Monday, October 9, 2017

வருத்தப் பட்டிருக்கிறேன் .....

வருத்தப் பட்டிருக்கிறேன் ..... பாரதி போல், கண்ணதாசன் போல், வைரமுத்து போல் - பாடல் எழுத வரவில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் ...... சுதா ரகுநாதன் போல், சுசீலா போல் பாடமுடிய வில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் ...... சுஜாதா போல், சிவசங்கரி போல் கதை எழுத தெரியவில்லையே என்று.
வருத்தப் பட்டிருக்கிறேன் பத்மினி போல், பத்மா வைப் போல் நடனமாட கற்க வில்லையே என்று....
இன்னும் இன்னும் படிக்கவில்லையே என்று; 
விளையாட வில்லையே என்று;
இன்னும் இன்னும் எத்தனையோ...
ஆனால்... இப்போதெல்லாம் சந்தோஷப்படுகிறேன்...
இந்த கலைகளை எல்லாம் ரசிக்கக் கற்றிருக்கிறேன் என்று
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்றிருக்கிறேன் என்று...
நல்ல குழந்தைகளுக்கு அம்மாவாக, சிறந்த பேரக் குழந்தைகளுக்கு பாட்டியாக பரிணமித்திருக்கிறேன் என்று...
குறை ஒன்றும் இல்லை - கண்ணா

No comments:

Post a Comment