Saturday, October 14, 2017

எல்லாமே இறைவன் கையில்.......

பிறக்கும் போது, நம் பெற்றோரை , நாம் பிறக்கப் போகும் வீட்டை, சூழ் நிலையை நிர்ணயிப்பது கடவுள் - பூர்வ ஜன்ம கர்மா (என்று கொண்டால்.....)
கடவுள் குழந்தைகளை கொடுப்பது, அவர்களை வளர்க்கும் கடமைக்குத்தான். எல்லோரும் கடவுளின் குழந்தைகள். நாம் வளர்ப்பு பெற்றோர்கள்.
நாம், நமக்கு தெரிந்த அளவு தான், நம் வசதி, சூழ் நிலை பொறுத்துத்தான் வளர்க்க முடியும். ஒரு common theory கிடையாது.
குழந்தைகளுக்கு நல்ல ஆகாரமும், உடல் நிலையும், படிப்பும் கொடுக்க வேண்டியது என் கடமை.
அதே சமயம், அந்த குழந்தைகள், "என்னை பிற்காலத்தில் பாதுகாக்கத்தான் நான் கஷ்டப்பட்டு வளர்க்கிறேன்" என்று சொல்வது மடமை.
சம்பாதிக்கும்போதே, நம் பிற்காலத்துக்கு குறைந்த பட்சம் தேவையானதை, சேர்த்து வைப்பது நம் திறமை.
குழந்தைகளுக்கு பெற்றோரை விட்டு, தனக்கான துணையை தேடுவது, உரிமை.
அவர்களுக்கு அந்த துணை மிகவும் தேவையான ஒன்று.
நாம் தேர்ந்தெடுத்தாலும், அவர்களாக தேடிக்கொன்டாலும் -அத்துணையுடன் மட்டும் வாழ அவர்கள் மனதால் தயாராகிறார்கள்.
நாம் அவர்களுடன் அவர்கள் காலம் வரை துணை நிற்க முடியாது. அதனால், அவர்களுக்கு அந்த துணை தான் முக்கியம்.
இதில் நான் குறுக்கே நிற்பதோ, என் மகனாக/மகளாக எனக்கு கடமை பட்டிருக்கிறாய் என்று சொல்ல எனக்கு பிடிக்க வில்லை.
என்னை போலத்தான் அவர்களும் - தான், தன் குடும்பம் என்று வாழ பழகுகிறார்கள் (history repeats itself)
கடவுள் அருளால், எங்களுக்கு குறைந்த பட்ச தேவையான, உணவும் , உடையும் கடவுள் அனுமதித்திருக்கிறார்.
எங்களது என்று சொல்லிக்கொள்ள ஒரு வீடு கூட இல்லாமல் இருக்கலாம். எங்களுக்கு குறை இல்லை.
எங்களுக்கு பிடித்தது - பயணங்கள். அதை நிறைவாக, நிறைய செய்தாகி விட்டது. இனியும் முடிந்தால் அது போனஸ்.
வயதாக ஆக - தேவைகள் குறைந்தது; உணவு அளவு குறைந்தது; ஹோட்டலில் சாப்பிட வேண்டும்; வெளியே போக வேண்டும் என்ற ஆசைகள் குறைந்தது; துணி மணிகள் வாங்கும் ஆசைகள் குறைந்தது
அறுபது வயதுக்கு அப்புறம், பழைய , கசப்பான அனுபவங்களை மறந்தேன்; மனதில் நிற்பது நல்ல நினைவுகள்; எங்களுக்கு பிடித்ததை தனித்தனியாகவோ, சேர்ந்தோ செய்கிறோம்;
எனக்கு டைம் டேபிள் கிடையாது; கடிகார வாழ்க்கை கிடையாது; குழந்தைகளை சார்ந்து, அந்த வீட்டின் discipline க்கு கட்டுப்பட்டு வாழ பிடிக்கவில்லை. அவர்கள் என்னை பாரமாக நினைக்க இடம் கொடுக்க விரும்ப வில்லை.
எனக்கு வேண்டியதை, வேண்டிய பொழுது சாப்பிடுவேன்; டி. வி. பார்ப்பேன்; படிப்பேன்; படுத்து ரெஸ்ட் எடுப்பேன்; மனம் blank ஆக இருக்கிறது.
குழந்தைகள், பேரக்குழந்தைகள் வந்தால் என்னால் முடிந்ததை செய்து கொடுப்பேன்; என் கூடவே நேரத்தை செலவிட வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டேன்; நானும் முடிந்தவரை அவர்களை கவனித்து விட்டு, என் வேலையை பார்ப்பேன்.
மற்றவர் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறார்கள் , என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்னும் கவலை எனக்கு இல்லை.
கடைசியாக..... எல்லாமே இறைவன் கையில்.
(though emotionally, physically, financially I don't want to depend on my children, though we are mentally ready even now to move to a senior citizen home, I don't know what is in store for me).
கடைசி வரைக்கும் சுதந்திரமாக, முடிந்தவரை பிறருக்கு மகிழ்ச்சி மட்டும் கொடுக்குக்ம் வகையில் வாழ வேண்டும்.

இன்பம், துன்பம், செல்லம், வெறுப்பு, கசப்பு, ஏமாற்றம், இழப்பு, அன்பு, பகை என்று எல்லா உணர்வுகளையும், அனுபவங்களையும் தாண்டி வந்து விட்டேன். 

No comments:

Post a Comment