Monday, October 9, 2017

சாப்பாடு பரிமாறுதல் .....

சாப்பாடு பரிமாறுதல்
தினசரி சாப்பாடு:-
வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது).
கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு, அப்புறம் சாதம்.
நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது. நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு, அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc
விசேஷ நாட்களில்.
இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
டம்ளரில் தண்ணீர் இடது பக்கம். - இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு.
முதலில், பாயசம், இலையின் கீழ் பக்கம், வலது கோடியில்.
அடுத்தது, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, இலையின் மேல் பக்கம், வலது கோடி.
வரிசையாக, பச்சடிக்கு இடது புறமாக
பிறகு, ப. பருப்பு கோசுமல்லி, க.பருப்பு கோசுமல்லி.
தேங்காய் கறி, காரக்கறி, கூட்டு (அல்லது அவியல்)
வடை, அப்பளம், கொஞ்சமாக உப்பு.
மேல் வரிசை நிறைந்து விட்டால், இடது கோடி, கொஞ்சம் கீழே, ஸ்வீட்.
இலையின் இடது பக்கம் கோடியில், கலந்த சாதம் கொஞ்சம்.
அப்புறம், பருப்பு, சாதம், நெய்
இது வரை, சாப்பிடுபவர்கள், இலையில் கை வைக்கக் கூடாது.
பிறகு, சாம்பார், கொஞ்சம் மோர் குழம்பு (சாதத்தின் மேல் ஊற்றக் கூடாது. சாதத்துக்கு கிட்ட, பக்கத்தில, தனியா.
அடுத்தது, ரசத்துக்கு சாதம்.
ரசம் கேட்கும் முன், பச்சடி, கறி வகைகள், அப்பளம்.
பிறகு ரசம்.
ரசம் சாதத்துக்கு அப்புறம், பாயசம்.
இப்போ, கொஞ்சம் ஊறுகாய் வைத்து விட்டு, தயிருக்கு சாதம்.
தயிருக்கு சாதம் போடுகையில், கேட்டு, கணக்காக போட வேண்டும்.
சாப்பிடுபவர்கள், தங்களுக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.
அதிகமாக போட்டுக்கொண்டு, இலையில் எரிந்து விட்டு போவது கூடாது.
எதையும் "எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" என்று சொல்லக் கூடாது. சமைத்தவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அனாவசிய வாக்கு வாதம் எழும். பிடிக்காது என்றாலும், ரொம்ப கொஞ்சமாக போட்டுக்கொண்டு (பிடிக்காது என்ற வார்த்தையை தவிர்த்து) , முடித்து விட வேண்டும். (சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குள் ஒளித்து, கண்ணை ஏமாற்ற வேண்டியது தான்)
கரண்டியை மரித்துப் பரிமாறக் கூடாது.
(திவசத்தில், முதல் தலைமுறை விட்டு, ரெண்டாம் தலை முறைக்கு தான் சாதக் கரண்டியை மரித்துப் போட வேண்டும்; husband பூணல் எந்த பக்கம் முடிகிறதோ, அந்த பக்கம் wife நிற்க வேண்டும்.
இதற்கு ஒரே exception ஆசீர்வாதத்தின் போது. இடது பக்கம் நின்று, அங்க வதிரத்தின் நுனியை பிடிக்கும்போது)
கரண்டிகள் தவறி கூட இலையில் படக் கூடாது.
ஒரே பந்தியில் இருக்கிறவர்கள், முடிந்தவரை, ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். (சீக்கிரம் முடித்து விட்டால் கூட, கொஞ்சம் காத்திருக்கலாம்)
அவசியமானால் ஒழிய, நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
அவரவர் சாப்பிட்ட இலையை , எடுக்கக் கூடாது; மடக்கிப் போடக் கூடாது.
ஒவ்வொரு sub sect க்கும் ஒரு முறை இருக்கும். நான் சொல்லியிருப்பது, ஐயராத்து சம்பிரதாயம்.
ரொம்ப கஷ்டமாக தோன்றுகிறதா ?
சித்திரமும் கைப் பழக்கம். செந்தமிழும் நாப் பழக்கம்.

No comments:

Post a Comment