Monday, October 9, 2017

காலைக் காட்சிகள் - நடுத்தரக் குடும்பத்தில் -

காலைக் காட்சிகள் - நடுத்தரக் குடும்பத்தில் -
100 வருடங்களுக்கு முன்....
"சீதா, எங்க தொலஞ்சிப் போன? - டிகாஷன் இறக்கியாச்சா? வாசல் தெளிச்சு கோலம் போட்டாச்சா? போய் சட்டுன்னு ஒரு சோம்பு விட்டுண்டு வந்து அடுப்பை பத்த வை; வெந்நீர் அடுப்பைப் போடு" (மாமியார்)
"அம்மா காப்பித் தரையா? (மாமனார்)
"மன்னி; நான் இன்னிக்கு செக்கிரமே கிளம்பணும்; பழையதைப் பிசஞ்சு வெச்சுடுங்கோ" (மச்சினன்)
"சீதா, ஸ்நானத்துக்கு முன்னே பழயதை பிசஞ்சுடு. பழம் பத்தை வெளில வெச்சுட்டு, அந்த இடத்த தொடச்சுட்டு குளிக்கப் போ" (மறுபடியும் மாமியார்)
"அம்மா, இந்த சீமாச்சு என்ன தொரத்தறான்" (மகள்)
"அடி செருப்பால, அவன்கிட்ட ஏன் வம்புக்கு போற. போய் எண்ணெய் சீப்பை எடுத்துண்டு வா" (பாட்டி)
" அம்மா என்ன சமையல்?" (சீதா)
"ஆத்தாடி சீதாம்மா.. கொஞ்சம் சாம்பல் அள்ளிப் போடும்மா" (வேலைக்காரி)
சமையல் ஆயிடுத்தா? நானும் கிச்சாவும் உக்காரலாமா" (கணவன்)
"அம்மா வண்ணான் வந்திருக்கேன்..." (வண்ணான்)
9 மணி வரை கூச்சலும் குழப்பமும்...
தாத்தா பாட்டி, அம்மா அப்பா, அண்ணன் தம்பி, அவர்கள் குழந்தைகள் எல்லோருக்கும் ஈடு கொடுக்கும் சீதா... பெரிய மாட்டுப் பொண்
-----------------------------
60 வருஷத்துக்கு முன்...
"அம்மா, ஸ்கூலுக்கு சீக்கிரம் போணும்; தலை வாரி விடு " (மகள் காயத்ரி )
"நான் பின்னட்டுமா காயு " (பாட்டி)
"போ பாட்டி, நீ இறுக்கி பட்டிக் காடு மாதிரி பின்னுவ.."
"காயு, பாட்டிய எதுத்துப் பேசாத; நான் இதோ வரேன்.." (கோமளா.. நாட்டுப் பெண் )
"அம்மா , என் ரெகார்ட் நோட்டு எங்கே? ராத்திரி இங்கேதானே வெச்சேன்?" (கோகுல்)
"நீ காக்கா படம் வரஞ்சியோனோ; அதைப் பாத்து கோவப்பட்டு காக்கா தூக்கிண்டு போயிடுத்து.." (காயத்ரி)
"காயு, கீயு, தோயு, உன்ன அடிக்காம இப்ப விட மாட்டேன்..." (கோகுல்)
"என்ன அங்க சத்தம்- ஒரு பேப்பர் கூட நிம்மதியா படிக்க முடியல்லே" (கல்யாண ராமன் என்ற அப்பா)
"கல்யாணம், காலம்பர வேலையில கொழந்தைகளை வெய்யாதே.." (தாத்தா)
"இப்போ அடங்கறேளா, இல்லை, வெளக்கமாத்த எடுக்கவா" ..(ஆத்தோடு இருக்கும் அத்தை)
"அக்கா, தூளில கொழந்தை சினுங்கறான். கொஞ்சம் பாருங்களேன்" (கோமளா)
9 மணி... "அப்பாடா.. ஒவ்வொரு நாள் காத்தாலையும் ஒரு பிரளயம்"
--------------------------------
30 வருஷங்களுக்கு முன்...
"ஸ்ரீதர், யூனிபார்ம் போட்டாச்சா?"
"அம்மா, ஷூ பாலிஷ் போடல்லே"
"கொஞ்சம் தானே போட்டுக்கோ; சாயங்காலமே போட்டு வெச்சா என்ன. நான் மட்டும் எவ்வளவுதான் பண்ணுவேன். எனக்கும் நாழி ஆறது ஆபீசுக்கு"
"ஸ்ரீதர், அம்மாவை தொந்தரவு பண்ணாதே"
"அப்பா, அப்பா நீ போட்டுக் கொடு"
"அடி , ராஸ்கல், அப்படியே போடா, போய் அடி வாங்கு"
"அம்மா , தலை வாரி விடறியா"
"இருடி வரேன்; 15 வயசாச்சு, இன்னும் தலை வாரிக்கக் கூடத் தெரியாது; அந்த நாள்ல, உன் வயசுல எனக்கு வரன் தேட ஆரம்பிச்சாச்சு"
"அம்மா பழைய புராணம் பாடாதே. நான் தான் தலை மயிராய் 'U' CUT பண்ணிக்கரேனே."
"என்னவோ பண்ணித்தொலை; எண்ணெய் தொந்தரவு பண்ணாதே..இந்த மனுஷனுக்கு நியூஸ் பேபரை தவிர ஒன்னும் தெரியாது. சாயங்காலம் வந்தா, TV... news. ஒரு சீரியல், சினிமா பாக்க விடறதில்ல. ஆபீசுல, அந்த கடங்கார மனேஜர் வேலை குடுத்து பிழியறான்"
"முடியல்லன்னா வேலைய விடேன். ஏன் பொலம்பற"
"ஆமாம், வேலைய விட்டுட்டு, புல் டைம் வேலைக்காரி ஆகிடுறேன். ஏதோ ரெண்டு காசு வந்தா, கொஞ்சம் துணி மணி நகை நட்டு வாங்கலாம். வீட்டுக் கடன் அடிக்கலாம்"
"சரி சரி சீக்கிரம் கிளம்பு. போற வழியில விட்டுட்டுப் போறேன். சாயந்திரம் எங்கம்மா அப்பாவை பாத்துட்டு வரேன். கொஞ்சம் நாழி ஆகும்"
9 மணிக்கு வீடு பூட்டப் படுகிறது
-----------------------------
10 வருடங்களுக்கு முன்...
"Shuba , come for break fast. its getting late"
"please wait 'mmaa .. why are you so tense"
"I also have to go early today, Geethu. where is Suresh?"
"having a shower 'mmaa. ammaa, pl. tell him not to come to my class during interval time"
"please adjust Shuba; he is still young maa "
"maa, at the same age, I used to do so much on my own & help you also. it is his turn today to fill water bottles"
"OK...OK... no shouting in the morning. have you prepared well for the test?"
"Suresh, take your bread toast & milk. Have you finished all the home work?"
"ammaa, daily bread?"
"kannaa.. evening something nice OK... " now let me leave for office.
"ராஜீவ், நான் வரட்டுமா? போறச்சே பெட்ரோல் வேற போடணும். சார் சாவி TV மேலே இருக்கு. நான் வரேன். லக்ஷ்மி (வேலைக்காரி) , வேலைய முடிச்சுத்து, இட்லிக்கு அரச்சு வெச்சுட்டு, பாத்து பூட்டிண்டு போ."
10 மணி... வேலைக்காரியும் போக, அந்தகாரம் சூழ்கிறது
-----------------------------
இன்று...
"Mom, I am ready. taking choco chips for break fast. pack just 2 chappaatthis for lunch with chocolate spread. your vegetables I will eat for dinner" - Dharshini
"Mummy, daaddy has checked my bag. give me cornflex & banana" (Dhaarini)
"take from the cupboard ; milk is on the table. pretty hot. take care. aask appaa to pack some cakes & fruits for short break. I am getting ready.
"Bye Seema, I will drop the kids in school & proceed to office"
"OK dear. I am also ready. Pl. drop me also. My car has gone for service"
7.45 am ... the house is empty... !!!! till they all say hi between 6 pm to 8 pm & disperse to solitude in their rooms at 8 pm.
-----------------------------------

1 comment:

  1. உண்மை. இதான் இன்று வாழ்க்கை என ஆகி விட்டதே!

    ReplyDelete