Sunday, June 16, 2019

என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது......



1959 ஜூன் - காலேஜுக்கு திருச்சி, மதுரை, மெட்ராஸ் எல்லா ஊருக்கும் அப்ளிகேஷன் போட, அப்பாக்கு மெட்றாஸ் தான் பிடித்தது என்பதால், அப்பா முதலில் மெட்ராஸ் வந்து, Q.M.C. அட்மிஷன் லிஸ்ட் பார்க்க அங்கேஇடம்கெடச்சிடுத்து..
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately"
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி, தையற் காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்...
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது...
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும், அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger train ...... மறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் , என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது.



Thursday, June 13, 2019

அம்மாவின் ஓய்வு நேர வேலைகள்.....



அந்த நாள் ல எல்லாம் எங்கம்மா அப்பளாம், வடாம் என்று எல்லாம் ஆத்திலேயே செய்வாள். கடையில் வாங்கியதே கிடையாது.

அப்பளாம், வடாம் மட்டும் அல்ல. முழு கருப்பு உளுந்து மொத்தமாக வாங்கி , பலகையை சாய்த்து வைத்துக் கொண்டு உருட்டுவார். கல் எல்லாம் நின்று விடும்.
துவரம் பருப்பை சுத்தம் செய்து எடுத்து வைப்பாள்.
உளுந்தை இயந்திரத்தில் போட்டு உடைத்து வைத்துக் கொள்வாள்.
வருடத்திற்கு வாங்கிய புளியை கொட்டை, கோது எடுத்து . உருட்டி, கொஞ்சம் உப்பு கல் போட்டு பானையில் சேமிப்பாள்
அரிசி உப்புமாவிற்கு இயந்திரத்தில் உடைப்பாள். அரிசி மாவு அரைத்து சலிப்பாள்.
இட்லி மிளகாய் பொடி உரலில் இடிப்பாள்.
சாம்பார் பொடிக்கு இடிப்பாள்.
காபி கொட்டை வறுத்து வைப்பாள்
கல்லுரலில் இட்லி , தோசைக்கு அரைத்து வைப்பாள்.

கண் மை கூட்டுவது; சாந்து குழைப்பது ; இப்படி குழந்தைகளின் தேவைகள்.
இப்படி 9 மணிக்கு சாப்பாடு ஆனதும், கொஞ்சம் படுத்து எழுந்து, இவ்வளவு வேலை.
இவைகளை தவிர நிறைய கை வேலைகள்.
போன் கிடையாது; டி. வி. கிடையாது; யாராவது வந்து பேசிக்கொண்டிருந்தாலும் கை வேலை செய்யும்.






Wednesday, June 12, 2019

நோம்பும் , மாமியாரும்.....




நோம்பு என்று சொல்லும்போது, எனக்கு அம்மாவை விட மாமியார் ஞாபகம் அதிகம் வருகிறது.

கல்யாணம் நிச்சயமாகியதும், மாமியாருக்கு நோம்பு உண்டு என்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

கல்யாணம் ஆன வருடம் விமரிசையாக நோம்பு எடுத்து வைத்தார். 
அம்மா எனக்கு சீராக வெள்ளி முகம், பித்தளை மணி, தூபக்கால், தீபக்கால் என்று பூஜை பாத்திரங்களும், வெற்றிலை பாக்கு பழம் என்று கொடுத்தாள். மாமியாருக்கு பரம திருப்தி.

மாமியாரும் காலை மடியாக எல்லாம் செய்து வைப்பார். பூனாவில் இருந்தபோது கூட, மாவு இடித்து தான் கொழக்கட்டை. அங்கே தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம். சுமார் 30 பேர் வெற்றிலை பாக்குக்கு வருவா. அது 1974 to 1980.
1966 to 1973 & 1980 to 1993 சென்னையில். 
இரண்டு நாத்தனார்களுக்கும் நோம்பு கிடையாது. எங்காத்துக்கு வந்துடுவா. நான் மெயின் சமையல் செய்தாலும், ரொம்ப ஹெல்ப் பண்ணுவா. ரொம்ப ஜாலியாக இருக்கும். 
மாமனார் , கலசம் கட்டி கொடுப்பார். வாழை கன்று மண்டபத்தில் கட்டி கொடுப்பார். சென்டர் டேபிள்  ஐ கவுத்துப்போட்டு, அலங்காரம். இரவு 11 மணியாகும் எல்லாம் முடிய . மடி புடவை எல்லாம் பக்கா வாக இருக்கணும் ! மாமியார் அதில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

நோம்பில் என் மாமியாரின் அம்மன் முகம் கலசத்திலும், கீழே என்னுதும் இருக்கும். பாட்டு பாடி, ஆரத்தி எடுத்து, அம்மன் அழைத்து... குழந்தைகளுக்கு பட்டு பாவாடை போட்டு... அன்று முழுவதும் விரதம் இருந்து, ஒரு வேளை இட்லி, வடை, கொழுக்கட்டை சாப்பிட்டு, இரவு பட்டினி இருந்து.......

நெய்வேதியத்துக்கு கொஞ்சம் பண்ணி விட்டு, பாக்கியை வைத்து விட்டால், மாமியார் அலுக்காமல் கொழக்கட்டை பண்ணி கொடுப்பார்.

சாயந்திரம் கட்டாயம் பாட்டு பாட வேண்டும். மறு நாள் புனர் பூஜை பண்ண வேண்டும். எவ்வளவு பூ....... அமர்க்களமாக இருக்கும்.

என் அம்மா இறந்த பிறகு, என் மாமியார், என் நாத்தனார்களுக்கு குடுப்பது போலவே, எனக்கும் வெத்திலை பாக்கில் பணம் வைத்து கொடுப்பார். (நான் feel பண்ணக்கூடாது என்று) அந்த நாள் என் மீது மிக ஆசையாக இருப்பார். அதை செயலில் காண்பிப்பார்.

என் மாமனார் இறந்ததும், நான் மட்டும் செய்வேன். மனசுக்கு கஷ்டமாக இருக்கும். But she had accepted it boldly.

the day she handed over her "mugam" to me, I was touched & moved.

1997 to 2009 என் பெண்ணுடன் சேர்ந்து செய்தேன். போன வருடம் கூட அம்மன் அலங்காரம் ரொம்ப பிரமாதம். சம்பந்தியை மூன்று வருடங்களாக சாப்பிட கூப்பிட்டேன்.

இப்போது என் அம்மாவை விட மாமியாரை நினைத்து கண் கலங்குகிறேன். எங்கிருந்தாலும் என்னை நாளை வாழ்த்துவார்.

தஞ்சையில் சினிமா........




என் அப்பாவும் அம்மாவும் சினிமா ரிலீஸ் அன்னிக்கு, முதல் ஷோ !!
தஞ்சாவூரில் நாலு சினிமா கொட்டகை ! எல்லாம் நடக்கிற தூரம் !
அம்மா / அப்பா யாரை கூட்டிண்டு போவா என்பது கடைசி வரை suspense !
அப்ப எல்லாம் no advance booking; no time spent for getting ready !!
ஆனால், முதல் நாள் இல்லன்னாலும் அப்புறம் பார்த்துடுவோம் !!
தரை டிக்கெட்... ஒரு அணா.. bench - 2 அணா. chair - 4 அணா.
ரொம்ப நாள் வரை தரை தான்.
எல்லா class - ம் பெண்களுக்கு தனி.. ஆண்களுக்கு தனி.. நடுவில் தடுப்பு கட்டை.
கூட்டம் அதிகம் வந்தால், நெருக்கி அடித்து உட்க்கார வேண்டும். no house full சமாச்சாரம் !!
Fan கிடையாது... கொசு, மூட்டை பூச்சியும் கிடையாது !! பீடி நாற்றம் குடலை பிடுங்கும் !!!
intervel இல் ஒரு அணா பாட்டு புஸ்தகம், வேர் கடலை, பட்டாணி, சோடா, கலர் விற்பனை
நாங்கள் வாங்கியதே இல்லை... on principle father never allowed us to buy these things & eat in theatres.
பாட்டு புத்தகம் கண்டிப்பாக வாங்குவோம் !!
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எவ்வளவு சினிமா? ஆனால் வீட்டில் அதை பற்றி விமரிசனம் பண்ணி பேசியதாக ஞாபகம் இல்லை. படம் பார்க்கும்போது, ஒன்றிப்போய், அழுது சிரித்து , வருத்தப்பட்டு , கோபப்பட்டு ... அதோட சரி.
இவைகளை பற்றி நிறைய எழுதலாம்... வண்டி வண்டியாக.. பக்கம் பக்கமாக !!
Krishna theatre இல், ஒரு முறை, ஒன்று விட்டு ஒரு நாள் நாலு பழைய படம். நாலையும் பார்த்தேன்! நான் பிறக்காத போதோ, கைக்குழந்த்யாக இருந்த போதோ பார்க்காமல் விட்டுப்போனது !!மொத்தம் ஒரு ரூபாய் செலவு !!
குலேபகாவலி படம் முதலில் பார்த்தாச்சு. 7th class படித்துக்கொண்டிருந்தேன். அம்மா மூக்கு குத்தி விட்டாள். வீட்டிலேயே, புது ஊசி வாங்கி, நூல் கோர்த்து, நல்ல எண்ணையில் நனைத்து, ஒரே குத்து... நூலை முடி போட்டு விட்டாள். வலி தாங்கலை. அதுக்கு பிரதியாக... குலேபகாவலி, இரண்டாம் தடவை பார்க்க காசு கொடுத்தாள் !!
நான் அந்த நாளில் இரண்டு தடவை (father never allowed us to see a film two times) பார்த்தது, குலேபகாவலியும், நாடோடி மன்னனும் !!
Hindi நல்ல படங்களும் வரும்; அதையும் விட்டு வைக்கவில்லை. Janak Janak Payal Paje, Do Aankein Bharaah hath, Aan, boot polish, Dileep Kumarin sila padangal..
புது படம் வந்தால், வாசலில் கலர் கலர் Notice உடன் வண்டி... எத்தனை நோட்டீஸ் வாங்குவோம் !!
"ஏ. வி. எம். படமுங்க.. வாங்க..வாங்க.. இந்த ஊரில் இப்போ ஓடுதுங்க வாங்க வாங்க...
படத்துக்கு பேரு என்ன ?
பெண்..பெண்..பெண்..
வாழ்க்கை படத்தில் வந்து மயக்கிய வைஜயந்தி உண்டா ?
ஓ உண்டே !! குதிரை ஏறி சவாரி செய்வார் ; ஆற்றில் விழுந்து நீச்ச்சலடிப்பார் வைஜயந்தி மாலா.. !!! "
இது விளம்பர பாடல்.. அடி பிறழாமல், ராகத்துடன் ஞாபகம் இருக்கிறது... !!
அமர தீபம் படத்தில் ஒரு பாட்டில் "தஞ்சாவூரு காரன் சொன்னான்" என்று வரும். எவ்வளவு பெருமை !!
அண்ணா சித்தம்பட்டி என்ற ஊரில் வேலையாய் இருந்தபோது (PWD-Enginner) - Tent கொட்டகை.. நாங்கள் போனால், ராஜ மரியாதையுடன் நாற்காலியில் உட்கார வைப்பார்கள் !!
நான் 1959 சென்னை வந்து பார்த்த முதல் படம் "கல்யாண பரிசு" ... நடுவில் ஏன் "ப்" போடவில்லை என்று ஒரு ஆராய்ச்சி வேறு !!
------------------------
என்னை பழைய கதை பேச சொன்னால்..மணிக்கணக்கில், நாள் கணக்கில், வருடக்கணக்கில் பேசுவேன் !!!

சினிமா பாட்டும், நானும் ......

சினிமா பாட்டும், நானும் !!!
என்னதான் அப்பா கர்நாடக சங்கீதத்துக்கு importance குடுத்தாலும், சினிமா பாட்டும், நாங்களும் பிரிக்க முடியாதவை; பிரிக்க கூடாதவை !!
Radio Ceylon was the only sation having lot of Tamil Film songs Broadcast.
எல்லா பாட்டும் with Tune , Back ground Music- அத்துப்படி.
எந்த பாட்டு பாடினாலும், நடுவில், டொட்ட டோஇங் டோயங்... என்ற BGM நடு நடுவில், எங்களாலேயே பாடப்படும் ! (அதை சொல்லாமல் பாட வராது !!)
In Super Singer.. the judges talk about ATTITUDE (?), FEEL !
எனக்கு அது கொஞ்சம் அதிகமே !!
எனக்கு என்றைக்கும் தலை மேல் பலப் எறிந்ததும் இல்லை... மணி அடித்ததும் இல்லை...
ஆனால்.. பாடும்போது...
"அன்பே ..நீ அங்கே..நான் இங்கே.. வாழ்ந்தால்..
இன்பம் காண்பதும் எங்கே...."
என்று பாடினால்.. சோகத்தால் உருகி... அன்பே..அங்கே இருப்பதாக கற்பனை பண்ணி... என்ன பீல்..என்ன பீல்.. !!
"மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..."
என்று பாடும்போது... சத்தியமா சொல்றேங்க.. எனக்கு அர்த்தமே தெரியாது !!
"எல்லாம் மாயை தானா.." என்ற தேவதாஸ் பாட்டையும்
"அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..." என்ற 'அவன்' சினிமா பாட்டையும்
அழுதுக்கொண்டே பாடுவேன் !
"உன்னை கண் தேடுதே... " என்று விக்கிக்கொண்டே பாடுவேன்...!!
பெரிய SQAURE சமையல் அரை. ஒரு மூலையில், மண் மேடை போட்டு, மண் அடுப்பு.. ஒரு பக்கம் பின் ரேழிக்கு வரும் கதவு... ஒரு பக்கம் தோட்டத்துக்கு போகும் கதவு... நடுவில் மித்தம்.. மேலே கிரில் போட்டிருக்கும்...நாலு தூண்..
ஒரு தூண் பக்கத்தில் கல்லுரல்.
ஒன்று விட்டு ஒரு நாள் மாவு அரைக்க வேண்டும்.
அரைப்பது என் மூன்றாவது அக்கா.. அரிசியை தள்ளி விடுவது நான்...
அவளுக்கு சன்னமான குரல்.. அதனால் அவள் கதாநாயகி. நான் கதாநாயகன்...
அப்புறம் என்ன.. டூயட் தான்.. அரைத்து முடிக்கும் வரை...
சஹானாவில்.. "எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே..." என்று (T.M.S. / Gemini தோத்தார்கள்)
அந்த அக்காக்கு கல்யாணம் ஆகி போனதும் " நான் காண்பேனோ சோதரியாளை  - பார் மீதிலே..." என்று ஒரே சோகம் !!
College - B.Sc. படிக்கும்போதும்  இது தொடர்ந்தது...
லஞ்ச் டைம் இல் நானும், லலிதாவும்.. "முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே..." என்று உத்தம புத்திரன் பாட்டுதான் - அமர்க்களம் தான் !!
அது மட்டுமா...
அங்கே சில லூசு பெண்கள்.. Love இல் சிக்கி.. நேயர் விருப்பம் வேறே.
அவர்களுக்காக..
"கங்கை கரை தோட்டம்... கன்னிப்பெண்கள் கூட்டம் - கண்ணன் நடுவினிலே .."
"ஒருத்தி ஒருவனை நினைத்திருந்தால் அந்த உறவுக்கு பெயர் என்ன..."
"பொன்னென்பேன் .. சிறு பூவென்பேன்.."
இத்யாதி பாட்டுகள்.. மகா பெருமையாக.. ஏக பீலிங்குடன் !!!
இப்பொழுதும் பாடுகிறேன்... S.K. is the (escape panna mudiyaatha) audience !!
அதே பீலிங்க்ஸ் .. வார்த்தைகள் மறக்க வில்லை...
SUPER SINGER பார்க்கும்போது, எனக்கு புரிய வில்லை.."ஏன் இவர்கள் பீல் பண்ணி பாட மாட்டேன் என்கிறார்கள்? " என்று !!

S.K. என்னை பெண் பார்க்க வந்தார்.....



ஆவணி அவிட்டம் அன்று (August 16) என் "வரப்போகும்" .. மாமியார், தன பெண்ணுடனும், தன் ஒன்று விட்ட நாத்தனாருடனும் , என் மாமனாருடனும், திடீரென்று, சொல்லாமல் கொள்ளாமல் வந்து பார்த்தார்.

நான் college லிருந்து (வேலை பார்த்தேன்) வந்து, செமையாக சாப்பிட்டு, கொண்டையை அவிழ்த்து, தலை முடி விரிந்து கிடக்க (கண்ணாம்பா முடி !!),
காதில், கழுத்தில் போட்டிருந்த பிளாஸ்டிக் நகைகளை கழற்றி விட்டு, என்றும் இல்லாதபடிக்கு தூங்கி விட்டேன் !!

அம்மா அப்பா வீட்டில் இல்லை. நானும் என் அத்தையும் !!
திடீரென்று, கதவு தட்டப்பட (calling bell எல்லாம் கிடையாதே !!) கதவை திறந்தால்... !!
யாரென்றே தெரிய வில்லை ! என் மாமியார், "நீதான் வசந்தாவா"... உன்னை பார்க்கத்தான் வந்திருக்கிறோம் " என்று சொல்ல, "அம்மா அப்பா வெளியில் போயிருக்கிறார்கள். நீங்கள் வந்து உட்காருங்கள்" என்று சொல்லி, பாய் போட்டு, இருந்த ஒரு நாற்காலியில் மாமனாரை உட்கார சொல்லி,
குளியல் அறை உள்ளே ஓடி, முகம் கழுவி, தலையை வரி, பின்னலிட்டு , அத்தை காப்பி போடா சொல்லி விட்டு, வெளியில் வந்தேன்.

சமயோசிதமாக போளி, வடை கொடுத்து, காப்பி கொடுத்தேன்...

சந்தோஷமாக போனார்கள். இவரோட ஒரே கண்டிஷன், "நான் ஒரே பெண்தான் பார்ப்பேன்." என்று.

August 25 (சொல்லி விட்டுதான் !!) எல்லோரும் வந்தார்கள்....
பட்டு புடவை கட்டி, மல்லிகை பூ வைத்து, (அப்ப எல்லாம் no make up !! not even face powder as my father was dead against all these---thanks to him !!) ..மை இட்டு , குங்கும போட்டு வைத்து, (அந்த ஸ்டிக்கர் போட்டு இல்லாத நாட்கள்... ஆசீர்வதிக்கப்பட்ட நாட்கள்) .. வீணை வாசித்து, பாட்டு பாடி... (தனியாக பேசுவதெல்லாம் கிடையாது !!) -- உடனேயே இவர் பிடித்திருக்கிறது என்று ரிசல்ட் சொல்லி...

வீடே மகிழ்ச்சியில் அன்று கொண்டாட்டம் தான்......

அம்மா உடனே தன் favourite தெருக்கோடி மாரியம்மன் கோவிலுக்கு ஓடி... ஒரு thanks சொல்லி விட்டு வந்தாள் !!!

தமிழ் சினிமா ......

தமிழ் சினிமா ஆரம்பித்த புதிதில், அதில் பாட்டு சேர்க்க வேண்டும் என்று யாருக்கு முதலில் ஐடியா தோன்றியது என்று தெரிய வில்லை.
அநேகமாக புராணக் கதைகள் தான். 40 பாட்டுக்களாவது இருக்கும் படத்தில்.
கதாநாயகி, கதாநாயகன் தான் பாடுவார்கள் ! (இன்னிவரைக்கும் அப்படித்தான்)
படங்கள் பாட்டுக்காகவே ஓடும். எல்லாம் கர்நாடக ராகங்கள். கச்சேரி மாதிரி, நிறைய சங்கதிகள், ஆலாபனை, ஸ்வரம் எல்லாம் சேர்த்து.
P.U.Chinnappa, M.K.T., S.G.Kittappa இவர்கள் குரல் ரொம்ப பிரபலம். G.N.B., M.S.S., N.C.V. கூட பாடி நடித்திருக்கிறார்கள்.
K.B.S. இன் "ஒளவையாரை" மறக்க முடியுமா?
எல்லோரும் செந்தமிழில், மெதுவாக பேசுவார்கள். "நாதா" , "பிரபோ" , "ப்ரியசகி" இதெல்லாம் கணவன் மனைவி அழைத்துக்கொள்ளும் வார்த்தைகள்.
பெண் என்பவள் அடங்கித்தான் இருப்பாள்.
சமூக கதைகள் எழுத ஆரம்பித்தார்கள். "பாவம் செய்பவன் அதன் பலனை அனுபவித்தே ஆகணும்" என்பது தான் கதைகளின் கருவாக இருக்கும்.
அப்போதெல்லாம் டப்பிங் தெரியாது. வசனம், பாட்டு எல்லாம் அப்படியே நேரிடையாக படமாக்கப் படும்.
ஒரு லக்ஷம் செலவழித்து படமெடுத்தால் ரொம்ப காஸ்ட்லி production .
அப்போ சினிமா ஸ்டூடியோ தேவையான ஒன்று என்பதால், பணமிருப்பவர்கள் சொந்த ஸ்டூடியோ கட்டினார்கள். அப்படி கட்டியவை தான், Gemini, A.V.M. , Bharani, Selem Modern Theater etc.
வடபழனியில் ஸ்டூடியோ அதிகம் என்பதால், கோடம்பாக்கம் ஏரியா , சினிமா நடிகர்கள் குடியிருக்கும் பகுதியாக ஆயிற்று.
நின்றால், உட்கார்ந்தால் பாடல். மந்திரி குமாரியில் "உலவும் தென்றல் காற்றினிலே" என்று ஓடத்தில் பாடிவிட்டு, உடனே, மலை ஏறும்போது "வாராய், நீ வாராய்..." என்ற இரண்டு பாடல்கள்.
பாடல்களின் நடுவில் வசனம் வருவதும் சகஜம்.
"கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்... " .."இல்லை, கண்ணே சரிதானா என்று கேட்டேன்"
"அதிகாரமாக கேட்கக்கூடாது. குழந்தை கேக்குமே, 'அம்மா, லட்டு தா, மிட்டாய் தா ' என்று, அப்படி. எங்கே பாடு"
"பேபி சரோஜா, நான் 'வார்' ருக்கு போறேன்; நீ வருத்தப்படாதே "
"சுவாமி... கண்ணே"
இப்படி !
1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்தி மாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.

சுதந்திரத்துக்கு முன், சில தேச பக்தி படங்கள் வந்தன. சில தடைகளும் செய்யப்பட்டன.
Maathru boomi, nam naadu, naam iruvar… etc.
1945 க்கு மேல், ரஞ்சன், எம்.கே.ராதா, சஹஸ்ரநாமம் இவர்கள் அதிகம் பேசப்பட்டவர்கள். நாகையா, சஹஸ்ரநாமம் இவர்கள், அப்பா, அண்ணா ரோலுக்கு மாறி, கொஞ்சம் நிலைத்து இருந்தார்கள்.
அப்போ மேக் அப் ரொம்ப கிடையாது. பெண்கள், ரவிக்கை , குட்டை கையோடு, பஃப் வைத்திருக்கும். புடவை கட்டும், கண்டாங்கி சேலை, காட்டன் புடவை, நீள தலைப்பு, இழுத்து சொருகப்பட்டு...
ஆண்கள், வேஷ்டி - ரஞ்சன் போன்றவர்கள் pants போடுவார்கள் - நெற்றியில் விபூதி, குங்குமம் - ஜாதி அடையாளங்களுடன்...
அந்த தமிழ் படங்களை இப்போ பார்த்தால், இந்தக் கால தமிழ் தெரிந்த குழந்தைகளுக்குக் கூட புரியாது ! (ஏன்னா, அது நல்ல தமிழ் !)
கதா நாயகி களுக்கு நீள தலை முடி கண்டிப்பாக உண்டு (சவுரியாகத்தான் இருக்கும் - கண்ணாம்பா தவிர). நீளமாக பின்னி, ஒரு பக்கமாக, பின்னலை முன்னால் போட்டுக்கொண்டால் கதா நாயகி ரொம்ப fashion . அதே சோகமான, கோபமான சீனில், சட்டென்று எப்படி பின்னல் அவிழும் என்று தெரியாது.. ஆனால் தலை முடி முதுகு நிறைய பறந்து, விரிந்து கிடக்கும்.
கதைப்படி கல்யாணம் ஆன, குழந்தை இருக்கிற பெண்கள் - பிச்சோடா, அதை சுற்றி மல்லிகைப் பூ !
1950 க்கு மேல் கொஞ்சம் புரட்சிகரமான படங்கள் வர ஆரம்பித்தன. என்ன புரட்சி. பெண் கொஞ்சம் தைர்ய சாலியாக காண்பிக்கப் பட்டாள்.
"குதிரை ஏறி சவாரி செய்வாள்; ஆற்றிலே விழுந்து நீச்சலடிப்பாள் வைஜயந்தி மாலா" என்று, பெண் நீச்சலை, விளம்பரமாகவே செய்தது ஏ. வி. எம். தன் "பெண்" படத்துக்காக.
ரஞ்சனைப் போல் கத்தி சண்டை போட இன்னொருவர் பிறக்க வேண்டும். அவ்வளவு லாவகம், ஸ்டைல். அந்த costume மே அவ்வளவு நன்னா இருக்கும்.
அவருக்குப் பிறகு எம்.ஜி .ஆர் ஐ சொல்லலாம்.
நான் பார்த்த முதல் இரட்டையர் படம் "அப்போர்வ சகோதரர்கள்" எம்.கே. ராதா இரட்டை வேஷத்தில். அப்போ காமெரா technique எல்லாம் ரொம்ப கிடையாது. எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஒரே ஆச்சரியமாக இருக்கும். லென்சை அரை பாகம் மூடி, ஒரு ராதாவை எடுத்து விட்டு, மற்றொரு பக்கம் நிக்க வைத்து எடுப்பார்கள் என்று எங்கண்ணா சொன்னதை நம்புகிறேன் !
அந்த படம் போடு போடென்று போட்டது.
நடனம் என்றால், classical தான். குமாரி கமலா, வைஜயந்தி, லலிதா, பத்மினி, ராகினி, சாய்-சுப்புலட்சுமி இப்படி. அவர்களுக்கு நடிப்பு கிடையாது. வேறு டான்ஸ் மட்டுமே. அப்புறமாக கமலா, லலிதா & சிஸ்டர்ஸ் , வைஜயந்தி நடிக்கவும் ஆரம்பித்தார்கள்.
நடனம் தெரியாத நடிகைகள், வெறும் கையை பாட்டின் வரிகளுக்கேற்ப அசைப்பார்கள். கண்ணை சுயட்டுவார்கள் அந்த வகையில், டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி பரவா இல்லை.
"செந்தாமரை மலரினை நீ கண்டதுண்டோடி.சிறிதேனும் என் முகத்திற்கு அது பொருத்தம் உண்டோடி" என்றால், தாமரை முத்திரை, முகம் என்றால், தன முகத்தை சுற்றி ஒரு வட்டம், கண்டதுண்டோ என்றால், இரு விரல்களால் கண்களுக்கிட்ட அபிநயம் - நாம கூட ஈசியா ஆடலாம்.
பானுமதி சொந்த குரலில் பாடினார். அந்த குரல் ஒரு தனித்தன்மை. ஈசியா கண்டு பிடிக்கலாம்.
அப்போதே பாட்டு டப்பிங் ஆரம்பித்து விட்டது.

51 வருஷங்கள் பின்னோக்கினால்....

51 வருஷங்கள் பின்னோக்கினால்....
ஆகஸ்ட் 25 - வெள்ளிக்கிழமை -வரலக்ஷ்மி நோம்பு - மாலை - 4 மணி
நீள ஒற்றைப் பின்னல் - தலை நிறைய மல்லிகைப்பூ (இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி - இப்போது போல் நீளமாக வைத்து , முன் பக்கம் விட்டுக்கொள்ளும் ஃ பாஷன் தெரியாத நாட்கள்) ஒரு சிம்பிள், ராமர் கலர் பட்டுப்புடவை (அக்காவினுடயது) , கழுத்தில் ஒரு செயின் (மற்றொரு அக்காவினுடயது) , போட்டுக்கொண்டு, ஒல்லியாக, உயரமாக, அமைதியாக, உட்கார்ந்து,
எதிரே SK யும், அவர் அப்பாவும் நாற்காலியில் (அதில் ஒன்று கீழாத்திலிருந்து கொண்டு வந்தது !!), அம்மா, தம்பிகள், தங்கைகள் பாயில்...
எதிரே நான் - வீணையுடன் - ஆபோகி ராகத்தில் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா...தில்லை.." என்று வாசிக்க, அப்பா, "பாடிக்கொண்டே வாசி " (அப்போதுதான் என் குரல் வளம் தெரியுமாம் !! அப்பாவின் நம்பிக்கை) , பாடிக்கொண்டே வாசித்து....
"அவளுக்கு புல்புல்தாரா கூட வாசிக்கத் தெரியும்" என்று அப்பா கொக்கி போட ...
புல்புல் தாராவை எடுத்து "கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ..." என்ற பாட்டை (ப்ளீஸ் நம்புங்க... எதேச்சையாக அமைந்ததுதான் !!!) வாசிக்க...
பஜ்ஜி, சொஜ்ஜி யுடன் பெண் பார்க்கும் படலம் முடிய...
அங்கேயே, அப்போதே (போய் லெட்டர் போடுகிறோம் என்று சொல்லாமல் ) "எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடித்திருக்கு" என்று சொல்லி விட்டு செல்ல,
எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்ட அப்பா ஆனந்த கண்ணீர் விட, அம்மா, தெருக்கோடி அம்மன் கோவிலுக்கு ஓட (அந்த அம்மன் அங்கு இருப்பதே எங்கம்மாவின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கத்தான் என்று அம்மாவுக்கு அசாத்திய நம்பிக்கை... சன்னதியில் நின்று பேசுவாள் )
வீட்டிலேயே சந்தோஷ அலைகள் அடிக்க...
நான் --- டிபனை டேஸ்ட் பண்ணிக்கொண்டு, "என்னை யாரும் கேட்கவில்லையே - மாப்பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று? " என்ற அனாவசியமான, complicated சிந்தனை எல்லாம் இல்லாமல், (அப்பா, அம்மாவின் சந்தோஷம், என் சந்தோஷம்) ...
அதற்கப்புறம் விவரமா அந்த நிகழ்ச்சிகளை பற்றி விமரிசனமும், அபிப்பிராயங்களும் நடக்க... நான் மெளனமாக கேட்டுக்கொண்டு...
இப்படியாக என் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது !!!
(16 ம் தேதி, அவர் அம்மா அப்பா மட்டும் பார்த்து (ஆவணி அவிட்டம் அன்று) , சம்மதம் சொன்னதும் தான் இவர் வந்தார் - "ஒரே பெண்தான் பார்ப்பேன்" என்ற கண்டிஷன் இவருடையது)

கச்சேரிகள் .......


கச்சேரிகள் :
கச்சேரிகள் :

மின்ன நாள்ல எல்லாம் பாகவதர்கள் இசையை குருகுலத்தில் இருந்து கற்றார்கள்.
குரு, சீக்கிரத்தில் சிஷ்யனை மேடை ஏற்ற மாட்டார்.
ஆனால் தனக்கு பின்னால் உட்கார்ந்து பாட அனுமதிப்பார் - ஆனால் ஒருத்தர் ரெண்டு பேர்தான்
கச்சேரிக்கு நேரக் கட்டுப்பாடு அவ்வளவாக கிடையாது.
தஞ்சை சுற்றி நடக்கும் கச்சேரிகள் சுமார் எட்டு மணிக்குத்தான் ஆரம்பிக்கும்
நேரம் பற்றிய discipline கிடையாது - ஏற்பாடு செய்பவர்களும் கட்டுப்படுத்த மாட்டார்கள்.
அதனால் கச்சேரிகள் மடை திறந்த வெள்ளம்.
பாகவதாள், தன்னையும் மறந்து, ரசிகர்களையும் மறந்து, இசை என்ற உயரமான platform இல் இருந்து ஒன்றி பார்ப்பார்கள்

புகழை தேடுவதில்லை - தானாக வரும்

பணமும் நிறைய கொடுக்கப் படும். அப்போது பணத்திற்கு மதிப்பு அதிகம். 1000 கிடைத்தால் ரொம்ப ஒஸ்தி.
பக்க வாத்யா காராளும் நன்றாக கவனித்துக் கொள்ளப் பட்டார்கள்
கச்சேரி முடிய  நடு  இரவு தாண்டி விடும். விடிய விடிய பாடுவார்கள். அது ஆத்ம திருப்தி.

இசை விழாக்கள் மெட்ராசில் மட்டும் - மியூசிக் அகாடமி, தமிழிசைச் சங்கம் என்று சில சபாக்கள் தான். அவர்களும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கச்சேரிதான். அதனால் மூன்றரை மணி நேரம் நடக்கும். நேரடி ஒலி பரப்பை ரேடியோவில் கேட்போம். அந்த கைதட்டல் கூட கேட்டு ரசிப்போம்.
முன்னணி பாடகர்களுக்கு, சிலபேருக்கு, ஒரு சிறிய 'கர்வம்' இருக்கும். அந்த கர்வமும் மதிக்கப் பட்டது - அவர்களின் வித்தையினால்.
செம்பை ரொம்ப எல்லாருக்கும் உதவுவாராம். அவரைப் பற்றிய ஒரு lecture இல் கேட்டேன்.
எம்.எஸ்.எஸ். செய்யாத உதவிகளா ? 
செம்மங்குடி, ஆலத்தூர் சகோதரர்கள், திருவாடுதுறை ராஜரத்தினம்.... சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தால் அழியாத ம்யூசிக் . 

எங்கப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் ரொம்ப பிடிக்கும். ரேடியோவை போட்டுவிட்டு , ராகம் சொல்லும்போது, சத்தத்தை குறைத்து விட்டு, எங்களை கண்டுபிடிக்க சொல்லுவார். பாட்டும் சொல்லிக் கொண்டோம். தஞ்சாவூரில் வளர்ந்து பாட்டு தெரியவில்லை என்றால் எப்படி !!!

இப்போது......
நிறைய சபா; நிறைய பாடகர்கள்; நிறைய youngsters . இது நல்ல விஷயம் 

ஆனால்  15 வருஷம் கற்றுக்கொண்டு, சாதகம் பண்ணி பாடுவது போல், இந்த சிரியவர்களால் முடியுமா. ? ஆனால் பல சிறியவர்கள் பாடுகிறார்கள். 
அவசர அரங்கேற்றம். நடனத்திலும்.


நாரத கான சபாவில் .. நாலரை மணிக்கு கறாராக ஆரம்பிக்கும் கச்சேரி, ஏழு மணிக்கு முடிக்கப்பட வேண்டும். எக்ஸாம் டைமிங் மாதிரி. இது, கண்டிப்பாக அவர்கள் rendering இல் ஒரு pressure ஐ ஏற்றுகிறது. வித்தை கை வரப் பெற்றவர்கள் கூட இந்த டைம் ப்ரெஷர் ருக்கு ஆளாகிறார்கள்.
கரகரப்ரியாவும், மோகனமும், சங்கராபரணமும் அமுக்கப்படும்போது, வருத்தமாக இருக்கிறது; காதுக்கு போதவில்லை.

இப்போது  பணத்திற்கு மதிப்புகுறைய, விலை வாசி ஏற்றம் போல், பாடகாளுக்கும் கட்டுப்படி ஆவதில்லை. ஆகவே, நிறைய கச்சேரிகள், நிறைய சிஷ்யர்கள் என்று...

இப்படி அமுக்கினால், சஞ்சாரங்களை குறைத்தால், பாடகாளின் learning உம், சாதகமும் குறைய வாய்ப்பிருப்பதால், இனி வரும் காலங்களில், அவர்களால் நான்கு மணி நேரம் சமாளிக்க முடியுமா என்று தெரிய வில்லை. ஒரு ஆதங்கம் தான்.
இதில், ஜன ரஞ்சகம் என்று gimmicks  வேறு !!!

அவர்களுக்கு இன்னும் நேரமும் , freedom மும் குடுக்க , தரம் உயர யாராவது ஏதாவது செய்தால் தேவலை.

ஆத்மா ஒன்றே துணை.......

நம் பிறவியை கடவுள் ஒரு புள்ளியில், ஒரு சிறிய micro level இல் அணுவாக , ஆத்மா ஒன்றே துணையாக ஆரம்பித்து வைக்கிறான்.
அது, பிறகு அம்மாவை சுற்றி, அம்மா மூலமாக அப்பாவையும் சேர்த்து சுற்றி ஒரு சிறு வட்டத்துக்குள் வாழ்கிறது.
நாம் வளர வளர, அம்மா அப்பாவைத்தவிர, உடன் பிறப்புகள் என்று வட்டத்தை பெரிதாக்கி சுற்றுகிறோம்.
இந்த வட்டம் மற்ற உறவுகள், நண்பர்கள் என்று பெரிதாகிக்கொண்டே போகிறது. வட்டம் பெரிதாக ஆக விட்டமும் பெரிதாகி , நாம் சுற்றும் வட்டம் 1,2 dimensions களை தாண்டி, கோளாகிறது (sphere).
இந்த வட்ட area, sphere volume களுடன் , துன்பங்களும், ஏமாற்றங்களும், தாபங்களும் பெரிதாகின்றன.
இந்த வட்டங்களில், ஒன்று உறவுகளின் மேல் பற்றுதல்; இரண்டு material பற்றுதல்.
இவ்விரண்டு வட்டங்களும், பாசங்களும், பந்தங்களும் அதிகமாக அதிகமாக, துன்பங்களும், துயரங்களும் அதிகம். பிறகு புலம்புகிறோம். ஆனால் இந்த வட்டத்தை பெரியதாக்கியவர்கள் நாம் தான் என்று மறந்து விடுகிறோம்.
expand பண்ண தெரிந்த நமக்கு , contract பண்ண தெரிவதில்லை.
பெரிய வட்டத்தில் சுற்றும்போது (பாசம், ஆசை) மூச்சு வாங்குகிறது, மூச்சை அடைக்கிறது. (suffocating) ......
ஒவ்வொரு வட்டமாக outer most லிருந்து குறையுங்கள். குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு புள்ளியில் முடிய வேண்டும். அந்த புள்ளியை மையப் படுத்தி தியானம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டால், வாழ்க்கை சுலபம்.
இதில் பலனை எதிர்பார்க்காத நட்பு வட்டங்கள் நமக்கு தேவையாய் இருக்கிறது... முக்கியமாக நம் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள.
"சந்தோஷம், துக்கம் இரண்டுமே என்னுடுய மனம் சார்ந்தது, பகிர வேண்டிய அவசியமில்லை " என்ற நிலையில் வருவது பூஜ்யம்.
அதில் ஆத்மா மட்டும்தான் .
அதனால் தான் பிள்ளையார் அம்மா, அப்பாவை மட்டும் சுற்றி வந்து நிறைவு கொண்டாரோ? அதிலும் நமக்கு பாடம் இருக்கிறது.
[ஆஹா, வசந்தா ஆனந்த மயி தாயே , நீ எங்கியோ போயிட்ட அம்மா. ]

கல்லுரல்




எங்க மாமியார் கிட்ட ஒரு நல்ல கல்லுரல் இருந்துது. சைஸ் திட்டமா இருக்கும்.
அதில் தினமும் ஏதாவது அரைக்கணும் .. இட்லி, தோசை (இட்லி மாவுல தோசை வாக்கர வழக்கம்மேல்லாம் கிடையாது !!), அடை, வடை, சட்னி.. இப்படி ஏதாவது....
அதில் அரச்சு, அரச்சு தான் என் கை எலும்பே தேஞ்சு போயிடுத்து ன்னு நெனக்கிறேன் !! (மிக்சி எல்லாம் கிடையாது)
நான் இவரோட குடித்தனம் பண்ணினத விட, அந்த கல்லுரலோடதான் அதிக நேரம் செலவழிச்சிருப்பேன் !!
இப்படியாக, சுமார் 25 வருட friend அது !
என் கடைசி மச்சினன் கல்யாணம் பண்ணி, ஒர்ப்படியோட அம்மாவாத்துக்கு பக்கத்திலேயே தனிக்குடித்தனம் போனான்.
அப்போ - எதுக்கோ தெரியல்லே - என் மாமியார் அந்த கல்லுரலை, தன் கடைசி மாட்டுப்பொண்ணுக்கு 'சீரா' குடுத்து அனுப்பிச்சுட்டா !!
'விட்டது' தொல்லை ன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.
ஆனா, கொஞ்ச நாள் லையே அதை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் !!
அதற்குள், பாவம், மச்சினனுக்கு divorce ஆயிடுத்து !! மச்சினன் பொறந்தாத்துக்கு திரும்பி வந்துட்டான். சாமான் செட்டெல்லாம் ஒர்ப்பிடி ஆத்துல எடுத்துண்டுட்டா !!
அதுக்கப்புறம் இவர்கிட்ட, "போய் அந்த கல்லுறல்ல எடுத்துண்டு வாங்கோ" ன்னு சொன்னேன்.
ஆனா, இவர் "இப்ப போய் நான் அதை கேட்டா, அந்த குழவியாலேயே என் மண்டையில அடிப்பா " ன்னுட்டார். ஏன்னா, அவாளுக்கு, இவர் மேலதான் அதிக கோவம் ! ஏன்னா, இவர்தான் பெரிய அண்ணாவா பொறுப்பா இல்லையாம் !!
இன்னி வரைக்கும் அந்த கல்லுரலை மறக்க முடியல்லே !! (மச்சினன் ஒர்ப்பிடிய கூட மறந்துட்டேன் !!!)
திரும்பி வாங்கவும் முடியல்லே !!

ஆண்டு" என்ற சொல்......

"ஆண்டு" என்ற சொல் ஆண்டவன் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. ஆளுமையுடனும், அதிகாரத்துடனும், வேகத்துடனும் நெருங்குபவன் ஆண்டவன்.
ஆண்டு என்பது ஆண்டவனின் "ஆட்சியையும்", புத்தாண்டு என்பது "புதிய ஆட்சியையும்" குறிக்கிறது.
பண்டய தமிழகத்தில் அறுவகை சமயங்கள் இருந்தன. விவசாயிகள் "சௌர்யம்" - அதாவது சூரியனை வழி படுபவர்கள்- என்ற சமயத்தில் இருந்தனர்.
குறிப்பாக, "பாலை", "குறிஞ்சி"
(தமிழகம் அப்போது இடத்தை பொறுத்து பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம் என்று பிரிக்கப்பட்டிருந்தது)
தமிழர்கள் சூரியனை தொழுதவர்கள்.
இவர்கள் உழவுக்காக மருதம், முல்லை பகுதிகளுக்கு குடி பெயரும் மாதம் "சித்திரை"
(1 ) சூரியன் மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு பெயரும் முதல் நாள் - முக்கியமான, இறை அருளை நாடும் நாள் "சித்திரை" (முதல் நாள்)
மேஷ ராசியில் சூரியன் நுழையும்போது, ஆதவனின் சக்தி அதிகம்.
"மாசற்றவன் மாதவன் - ஆற்றல் மிக்கவன் ஆதவன்"
(2 ) வைகாசியில் "வைகறையில்" எழுந்து, நிலத்தை சீர் படுத்துவார்கள்.
(3 ) ஆணி முத்து, அதாவது நல்ல விதைகளை வாங்கி வருவார்கள். (ஆணி என்பது ஆனி ஆயிற்று)
(4 ) "ஆடி பட்டம் தேடி விதை" - சேகரித்த விதைகளை விதைப்பார்கள்
(5 ) ஆவணி - உழவுத் துவங்கும்.
(6 ) "புரட்டாசி பொன்னுருக காயும்" - விதைகளுக்கு தேவையான ஒளி கிட்டும்.
(7 ) "ஐப்பசி அடை மழை பெய்யும்" - மாதம் மும்மாரி பெய்யும். அதாவது மாதத்தில் ஒரு நாள் முழுதும் பெய்ய வேண்டும், ஒன்பது நாள் காய வேண்டும். இது மாதிரி மூன்று முறை.
(8 ) கார்த்திகையில், மழை அதிகமாக பெய்ய வேண்டும். அப்போது களைகளை நீக்கி, சொக்கப்பானை கொளுத்துவார்கள் (இது ஒரு திரு விழா)
(9 ) மார்கழி - பயிர் விளைந்து மார்கழி பனியாய் விரிகிறது... மனித மனமும் ஆண்டவனை நினைத்து விரிகிறது..
(10 ) தை - அறுவடை மாதம்.
"ஆடி" மாதம் தொடங்கிய உழவு, ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்த பிறகு "தை" மாதம் அறுவடையோடு முடிகிறது.
கிடைத்த நெல்லை சேகரித்து, தமிழர்கள் தங்கள் இருப்பிடமான "பாலை" , "குறிஞ்சிக்கு" திரும்புவார்கள்.
முதல் நெல்லை, நன்றிக்கடனாக சூரியனுக்கு பொங்கலிடுவார்கள்
"மாசியும்" , "பங்குனியும்" .. தங்கள் குடும்பத்துடன் கழித்து விட்டு, மீண்டும் சித்திரை முதல் தேதியில் உழவுக்காக கிளம்புவார்கள்.
சித்திரையில் துவங்கும் இந்த சுழற்சி, இயற்கை விதித்தது.

கீதாவோட ஷாப்பிங்.......

Dear Balachandar,
நீங்க நெறைய அனுபவிச்சிருப்பீங்க.. இருந்தாலும் என் அனுபவத்தை சொல்றேன்....
கீதாவோட ஷாப்பிங் போற அந்த கூத்தை தான் சொல்றேன்...
ஒரு நாள் உங்களுக்கு தெரியும் நாங்க ரெண்டு பெரும், நான் வாங்கி இருந்த புடவையை மாத்தப் போனதை... ஆனால் உங்களுக்குத் தெரியாதது...
அந்த கடையில் நடந்தது... section section ஆ ... முதலில் பட்டுப்புடவை.. அதே விலையில்... ஷெல்பில் ஒரு புடவை இல்லை.. எல்லாம் எடுத்துப் போட்டாச்சு... 4 பொறுக்கி தனியாக வைக்கப் பட்டது...
கொஞ்சம் விலை அதிகத்தில் அலசி ஆராய்ந்து, உடல் கலர் பிடித்தால், பார்டர் பிடிக்கவில்லை.. பார்டர் பிடித்தால், பார்டரின் அகலம் இன்னும் கொஞ்சம் வேண்டும், இரண்டும் பிடித்தால், அந்த கலர் ஏற்கனவே இருக்கு..
அங்கே ரெண்டு சாம்பிள் எடுத்து தனியாக...
அப்புறம் plain பட்டு... அதில் embroidari பண்ணிக் கொள்ள... கடைகாரனுக்கு புரிந்தால் தானே? அவன் அவ்வளவு அனுபவம் இல்லாதவன், புடவை embroidery யில்... ஹும்ம்ம்... நகரு மைசூர் சில்க் பக்கம்...
அவனும் கீதாவை பார்த்ததும், ஒரு உதவி ஆளுடன் எல்லா புடவையும் வெளில பரத்தி யாச்சு... ஆனால்..அந்தோ பரிதாபம் (நானும், sales people உம்) . லாங் பார்டர் காட்டு, இந்தக்ஷணம் ன்னா ... அவன் கிட்ட இருந்தா தானே... இந்த ஆசைக்கு காரணம் யாரோ, எவரோ ஒரு டீச்சர் அந்த மாதிரி உடுத்திண்டது தான்.. எய்தவள் வேறு யாரோ... அம்பு கீதா.
அடுத்தது சில்க் காட்டன். அது கொஞ்சம் சீக்கிரமாகவே நிராகரிப்பு...
எல்லா salesmen உம் அதற்குள் ஜாடை காட்டி சிரிப்பையும், கடுப்பையும் அடக்கி, வேறு கஸ்டமர் யாரையும் கவனிக்க முடியாமல்... அந்தோ பரிதாபம்...
கடையாக.. நெஜம்மாவே கடைசியாக... இப்போ வாங்கி இருக்கிற designer சரி பார்த்து, இரண்டு கலர் மேலே வைத்துப் பார்த்து...
அம்மா.......ஆ....... நான் கால் வலியால் சோர்ந்து நாற்காலியில் உட்காருவேன், "வசந்தா , இது எப்படி இருக்கு?" ன்னு ஒரு குரல் ஒலிக்கும்.. ம்ம்... எழுந்திரு..
ஒரு வழியாக புடவையை மேலே வைத்து கண்ணாடியில் பார்த்துக்கொள்ள கீதா அந்தண்ட நகரவும், நான் கடைக்காரனிடம், "அப்பா, எப்படியாவது convince பண்ணி, இந்த புடவைக்கு பில் போட்டு விடு " என்று கெஞ்ச, அவன் பதிலுக்கு கண்ணாலேயே "எப்படியாவது சீக்கிரம் இந்த அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்புங்கள்" என்று கெஞ்ச... ஒரு வழியாக செலெக்ஷன் முடிந்தது...
பில் போடப் போனால், இது வெறும் exchange !!! கடைகாரனுக்கு புது சேல்ஸ் உம் இல்லை !!
அவன் பில் போடும் நேரம், கீதா, மறுபடியும் உலாத்த, நான் அவசர அவசரமாக பில்லைப் போட்டு, பாக் பண்ணி வாங்கின டென்ஷன் எனக்குத்தான் தெரியும்..
நல்ல வேளையாக பர்சேஸ் முடிந்தது...
பின் குறிப்பு...
அன்றைக்கு கடைக்கு லீவ் விட்டு விட்டு, எல்லாருமாக, வெளியே எடுத்துப் போட்ட புடவைகளை மடித்து அடுக்கினதாக கேள்வி... மறு நாள் 2/3 பேர் கை வலி என்று லீவு போட, நான் கால் வலியால் அவதிப் பட்டேன்.
பட்டால் தெரியும் பாப்பானுக்கு என்பது பழ மொழி.
பட்டாலும் தெரியாது பாப்பாத்திக்கு என்பது என் மொழி.
இல்லா விட்டால் நேற்றைக்கும் ஷாப்பிங் போய் படுவேனா??

திருவையாறு ஆராதனை.......



திருவையாறு ஆராதனை ஒரு நல்ல அனுபவம்.
முதலில் சொல்ல வேண்டியது... மாயவரம் ஸ்டேஷனில் இறங்கியதும் கேட்ட சிட்டுக் குருவிகளின் இனிமையான கீச் கீச் சத்தம்! அப்பா.... அந்த அரச மரத்தில் எவ்வளவு குருவிகள் ? குழந்தைகளை அழைத்துப்போய் காண்பிக்க வேண்டும் என்று தோன்றியது. ராஜ கோபால சாமி கோவில் பிரகாரத்தில், அரச மரத்தில் கிளிகளோ கிளிகள்... அழகு... அழகு... கொள்ளை அழகு. சென்னை ஏன் இப்படி வரண்டிருக்கிறது?
சரி... சப்ஜெக்டுக்கு வருவோம்.
திருவையாறு கச்சேரியில் பாடினவர்களை விமரிசனம் பண்ணக்கூடாது. அது ஒரு சென்டிமெண்டுக்காக  பாடுவது.
ஆனால் இரண்டு விஷயங்கள் சொல்ல ஆசைப் படுகிறேன்.
1. பாடினவர்களில் அநேகம் பேரிடம் அந்த பக்தி, சிரத்தை தெரிய வில்லை. என் வயதில் எவ்வளவு ஆராதனை கேட்டிருப்பேன்? இப்போது ஷோ அதிகம். எல்லாருக்கும் வீடியோ, போட்டோ வில் தான் கவனம்.
2. ஆராதனை அன்னிக்கு, முதல் நாள் கச்சேரி செய்த பெரிய வித்வான்களில் நிறைய ஆப்சென்ட் !! மற்றபடியும் சீனியர் ஆர்டிஸ்ட்ஸ் ரொம்ப குறைவு. என்ன politics ? இது ஒரு தவம் இல்லையோ? யார் பெரியவர் என்ற போட்டிக்கு அங்கே இடமேது? பஞ்சரத்ன கிருதிகளில் பாட்டிலும் பக்தி, லயிப்பு ஆப்சென்ட். எனக்கு ரொம்ப குறைதான்.
மற்றபடி ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.
ஒரு யோசனை சொல்ல ஆசைப் படுகிறேன்.
தியாகராஜர் சரிதை படித்தால், அவர் எந்த situation இல், எந்த கீர்த்தனை பாடினார் என்று சுவாரசியமாக , கதைகளாக சொல்லப் பட்டிருக்கும்.
திருப்பதியில் திரை விலக, "தெரதீ யெகராதா" ; சரபோஜி ராஜா அரண்மனைக்கு வரச்சொல்லி, செல்வம் தருவதாக கூறும்போது, "நிதி சால சுகமா" ; தன் தாயிடம் ஆசி வாங்கும்போது "சீதம்மா மாயம்மா" .... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அவருக்காக நடத்தப் படும் விழாவில், ஒவ்வொருவரும்... at least சீனியர் பாடகர்கள், ஒரு 2 நிமிடங்களுக்கு situation சொல்லி, 2 நிமிடங்களுக்கு பாட்டின் அர்த்தத்தை சொல்லி விட்டு பாடினால், அவர்களுக்கும் பக்தி ரசம் அதிகம் இருக்கும்; நமக்கும் enjoyable ஆகவும் இருக்கும்; அர்த்தத்தை அணிபவிக்கலாம்... லிரிக்ஸ் முக்கியம்.
இதை சென்னை கச்சேரிகளின் போது கூட செய்யலாம். பாடகர்களும் தெலுங்கை புரிந்து, சரியாக உச்சரித்து பாடுவார்கள். நிறைய பேர் பாடும்போது வார்த்தையே புரிவதில்லை.
இதற்கு யாராவது, ஏதாவது செய்வார்களா??

சுகி. சிவம் சொற்பொழிவில் கேட்டது.......

கம்பன் தனது அரசியல் கோட்பாடுகளை வெளிப்படையாகவும், சில இடங்களில் மறைமுகமாகவும் புலப் படுத்துகிறார். இன்றும் அவைகள் பொருந்தும். "அரசியல் படலம் " என்று இரண்டு படலங்கள் உள்ளன்.
தசரதன் ஆட்சி, ஏறத்தாழ, மக்கள் நலன் விரும்பும் குடியாட்சி, உன்னதமான ஜனநாயக ஆட்சி. ஆனால். அதை அவரே மீறிய கட்டங்களும் உண்டு. மக்களின் நலம் பற்றியே சிந்திப்பவர் என்ற நிலை, ராமன் முடிசூட வேண்டும் என்ற மக்களின் கருத்தை, கைகேயி இடம் தான் சத்ய சந்தன் என்று காண்பிப்பதால், மக்கள் அவை புறக்கணித்து, சர்வாதிகாரத் தனமாக முடிவெடுக்கிறார்.
சிறந்த அரசியலை கம்பன் தெரிவித்த விதத்தை வேறு மேற் கோள்களில் பார்ப்போம்.
சுக்ரீவனுக்கு ராமன் சொல்லும் அரசியல் நுட்பமானது.
ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் ஆபத்தான கால கட்டம் என்பது அன்றும் இன்றும் என்றும் உண்மை. மக்களில் ஒரு வகையினர் ஆளும் கட்சியையும், மறு தரப்பினர் எதிர்ப்பதும், ஒரு வகை தரப்பினர் நாடு நிலையாக இருப்பதும் என்றும் நடக்கும். எதிர்ப்போர் எதிர்ப்பில் வருந்தக் கூடாது. நடு நிலயாளரை, தன் பக்கம் இழுத்திடல் வேண்டும்.
பலவீனமானவரை பழிக்கக் கூடாது. கூநியுடனான, விளையாட்டு வினையாயிற்று.
அரசுத்தலைவர்கள் காம விளையாட்டு ஆபத்தானது... கைகேயியின் மீது தசரதன் வைத்தது, வாலியின் முறையற்ற ஆசை... இவைகள் உதாரணங்கள்
காந்தியடிகள்., அரசுத்தலைமை இடம் அதிக நேர்மையை எதிர்பார்ர்துத்தான் 'ராம ராஜ்ஜியம்' என்றார். கம்பனும் அதையே விரும்புகிறார்.
வாலி, சுக்ரீவன் மனைவியை தன்னிடம் வைத்திருப்பதை தவறு என்று ராமன் நினைக்கிறார். அது அவன் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒதுக்க முடியவில்லை.
சுக்ரீவனிடம் "தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவேன்" என்று அறிவிக்கிறார். தாரம் தருவது ஞாயம். தலைமையை எப்படி பறிக்கலாம் வாலியிடமிருந்து? தனி வாழ்க்கையில் ஒழுக்கமற்றவன், போது வாழ்விலும் ஒழுக்கம் அற்றவனாகவே இருப்பான் என்பது கம்பரின் வாதம்.
தற்காலத்திற்கும் பொருந்தும் உண்மை. மேலே இருப்பவர்கள் தவறு செய்யவில்லை என்றால், (எந்த விதத்திலும்-லஞ்சம் உட்பட) , அவர் கீழே இருப்பவனும் தவறு செய்ய மாட்டான்.
சுகி. சிவம் சொற்பொழிவில் கேட்டது.

இவர்கள் எல்லோரும் இராமாயணத்தில் இருக்கிறார்கள் .....

இவர்கள் எல்லோரும் இராமாயணத்தில் இருக்கிறார்கள் !
அகம்பனன் - ராவணனிடம் ராமனைப் பற்றிக் கோள் சொன்னவன். (போட்டுக் கொடுத்தவன்). ராமனின் அம்புக்குத் தப்பிப் பிழைத்த அதிசய ராட்சஸன்.
அத்திரி - பத்தினி அனுசூயாவின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள்; ராமன் கையால் அழிந்தவர்கள்.
கும்பன் - கும்பகர்ணன் மகன்.
குசத்வஜன் - ஜனகரின் தம்பி; மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத - சத்ருக்கனரின் மாமனார்.
சுநைனா - ஜனகரின் மனைவி; சீதையின் தாய்.
சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
சதபலி - வடக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
சுஷேணன் - வாலியின் மாமனார்; வானர மருத்துவன், மேற்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி.
நிகும்பன் - கும்பகர்ணன் மகன்.
மால்யவான் - ராவணனின் தாய்வழிப் பாட்டன்
யுதாஜித் - கைகேயியின் தம்பி; பரதனின் தாய்மாமன்.
வினதன் – கிழக்குத் திசையில் சீதையைத் தேடச் சென்றவன்.
மாண்டவி - பரதன் மனைவி.
சுருதகீர்த்தி - சத்ருக்கனன் மனைவி.
ருமை - சுக்ரீவன் மனைவி.
விராதன் - தாண்டகவனத்தில் வசித்த அரக்கன்; ராமனால் சாபம் தீர்ந்தவன்.

அக்காவின் கல்யாணம் ....



அக்காவின் கல்யாண நாள். 1961, April 9th .
பழைய ஞாபகங்கள்.
வீட்டில் முதல் (பெண்) கல்யாணம். பெரியம்மா கிராமத்திலிருந்து வர, வீட்டில் பக்ஷண வாசம் வீச, அந்த முதல் அனுபவம் வெகு ஜோர்.
டவுனில் ஏதோ சிறிய சத்திரம். கல்யாண செலவு, (நகை, துணி, சாப்பாடு) 10000 ரூபாய் !!
மாப்பிள்ளை அழைப்பு. என் அக்கா, தன் அலங்காரத்தை விட்டாள். என் நீள, அடர்த்தியான முடியில், மேலே கொஞ்சம் எடுத்து, ஒரு பிரிமணையை (சின்ன ரிங்) வைத்து, அதில் முடியை சுற்றி (ராக்குடியாமாம்) அதச் சுத்தி, பூ சுத்தி, பின்னல் போட்டு, குஞ்சலம் வெச்சு, கட்டுப் பூவை வெச்சு அழகு பார்த்து... இருப்பதற்குள் ஒரு நல்ல பாவாடை கட்டி (17 வயதிருக்கும் எனக்கு) மாப்பிள்ளை அழைப்பில், கையில் ஒரு தட்டுடன், மகா பெருமையாக ஊர்வலம் வந்தேன்.. நடந்துதாங்க. அந்த ஒரு போட்டோ மட்டும் இருந்துது. அதையும் காணும். அதை விட ஒல்லியாக ஒரு பெண்ணை பார்க்க முடியாது உங்களால் !! இப்ப இருக்கிற 17 எல்லாம் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பா !!

அந்த கல்யாணம் ஸ்பெஷல்தான்... முதல் முதல் எங்க வீட்டில் நடந்ததால் . ஒரு பொறுப்பும் கிடையாது. ச்சே... ஒரு வேளை கூட ருசித்து சாப்பிட வில்லை. அப்ப எல்லாம் , கீழே இலை போட்டுத்தான் சாப்பாடு. டேபிள் எல்லாம் கிடையாது. மடி சமையல் உண்டு. அதுவே வாசனையாக இருக்கும். ஜோரான நாள். 58 வருஷம் ஆச்சு !! 

இந்த பழைய நாவல்கள் .......

இந்த பழைய நாவல்கள் படிக்கறதே ஒரு சுகம்...
அக்ரஹாரம்; 10/12 வயசுல 4 நாள் கல்யாணம்; அதோட விதரணை....
4000 ரூ. எதிர் ஜாமீன் குடுத்து, அக்ரஹாரட்தை அடைத்து பந்தல் போட்டு, 6 நாள் அங்கே ஒரு வீட்டிலேயும் அடுப்பு மூட்ட மாட்டா... ஒரு வேளைக்கு 500 பேர் போல் சாப்பாடு .... பண்ணை ஆட்களை சேர்த்து... துணி மணி , பட்சணம் பாடி... வெத்திலை சீவல் எல்லாம் சேர்த்து, 6000 ரூ. ல அமர்க்களமான கல்யாணம். மொத்தம் 10000 ரூ. எல்லாம் அப்பா, நிலத்தை வித்து, செய்வார். அதுவும் எப்படி- பத்துக்கு அஞ்சு பழுதில்லாம...
சினிமாவா.. 2 அணா குடுத்து பாத்துட்டு வருவா.. இது நானே பண்ணி இருக்கேன். 2 அணா டிக்கட், 1 அணா பாட்டு புஸ்தகம், காலணா கடலை, காலணா கமர்கட்டு... அம்மா குடுத்த 4 அணாவில பாக்கி அரை அணா திருப்பிக் குடுத்திருக்கேன் !!
கல்கி நாவல் ன்னா.. 500 ரூ. க்கு 50 பவுன் நகை; கையில 10/20 ரூ வெச்சுண்டு கல்காத்துக்கு பயணம். அன்னிக்கு தீர்மானிச்சு, அன்னிக்கே ரயில் ஏறுவா... "ஏண்டி அம்மா, இங்கே வறயாடி சித்த..." இது, பெண் அம்மாவை கூப்பிடுவது...
எங்கம்மாவே தன்னோட சித்திய (step mother) வாடி போடின்னு பேசுவா !! வேடிகையா இருக்கும் !!
கல்கிக்கு வருவோம்... தியாக பூமில, ஒண்ணுமே தெரியாத பட்டிக்காட்டுப் பொண்ணு, கல்கத்தாவில போய், மாமியார்ட்ட கஷ்டப்பட்டு, 8 மாசம் pregnant ஆ இருக்கச்சே , தனியா ரயில் ஏறி கிராமத்துக்கு (கும்பகோணம் பக்கம்) வருவா.. கையில் சில்லறை.. அங்கே அப்பாவை காணாம , பட்டணத்துக்கு போவா.. பட்டணத்துல சுத்தி "சம்பு சாஸ்திரி வீடு எதுன்னு தெரியுமா.. " ன்னு கேட்டுண்டே சுத்தி, மயக்கம் போட்டு, பிரசவம் ஆகி (செலவில்லாம ஆஸ்பத்திரில), ஒரு பெஞ்சியில தூங்கிண்டிருக்கற அப்பாவ பாத்து, குழந்தைய அவர் பக்கத்துல விட்டுட்டு, பம்பாய்க்கு ரயில் ஏறி , 6 வருஷம் கழித்து, 5 லக்ஷம் சொத்து இருக்கிற, ரொம்ப பணக்காரியா (!) நாகரீகமா திரும்பி வருவா...
இந்த நாவல் எல்லாம் லேசில் முடியாது... நம்ம மெகா சீரியல் மாதிரி இழுத்திண்டு போகும்.. coincidence ன்னா , அப்படி ஒரு coincidence.. 1000 சம்பவங்கள்...
பேரெல்லாம் இப்படித்தான்... அம்மாளு, அம்புலு, அம்பி, பட்டாம்பி, பாச்சா, சம்புவய்யர், பாப்பா, சீதா... இப்படித்தான் ... நிறைய சொல்லிண்டே போகலாம்.
இதே சிவசங்கரி பழைய வாழ்க்கை பற்றி கதை களம் அமைச்சால், பாண்டி ஆடற 8 வயசு பெண்ணுக்கு, 16 வயசு பையனோட கல்யாணம்.. அந்த கல்யாணத்துக்கு அப்பளம் இடுவதிலிருந்து வர்ணனை... அந்தோ பரிதாபம்... 10 வயசுல அந்த பெண்ணோட ஆம்படையான் செத்துப் போயிடுவான்... 14 வயசுல நார்மடி புடவை கட்டிண்டு... அடுக்களையில் பூந்தா.... ஆயுசு பரியந்தம் சமையல் அறை வேலை தான்... அந்த ஆயுசு ங்கறது 40/45.
தமிழ் ரொம்ப அழகு. எங்கப்பாவே எண்பதுக்கு , எம்ப்ளது ன்னு சொல்லுவா. 980 க்கு தொளாயிரத்து எம்ப்ளது ம்பா ... அது ஒரு வழக்கு தஞ்சாவூர் பக்கம்.
தஞ்சாவூர் அக்ரஹாரம் தமிழ் அப்படி ஒரு அழகு.

THE CLASS SYSTEM......

 THE CLASS SYSTEM......

1. The Greek Philosopher, Plato, advocated the following system of division of groups among the people based on Wisdom, Valor, those who don't have either

(given very briefly here - the crux of the system advocated)

Common Education for all the children for few years - in the fields of Logic, Philosophy, marshal arts, skilled works etc.

At the end of this there are to be examined. The intelligent ones who have analytical thinking are to be separated ; given special education on various fields involved in ruling.

The remaining are to be trained, based on their capacity - one group to be warriors ; the others are to be skilled labors ; to do menial jobs.

Every group    receives  their training.... The best ones are chosen

Brainy ones are to be the rulers / advisers.

Those who excel in marshal arts will become warriors for protecting King ; People from enemies (army)

The third group to serve these.

This is similar to our "Saathwik", "Rajaas", Thamaas"

---------------------------------

During our Vedik period - the division was into 4 groups.

Education was common for men & women.

அவர்கள் தகுதிக்கேற்ப,

கல்வி, கேள்விகளில் , வேதம் சொல்லுவதில் சிறந்தவர்கள் அதே வழிகளில் கற்பிக்கப் பட்டார்கள்.

அவர்கள் குருவானார்கள். சிஷ்யர்களுக்கு கற்பித்தார்கள். கற்க கஷ்டப்படும் மாணவர்களை விலக்கினார்கள் 
மற்றவர்க்கு சிறந்த கல்வியை போதித்தார்கள். இந்த கல்வி, தகுதியானவர்களுக்கு வழி வழியாக போதிக்கப் பட்டது.

அவர்கள் வாழ்க்கை பல நியதிக்களுக்கு உட்படுத்தப்பட்டது.

பிரம்மத்தை உணர வைப்பதால், பிரம்மத்தை  நோக்கி கை பிடித்து செல்வதால் அவர்கள் பிராமணர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்

அவர்களின் சாப்பாடு, வாழ்க்கை முறை எல்லாம் அவர்கள் மூளையின் சிந்தனை திறன் இவைகளை வளர்ப்பதாக இருந்தது.

அவர்கள் தனியாகவும், மண  வாழ்க்கையில் ஈடு பட்டு, ஆனால் கட்டுப் பாட்டுடன் வாழ்ந்தார்கள்.

சில சாப்பாட்டு பொருட்களை ஒதுக்கினார்கள் - அது to control their senses. சிற்றின்பம், பேரின்பம் என்று பிரித்தார்கள். கோபத்தை தவிர்த்தார்கள் சாத்வீகமாக இருந்தார்கள். தவம் செய்து, மேலும் மேலும் மனக் கட்டுப்பாட்டை வளர்த்தார்கள்.

அதனாலேயே , பிறருக்கு உபதேசிக்கும் திறமையை பெற்றார்கள். அதுவே தர்மமும் ஆயிற்று.

பிரம்மத்தை உணர வைப்பதால் "பிராமணன் " என்றும், போதிப்பதால் "குரு" ... "அஞானத்தை களைபவன் , இருட்டில் விளக்காய் இருப்பவன் " என்று அழைக் கப்பட்டார்கள்

குதிரை ஏற்றம், ஆயுதங்கள் தாங்கி போராடக் கூடியவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் ... அரசனையும் , மக்களையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் படை ஆனார்கள் . இவர்கள் "க்ஷத்ரியர்" என்று அழைக்கப்பட்டு , நாட்டின் காவலில் ஈடு படுத்தப் பட்டார்கள். அதிலும், சிறந்து விளங்கியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப தளபதி... etc .. நியமிக்கப் பட்டார்கள்.

அரசனுக்கும் மற்ற பிற மக்களுக்கும் தேவைப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து , அவைகளை விற்று தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள் "வைசியர்" என்று அழைக்கப்பட்டார்.

இவை எதுவுமே கற்றுக் கொள்ள முடியாதவர்கள் , பிறருக்கு உடம்பு உழைப்பால் சேவை செய்தார்கள் "சூத்திரன்" என்று அழைக்கப் பட்டார்கள்.

இந்த 4 வர்ணங்களும் அவரவர் தகுதிக்கும், செய்யும் சேவைக்கும் ஏற்ப பிரிக்கப் பட்டதே தவிர, எல்லோரும் மனிதர்களாக மதிக்கப் பட்டார்கள்

அவர்களுக்கிடயல் பேதங்களும், பொறாமைகளும் இல்லை. அப்படி இருந்தால் தண்டிக்கப் பட்டு, திருத்தப் பட்டார்கள்.

அவரவர் வேலைகளை அவரவர் ஒழுங்காய் பின் பற்றியதால் சமூகம் அமைதியாக வாழ்ந்தது.

பிறப்பால் மட்டுமே "ஜாதி" என்று அழைக்கப்பட்டு, ஏற்றத் தாழ்வு செய்யப் படவில்லை.

அதனால் தான் வால்மீகியும், காளிதாசனும் படிப்பாற்றல் மிகுந்து கவிஞன் ஆனார்கள். இதில் கடவுள் பக்தியும், பூர்வ ஜென்ம பாவ புண்ணியங் களின் பலன்கள் என்ற தத்துவங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஒரு முனிவர் யாகம் செய்கிறார், அப்போது, "நீயா, நானா" போட்டி இவர்களுக்குள் ஏற்பட, முனிவர் சொல்கிறார்...

"பிறப்பால் எல்லாரும் சமம். உடலில் உள்ள இந்த்ரியங்கள் எல்லாம் சமம். அவரவர்க்கு என்ன திறமையோ அதை நன்றாக செய்ய வேண்டும்.

பிராமணன் யாகம் செய்தால், அது உலக நன்மைக்காக. தேவர்களை திருப்தி படுத்த; மழை பொழிந்து நாடு வளமாக;

க்ஷத்ரியன், அந்த யாகம் யாராலையும் பாதிக்கப் படாமல் காவல் காக்க வேண்டும்.

வைசியன் , யாகத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க;

சூத்திரர்கள் ஏவலிட்ட வேலைகளை செய்து, தேவையான சாமான்களை சுமந்து வந்து (உடல் வலிமை பெற்றவர்கள்) உதவ;

இவர்களில் உசத்தி யாரு, மட்டம் யாரு? இவர்களின் ஒன்று பட்ட சேவை இல்லாமல் யாகம் நடை பெறாது. ஆகையால் எல்லோரும் சமம். ஏற்றத் தாழ்வு கிடையாது.

நம் உடலில் உள்ள கை கால் போன்ற உறுப்புகள் இப்படி யோசிக்க ஆரம்பித்தால் நம்மால் இயங்க முடியுமா. எல்லா அங்கங்களுக்கும் , தனித்தனி பணிகள் இருக்கின்றன. அதில் ஒன்று வேலை செய்யா விட்டாலும் system சிரமப் படும்."

என்று உபதேசித்தார்.

--------------------------------------

காலப் போக்கில், கலி காலத்தில், சில விஷமிகளால் மக்கள் மனம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் கற்பனை செய்யப் பட்டன.

பிராமணர்கள், மிக மதிக்கப் பட்டதாலேயே.. அவர்களுக்கும் கொஞ்சம் "கர்வம்" வந்தது. அவர்கள் பூஜைகளும் யாகங்களும் செய்ய சில சுத்த பத்தங்களும், கட்டுப் பாடுகளும் இருந்ததால், மற்ற சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

கஷத்ரியர்களும், மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை இவை களால் ஆட்டுவிக்கப் பட்டு, போர் செய்தல் (நாட்டை விரிவு படுத்த) (போர் என்பது, மக்களை எதிரி களிடமிருந்து காப்பாற்ற மட்டும் என்ற தர்மத்தை மறந்து), தன் நாட்டையே, அரசனிடமிருந்து கைப் பற்றி ஆள என்று திரிந்து...பல தீய செயல்களுக்கும், தகுதி இல்லாதவர்கள் அரசனாகவும், தகுதி இல்லை என்றாலும் குலத்தின் வழித் தோன்றல் , அரசனாவதும் என்று கெட்டது .

ஞானிகளின் ஆலோசனை பெற்று, அரசனை நியமிக்கும் வழக்கம் போயிற்று.

வைசியர்கள், வியாபாரத்தால் செல்வம் மிக்க வர்கள் ஆனார்கள். தனக்கு போக மிஞ்சியதை தான தருமங்கள் செய்ய வேண்டும், அரசாங்கத்துக்கு வரிகள் கட்ட வேண்டும் என்ற நியதிகளை மறந்து, தனக்கென்றும், தன்  குடும்பத்துக்கும் என்று வாழ ஆரம்பித்தார்கள்.

செல்வமும், வாழ்க்கை வளமும், தன்னலமும் பெருக, பணம் பிரதானமாயிற்று. போட்டி, பொறாமை வளர்ந்தது. மனிதன், தன தேவைக்கு மேல் பொருளீட்ட ஆசைப் பட ஆரம்பித்தான். தர்மம் அழிய ஆரம்பித்தது.

சூத்திர்கள் , வேலைகள் மட்டும் வாங்கப் பட்டு, தள்ளி வைக்கப் பட்டார்கள் .

சமூகம் மாற ஆரம்பித்தது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. நாகரீக வளர்ச்சிகளால் ஏற்பட்டவை. changes in society, difference of opinion, sociological / political changes, இவைகளால் , மரபுகள் மாறின. பழக்க வழக்கங்கள் மாற, சமூகக் கட்டுப் பாடு குறைந்து, கூட்டங்கள் பிரிந்து, சிறு சிறு கூட்டங்களாக ஆகி, ஜாதி என்று பெயர் சூட்டினார்கள். எந்த சாதிக்கும் , பழக்க வழக்கங்கள் மாறினாலும், மனிதன் என்ற தன்மை மாறக் கூடாது.ஆனால் மாறியது.

சில நம்பிக்கைகள் வேறு பட (குரங்கு மனம் தான்.), அவனவன் தான் leader ஆக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட, பல ஜாதிகள் உருவாகின.

மத நம்பிக்கைகள் மாறியது.

ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், கருத்து வேறுபாட்டால் , பிரிந்து வேறு வேறு பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

சம்பிரதாயங்கள் மாறியது. "யார் உசத்தி" என்ற போட்டியும் பொறாமையும் உருவாயின. "தெய்வங்களும் பிரிக்கப் பட்டனர் ; எந்த தெய்வம் ஒசத்தி என்ற பகையில், வெட்டுக் குத்துக் கூட ஏற்பட ஆரம்பித்தன. ஆணவமும், பக்குவமின்மையும் மேலோங்கியது. மனித நேயம் என்ற சொல் வெறும் சொல்லாக, fashion சொல்லாக மாறியது. மனதில் துவேஷமும், வெளியில் வேறு வேஷமும் - மனிதன் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தான்.

அன்பே சிவம் என்றான்

அரங்கனே வாழ்விப்பான் என்றான்.

கல்லும் சந்தன குங்குமத்துடன் , கடவுளாகியது 

இது நம்பிக்கையாகவே இருந்தால் psychological , mental stability ; அமைதிக்கு உதவும்.

அதுவும் கடவுள் படைத்தது தான் என்று, மரத்தையும், மட்டையையும் கடவுளாக்கியவன் , "மனிதனும் தெய்வமாகலாம்" என்றும், ஆத்மா ஒன்று தான் என்றும் புரிந்து கொள்ள வில்லை.

ஆதி சங்கரரும், ராமானுஜரும் போதித்ததை மறந்தார்கள். வள்ளலார் சொன்னதை, ஒரு poetical , literary தமிழ் என்று ஆக்கிவிட்டார்கள்.

பட்டினத்தாரும், பாரதியாரும் சினிமா எடுக்க பயன் பட்டார்கள்.

-------------------------

" வந்த நாள் முதல் இந்த நாள் வரை யாவும் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடற்காற்றும் மலரும் மண்ணும் நதியும் சோலையும்

எதுவும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்; மதத்தில் ஏறிவிட்டான்..

பாரில் இறைவன் படைத்ததை எல்லாம்

பாவி மனிதன் பிரித்து விட்டானே...!!!"

“ மழையும் நிலவும், சூரியனும் - மாளிகை, குடிசை என்று பார்ப்பதில்லை.

அவைகளை பூஜிக்கும் மனிதர்கள் தான் பணக்காரன் / ஏழை என்று சமூகத்தை பிரித்து விட்டான்.”

அரசையும், வேம்பையும் கும்பிடுபவன், அடுத்த வீட்டுக் காரனை கூட மதிப்பதில்லையே !!

இப்போது ஜாதி என்பது அரசியல் சதுரங்கத்து காய்கள் ஆகிவிட்டன.

ஆயிரமாயிர சங்கங்கள்... முன்னேற்ற கழகங்கள்....

ஆனால் மனிதன் முன்னேற வழி காட்டப் படவில்லை.

-------------------------------------------

இதற்குமேல் சொல்ல தேவையில்லை... இன்றைய நிலை சொல்லித் தெரிவதில்லை.