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ ; மூன்று வாங்கினால், இரண்டு ப்ரீ" என்று மூளை சலவை செய்ய, "சரி, கஞ்சத்தனம் பார்க்காமல் வாங்கிப் போடுவோம்; இனிமே யாரு இவ்வளவு தூரம் வரப்போறா" ன்னு சகட்டுமேனிக்கு வாங்கித்தள்ளி, பொட்டி கனமாகிப்போக- வந்து சேர்ந்தோம். "தினமும் காலை வெந்நீரில் வைக்கணும் - டி.வி. பார்க்கும்போது. joints ல எல்லாம் கருப்பு மண் பூசி குளிக்கணும்" என்று ஏக டிஸ்கஷன்.
திரும்பி வந்து அஞ்சு நாள் ஆச்சு. இரண்டு பெரும் அசடு வழிகிறோம். பெண் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்படி இருக்க, யாருக்கு குடுப்பது. எங்களுக்கும் பொறுமை இல்லை. இப்போதுதான் ஞானோதயம். "இந்த பாக்கட் தீர்ந்துதுன்னா , அப்புறம் எப்படி வாங்கறது?" ன்னு. ஹும்ம்ம்ம்......
"பட்டா தெரியும் பாப்பானுக்கு" என்று பழ மொழி.
"பட்டாக் கூட தெரியாது இந்த வசந்தா பாப்பாத்திக்கு " என்பது புது மொழி.

Monday, November 13, 2017

நாடகம்........

பழைய நாள் ல ரேடியோவில Sunday afternoon நாடகம் உண்டு. ஒரு ரேடியோ வை சுத்தி whole family உக்காந்து கேப்போம். நன்னா இருக்கும்.
கல்யாணம் ஆனதும் பெரிய சந்தோஷம் , இவர் கிட்ட இருந்த Mylapore Fine Arts membership தான். 2 டிக்கெட். அதை தவிர வாணி மஹாலில், இரண்டு - வீட்டில் போட்டி இல்லாமல் இருக்க.
67 களில் பாலச்சந்தர், சோ, மேஜர் சுந்தரராஜன், சேஷாத்ரி, மனோகர் ... இவர்கள் நாடகமெல்லாம் ரொம்ப நன்னா இருக்கும். ஆனால் முக்கால் வாசி சீரியஸ். Cho உடையது மட்டும் political satire.
ஞான ஒளி, நீர்க்குமிழி, சோ வின் மனம் ஒரு குரங்கு, இன்னும் பல படமாக்கப் பட்டன. மெரினாவின் கதைகள், பூரணம் விஸ்வநாதன், YGP, எல்லாம் சூப்பரா இருக்கும். சோ வின் "மனம் ஒரு குரங்கு", "மொஹமத் பின் துக்ளக்" எல்லாம் படமாகி இருக்கு.
ஸ்கூட்டரில் நுங்கம் பாக்கத்திலிருந்து , சனிக்கிழமை மாலை கிளம்பி, drive in இல் டிபன் சாப்பிட்டு, வாசலில் அடர்த்தியாக கட்டி விற்கும் மல்லிகைப்பூ வாங்கி தலை நிறைய வெச்சுண்டு... (சந்தோஷமான நாட்கள்).
ஒரு YGP நாடகத்தில் , (YGM சின்ன பையன்), YGP , கூப்பிட்டு, "என் பையன் ரொம்ப நன்னா சஹஸ்ர நாமம் சொல்லுவான்" என்று வந்தவரிடம் அலட்டி விட்டு, YGM ஐ "கண்ணா, எங்கே, சஹஸ்ர சொல்லு" ம்பார். YGM கணீரென்று, "சஹஸ்ர நாமம்" என்று சொல்லுவான். மெரீனாவின் தனிக்குடித்தனம் எல்லாம் இன்றைக்கும் பார்த்து சிரிக்கலாம்.
அப்புறம் வந்தவர்கள், மௌலி, எஸ்.வீ.சேகர், பிறகு கிரேசி மோகன், காத்தாடி ... எல்லாம் காமெடி. டெல்லி கணேஷும் , T.V.Varadarajanum (வித் மெசேஜ்)
Mylapore Fine arts ராசி என்று எல்லா நாடகமும் அங்கே அரங்கேறும்.
80 மேல் நாரத கான சபா. ... இன்று வரை.
எல்லா ட்ராமாவுக்கும் போவேன். டிராமா ஆரம்பிக்கும் வரை ப்ரெஷ் ஆ இருப்பேன். அந்த ஹாலின் comfort & AC சேந்து, டிராமா ஆரம்பித்த 5 நிமிஷத்தில் தூங்கி போயிடுவேன். இவரும் எழுப்பி எழுப்பி பாத்து, இதற்குமேல் இவளை சீண்டினால். கொத்தி விடுவாள் என்று, விட்டு விட்டார்.
ஆனால், நடுவில் இன்டர்வெல் மணி அடித்ததும், போய் chips வாங்கிண்டு வந்து கொடுப்பார். அப்போது அதுவரை (!) நடந்த கதையை கேட்டுப்பேன்.
சிப்ஸ் ஒவ்வொண்ணா, சத்தமில்லாமல் சாப்பிடுவேன். பாக்கெட் காலி ஆனதும், என்னை அறியாமல் தூங்கி விடுவேன்.
டிராமா முடிந்ததும், சத்தத்தில் முழித்து, "என்ன ஆச்சு" ன்னு பாக்கி கதையை கேட்டால், இவர் கடுப்பை அடக்கிக் கொண்டு, சொல்லுவார். இதுவும் இன்று வரை தொடர்கிறது.
அதனால் தானோ என்னமோ, இப்போதெல்லாம் டிராமா, இடைவெளி இல்லாமல் 2 மணி நேரத்தில் முடித்து விடுகிறார்கள் !!
S.V.Shekhar, Kaatthaadi, Crazy Mohan, இவங்க டிராமாவில் எல்லாம் தூங்க முடியாமல் சிரிப்புத் தோரணங்கள் !!
அதிலும் சேகர் டிராமாவில், அன்றைய நிகழ்ச்சிகள், அரசியல் எல்லாம் நுழைத்து on the spot comment அடிக்க, கூட நடிப்பவர்கள் சட்டென்று re-act பண்ண முடியாமல், அவர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். அதை பார்த்தே நமக்கும் சிரிப்பு வரும்.
T.V. ல கூட, பொதிகை மட்டும் இருக்கும்போது, every Tuesday 7-8 PM டிராமா உண்டு. என் பெண் ஸ்கூலில் படித்தாலும், அதை என்னுடன் சேர்ந்து பார்க்க அனுமதி உண்டு !!
LikeShow