Saturday, August 31, 2019

அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் .....

அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் .....

சென்னை என்னை மழையுடன், அன்புடன் வரவேற்றது - 3.15 am க்கு

வீட்டுக்கு வந்து, கதவை திறந்ததும் உரைத்தது காபி பொடி, பால் கீழ் வீட்டில் இருக்கும் என்று.

நேறே குளியலறை... ஒரு நல்ல ஷாம்பூ குளியல் போட்டு, அநேகமாக முடித்து விட்டேன்; குழாயில் தண்ணி நின்றது !

அது முடிந்து வெளியில் வந்தால் தெரிந்தது பவர் இல்லை; ஒரு லைட் இன்வெர்டரில் ஓடுகிறது என்று...

சரி, கொஞ்சம் டிவி ஐ பார்க்கலாம் என்று போட்டால், "நோ சிக்னல்" என்கிறது... காரணம் கேட்டால், மழையாம், டாடா ஸ்கை க்கு ஒத்துக்காதாம்.

அதுவும் ஒ.கே. ... மெயில், FB பார்க்கலாம் என்று கம்ப்யூட்டர் ஆன் செய்தால்... "net not getting connected" ....

"பாரத நாட்டுக் கிணை பாரத நாடே...
பாருலகரியுமே .. இதற்கில்லை ஈடே..."

என்ற பாட்டுதான் ஞாபகம் வந்தது...

காவிரி, கங்கை, யமுனை ஆறுகள்;
கயிலை யும் இமயத்தின் எவரெஸ்ட்;
தேவர் சொல் திருக்குறள் கீதை;
தேனினும் இனிய திருவாசகம்...
புத்தர், பரமஹம்சர், காளிதாசர், கம்பர் பெரும் புகழ் படைத்தார்கள்..
உத்தமர் காந்திஜிக்கு உவமை யாருமில்லை...
உயர் பல கோயில்கள் ......

பழம் பெருமை பேசுவதில் நமக்கு நிகர் யாருமில்லை...

இனிமே யாராவது சுதந்திர தினம், குடியரசு தினம் என்று கொடியேத்தி,
"நாம் சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன..." என்று ஸ்பீச் கொடுத்தால்,
உருட்டுக் கட்டையாலேயே அடிப்பேன்...

 "இதுவும் கடந்து போகும்" ன்னு கமெண்ட் குடுத்தீங்க... தொலச்சிப் பிடுவேன்..தொலைச்சு...

வீடு மாற்றும் காதை.......

SK க்கு திடீரென்று, வீட்டு சாமானெல்லாம் இன்னும் குறைக்கணும் என்று தோணிடுத்து. ஏற்கெனெவே மினிமம் தான் ... (எனக்கும் கூட உண்டு அந்த கிறுக்கு) ... வீடு மாத்தலாம்னு ஒரு ஐடியா.
எங்கள் பேரரசு பம்பாயில் இருக்கிறார். நாங்கள் கப்பம் கட்டும், சிற்றரசு. எங்கள் மாளிகை சின்னதுதான். ஒரு தர்பார் மண்டபம், அந்தப்புரத்தில் ஒரு அறை, விருந்தினர் அறை ஒன்று, பண்டக சாலை, சமையல் கூடம்.. இவ்வளவு தான்.
ரெண்டு வருஷத்துக்கு முந்தி, ரகசியமாக ,கரையான் நெறைய வந்து, படை எடுத்து, துணிமணி, பேப்பர் இன்ன பிற சாமான்கள் வைக்கும் அலமாரியில், கோட்டை யின் பின் பக்கமாக வந்து, பல்கிப் பெருகி, படையை பெருக்கி, திடீர் அட்டாக்...
கோட்டை சுவர் (அலமாரியின் கதவுகள்) இடி படும் முன், எங்களுக்கு ஒற்றன் தகவல் தர, போருக்கு ஆகும் செலவுக்கு, எங்கள் பேரரசுக்கு ஓலை அனுப்ப, அதை 'எலி' எடுத்து, ரகசிய ஒயர் மூலம் சேர்க்க, அவர் மந்திராலோசனை செய்து , தன் பட்டத்து ராணியையும் கேட்டு, பொருளுதவி செய்தார்.
(சாரி... சரித்திர நாவல் படிப்பதின் பாதிப்பு...படித்து விட்டு தூங்கினால், கனவிலாவது பட்டத்து ராணியாக நான் இருக்கக் கூடாதா? ஒரு சேடிப் பெண்ணாக வந்து, மகாராணிக்கு "சேவை செய்து, சாப்பாடு போட்டு, சாமரம் வீசுகிறேன்... ஹும்ம்ம்ம்... சோழ நாட்டின் இளவரசியாக பிறந்திருக்கணும்.!!)
நாங்களும், எங்கள் காலாட்படையை சேர்த்து, படைத்தளபதியின் மேற்பார்வையில், போர் தொடுத்து, கரையான் படையை கதற கதற அழித்து, துரத்தி .... கோட்டை கொத்தளங்களை புதுப்பித்து... மாளிகையை புதுப்பித்தோம்.
இந்த போர்களத்தில் எனக்கு என்ன வேலை? எல்லாம் நன்றாக நடக்கிறதா என்று பார்க்கப் போக,, ஒரு குதிரையால் தள்ளப் பட்டு, கேடயக் குவியலில் விழுந்து அடி பட்டு, கை கால் வீங்கி, அரண்மனை வைத்தியர் வீட்டுக்குப் போனால்... ஆச்சரியம்.. அங்கே , அண்டை நாட்டு, மா.. மா.. மன்னர்.. ஏகாதிபத்திய சக்கரவர்த்தி.. ஸ்ரீ ல ஸ்ரீ ரஜினி காந்த், விஜய சாம்ராஜ்ய மகா ராஜா, நகர் வலம் வரும்போது, மார்பு வலி வர, அவசரத்திற்கு, இந்த வைத்தியர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அவ்வளவு தான்.. நான் என் வலியை மறந்து, ஓடி, கூட்டத்தில் இடி பட்டு, தரிசனம் பண்ணி விட்டு, அவருடைய மெய் காவலர் துரத்த, ஓடி வந்து, முதலில் என் பெண்ணுக்கு தகவல் சொல்லி... அப்போ தான் இவரால் இடித்துரைக்கப் பட்டேன்... என் வீக்கத்திற்கு கட்டுப்போட செவிலியர்கள் தயாராக இருக்கிறார்கள்.
(இது ஒரு கிளைக் கதை. ராஜா கதையில் இப்படி கிளைக் கதைகள் நிறைய வருமில்லையா? )
மாளிகை தயாரானதும், என் வீட்டு வேலைக்காரர்களை வைத்து, போரில் மடிந்த எதிரிகளை அகற்றி, சுத்தம் செய்து, மறுபடியும் , நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பினோம்.
அப்போதே நான் சொன்னேன்.. "இந்த மாளிகை வேண்டாம்.. உப்பரிகை அலுத்து விட்டது... சிறை மாதிரி இருக்கு. வேறு மாளிகைக்கு மாறலாம்" என்று. என் பட்டத்து ராசா வுக்கு பிடிவாதம் அதிகம். இளவரசர்கள் , இளவரசி சொன்னாலும் கேட்பதில்லை. விதியை நோவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு சில எதிரிகள் தப்பி ஓடி, இரண்டு வருடங்களாக படை சேர்த்து, மறுபடியும் அட்டாக்.... இந்த முறை போர் செய்ய எங்களுக்கு சக்தி இல்லை... பணமும் இல்லை.. அதனால் வேறு மாளிகை பார்க்கிறோம்..
இவ்வளவு கதை எதற்கு என்று பார்க்கிறீர்களா? சொல்கிறேன்...
ஒரு நாள் நான் வெளியே பொய் விட்டு வருகிறேன்.. அதிர்ச்சி... வீட்டில் ஒரு கட்டில், மெத்தை, சிம்மாசனம், நாற்காலி ஒன்றும் இல்லை.. எல்லாவற்றையும் விற்று விட்டார் !! எல்லாம் பெரியதாக இருக்காம்... அடுத்த மாளிகை இவ்வளவு பெரிசு இல்லை என்றால், சமாளிக்க முடியாதாம். !! நல்ல வேளை, என் கயிற்றுக் கட்டிலும், பாயும் இருந்தது... உட்கார இரண்டு மூன்று சாதாரண நாற்காலிகள்.
நல்லவேளை, இயல், இசை, நாட்டிய மன்றமும், திரையும் இருந்தது.. பொழுது போக !!
அடுத்த நாள் பார்த்தால், பரண் சாமானெல்லாம் இறக்கப் பட்டு, நிறைய ஒதுக்கப் பட்டு, லிகிதங்கள், ஓலைகள் எரிக்கப் பட்டு... பட்டு..பட்டு..
அதில் பொக்கிஷமாக இவர் தந்தை சேஷாத்ரி உடையார் வைத்திருந்த ஒரு ஒரு செப்பேடு இருந்தது. அதில் எங்கள் கல்யாணத்தின், வைதீக செலவு குறிக்கப் பட்டிருந்தது.
வைதீகத்திற்கு, 1 ரூ., 5 ரூ, அதிக பட்சமாக 50 ரூ. என்று பொறிக்கப்பட்டு, கூட்டுத் தொகை 173 ரூபாய்கள்.
சம்பந்திக்கு, அப்பக்கூடை, பொரியிடல், பதில் மரியாதை என்று 25 ரூபாய்களை என் மாமனார் வாரி இறைத்திருக்கிறார் !!
அப்புறம், பலதானம், பாலிகை என்று எல்லாமுமாக சேர்த்து....
வைதீக செலவு ..... சுமார் 220 பொற்காசுகள் செலவாகி இருக்கிறது.
நாம் அந்த மாதிரி செலவழிக்க முடியுமோ? ஏதோ என்னாலான செலவாக , மொத்தமாக என் பையன் கல்யாணத்திற்கு போக வர செலவை சேர்த்து 50000 ரூ. யும், பெண்ணிற்கு சீர் வரிசை சேர்த்து, 2,00,000 ரூ. செலவு -- சக்திக்கு மீறி, நஞ்சை, புஞ்சை நிலங்களை விற்று செலவு செய்தோம். நம் பெண் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா.
(ஒளறல் போறுமா ... ஹிஹிஹிஹி ... இன்னிக்கு வாக்கிங் போகல்லே.. லீவு விட்டுட்டேன்... அதான் இப்படி...)

Friday, August 23, 2019

VK's School and College Life........


நான் படித்தது கிறிஸ்டியன் ஸ்கூல். (PROTESTANT )... அநேகமாக எல்லாருமே Christian lady teachers தான்.. girls ஸ்கூல் ஆச்சே !! 

விதி விலக்கு.. எங்கப்பா Maths , சயின்ஸ் க்கு ஒரு மாஸ்டர்,  Sanskrit க்கு ஒரு மாஸ்டர், Tamil  க்கு ஒரு மாஸ்டர்
எனக்கு தெரிஞ்சு, ஒரே ஒரு டீச்சர் ஐ தவிற எல்லாரும் கல்யாணம் பண்ணிக்காதவர்கள் தான்
(தப்பா புரிஞ்சுக்காதீங்க... விதி விலக்குGents Teachers நான்கு  பேரும் கல்யாணம் ஆனவங்க .. இல்லேன்னா நான் இப்போ இங்கே எழுதிண்டு இருக்க மாட்டேன் !! )

மிஸ் .பிலிப்ஸ் ன்னு ஒரு தையல் / டிராயிங் டீச்சர்.. எனக்கு ரெண்டுமே பிடிக்காது...
டிராயிங் இல் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் வரைய வேண்டும்..
இந்த காய்கள் எல்லாம் symmetrical ஆவா இருக்கு ? அனால் நோட்டில் அப்படித்தான் இருக்க வேண்டும்..! அழித்து அழித்து வரைந்து... அழுகிப்போன காய் மாதிரி இருக்கும் நெறைய குட்டு வாங்கி இருக்கேன் !

தையல் கிளாசில்... டீச்சரின் நடு விரலில், ஒரு கவசம் இருக்கும்.. ஊசி குத்தாம இருக்க..
 (ஒரு வேளை கர்ணன் மாதிரி அதோடே பிறந்திருப்பாளோ)
அந்த விரலாலேயே குட்டுவா...
நான் ஊசிய கீழே போட்டுட்டு, அதை தேடியே நேரத்தை ஓட்டிடுவேன் !!

எனக்கு பிடித்த மாதிரி, யங்கா, அழகா ஒரு சகுந்தலா டீச்சர் வந்தா... இங்கிலீஷ் டீச் பண்ணினா.. குரலும் அவ்வளவு இனிமை..
அவ்வளவுதான்... நான் ஒரே craze ! எனக்கு போட்டியாக இன்னும் சில பேர். நான் அவாளை போட்டியில் ஜெயிக்க, அவள் வீட்டை தெரிந்துகொண்டு, ஒரு லீவு நாளில் போய் கதவை தட்ட, டீச்சரின் அந்த mixed facial expression  ஐ இன்னி வரைக்கும் மறக்க முடியாது !! நாசூக்காக கட் பண்ணிட்டா..

காலேஜ் ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேர் வேறு... காலேஜ் போனதும்.. இந்த வால் தனம் எல்லாம் வந்துடும் போல !!

தமிழ் நாடகம் எடுத்த lecturer சந்திர குமாரி!   "சங்கீத குமாரி" என்று பெயர் வைத்தோம் .. proseநடையில் இருக்கும் வசனத்தை, பாட்டு மாதிரி படிப்பா.
Poetryஎடுத்த ராஜ மாணிக்கத்தை ரொம்ப பிடிக்கும்.. ஏன்னா.. குறுந்தொகை சொல்லிக்கொடுத்தா..!! (வயசுக்கோளாறு !)
Calculusஎடுத்த Dorathiஐ ரொம்ப பிடித்ததால்... அதில் எப்பவும் first மார்க்.. அவ இடது கை எழுத்து...
ஒரு நாள் அவ கிளாஸ் க்கு வர கொஞ்சம் லேட் ஆக, ஆர்வக்கோளாறினால்.. போர்டில் இடது கையால் எழுதிண்டிருந்தேன். வந்து ஒரு முறை முறைச்சா பாருங்க.. அன்னி பூர அழுது, மன்னிப்பு கேட்டு... அந்த lecturer இடம் அசடு வழிஞ்சிருக்கேன் !!

Physics சாந்தாவ எல்லாருக்கும் பிடிக்கும்..Heat / Sound / optics ... (பிடித்ததற்கு காரணம் பாடம் நன்னா சொல்லித்தந்தது மட்டும் இல்லை.. ரொம்ப வெளுப்பா, அழகா இருப்பா..
அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதா கேள்விப்பட்டதும் எவ்வளவு கவலை பட்டிருப்போம் ? மாப்பிள்ளையும் அழகா இருக்கணுமேன்னு !!


Dynamics , statics , Hydrostatics சொல்லிக்குடுத்த ரங்கநாயகி... சூப்பர் டீச்சிங் ! இன்னி வரைக்கும் நான் அதில் strong !

Electricity Class was for eating curd rice with nellikkaaioorugaai..ஏன்னா .. ஒரு  derivationboard   போட ஆரம்பிச்சாமுடியற வரைக்கும் திரும்ப மாட்டாமறந்து போயிடும்னு பயம் !! நாங்க 13 பேர் தான் !! இரண்டு row  வில உக்காந்துஜாலியா சாப்பிடுவோம்..
அதான்இப்ப வரைக்கும் எனக்கு electricity / Magnetism தகராறு... !!

Atomic Physics சௌந்தரம், Properties of Matter பிரபா ... (இவா ரெண்டு பேரும் ஏன் இன்னி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கல ன்னு மண்ட காச்சல்தான் ! .. ரெண்டு பேரும்.. இணை பிரியா தோழிகள்..)
மறக்க முடியுமா இவாளை எல்லாம் !!


way back in 1959, my school celebrated Golden Jubilee. grandceleb.was planned. ----

I was always there in every play for regular annual school days... always playing the role of the key man of the play !except once –

1956 - centenary celeb. of commencement of freedom struggle - sipoy mutiny - public function - I played JANSI RANI –

வீர வசனம் எல்லா practice பண்ணியாச்சு.  Rehearse ல பொம்மை horse மேலேஉக்காந்து, கத்தி பிடிச்சுண்டு பேசியாச்சு
actual staging க்கு போனா.... அங்க ஒரு நெஜ  போனி !! அதும் மேல உக்காருன்னு last minute ல.. ஒரு படுத்தல்.  அது ஒரு dress rehearsal . "போனி மேல எறல்லன்னா, உன்ன டிராமாலேர்ந்து தூக்கிடுவோம் னு ஒரு black mail வேர . அதுக்கு முன்னாடி நான்போனியே பாத்ததில்ல.. குதிர வண்டில கூட ஜாஸ்தி போனதில்ல.
ஒரு வழியா, மனச தேத்திண்டு, ஏறி, stage  குதிரையில உக்காந்து  (குதிரை ஓடாதுன்னு எனக்கு சமாதானம் வேர) , வசனம் பேசினா.. அது "வீர வசனம்" ஆவா இருக்கும் ? அதுக்கும் திட்டு. நான் ஒரே அழுகை... அதுக்கும் திட்டு.
அப்புறம் ஆத்துக்கு வந்து, அம்மா மோர் ல கம்பி காச்சி சொருகி (பயந்து போன, பேய் அறைஞ்சா மாதிரி இருந்த இது ஒரு வைத்தியம்) குடிக்க வெச்சா..
ஒரே சொப்பனம்... குதிர என்ன எடுத்துண்டு காடு மலை எல்லா சுத்தராப்பல... ஆனாஆசை யார விட்டது !
மறு நாள் மகா மெகா கூட்டம் அந்த function க்கு.
தைர்யமா, நன்னா பண்ணி, கலெக்டர் கையால பரிசு வாங்கிட்டேன் !!

Now I will come back to 1959... I has finished writing the Public Exam. The function was in April End. After the exams rehearsals were done.

school golden jubilee function la main item drama - jean val jean (I am not sure of the spelling !) ... The hero, a very poor soul, is given BUN by the Church father.... but in the night he escapes with two silver candle stand. when police catches him, the father rescues him saying, he only gave them to him as gifts. now the man repents & refines. This the story.

My eldest brother who was working outside Tanjore came only to witness this event. whole family was present !
The father gave BUN.... எனக்குstage fear இல்லேன்னாலும், கொஞ்சம்anxiety இருக்கும் இல்லையா.. நன்னா பண்ணனும்னு...

அந்த பன்ன அவசர அவசரமா கடிச்சு, (back stage ல சீக்கிரம், சீக்கிரம் ன்னு ஜாடை !! time factor ) , வாய் நிறைய பன்கண்ணுல  பயம்தொண்ட அடைக்கறது... father role பண்ணின பொண்னே கொஞ்ச பயந்து பொய், தண்ணி குடுத்தா.. (சிவாஜி தோத்தார் போங்கோ !!) ...
அந்த சீன, அப்படி ஒரு அப்ளாஸ்... !!
best actor prizeவேற !!

நான் இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது... School Day Program . ......
"அம்மா வைப்போல் பெரியவளானால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஒரு பெண்  -அம்மா  வேஷம் - புடவையில் 
"அப்பா வைப்போல் பெரியவரானால் என்ன செய்வேன் தெரியுமா ? " என்று நான் -அப்பாவாகவேஷ்டியில்.

{அம்மாசமைப்பாள்துணி துவைப்பாள்பாத்திரம் கழுவுவாள்குழந்தைகளை பேணுவாள் ..
அப்பாஆபீஸ் போவார்பணம் கொண்டு வருவார்கடைக்கு போவார்.... இப்படி 
இன்று வரை இந்த பாடங்கள் .. படங்களுடன் ... மாறவில்லை !!!}

While in 6th ... School Day - a rhyme with names of flowers; Some girls sang from behind stage; few of us were dressed up with a specific color of a flower, with a big flower made out of color paper fixed at our back.
I was DAISY in it.

These two, I can never forget !!

From 9th onwards, I used to be there in songs, playing Veena... all Christian Songs only !!

In 6th  Class, English was started for us. till then I didn't know even ABCD ! English started with Alphabets from 6th !!but reached a good standard by the time we were in S.S.LC.


கொஞ்சம் அப்பா...


கொஞ்சம் அப்பா... 
அப்பா, ஹாலில் நெறைய படம் மாட்டி வெச்சிருப்பா. அதில் முக்கியமானது - M.S.S., D.K.P.,M.L.V.,N.C. Vasantha Kokilam...
அப்பாக்கு கர்நாடக சங்கீதம் நன்னா தெரியும்பிடிக்கும். அந்த கதையை வேற .
; பக்கத்தில சொல்லி இருக்கேன்.ரேடியோ உசுரு... அப்போ எல்லாம் வால்வ் ரேடியோ... ஆண் பண்ணி, சில நிமிஷத்துக்கு அப்புறம் தான் சத்தம் வரும... 
வார் டைம் ல கூட, ரேடியோ வை உள்ளே ஒளிச்சு வெச்சுக் கேப்பா..
திருச்சி ஸ்டேஷன் தான் எடுக்கும்.மெட்ராஸ் clearஆ கேக்காது. 
கச்சேரி வெச்சுட்டு, ஒரு ராகம் ஆரம்பிச்சதும், (ராகம் பேர் வரச்சே சத்தத்தை கம்மி பண்ணிடுவா).டக்குன்னு ராகம் பேரு சொல்லணும். இல்லேன்னா கோபம் வந்துடும். 
ஹார்மோனியம் நெறைய வாசிச்சு காமிப்பா; சொல்லப் போனா நாங்க எல்லாம் குழந்தையா இருக்கச்சே, மடில போட்டுண்டு, ஹார்மோனியம் வாசிச்சு தூங்கப் பண்ணினதே அப்பா தான். 
M.K.T. கச்சேரி எங்கியாவது இருந்தா, அம்மாவும் அப்பாவும் வண்டில ஏறி கிளம்பிடுவா..பக்கத்து ஊருக்கு... விடிய விடிய கேட்டுட்டு வருவா.. 
அப்பாக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். (சினிமா பத்திய ஞாபகங்கள் தனியாக )
அப்பாக்கு நெறைய subjectsபிடிக்கும்... English, Maths, Physics, Logic,  Astronomy to mention a few. 
இங்கிலீஷ்   poetry    நெறைய எழுதுவா...
நெறைய நாவல் படிப்பா.. Wodehouse நாவல்கள்; படிச்சு, தானே, கண்ணில் ஜலம் வர சிரிப்பா... 
கொஞ்ச நாழி பேசிண்டிருந்தா, பாடம் ன்னு சொல்லாம, Physics conceptஎல்லாம் சொல்லுவா... Newton  's   lawsஎல்லாம் சொல்லித் தருவா... எங்க எல்லாருக்கும் Maths ம் Physicsம் பிடிக்க அதுதான் அஸ்திவாரம். 

மொட்டை மாடியில் வரிசையாக படுத்துப்போம்... 
அப்போ வானத்தை பாத்து நெறைய Astronomyபேசுவா... 
எதுவுமே naturalஆக இருக்கும்.  in the sense.. imparting knowledge, sharing knowledge, not teaching. 
கொலு வைக்கப் பிடிக்கும்
எலெக்ட்ரிக்   வேலை நெறைய பண்ணிண்டே இருப்பா... எங்காத்துக்கு வேற electricianம்  வேண்டாம். எனக்கும் , பல்ப் மாத்தரதுல ஆரம்பிச்சு, connections குடுக்கற வரைக்கும் படிப்படியா சொல்லித்தந்தா... ஒரு நாள் அதில் ஆரம்பப் பாடம் சொல்லித் தறச்சே (எட்டாம் கிளாஸ் இருக்கும்) ஆர்வக்கோளாறுல positive , negative நா என்னன்னு கேக்க, ஒரு திட்டு விழுந்துது... அவசரப்படாதே ன்னு... இப்பவும் அந்த சீன் மனக்கண்ணிலே. 
சீரீஸ் பல்ப் போடுவா.. எனக்கும் அதோட கான்செப்ட்  ஐ சொல்லித் தருவா... 
இப்படி, என் education ல அப்பாவின் தடம் நிறைய.இன்னிவரைக்கும் ... 
knowledgesell பண்ணக் கூடாது ன்னு அப்பா சொன்னதுஎன் மனசில பதிஞ்சிருக்கு. அம்மாக்குத்தான் இந்த வாதம் பிடிக்காது. ஏன்னா, அம்மாக்கு பணம் வேணும் ; குடும்பத்த நடத்தணுமே
,அப்பா, ஸ்கூல் லேந்து திரும்பி வரச்சே, ஸ்கூல் கிட்ட, திருப்பத்திலே, ஒரு பெட்டிக்கடை-அதிலே, பூவம்பழம் இரு சீப்பு வாங்கி, சைக்கிள்ல வெச்சு கட்டி எடுத்துண்டு வருவா. சாயந்திரம் ஆளுக்கு ரெண்டு பழம். அப்போ எல்லாம், பழம் பெரிசா இருக்கும். பூவன் பழம் மட்டும் தான். காலணாக்கு ரெண்டு பழம் தருவான் !
ஸ்கூலுக்கு போறச்சே, அப்பா, என்னை முன்னாடியும், என் சின்ன அக்காவை பின்னாடியும் வைத்து, சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்து வருவா. doublesபோனா, சைக்கிள்ல லைட் இல்லாட்டா, போலீஸ் கண்டிப்பாக புடிக்கும். லைட் கூட கெரோசின் விட்ட, திரி போட்ட லைட். dynamoஎல்லாம் அப்புறம் தான் வந்துது. 

தஞ்சாவூருக்கு டவுன் பஸ் வந்தோண, என் பெரிய அக்கா மட்டும் பஸ்ஸில. நாங்க எல்லாம் நடந்து. அவ, அப்பS.S.L.C. படிச் சிண்டிருந்தா
பாட்டி இறந்தப்புறம், உடனே அவள் பிறந்ததால் (1936) , அப்பாக்கு அவளை ரொம்ப பிடிக்கும். (தன அம்மாவே வந்து பிறந்திருப்பதாக)

பாட்டி செத்துப் போறச்சே அப்பாக்கு 37 வயசு. பாட்டிக்கு 54 இருக்கும்.அப்பல்லாம், 54 ன்னாலே ரொம்ப வயசான மாதிரி இருக்கும். life, longevityகுறச்சல்
இன்னும் சொல்லிண்டே போகலாம் அப்பாவை பத்தி...

அம்மா ..
இங்கே எழுதுவதெற்  கெல்லாம் அப்பாற் பட்டவள்....
எழுத்தில் அடக்க முடியாதவள்.
எழுதும்போது அழுகைதான் வரது
பெரிய அண்ணா ... 
நன்னா படிப்பான்; நன்னா பாடுவான்; திருச்சிக்கு தினமும்  ரயிலில்  போய் St.Joseph College ல்    Intermediate   படித்து, மெட்ராஸ் கிண்டி காலேஜ் இல் B . E .சிவில் படித் தான்... புல் புல் தாரா நன்னா வாசிப்பான்... எங்கள் மேல் எல்லாம் ரொம்ப பாசமா இருப்பான்... 
அடுத்த அண்ணா...  திருச்சிக்கு போய் Jamal Mohamed College ல் படித்தான் .. இவன் பாட்டை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. 
ரொம்ப நல்ல குரல். ஆனா, முறையா பாட்டெல்லாம் கத்துக்கல்லே. காலேஜுக்கு ரயில்ல போறச்சே, திருச்சி வரைக்கும், சாயந்திரம் திரும்பி வரச்சே  ரயிலில்பாட்டுக்கச்சேரிதான். இவனுக்கேண்டேறுஒருரசிகர்பட்டாளம்உண்டு. 
"உள்ளம் ரெண்டும் ஒன்று; நம் உர்ய்வம் தானே ரெண்டு..."; "ஆதி அந்தம் இல்லா அருள் ஜோதியே...." இந்த பாட்டெல்லாம் ரொம்ப நன்னா பாடுவான். காதிலேயே ஒலிக்கிறது. 
தோடி ராக ஆலாபனை பண்ணுவான்... அது தோடி ன்னு தெரியாமையே !
எங்களுக்கெல்லாம் பிறந்த நாளுக்கெல்லாம் புது ட்ரெஸ் வாங்கற பழக்கம் எல்லாம் கிடையாது. பணம் இருக்காது. நான் ஸ்கூல் கடைசி வருஷம் படிக்கும் போது, புது ட்ரெஸ் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். அப்பாவும் எவ்வளவோ அலஞ்சா, பணத்துக்கு. அப்புறம், வருத்தத்தோட , தீபாவளி பாவாடயையே கட்டிண்டு போன்னுட்டா. அதுக்காக நான்வருத்தமெல்லாம் படல்லே. அப்போ ஸ்கூல்ல எல்லாம் uniform கிடையாது. தினமும் கலர் ட்ரெஸ், எது வேணா போட்டுக்கலாம்.   
அப்புறம் என் sisters ..
இன்னிக்கு இந்த நல்ல நிலைமையும், படிப்பும், வேலையும் இருக்குன்னா , அதுக்கு காரணம் அவாதான் ன்னு நன்றியோட சொல்லணும்.. அவா யாருமே S.S.L.C. தாண்டி படிக்கல்லே. ஆனா எனக்கு ரொம்ப உதவி இருக்கா. முக்கியமா என் கடைசி அக்கா - நான் வேலைக்கு போகும்போது. 

என்தஞ்சாவூர்வாழ்க்கையை  நினைவுகளில்அழுத்தமாகபதித்து, படிப்பிற்காகமெட்ராஸ்கிளம்பினேன்.

1957 வரைதஞ்சாவூரில்காலேஜேகிடையாது.அதனால்என்சிஸ்டர்ஸ்யாரும்மேலே படிக்கவில்லை
அப்போ, சர்ஃபோஜிகாலேஜ்துவங்கியது. ஆனால்ஆண்களுக்குமட்டுமே.. 
அப்பாக்குஎன்னைமட்டுமாவதுமேலேபடிக்கவைக்கஆசை.. 
நான் S.S.L.C. யில்நல்லமார்க்கும்எடுக்க, அப்பாவும்அந்தவருடம்retireஆக, அப்பாகுடித்தனத்தையேவேறுஊருக்குமாத்ததயாரானார். ஆத்துலஒருபொண்ணுக்கும்இன்னும்கல்யாணம்ஆகல்லே... 36 வருஷம்வாழ்ந்தஊர்; குடித்தனம்; ஆனால்அப்பாயாரையும்கேக்கவில்லை... (என்னிக்கும்அந்தவழக்கம்அப்பாக்குகிடையாது

  
திருச்சியா, மதுரையா, மெட்ராசா... ?? 
ஊருக்குரெண்டுகாலேஜ்ன்னுஅப்ளிசெஷன்வரவழச்சா ... postபண்ணினா...
Madhurai - Lady Dok, Fathima ; Trichi - SRC, national ;   Madras - Q.M.C., Ethiraj.
அப்போஎல்லாம்நேரடியாகார்டுவந்துடும் - admitted ன்னு. மதுரை, திருச்சிவந்துடுத்து... அப்பாமனசுலமெட்ராஸ்ஆசை
மெட்ராசும்வந்துது. எதிராஜிலிருந்து .. ஆனாஅப்பாக்குமனசில் Q M C ஆசை
எதிராஜ்அட்மிஷன்கார்டைஎடுத்துண்டு, ஒருதுணிபையுடன்ரயில்ஏறிட்டா... தனியாத்தான்...
அங்கேபோய்அக்காபையன்கள்வீட்டில்தங்கி, எதிராஜ்போய், இரண்டுநாள்டைம்கேக்க... அவாளும்குடுத்தா... 
இரண்டுநாள்கழிச்சு,   Q.M.C. லிஸ்ட்போட, அங்கேஇடம்கெடச்சிடுத்து.. 
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately" 
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி,  தையற்  காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்... 
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது... 
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும்,  அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger trainமறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் ,   என்வாழ்க்கையின்அடுத்தஅத்தியாயம்தொடங்கியது.          


ஆச்சு, பணம்கட்டியாச்சு... காலேஜும்திறந்தாச்சு... 
மவுண்ட்ரோட்இந்தியாசில்க்ஹவுஸ்கடைஅருகில், ஒருசந்தில்அத்தையின்மற்றொருபிள்ளைஇருந்தார்... தனியாக.. மனைவிஊருக்குப்போயிருந்ததால்... ஒரேரூம்ஒண்டுக்குடித்தனம்... அங்கேதங்கிக்கொண்டு, பஸ்பிடித்துகாலேஜ்போனேன்...சுமார்பதினைந்துநாள்இப்படிஇருந்திருப்பேன். காலேஜ்லேருந்துவீட்டுக்கு  வந்தாபடிக்கணும்னேஎனக்குதெரியாது !!  ஒருநாள்அப்பாடோஸ்விட, "ஆகா, ஸ்கூல்மாதிரிஇல்லை. இங்கேநெறையபடிக்கணும்னு" புரிஞ்சிது !! 
வீட்டுக்குகார்டுபோடுவேன்... காலேஜ்பத்திஎல்லாம்எழுதுவேன்...கொஞ்சம்பந்தாவாகவே... அப்படிஒருதடவை, என்இங்கிலீஷ்கிளாஸ்sectionபிரிக்கப்பட்டவிதத்தைவிளாவாரியாகஎழுத, என்பெரியஅக்கா, "ஒன்றுமேபுரியவில்லை" என்றுபதில்எழுதினதுநன்றாகஞாபகம்இருக்கு
Triplicaneஇல், ஸ்டார்theatreஎன்றுஇருந்தது... அதற்க்குபக்கத்தில், ஒரு row ஒரேமாதிரியானவீடுகள்ஐந்தாறு... அதில்ஒன்றில்என்அத்தைபிள்ளைசீனு, தனகுடும்பத்துடன்... 
மவுண்ட் ரோட்டில் "ராமு" வீட்டில் தங்கி, ராத்திரி படுத்துக்க "சீனு" வீடு. மறுபடியும் காலை மவுண்ட் ரோட் வந்து, காலேஜ் கிளம்பல் 

அங்கேபோய், குளித்து, கிளம்பி Q.M.C. யில்அடிஎடுத்துவைத்தவள், 1973 இல்என்வேலையேவிட்டுவரும்வரை(Q.M.C.) அங்குஇருந்தேன்...
மவுண்ட் ரோட் , திருவல்லிக்கேணி என்று நடையாய் நடந்தேன்.(அப்பாவுடன்தான்)
அதற்குள்அப்பா, புரசைவாக்கத்தில் 20 ரூ. வாடகையில்வீடு பார்த்தார் - தனக்கும் ஒரு பிராட்வே யில் ஒரு ஸ்கூலில் வேலை தேடிக்கொண்டார். 

என்னைகிண்டிராஜ்பவனில், அத்தையின்மற்றொருபிள்ளைஆத்தில்ஒருவாரம் விட்டுவிட்டு , அப்பா, தஞ்சாவூருக்குப்போய், சாமான்செட்டுடன், அத்தையையும் , பெரியஅக்காவையும்அழைத்துவந்து, புரசைவாக்கம்
கங்காதரீஸ்வரர் கோவில் தெருவில்குடித்தனம்போட்டார்... ஒருவீட்டின்பின்போர்ஷன்.. ஒரேஹால், பக்கத்தில்தடுத்து, சமையல்அரை.. அங்கேயேகுளிக்கணும்... இவ்வளவுதான்இடம்.      

ஸ்கூலில்நான்படிக்கும்போதுஇரண்டுபார்ட்தமிழ்,.. ஒன்றுபொதுத்தமிழ் - எல்லாரும்படிக்கவேண்டியது... மற்றதுசிறப்புத்தமிழ் .. இது optional .. இதற்குபதில் Sanskrit எடுத்துக்கொள்ளலாம். இந்த option 6 ம்கிளாசிலிருந்து.
 நான் Sanskrit எடுத்துக்கொண்டேன்...

நான்ஒருஸ்டுடென்ட்  தான்Sanskrit . அந்தவாத்தியார்,    Mr.Rangachari. சாகுந்தலமும், மேகதூத்ம் , ரகுவம்ஸமகாகாவியமும்அவ்வளவுநன்றாகசொல்லிக்கொடுத்தார். இன்றுவரைஎனக்குஇன்னும்நெறைய  Sanskrit literature       படிக்கஆசைஎன்றால்அதற்குஅடித்தளம்அந்தகிளாஸ்தான். ஆனால்அவர்தவறியது, என்னைபரீட்சைக்குசரியாகதயார்செய்யாததுதான்...grammer  நன்றாகதெரியாமற்போயிற்று.
தமிழ்ரொம்பபிடிக்கும்... முக்கியமாக poetry ..  கம்பராமாயனமு, சிலப்பதிகாரமும், பாரதியாரும்பிடித்துப்போனதுஇப்படித்தான்... ஆனால்அங்கும், சிறப்புத்தமிழ்படிக்காததால்கிராம்மர்நன்றாகதெரியாமல்போயிற்று.


Maths... 2 parts... General & Intensive. As no one else opted for Intensive, I was not given this option. 
அதோடுஎன்கனவுமெடிக்கல்என்றதால், maths ரொம்பநன்னாபோட்டாலும், ஸ்பெஷல்mathsபடிக்கலைன்னாலும்நான்கவலைபடவில்லை...
என்ன, எல்லாமேஅரைகுறையாங்கறீங்களா... yes, I am a jack of all trades ; but master of none !!
ஸ்கூலில்நான்கணக்குபடித்தது... என்அப்பாவிடமே  தான்... எப்போதும் 100 % ன்னுசொன்னா, என்குழந்தைகள்நமுட்டுச்சிரிப்பிசிரிக்கிறார்கள். !! காலேஜ்இலும்தானேவாங்கினேன்என்றுசொன்னாலும்நம்புவதில்லை !! ..

இதெல்லாம்ஏன்இங்கேசொல்லுகிறேன்

P.U.C. --- when I wanted to opt for Sanskrit , one of my senior , by name Savitha, (இந்தசவிதா, எங்கள்பள்ளியின்பேரழகி, நடனமணி, நன்னாபடிப்பா... ஆல்rounder, she did B.A. Music in college ;  discouraged me, having taken Sanskrit herself as II Language (she also did Sanskrit in School). So I changed over to Tamil. 
I don't regret... I had wonderful lecturers & made me more interested in Tamil Literature.
So my subjects in P.U.C. were Tamil, English, Physical science, Natural Science, Music & World History.
எல்லாம்அப்பாடிக்பண்ணியதுதான் !! 

முதல் இரண்டுமூன்றமாதங்கள்கண்ணைகட்டிகாட்டில்விட்டார்போல்இருந்தது...பெரியமனிதர்கள்வீட்டுபெண்கள்படித்தகாலேஜ்; நெறையபேர்இங்கிலீஷ்மீடியத்தில்படித்துவந்தவர்கள்... காரில்வந்துஇறங்குவார்கள்... 
பி.யு.சி. யில்பாவாடைதாவணிஅல்லதுபுடவை...  B.Sc போனால்புடவைமட்டும்தான்allowed.        
இங்கிலீஷில்பேசவராமல், மற்றவரோடுபழகத்தெரியாமல்... கொஞ்சம்திணறித்தான்போனேன். ஆனால்அதைப்பற்றிஎல்லாம்கவலைபடவில்லை. "படிக்கவந்திருக்கேன்..படிக்கணும்" அவ்வளவுதான்... காலுக்குசெருப்புக்கூடகிடையாது
இரண்டுபஸ்பிடித்துவரணும். புறசவாக்கத்திலிருந்து.. இரண்டுஅணாகொடுத்து, பிரெசிடென்சிகாலேஜ்ஸ்டாப். அங்கிருந்துவேறொருபஸ்பிடித்துஒருஅணாகுடுத்துஎங்ககாலேஜ். இந்தஒருஅணாவைமிச்சம்பிடிக்கபீச்ரோடில் Presidency to Q.M.C. நடந்துவிடுவேன்.
இரண்டுநாள்பஸ்காசு, மூன்றுநாளைக்கு. அன்னன்னிக்குபஸ்காசுக்கும், நோட்டுக்கும், புக்குக்கும்காசுகொடுக்கஅம்மாபட்டகஷ்டம்ரொம்பஅதிகம்...

அப்புறம்அப்பாவேஹவாய்சப்பல் - ஐந்துரூபாய் - வாங்கிக்கொடுத்தார். அதுஒருநாள்வார்அறுந்துபோக  , கையில்தூக்கிவரகூச்சப்பட்டு, ரோடோரமாகதூக்கிப்போட்டுவிட்டுவந்துவிட்டேன். அதற்குஅப்பாவிடம்திட்டுவாங்கினேன். (ஒருரூ. கொடுத்தால்வார்மட்டும்போட்டுத்தருவானே... தன்னோடஎவ்வளவுஅருந்த

செருப்பைஅப்பாதானே - அதற்கானநீளஊசி, இன்னபிறஉபகரணங்கள்வைத்திருப்பார் - தைத்து, ஆணிஅடித்துபோட்டுக்கொள்ளுவாறே... !! 

ஸ்கூலில்நான்படிக்கும்போதுஇரண்டுபார்ட்தமிழ்,.. ஒன்றுபொதுத்தமிழ் - எல்லாரும்படிக்கவேண்டியது... மற்றதுசிறப்புத்தமிழ் .. இது optional .. இதற்குபதில் Sanskrit எடுத்துக்கொள்ளலாம். இந்த option 6 ம்கிளாசிலிருந்து.
 நான் Sanskrit எடுத்துக்கொண்டேன்...

நான்ஒருஸ்டுடென்ட்  தான்சம்ஸ்க்ரிதம் . அந்தவாத்தியார்,    Mr.Rangachari. சாகுந்தலமும், மேகதூத்ம் , ரகுவம்ஸமகாகாவியமும்அவ்வளவுநன்றாகசொல்லிக்கொடுத்தார். இன்றுவரைஎனக்குஇன்னும்நெறைய  Sanskrit literature படிக்கஆசைஎன்றால்அதற்குஅடித்தளம்அந்தகிளாஸ்தான். ஆனால்அவர்தவறியது, என்னைபரீட்சைக்குசரியாகதயார்செய்யாததுதான்...grammer  நன்றாகதெரியாமற்போயிற்று.
தமிழ்ரொம்பபிடிக்கும்... முக்கியமாக poetry ..  கம்பராமாயனமு, சிலப்பதிகாரமும், பாரதியாரும்பிடித்துப்போனதுஇப்படித்தான்... ஆனால்அங்கும், சிறப்புத்தமிழ்படிக்காததால்கிராமர்நன்றாகதெரியாமல்போயிற்று.