Thursday, October 26, 2017

250 ரூ. ஞாபகம்........

 250 ரூ. ஞாபகம்.
Late seventees இல் என்று ஞாபகம்.. பூனாவில் இருந்தேன். அப்போது மார்க்கெட்டில் புதிதாக ஒரு சாமான் வந்தது..
சுமீத்தில் சப்பாத்தி மாவு பிசையும் அட்டச்மெண்ட்..... 250 ரூ. என்றதும் உடனே பல நன்மையான காரணங்களை சொல்லி, வாங்கி விட்டேன்.
ஒரு எலெக்ட்ரிக் இட்லி கிரைண்டர் சைஸ் இருந்தது.... ஆஹா.. கொடுத்த காசுக்கு இவ்வளவு பெரிய பாத்திரமா- அதுவும் மூடியுடன்!!.
மறு நாள் அதில் மாவு பிசைய ஆரம்பித்தேன். அதில் மிக்சியில் பதிக்கும் அடி பாகம் ஒரு சைடில்.. நடுவில் இல்லை !!
எப்படியோ, தூக்கி பொருத்தி விட்டேன்.. (இதில் என் friends எல்லாம் நான் மாவு பிசைவதை பார்க்க வரேன்னாங்களா...நல்ல வேளை .. அவர்களுக்கு தெரியாமல் ஒரு trial - practical எக்சாமுக்கு ப்ராக்டிஸ் மாதிரி ஒரு சிறிய நடுக்கம்...)
ஆச்சு... கொஞ்சம் மாவு போட்டேன்... ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டேன்.. கொஞ்சம் தண்ணீர்..அப்புறம்.. ஒரு டிர்ர்ரர்ர்ர்.......
திறந்து பார்த்தால் - மாவை காணோம்.. உள்ளே நன்றாக தலையை விட்டு தேடினேன்.. அடியில் பிசு பிசுப்பாக ஏதோ இருந்தது..
ஒ... நான் போட்ட கொஞ்ச மாவு அந்த கடோத்கஜன் வாய்க்கும், வயிறுக்கும் போரல்ல...
சரி... நிறையவே போடலாம்... பிரிஜ்ஜில் வைத்து 5 நாள் ஓட்டலாம் ...ம்ன்னு .. கொஞ்சம் பாசிடிவ் ஆக யோசித்து...சுமார் இருபது சப்பாத்திக்கு தேவையான.. மாவை போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு , மறுபடியும் drrrrrrrrrrrrrrrr - அதிக நேரம். ஏதோ கடமுட சத்தம் கேட்க.. திறந்து பார்த்தால், மாவு சற்றே ஈரப்பதத்துடன் - முக்கால் வாசி மாவாகவே இருந்தது...
"இது பரவா இல்லை... தண்ணி ஜாஸ்தியாகத்தான் போகக் கூடாது" என்று எனக்கே சொல்லிக் கொண்டு.. தண்ணீர் விட்டேன்...மறுபடியும்.. (ஒரு..............)
திறந்து பார்த்தால், இந்த முறை, தண்ணீர் அதிகம் !! பரவா இல்லை என்று இன்னும் கொஞ்சம் மாவு...
இந்த சக்கர வட்டத்தில் கடைசியாக (நொந்து போய் ) எடுத்தது .. ஒரு இருபது பேர் கொண்ட குடும்பத்துக்கு !!
இப்போது குழப்பம்... குடும்பத்தை பெருக்குவதா... மாவை கூட்டுவதா.. கழித்துக் கொட்டுவதா... வகுத்து பிரிஜ்ஜில் வைப்பதா?
கடைக்காரன் demonstrate பண்ணும்போது, மாவு, உருண்டு திரண்டு... நன்றாக இருந்தது..
(இந்த அனுபவம் மட்டும் எல்லா பெண்களுக்கும் இருக்கும்..எக்சிபிசன் போகும்போது... அந்த கறிகாய் நறுக்கும் வேகமும், சீரான வெட்டுதலும்... ஆசையாக வாங்கி வந்தால் (அப்பாடா , இனி வீட்டு வேலை செய்பவளை எதிர் பார்க்க வேண்டாம் .. நாமே செய்து கொள்ளலாம் .. என்று வாங்கி வந்தால், நம்மை காலை வாரி விடும்.. இப்படியாக பாரதியார் பாட்டு போல்...(கூலி மிகக் கேட்பான்....)... வாங்கிய சாமான்கள் பலப் பல... vaccum cleaner சேர்த்து... இப்போது.. அவளுக்கு என்ன தேவையோ அவைகளை பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்து, பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.."அமெரிக்காவிலிருந்து நல்ல கத்தி வாங்கிட்டு வாங்கம்மா " என்று ஒரு indent போட்டிருக்கிறாள். கடைக்குப் போனால் கவிதாவுக்காக என்ன வாங்கலாம் ? என்றே யோசிக்கிற அளவு அவளுடைய ஆளுமை)
சரி, மாவுக்கு வருவோம்.. உருளவும் இல்லை , திரளவும் இல்லை.. வெளியில் பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் எண்ணெய் விட்டு, சேர்த்து, அடித்து பிசைந்து, ஒரு வழியாக பிரிஜ்ஜில் வைத்தேன்...
அதற்கப்புறம், அந்த பாத்திரங்களை அலம்பப்பட்ட பாடு இருக்கே ? தாவு தீர்ந்து விட்டது... மேடை நிறைய பாத்திரம்... எல்லாவற்றையும் துடைத்து, எடுத்து, தள்ளி வைத்து விட்டு... மேடையை தேய்த்து சுத்தம் பண்ணி , நிமிர்ந்தால் !! அப்பாடா... "நான் போருக்குப் போனேன் .. அங்கு போர்க்களம் ஆனேன் " என்று பாட வேண்டி இருந்தது. )ஏதாவது புதிதாக வாங்கினால், ஒரு பத்து நாள் நானே தேய்த்து அலம்புவேன்.. வேலைக்காரி பாழாக்கி விடுவாளாம்.. அவளுக்கும் தெரியும்.. "இது ரொம்ப நாள் தாங்காது...நம்மிடம் தான் வரும் என்று..."
இந்த கஷ்டங்களை எல்லாம் வெளிக்காட்டாமல், சப்பாத்தி பண்ணி, இவரிடம் பெருமையாக, "நம் புது மெஷினில் பிசைந்த மாவு" என்றேன்.
ஆச்சு... இன்னும் நாலு நாளைக்கு ராத்திரி சப்பாத்தி தான் என்று மறு நாள் மாவை எடுத்தால், கல்லு போல இருக்கு !! முதல் லேயே எடுத்து வெளியே வைத்திருக்கனும் போல இருக்கு !! "அனுபவம் புதுமை... அவரிடம் சொன்னேன்..."
இப்படியாக, very few டைம்ஸ் யூஸ் பண்ணி விட்டு, பரணில் ஏத்தினேன்...நல்ல வேளை - இவருக்கு ஞாபகம் இருப்பதில்லை.. !! நல்ல குணம்..
இப்படி நொந்து நூலாகி, "உனக்காச்சு, எனக்காச்சு" என்று கஷ்டப்பட்டு, சென்னைக்கும் லாரியில் ஏற்றி கொண்டு வந்து... அப்புறம் யார் தலையிலேயோ (ப்ரீ யாகத்தான்) கட்டினேன்.. அதன் அருமை பெருமைகளை சொல்லி... அன்று முதல் "அவளுக்கும் பகையானேன் "
அது இப்போது யார் வீட்டு பரணிலோ, அல்லது குப்பை யிலோ !!
(மறக்க முடிய வில்லை.... மறக்க முடியவில்லை...)

No comments:

Post a Comment