Monday, October 23, 2017

Coffee Puranam Par 1

ஹும்ம்ம்ம்......
மொதல்ல கொஞ்சம் ஹிஸ்டரி சொல்லிடறேன். அப்போதான் புரியும்...
1967அக்டோபர் மாசம், 27 ம் தேதி, தட்டுத் தடுமாறி கலக்க ஆரம்பிச்ச காபி, 2017 October  24th  வரை, நாள் தவறாமல் தொடருகிறது. !!
எப்போதும் சொல்லிண்டே இருப்பேன்.... "மாட்டுப் பெண் வந்து காபி போட்டுக் கையில குடுக்கணும்... நான் சாப்பிடணும்; என்ன உக்கார வெச்சு சமச்சுப்
போடணும்- நான் சாப்பிடணும்..." ன்னு....
1992 - மே ... என் பெரிய பையன் கல்யாணம் ஆச்சு..
முதலில் பம்பாய் ல குடித்தனம் வெச்சு.. (நான் வெக்கலை... அவாளே வெச்சுண்டா...நான் எல்லார் கிட்டயும் பெருமையா சொல்லிண்டிருக்கேன்..."நான் சிறிசுகளை தொந்தரவு பண்ண இஷ்டப்படலை; அவாளே எல்லாம் சேர்ந்து செஞ்சு கத்துக்கட்டும்" ன்னு... என் நாத்தனார் கிட்ட எல்லாம் சொல்லிடாதீங்கோ.
நிற்க... ஆறு மாசத்தில்... பெங்களூருக்கு மாறினார்கள். ஏன்னா, அவளுக்கு அங்குதான் வேலை. நான் பாணிக் கிரகணம் பண்ண வில்லை. பையன் தானம் பண்ணிட்டு, சீதாபூரில் பிள்ளையை விட்டு விட்டு, "சமத்தா இருடா ன்னு" புத்தி சொல்லி... சென்னை வந்தேன்...
அப்பா... பெங்களூரு கிட்டக்க... ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டு, சிறுசுகளையும் கூட்டிண்டு ஆசையாய் போனேன்.
காலம்பர அடுக்களையில ஏதாவது சத்தம் கேக்கறதா ன்னு வெயிட் பண்ணினேன்- படுத்துண்டே... கேட்டுது..."அம்மா, காபி போடறையா" ன்னு ரமேஷின் குரல்..
தூக்கி வாரிப் போட்டது... "குழலினிது, யாழினிது..." குறள் எல்லாம் குழந்தைக்கு 5 வயசு வரைக்கும் தான். வள்ளுவருக்கு பசங்க இல்லியோ ?? இருந்திருந்தா... இன்னும் 1330 குறள் எழுதி இருப்பார் !!!
என் மாட்டுப் பொ ண் , உ.பி. அவளுக்கு காபி க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது... அவளும் ஒண்ணும் சாப்பிட மாட்டா. தெய்வமே என்று, (நல்ல வேளை... உஷாரா, பில்டரும், பொடியும் கொண்டு போனேன். காபி போட்டு குடுத்து நானும் சாப்பிட்டேன்.
ஆச்சு... ஒரே சஸ்பென்ஸ் ... அப்பாடா... ஒரு உப்புமா வந்தது டிபனுக்கு. சந்தோஷப்பட்டு முடிக்கறதுக்குள்ள, ஒரு சின்ன இடி.
ரெண்டு பெரும் ஆபீஸ் கிளம்ப, "அம்மா , சாயங்காலம் ரெண்டு பெரும் 7 மணிக்குத் தான் வருவோம். வத்தக் குழம்பு பண்ணி சமைச்சு வெச்சுடுன்னான். மத்தியானத்துக்கு, உங்களுக்கு ஏதாவது பண்ணிக்கோ ன்னு இன்ஸ்ட்ரக்ஷன் வேற.
அது மட்டுமா... வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது... டைம் ஒத்து வரலையாம். வாரத்துக்கு ஒரு தரம் பெருக்கி துடைப்பாளாம்.
யாரை நொந்துக்கறது. ? வீட்டை பெருக்கி, துடைத்து, (அப்போ குச்சி மாப் எல்லாம் கிடையாது)அழுக்கு கிச்சனை கிளீன் பண்ணி, சமைச்சு, துணி தோய்த்து, வேலையே முடித்து, பிரிஜ் ஐ பாத்தா ... காலி. !!! தேதி போடாமல் ... குட்டி குட்டி டப்பாவில் சாப்பாடு... chronological ஆர்டர் தெரியாததால்... எல்லாத்தையும் கொட்டி, கிளீன் பண்ணி...மத்தியானத்தை ஒப்பேத்தி...
கடைக்குப் போய் காய் கரி வாங்கி வந்து, சமைச்சு, மறுபடியும் மேடையை கிளீன் பண்ணி, காத்திருந்தால்....
இரண்டு பெரும் வந்தார்கள். எல்லோரும் சாப்பிட்டோம். ஒரு வார்த்தை - அஞ்சு (அதான் அவள் பெயர்) வாயிலிருந்து ... ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தால்... ஒரு கமென்ட் இல்லை... வீட்டு சுத்தத்தை பத்தி...
ஹும்ம்ம்ம்... இப்படியே நாலு நாள் ஒட்டி விட்டு, "பையனுக்கு பாவம்; அம்மா கை மணம் வேண்டி இருக்கு" ன்னு நானே சமாதானம் பண்ணிண்டு வந்து சேந்தேன்.
அப்போலேர்ந்து, எப்போ போனாலும், காபி போடி, சாம்பார் பொடி, அரிசி மாவு ன்னு எடுத்துண்டு போய், சென்னைக்கு பதிலா, பெங்களூரில் சமைத்து சாப்பிட்டு வருவேன்.....
ஆனால் .... இப்போ மகா சௌகரியம்... அவர்கள் ஆபீஸ் போனதும்... நான், என்னை சுத்தி 5 ஆட்கள் ... கவலையே இல்லை.. ஆனால் காப்பி மட்டும் நான் தான். !!
இது முதல் பார்ட்.
இதை கவனித்திருந்த கணேஷ்..."அம்மா... உனக்காக நான், நீ கை காட்டும் அய்யர், தமிழ் பேசும் பெண்ணை கல்யாணம் பண்ணிண்டு, என் wife சமைத்துப்போட, நீ ஜம்மென்று காலை நீட்டி உக்காந்து சாப்பிடனும். உன்னை நான்தான் வெச்சுப்பேன்" என்று கூற நெகிழ்ந்து போயிட்டேன். ......
அவன் என்னவோ genuine ஆகத்தான் சொன்னான்.. ஆனால் அவன் ஒன்று சொல்ல, நான் நம்ப, தெய்வம் ஒன்று பிளான் பண்ணி விட்டது !!
இது பார்ட் ஒன்...... 

No comments:

Post a Comment