Friday, October 27, 2017

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...

1. வாழப்பூ நறுக்குகையில், பிய்த்துப் போடப்பட்ட மடலை ஆளுக்கொன்று எடுத்து வைத்துக் கொண்டு, அன்று சாப்பிடும்போது, அந்த மடலில் கறி போட்டுண்டு சாப்பிட்டது...
2. வெண்டைக்காய் நறுக்கியதும், அந்த தலைப்பாகத்தை (வெட்டி ஒதுக்கியது) நிறைய எடுத்து, முகம் பூர ஒட்டிக்கொண்டு திரிந்தது...
3. வாழப்பூ உள்ளிருக்கும், கடைசி பருப்புக்கு சண்டை போட்டு ஜெயித்து சாப்பிட்டது...
4. வெண்ணை உருக்கி மீந்த கசந்டில் சர்க்கரை கலந்து சாப்பிட்டது...
5. பழுத்துப் பிளந்து நீட்டவாக்கில் இருக்கும் வெள்ளரிப் பழத்தை வெல்லச் சர்க்கரை சேர்ர்த்து சாப்பிட்டது...
6. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டு, அப்பா குடுக்கும் பழைய பேப்பரில் சக்கையை துப்பி , குப்பைத்தொட்டியில் வாசலில் எரிந்தது....
7. சரோஜா தேவியைப் பார்த்து...
இரட்டைப்பின்னல் போட்டு மடிச்சுக்கட்டியது, அந்த பின்னலில் அடிவழியாகக் குடுத்து, இரண்டு பக்கமும் கொண்டு வந்து, மல்லி வைத்துக்கொண்டது...
நடுவில் மையால் ஒரு திலகம்- அதன் இரண்டு பக்கமும் இரண்டு சற்றே சிறிய திலகம்-அடியில் ஒரு சின்ன கொடு - அதன் அடியில் ஒரு சின்ன வட்டப் போட்டு... வைத்தது...
கண்ணில் மையிட்டு, திக்காக குருவி இழுத்தது...
அனுபவமே இல்லாமல், அர்த்தமே புரியாமல்.. "காத்திருந்தேன் காத்திருந்தேன்"... "காதலொன்றே இல்லையென்றால் கன்னி மனம் கருகி விடும்..." என்று அனுபவித்துப் பாடியது...
8. விடியற் காலை 4 - 6 மணிக்கு ரேடியோ மலேசியா கேட்டது...
9. அப்பா வருவது தெரிந்ததும்... சட்டென்று ரேடியோ வில் கர்நாடக கச்சேரி வைத்து, சமத்துப்போல் வேஷம் போட்டது...
10. விகடனுக்கு காலையில் தொடர் கதைக்காக சண்டை போட்டு, பிடுங்கி படித்தது....
11. கல்லுரல் மேல் உக்காந்து, குகுட்டி அடுப்பில் அம்மா போட்டுக்கொடுக்கும் காப்பியை அம்மாவைப் பார்த்துக் கொண்டே குடித்தது...
இன்னும்...இன்னும்... எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்... ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்...
மறக்க முடிய வில்லை... மறக்க முடியவில்லை...
அது ஏன் அம்மாவாத்தில் இருந்த நினைவுகள் மட்டும் அழுத்தமாக...??
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!!.. 1.

No comments:

Post a Comment