Wednesday, October 18, 2017

கச்சேரிகள் :.....

கச்சேரிகள் :
மின்ன நாள்ல எல்லாம் பாகவதர்கள் இசையை குருகுலத்தில் இருந்து கற்றார்கள்.
குரு, சீக்கிரத்தில் சிஷ்யனை மேடை ஏற்ற மாட்டார்.
ஆனால் தனக்கு பின்னால் உட்கார்ந்து பாட அனுமதிப்பார் - ஆனால் ஒருத்தர் ரெண்டு பேர்தான்
கச்சேரிக்கு நேரக் கட்டுப்பாடு அவ்வளவாக கிடையாது.
தஞ்சை சுற்றி நடக்கும் கச்சேரிகள் சுமார் எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும்
நேரம் பற்றிய discipline கிடையாது - ஏற்பாடு செய்பவர்களும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.
அதனால் கச்சேரிகள் மடை திறந்த வெள்ளம்.
பாகவதர்கள் , தன்னையும் மறந்து, ரசிகர்களையும் மறந்து, இசை என்ற உயரமான platform இல் இருந்து ஒன்றி பாடுவார்கள்.
புகழை தேடுவதில்லை - தானாக வரும்
பணமும் நிறைய கொடுக்கப் படும். அப்போது பணத்திற்கு மதிப்பு அதிகம். 1000 கிடைத்தால் ரொம்ப ஒஸ்தி.
பக்க வாத்யா காராளும் நன்றாக கவனித்துக் கொள்ளப் பட்டார்கள்
கச்சேரி முடிக்க நடு இரவு தாண்டி விடும். விடிய விடிய பாடுவார்கள். அது ஆத்ம திருப்தி.
இசை விழாக்கள் மெட்ராசில் மட்டும் - மியூசிக் அகாடமி, தமிழிசைச் சங்கம் என்று சில சபாக்கள் தான். அவர்களும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கச்சேரிதான். அதனால் மூன்றரை மணி நேரம் நடக்கும். நேரடி ஒலி பரப்பை ரேடியோவில் கேட்போம். அந்த கைதட்டல் கூட கேட்டு ரசிப்போம்.
முன்னணி பாடகர்களுக்கு, சிலபேருக்கு, ஒரு சிறிய 'கர்வம்' இருக்கும். அந்த கர்வமும் மதிக்கப் பட்டது - அவர்களின் வித்தையினால்.
செம்பை ரொம்ப எல்லாருக்கும் உதவுவாராம். அவரைப் பற்றிய ஒரு lecture இல் கேட்டேன்.
இப்போது......
நிறைய சபா; நிறைய பாடகர்கள்; நிறைய youngsters . இது நல்ல விஷயம் னாலும் , 15 வருஷம் கற்றுக்கொண்டு, சாதகம் பண்ணி பாடுவது போல், இந்த சிறியவர்கள் பாட முடியாது. அவசர அரங்கேற்றம். நடனத்திலும்.
நாரத கான சபாவில் .. நாலரை மணிக்கு கறாராக ஆரம்பிக்கும் கச்சேரி, ஏழு மணிக்கு முடிக்கப்பட வேண்டும். எக்ஸாம் டைமிங் மாதிரி. இது, கண்டிப்பாக அவர்கள் rendering இல் ஒரு pressure ஐ ஏற்றுகிறது. வித்தை கை வரப் பெற்றவர்கள் கூட இந்த டைம் ப்ரெஷர் ருக்கு ஆளாகிறார்கள்.

No comments:

Post a Comment