Thursday, December 26, 2019

குறை ஒன்றும் இல்லை கண்ணா,,,,,,,,,,,

நிறைய உழைத்துவிட்டேன் ; இப்போது ஓய்வு தேவை படுகிறது.
நிறைய கச்சேரி கேட்டுவிட்டேன்; இப்போது போதும் என்று தோன்றிவிட்டது.
நிறைய சினிமா பார்த்துவிட்டேன்; இப்போது குறைந்துவிட்டது.
நிறைய சமைத்துவிட்டேன்; இப்போது சலித்துவிட்டது.
நிறைய travel செய்து விட்டேன்; இப்போது அலுத்துவிட்டது.
நிறைய பேசிவிட்டேன்; இப்பொது குறைக்க தோன்றுகிறது.
நிறைய கதை புத்தகங்கள் படித்துவிட்டேன்; இப்போது படிக்க தோன்றவில்லை.
நிறைய நாவல்கள் சேர்த்துவிட்டேன்; இப்போது வாங்குவதை குறைத்துவிட்டேன்.
ராமாயணம், மஹாபாரதம், பாகவதம், நாராயணீயம், இன்ன பிற நூல்கள் பல தடவைகள் படித்தாகிவிட்டது. மறுபடியும் படிக்க தோன்றவில்லை.
முக நூலில் இந்த 11 வருடங்களில் நிறைய எழுதியாகி விட்டது. blog கிலும் தான். தினமும் எழுத ஒன்றும் தோன்ற வில்லை.
இப்போதைய பொழுது போக்கு , யு டியூபில் பாட்டும், su do cu வும் தான். + சாப்பாடு, தூக்கம் .
குறை ஒன்றும் இல்லை கண்ணா !!

Sunday, October 13, 2019

அம்மாவின் வைத்தியங்கள் ......

எங்கள் வீட்டில், எதெற்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போக கூடாது. அப்பாவின் ரூல்.
Private Practice பண்ணும் டாக்டரும் குறைவுதான். டாக்டர் பீஸ் 1 Re. - டாக்டர் குடுப்பது.. ஜுரம், இருமல் க்கு சிகப்பு தண்ணி.. (called mixture). வயிற்று கோளாறுக்கு - white mixture - called bismath mixture.
தீராதுன்னா ... Govt. ஆஸ்பத்திரி. - கம்பௌண்டர் , மருந்து சீட்டை பார்த்து, பெரிய ஜாடியிலிருந்து   2, 3 கலர் தண்ணியை, ounce glass இல் அளந்து, நாம் கொண்டு போகும் bottle இல் ஊத்தி குடுப்பார். இது எப்பவாவதுதான்....
for common minor ailments, அம்மாவின் வைத்தியம் தான். My mother was not educated. but, she had amazing practical knowledge & was very smart.
1. ஜுரம் என்றால் - முதலில் rest.. strict diet... அதிக ஜுரம் என்றால் , தண்ணீரில், eucalyptus oil விட்டு, வேஷ்டி துணியை கிழித்து, நெற்றியில் போடுவார்கள். ஜுரம் இறங்கி விடும்.

2. தொண்டையில் புண் என்றால், அப்பா, துடைப்ப குச்சியை உடைத்து , நுனியில் பஞ்சு சுத்தி, lotion இல் நனைத்து, வாயை திறக்க சொல்லி, உள் நாக்கில் மருந்து தடவுவார். ஒரு நாளைக்கு மூன்று தரம். அப்புறம் உப்பு தண்ணியில் gargle.

3. வயிற்று வலிக்கு , அம்மா, வெற்றிலையில் ஓமத்தை வைத்து மென்று திங்க சொல்லுவாள். "லங்கணம் பரம ஔஷதம்"

4. ஒரு முறை எனக்கு காலில் புண் வர, கால் முழுதும் பரவி விட.. ஆடு தொடா இலையை பறித்து வந்து, எண்ணெய் தடவி , இலைகளை காலின் பரத்தி, கட்டு போட்டாள்... சில நாட்களில் சரியாகிவிட்டது.

5 .அப்போதெல்லாம் Dentistry popular இல்லை. எனக்கு மட்டும் பல் சொத்தை வந்தது... (வீட்டை சுற்றி சுற்றி எவ்வளவு ஓடி இருப்பேன் பல் தேய்க்காமல் !! ) சொத்தை பல்லில், கிராம்பு தைலத்தை ink filler மூலம், இரண்டு சொட்டு விடுவாள். மெட்ராஸ் வந்து, இன்னி வரைக்கும் Dentist குத்தகை தான் !!!

6. அம்மை போட்டினால், எவ்வளவு care !! தனியாக வைத்து, நிறைய வேப்பிலை கையில் கொடுத்து, பாய் மேல் பரப்பி... ஒரு குழந்தைக்கு வந்தால் ,வரிசையாக  எல்லாருக்கும் வரும். ஒரு முறை, என் அக்காவிற்கு தலைக்கு ஜாலம் விடும்போது, எனக்கு வர, என் அக்காவை 3 நாட்கள் எதிர்த்த வீட்டில் விட்டு விட்டாள்.

7. இருமல் வந்தால் , சித்தரத்தை ஒரு துண்டு வாயில் அடக்கி கொள்ள வேண்டும்.

8 . வாயில் புண் இருந்தால், மணத்தக்காளி கீரை தான் மருந்து. மிஞ்சினால் riboflavin   tablets.

9 . simple அண்ட் healthy food .

10 . டென்ஷன் இல்லாத படிப்பும் , விளையாட்டும்.

இன்று வரை நல்ல health இருக்க அந்த வைத்தியமெல்லாம் அஸ்திவாரம்.

Saturday, October 12, 2019

ரேடியோ .....

அப்பாவுக்கு பாட்டு என்றால் பயித்தியம். ஆனால் கர்நாடக சங்கீதம் தான். நாங்கள் அடுத்த ஜெனெரேஷன் என்பதால் அப்பாக்கு தெரியாமல் சினிமா பாட்டு சேர்த்துக் கொண்டோம்.
அப்பா ஒரு GEC ரேடியோ வைத்திருந்தார். தஞ்சாவூரில் , திருச்சி மட்டும் நன்றாக எடுக்கும். மெட்றாஸ் சுமார்தான்.
அது ஒரு வால்வு ரேடியோ. ரேடியோவை போட்டால் கொஞ்சம் நேரம் கழித்துதான் ஆரம்பிக்கும்.
அப்பா கச்சேரியை போட்டுவிட்டு , ராகம் சொல்லும்போது சத்தத்தை குறைத்துவிட்டு, எங்களை கேட்பார். சரியாக சொல்லாவிட்டால் கோபம் வரும்.
இரண்டாவது உலகப் போர் டைமில் ரேடியோவை உள்ளே ஒளித்து வைத்து அப்பா நியூஸ் கேட்பார்.
டிசம்பர் மியூசிக் சீசனில் மெட்றாஸ் மியூசிக் அகாடெமி, தமிழிசை சங்கம், இன்னும் "நகரத்தில் நடக்கும் கச்சேரியிலிருந்து" ஒலிபரப்பப் பட்ட கச்சேரிகளை கேட்டு அனுபவிப்பது உண்டு.
அப்பா வீட்டில் இல்லாதபோது ரேடியோ சிலோன் தான். அப்போது ஆல் இண்டியா ரேடியோவில் விவித பாரதி , வேறு சினிமா பாட்டுக்கள் கிடையாது.
ரேடியோ சிலோன் அருமையாக இருக்கும். மயில் வாகனன் என்றொரு அறிவிப்பாளர். ரொம்ப பிரபலம்.
வித விதமான நிகழ்ச்சிகள். அதில் "ஜோடி மாற்றம்" என்றொரு நிகழ்ச்சி நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லா சினிமா பாட்டு புஸ்தகங்களும் வாங்கி விடுவோம். புஸ்தகம் இல்லாத பாட்டுகளை ரேடியோவில் வரும்போது எழுதிக் கொள்வோம்.

"பினாகா கீத் மாலா" என்றொரு சூப்பர் ப்ரோக்ராம் கேட்டுருக்கிறீர்களா?
பாட்டை தவிர திருச்சி வானொலியில் ஒலி பரப்பாகும் நாடகங்கள் சுவாரசியமானவை. பாப்பா மலரும் பிடிக்கும் . நாடகங்களை எல்லோரும் ரேடியோவை சுற்றி உட்கார்ந்து கேட்போம். ஒலிச்சித்திரம் என்று சினிமாவை ஒலிபரப்புவார்கள்.
அந்த ரேடியோ ரொம்ப நாள் உயிரோடு இருந்தது.
மெட்றாஸில் நான் வேலைக்கு போனபோது அப்பாக்கு ஒரு ஃ பிலிப்ஸ் ரேடியோ வாங்கி கொடுத்தேன். 25 ரூ. தான். என்று நினைவு.
அதற்குள் பயம் தெளிந்து விட்டதால் நிறைய சினிமா பாட்டுக்களை கேட்பேன்.
காலை சீக்கிரம் எழுந்து நாலு மணியிலிருந்து ரேடியோ மலேசியா, ரேடியோ சிலோன் , ரேடியோ சிங்கப்பூர் என்று சினிமா பாட்டுக்கள். அந்த பாடல்களின் வரிகளும், டியூணும் இன்று வரை மறக்க மாட்டேன் என்கிறது.
1967 வரை (அது என்ன கணக்கு என்று கேட்கிறீர்களா- 1967 என் கல்யாணம்) டி.வி. யம் இல்லாததால் ஒரே பொழுது போக்கு ரேடியோ தான்.

Thursday, October 3, 2019

முடிவில்லா விசாரணைகள்...



எனக்கு 21 வயசாகி, படிப்பும் முடிந்ததும், எல்லா மாமிகளும் எங்கம்மாவை கேட்க ஆரம்பித்தது "ஏன் மாமி, பொண்ணுக்கு ஏதாவது வரன் தெகஞ்சிதோ? ன்னு.  ரொம்ப கவலையா கேட்டுட்டு, தனக்கு தெரிஞ்சவா பொண்ணுக்கெல்லாம் எப்படி "டக்கு டக்கு
 ன்னு வரன்  குதுந்துதுன்னுபாதி நிஜம் பாதி "ரீல்" விட, அம்மா, அதுக்கப்புறம் சில வருஷங்கள், வெளியில போறது, கல்யாணம் காட்சி அட்டென்ட்  பண்றதுஎல்லாம் நிறுத்திண்டுட்டா. . வழியிலயாரையாவதுபாத்தாலும், பாக்காதது போல் போய் விடுவாள்.

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள் அடுத்த கேள்வி. என்னன்னு உங்களுக்கெல்லாம் ஊகிக்க முடியும். இந்த கேள்விகளுக்கு பயந்துண்டு, ஒண்ணு என்ன, மூணு குழந்தைகள் பிறந்தாச்சு.

அதுக்கப்புறம் விட்டதா? அவா படிப்பு, உத்தியோகம், கல்யாணம், பேரன் பேத்திகள் எல்லா விசாரிப்பையும் தாண்டி, அறுபது வயசுக்கு மேல் அக்கடா என்று உக்காந்தால்....

ஒரு நாள், கொஞ்ச நாளாக பாக்காத மன்னியை ஆசையாக பாக்கப்போனால் " வசந்தா, உனக்கு முழங்கால் வலி வந்துடுத்தோ? மின்ன போல நடக்க முடியறதோ? ன்னு கேக்கறா. நானும் "ஆமாம் மன்னி, இப்பல்லாம் முடியவே இல்ல. கை காலெல்லாம் ஒரே வலி" ன்னு சொல்லி வைக்க, "அதான பாத்தேன். போக போக இன்னும் ஜாஸ்தியாகத்தான் ஆகும். இதுக்கு வைத்தியமும் கிடையாது" ன்னு நல்ல ஆசிகள் வழங்கி, குங்குமம் குடுத்து அனுப்பி வைத்தாள்.

என் அக்காவை பாத்த பொது, "மன்னி இப்படி கேக்கராடி" ன்னு சொன்னா, அவள்" அமாம் ஆமாம். அவள் கண்ணு பொல்லாதது. மாமியாரை விட்டு சுத்தி போடச்சொல்லு. ஆமாம், உனக்கு சுகர் வந்துடுத்தோ? " ங்கறா ! "இன்னும் இல்லியே" ன்னா, "எதுக்கும் அடிக்கடி செக் பண்ணிக்கோ. எப்ப வேணா வரும்" - இது அக்காவோட வார்னிங் !

ரோடில் யாரையாவது தெரிஞ்சவாளை பாக்க பயம்மா இருக்கு.
"பாத்து ரொம்ப நாளாச்சு வசந்தா. B.P. , Sugar  எல்லாம் வந்துடுத்தா ?" ன்னு ஏதோ பென்ஷன்  வரதாங்கர மாதிரி விசாரணை.
"சரி இவா எல்லாம் தன அனுபவத்துல சொல்றா" ன்னு போனா போறதுன்னு சகிச்சுண்டா -
ஏதோ ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் ன்னு டாக்டர் கிட்ட போனா, முதல் கேள்வி, "உங்களுக்கு சுகர் இருக்கா?" ங்கறதுதான். அதோடவா ! "எதுக்கும் Sugar, Cholestral, B.P., liver function, scan, echo, ECG எல்லாம் எடுத்துடலாம். பெட்டர் " ன்னு முழ நீள லிஸ்ட். பயம் வந்து, அவர் சொல்றா "கிளினிக்" போய் , எல்லா டெஸ்டும் எட்டாயிர ரூபா செலவழிச்சு பண்ணிண்டு, பயத்தோட ரிப்போர்ட் பாத்து,, எல்லாம் நார்மல் ஆக இருக்க, "இது வெறும் mild viral infection " ன்னு அந்த "mild " க்கு பேப்பர் நிறைய, வரிசையா, மருந்து பேர் !!
இது மட்டுமா ?

வயசாச்சு.
ரொம்ப நாழி கம்ப்யூட்டர் ல உக்காராதே.முதுகு வலி வரும்
ரொம்ப வாசிக்காதே. கண், தலை வலி வரும்
சாதம் சாப்பிடாதே. வயிறு உப்புசம் வந்து படுத்தும்
காலம்பர ராத்திரி காஞ்சி சாப்பிடு
வேணும்னா சப்பாத்தி ஒண்ணு ரெண்டு எடுத்துக்கோ.
கிழங்கு சாப்பிடாதே

தக்காளி சாபிடாதே. ஸ்டோன் வரும்னு ஒருத்தர். தக்காளி நிறைய சாப்பிடு. ஹார்ட்டுக்கு நல்லதுன்னு இன்னொருத்தர்.

வாழைபழம் சாப்பிடாதே. வெயிட் போடும்.... வாழப்பழம் தினமும் சாப்பிடு. constipation வராது...

இதல்லாம் ப்ரீ யா கிடைக்கிற அட்வைஸ்.. எல்லாம் உபமான, உபமேயங்களுடன் !!

இது மட்டுமா ?
ஆளுக்கொரு டாக்டர் suggest பண்ணி , ஒரு சாதாரண தலை வலி, brain tumor வரைக்கும் அலசப்படும்.

இதெல்லாமும் எப்படி?
"உனக்கு கோமளத்தை தெரியுமோ? அதாண்டி; நம்ம கமலாவோட நாத்தனார் பொண்ணு. அவளுக்கு இப்படித்தான் ... " என்று ஆரம்பித்து, ஒரு கதை.

"இப்படித்தான் அந்த ரங்கநாதனோட ஷட்டகர் பொண்ணு, (அந்த ரங்கநாதர் யாரென்று புரிஞ்சு கொள்ளவே தனி மூளையும் ஞாபக சக்தியும் வேணும் !!) , சின்ன வயசுக்காரி, கதவை தாப்பா போட்டுண்டு, குளிக்கப் போனவ, ரொம்ப நேரமாகி, கதவை உடைச்சுப் பாத்தா, மயக்கமா விழுந்திருக்கா ! மூலையில கட்டியம். கோமாவில இருக்கா. கைக்குழந்தை வேற" ன்னு, சொல்றா கதை, ஒரு மெகா சீரியல் எடுக்கலாம். மயக்கம் போட்ட பெண் கோமாவுக்கு போனது, ஆஸ்பத்திரிக்கு ஆனா செலவு, வீட்டில் வைத்து பார்ப்பது, nurse கிடைக்க படும் கஷ்டம், ஆத்துக்காரரின் அவஸ்தைகள், குழந்தை வளர்க்க யாரு ஹெல்ப்பு ...... !! நாம டாபிக் மாத்தினால ஒழிய இது நிக்காது !

இதை விட கொடுமை, ஒரு வருஷத்துக்கு அப்புறம் அதே மாமியை பாத்தால், விட்ட இடத்தில் இருந்து "போன வருஷம் சொன்னேனே, கோமால  இருக்கான்னு .. அவளுக்கு பெட் சோர் வந்து..." ன்னு ஆரம்பிச்சா, அடுத்த 500 எபிசொட் க்கு கதை ஓடும் !!

எல்லாம் சொல்லிட்டு, "ஹும்ம்... எல்லாம் பகவான் செயல். நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ. வயசாச்சு. குளிக்கும்போது கதவ தாள் போட்டுக்காதே. உங்காத்தில அந்த நாளத்திய கதவு. அப்புறம் உடைக்கணும்" ஞ்சு சொன்னா... அந்த மாமி கவலை படுவது என்னை பத்தியா, எங்காத்து கதவை பாத்தியான்னு தெரியல்ல. !!


ஸ்ரிங்கேரிக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு ரயிலில் வரேன் .. ஒருவர்
 " மாமி, இந்தாங்கோ. இந்த புரோஷரை வெச்சுக்கோங்கோ. அரித்ரடீஸ் பத்தி இன்னிக்கு ஒரு அமெரிக்க டாக்டர் கோடம்பாக்கத்தில ஆறு மணிக்கு பேசறார். இந்த textஐ படிச்சுட்டு அந்த lectureகேக்க வாங்கோ. ரொம்ப usefulஆக இருக்கும்" ங்கறார் !! சும்மாவா சொன்னார். முப்பது நிமிஷம் அதை பத்தி பேச, கட் பண்ணிண்டு இந்தண்ட வர பட்ட பாடு இருக்கே !!! 

பிரயாணம் முடிந்து, வீட்டுக்கு வந்து, குளிச்சு, சாப்பிட்டு, relaxed   ஆ , ஒரு magazine ஐ திறந்தா...
"உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகி விட்டதா. இதை படியுங்கள்.." ன்னு ஒரு கட்டுரை...
புக்கை படக்கென்று மூடி தூக்கிப் போட்டேன். 

ஒரு அட்டையில் "எனக்கு இது வரை B.P., Sugar, Cholestral, Thyroid, arithraities, heart blockஒண்ணும் வரல்லை. வந்தால் உடனே உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்" ன்னு எழுதி கழுத்தில் தொங்க விட்டுக்கலாம் ன்னு நினைக்கிறேன் !!     

 









Friday, September 20, 2019

பல்லோடு நான் படும் பாடு ...



DENTIST’S CHAIR


பல்லோடு நான் படும் பாடு..... 

சுமார்பதினாலு வயதிலேயே சொத்தைப் பல் வந்தது... (சொத்து வந்ததோ இல்லையோ... சொத்தை நிறைய வந்தது !!!)

எனக்கு காரணம் எல்லாம் தெரியாது... பல் ஏன் கெட்டுப் போறதுன்னு... (தெரிஞ்சப்புறம்  மட்டும் ஏதாவது பண்ண முடிஞ்சுதா என்ன ? வந்துண்டேதான் இருந்தது..)
ஆனா ஒண்ணு.. போன ஜென்மத்தில, இந்தடாக்டர்ஸ்க்கெல்லாம் நெறைய கடன்பட்டு, இந்த ஜென்மத்தில தீக்கறேன் ன்னு மட்டும் நன்னா தெரியறது...என் பற்களுக்கு அவா போட்டிருக்கற சிமெண்ட், நான் குடுத்திருக்கற பணம்... எல்லாம் சேர்த்தால்... கண்டிப்பா, ஒரு வீடு வாங்கி இருக்கலாம் !!)

இங்க ஒண்ணு  சொல்லியே  ஆகணும்... தஞ்சாவூர்ல, எல்லாரும்  செங்கப்பொடியில  பல்  தேக்கரச்சே, நாங்க சலிச்ச அடுப்பு  சாம்பல்ல  பல் தேச்சோம்..
அவா  எல்லாம் சாம்பலுக்கு வரச்சே, நாங்க பல்பொடிக்கு மாறிட்டோம்...
அவா பல்பொடிக்கு வரச்சே...நாங்க மெட்ராஸ்வந்து, பேஸ்ட்டுக்கு மாறியாச்சு... 
பத்தடி  முன்னேதான்  !!!

நஞ்சங்கூடு, பயோரியா  பல்பொடிகளை  மறக்கமுடியுமா ?
பயோரியா கொஞ்சம்காரம்...(அதோட  இங்கிலீஷ்  ஸ்பெல்லிங்  வேற  ரொம்ப  கஷ்டம் !!)
நஞ்சங்கூடு  நன்னா  இருக்கும்... அதனாலே  தாராளமா  கையில  கொட்டிண்டுடுவோம்னு  அப்பா, சின்ன 
 சின்ன பேப்பர் துண்டுல, கோவில்  குருக்கள்  விபூதி  மடிக்கராப் போல , நீட்டா , அழகா, ஒரே சைஸ்ல பொட்டலம்  கட்டி  வெப்பா... 
தினமும்ஆளுக்கொண்ணு... 

அம்மா   வைவாளேன்னு, குழாஅடிக்குப்  போய்,   "போனேன்..வந்தேன்" ன்னு பல்  தேச்சுட்டு  வந்துடுவேன்...

தஞ்சாவூர்ல  பல்லுக்கெல்லாம்  பெரிசாவைத்தியம்  ஒண்ணும்  கிடையாது.  பல்வலிச்சா, கன்னத்தில கை வெச்சு அமுக்கி, அம்மான்னு  கத்தினா, அப்பா, ஒருதொடப்பக்குச்சில  கொஞ்சம்  பஞ்சுசுத்தி, கிராம்புதைலம், டின்க்ச்சர், எதிலயாவது  தோச்சு, அந்தபல்லுல  வெப்பா... வலி கொறஞ்சிடும்..

அங்க ஆஸ்பத்திரிக்குப்  போனாலும், மருந்துதான்  போட்டு  அனுப்புவா... இன்னொரு  நல்ல விஷயம்... அப்போ எல்லாம்  painkiller ன்னு  மாத்திரை குடுக்கவே  மாட்டா... எத்தனை  நல்ல  விஷயம் !!!

எங்க மாமா  பையன்  ஒருத்தன்  மெட்ராஸ்  போய்  வந்து, அங்க  பல்  டாக்டர், சொத்தைப்  பல்லை  சுரண்டி, சிமென்ட்  வெச்சு  அடைத்து  விட்டதை  சொன்னபோது, அதிசயத்துப்   போயிட்டேன் !! எனக்கும் 
 அந்த  நல்ல  நாள்  வந்தது...

மெட்ராஸ்வந்து... காலேஜ்   attendance  ஐவிட, பல்  டாக்டர் attendance ரெகுலர் !!

இங்கே  வந்து  பழக  ஒரு  வருஷம்  ஆகி, மறுபடியும்  அமுங்கி  இருந்த  பல்வலி  வெளிக்கிளம்ப, General Hospital உடன்  சேர்ந்த  Dental Wing பீச்ரோட்ல்  இருக்கு...அங்கே  போகஆரம்பித்தேன்...
பெரியநல்ல Hospital, free treatment; நெறைய  ஸ்டுடென்ட்  டாக்டர்ஸ்... ஜே..ஜே.. ன்னு  இருக்கும்..
காலம்பர  சீக்கிரம்  கிளம்பி, புரசவாக்கத்தில்  இருந்து  ஏழாம்  நம்பர்  பஸ்  பிடித்து, பல்  ஆஸ்பத்திரிக்குப்   போய், அதே  பீச்  ரோடில்  இருக்கும்  காலேஜுக்கு ,21ம்  நம்பர்  பஸ்  பிடித்துப்  போய்  சேர்ந்து விடுவேன்... 

இது   வருடக்கணக்கா  நடந்தது... என்னை  அறியாமல், பழக்க 
 தோஷத்தில்  7ம்  நம்பர்  பஸ்  பிடிப்பது  வாடிக்கை  ஆகி  விட்டது... 
நல்லவேளையாக  ஒரு  பல்லும்  பிடுங்கப்பட  வில்லை 

பெண்பாக்கும்போது, நல்லவேளை , என்  பல்லை  நன்றாகப்  பார்க்கவில்லை... ஒரு தெத்துப்பல்  வேறு (சிங்கப்பல்லாம், அதிர்ஷ்டமாம் !!).. 

பல்வலி, ஒருதருமத்துக்குக்  கட்டுப்பட்டு  சிலவருஷங்கள்  அடங்கி  இருந்தது... 
ஆனால்  குழந்தைகள்  பிறக்கவும், மறுபடி  ஆரம்பம்..

(அதுவரை, genetic problem ;   9 th child ; calcium deficiency      ன்னு  ஏதோகாரணம்  சொல்வேன்.. குழந்தை 
 பிறந்தப்புறம், child birth க்குப்பிறகு  இப்படித்தான் ஆகும்  என்று  சொல்ல  ஆரம்பித்தேன்.. இன்று 
 வரை  இப்படியாப்பட்ட  காரணங்கள்   கண்டுபிடிப்பேனே  தவிர, என்தப்பு, பல்லை  நன்னா maintain பண்ணவில்லை  என்று  சொல்ல  வேமாட்டேன் !!)

அப்புறம்  என்ன... ஒண்ணுவிட்டு  ஒரு  நாள்  எங்க outing ஏ... பல்  டாக்டர்  தான்...             
Technology has advanced very much....
From simple filling to root canal, bridge, extraction, denture.. I have had implant also !
In the process... how much of knowledge I have gained !! I am a theoretical dentist  - not practical !!

இப்ப என்  வாய்  நெறைய  பல்  இருக்கு.. ஆனா  எத்தனை  ஒரிஜினல்ன்னு  தெரியாது... ஒண்ணு ரெண்டு இருக்கலாம் !! அதுவும்  சிமென்ட்  பூசப்பட்டதாதான்  இருக்கும்...!! 

பல்பொடியால  பல்  தேக்கப்படுத்தினவ... அப்புறம் (பிரஷ் / பல்பொடி) combination க்குமாறி, (அதுவும், தஞ்சாவூர்ல, நாங்கதான் முதல்ன்னு  நினைக்கிறேன் )... அப்புறம்  மெட்ராஸ்  வந்து (பிரஷ் / பேஸ்ட் ) க்குவந்து... இரண்டு  வேளை தேய்த்து... 
இப்போ... floss , super floss ன்னு  கலக்கறேனாக்கும் !!

Mahabharatha Characters ஐ விட, நான் பல்லை காண்பித்த டாக்டர்ஸ் அதிகம் !!

ஆனா, இன்னி வரைக்கும், டென்டிஸ்ட் சேர்ல உக்காந்து, வாயை திறந்ததும், ஒரு instrument கொண்டு வருவாரு பாருங்க, சொரண்டரதுக்கு, அத கிட்ட எடுத்துண்டு வந்த உடனே , பயமான பயம்.. போக மாட்டேங் கிறது ! அந்த "கூசல்" ஐ அனுபவிச்ச வாளுக்கத் தான் தெரியும் ! 

அமாம், ஏன் இந்த பல் டாக்டர் எல்லாம் , நம்ம வாய்க்குள்ள, இன்ஸ்ட்ருமென்ட் ஐ வெச்சு, ட்ரீட் பண்றச்சே, கேள்வி கேக்கறா ? 
எல்லா பதிலையும் கண்ணாலே சொல்ல முடியுமா ??

இப்படிஎன் Medical Profession Interest ம் , Medical Articles எந்த Magazine  ல, internet ல  பாத்தாலும்  படித்து, டாக்டர்களிடம் டிஸ்கஸ்  பண்ணி,   சொந்த  அனுபவமும்  சேர்ந்து, dental மட்டும்  அல்ல...
General, Cardio, Neuro, Ortho, Ophthalmi, Gynic, Psychco, Gastro   doctors கிட்டபோனஅனுபவம்...
Skin, E.N.T., Brain இன்ன  பிறவற்றையும்  கொஞ்சம்  படித்து, 
மூன்று  குழந்தைகளை   வளர்த்ததில்  Pediatric  ம்  தெரிந்து... 
(குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்  ..பாதி டாக்டர் ஆகிவிடுவீர்கள் !!)...

நான் 75 % டாக்டர் !! Practice தான்பண்ணமுடியாது !! 

ஒரு surgery  பாக்க  ஆசை... அதற்கு  இன்னும்  நேரம்  வரல்ல .       

Saturday, September 7, 2019

எங்கள் கல்யாணம் நிச்சயம் ஆன நாள்........

செப்டம்பர் ஏழாம் தேதி...  பிள்ளையார் சதுர்த்தி அன்று எங்கள் கல்யாணம் நிச்சயம் ஆன நாள்.
மின்ன நாள்ல எல்லாம் அதுக்கு நிச்சயதார்த்தம் என்று பெயர் இல்லை. Engagement என்ற பிரயோகமே கிடையாது.
"பாக்கு, வெத்தலை மாற்றுவது " என்று பெயர். இது ஒரு சின்ன function . பிள்ளை வீட்டில் நடக்கும்.
அதிகம் பேரை கூப்பிடுவது இல்லை. முக்கியமான , மிக நெருங்கிய உறவினர் மட்டுமே.
எங்கள் வீட்டில் இருந்து அம்மா, அப்பா, அக்கா, அத்திம்பேர் ,மன்னி இவ்வளவு பேர் தான்.
கல்யாண பெண்ணை கூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. "பளிச்சுனு புடவை கட்டிக்கோ, தலை பின்னி பூ நிறைய வெச்சுக்கோ" என்று என்னை எல்லாம் செய்துக்க சொல்லி, விட்டு விட்டு போய் விட்டார்கள் !!எனக்கு துணையாக என் அத்தையை வைத்து விட்டு, எல்லோரும் போனார்கள்.
சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எங்கள் வீட்டிலிருந்து போனவர்கள் கொஞ்சம் லேட். அதற்குள் அந்த சைடில் டென்ஷன்.
வெற்றிலை பாக்கு, மஞ்சள், பல தினுசு பழங்கள் , தேங்காய், பூ, ஸ்வீட் - சில முக்கியமான வெள்ளி பாத்திரங்கள் இவைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போனார்கள்.
சாஸ்திரிகள் வந்து, லக்ன பத்திரிகை படித்து சம்பிரதாயப்படி வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள்.
பிறகு எல்லோருக்கும் டிபன் . சாப்பாடு கிடையாது.
வைரத் தோடு நகைகள், வெள்ளி பாத்திரங்கள், பித்தளை , எவர் சில்வர் பாத்திரங்கள், துணி மணி, மாப்பிள்ளை டிரஸ் , சத்திரம் , சாப்பாடு எல்லாம் சேர்த்து 22 , ௦௦௦ ரூ. பட்ஜெட்டில் எங்கள் கல்யாணம் நிச்சயமாகி அக்டோபர் 25 என்று முஹூர்த்தம் நிச்சயிக்கப் பட்டது.

No Photos !!!
இப்போதெல்லாம் நிச்சய தார்த்தத்துக்கு beauty parlor க்கே 22 , ௦௦௦ ரூ. ஆகும் !!!!

Saturday, August 31, 2019

அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் .....

அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் .....

சென்னை என்னை மழையுடன், அன்புடன் வரவேற்றது - 3.15 am க்கு

வீட்டுக்கு வந்து, கதவை திறந்ததும் உரைத்தது காபி பொடி, பால் கீழ் வீட்டில் இருக்கும் என்று.

நேறே குளியலறை... ஒரு நல்ல ஷாம்பூ குளியல் போட்டு, அநேகமாக முடித்து விட்டேன்; குழாயில் தண்ணி நின்றது !

அது முடிந்து வெளியில் வந்தால் தெரிந்தது பவர் இல்லை; ஒரு லைட் இன்வெர்டரில் ஓடுகிறது என்று...

சரி, கொஞ்சம் டிவி ஐ பார்க்கலாம் என்று போட்டால், "நோ சிக்னல்" என்கிறது... காரணம் கேட்டால், மழையாம், டாடா ஸ்கை க்கு ஒத்துக்காதாம்.

அதுவும் ஒ.கே. ... மெயில், FB பார்க்கலாம் என்று கம்ப்யூட்டர் ஆன் செய்தால்... "net not getting connected" ....

"பாரத நாட்டுக் கிணை பாரத நாடே...
பாருலகரியுமே .. இதற்கில்லை ஈடே..."

என்ற பாட்டுதான் ஞாபகம் வந்தது...

காவிரி, கங்கை, யமுனை ஆறுகள்;
கயிலை யும் இமயத்தின் எவரெஸ்ட்;
தேவர் சொல் திருக்குறள் கீதை;
தேனினும் இனிய திருவாசகம்...
புத்தர், பரமஹம்சர், காளிதாசர், கம்பர் பெரும் புகழ் படைத்தார்கள்..
உத்தமர் காந்திஜிக்கு உவமை யாருமில்லை...
உயர் பல கோயில்கள் ......

பழம் பெருமை பேசுவதில் நமக்கு நிகர் யாருமில்லை...

இனிமே யாராவது சுதந்திர தினம், குடியரசு தினம் என்று கொடியேத்தி,
"நாம் சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன..." என்று ஸ்பீச் கொடுத்தால்,
உருட்டுக் கட்டையாலேயே அடிப்பேன்...

 "இதுவும் கடந்து போகும்" ன்னு கமெண்ட் குடுத்தீங்க... தொலச்சிப் பிடுவேன்..தொலைச்சு...

வீடு மாற்றும் காதை.......

SK க்கு திடீரென்று, வீட்டு சாமானெல்லாம் இன்னும் குறைக்கணும் என்று தோணிடுத்து. ஏற்கெனெவே மினிமம் தான் ... (எனக்கும் கூட உண்டு அந்த கிறுக்கு) ... வீடு மாத்தலாம்னு ஒரு ஐடியா.
எங்கள் பேரரசு பம்பாயில் இருக்கிறார். நாங்கள் கப்பம் கட்டும், சிற்றரசு. எங்கள் மாளிகை சின்னதுதான். ஒரு தர்பார் மண்டபம், அந்தப்புரத்தில் ஒரு அறை, விருந்தினர் அறை ஒன்று, பண்டக சாலை, சமையல் கூடம்.. இவ்வளவு தான்.
ரெண்டு வருஷத்துக்கு முந்தி, ரகசியமாக ,கரையான் நெறைய வந்து, படை எடுத்து, துணிமணி, பேப்பர் இன்ன பிற சாமான்கள் வைக்கும் அலமாரியில், கோட்டை யின் பின் பக்கமாக வந்து, பல்கிப் பெருகி, படையை பெருக்கி, திடீர் அட்டாக்...
கோட்டை சுவர் (அலமாரியின் கதவுகள்) இடி படும் முன், எங்களுக்கு ஒற்றன் தகவல் தர, போருக்கு ஆகும் செலவுக்கு, எங்கள் பேரரசுக்கு ஓலை அனுப்ப, அதை 'எலி' எடுத்து, ரகசிய ஒயர் மூலம் சேர்க்க, அவர் மந்திராலோசனை செய்து , தன் பட்டத்து ராணியையும் கேட்டு, பொருளுதவி செய்தார்.
(சாரி... சரித்திர நாவல் படிப்பதின் பாதிப்பு...படித்து விட்டு தூங்கினால், கனவிலாவது பட்டத்து ராணியாக நான் இருக்கக் கூடாதா? ஒரு சேடிப் பெண்ணாக வந்து, மகாராணிக்கு "சேவை செய்து, சாப்பாடு போட்டு, சாமரம் வீசுகிறேன்... ஹும்ம்ம்ம்... சோழ நாட்டின் இளவரசியாக பிறந்திருக்கணும்.!!)
நாங்களும், எங்கள் காலாட்படையை சேர்த்து, படைத்தளபதியின் மேற்பார்வையில், போர் தொடுத்து, கரையான் படையை கதற கதற அழித்து, துரத்தி .... கோட்டை கொத்தளங்களை புதுப்பித்து... மாளிகையை புதுப்பித்தோம்.
இந்த போர்களத்தில் எனக்கு என்ன வேலை? எல்லாம் நன்றாக நடக்கிறதா என்று பார்க்கப் போக,, ஒரு குதிரையால் தள்ளப் பட்டு, கேடயக் குவியலில் விழுந்து அடி பட்டு, கை கால் வீங்கி, அரண்மனை வைத்தியர் வீட்டுக்குப் போனால்... ஆச்சரியம்.. அங்கே , அண்டை நாட்டு, மா.. மா.. மன்னர்.. ஏகாதிபத்திய சக்கரவர்த்தி.. ஸ்ரீ ல ஸ்ரீ ரஜினி காந்த், விஜய சாம்ராஜ்ய மகா ராஜா, நகர் வலம் வரும்போது, மார்பு வலி வர, அவசரத்திற்கு, இந்த வைத்தியர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அவ்வளவு தான்.. நான் என் வலியை மறந்து, ஓடி, கூட்டத்தில் இடி பட்டு, தரிசனம் பண்ணி விட்டு, அவருடைய மெய் காவலர் துரத்த, ஓடி வந்து, முதலில் என் பெண்ணுக்கு தகவல் சொல்லி... அப்போ தான் இவரால் இடித்துரைக்கப் பட்டேன்... என் வீக்கத்திற்கு கட்டுப்போட செவிலியர்கள் தயாராக இருக்கிறார்கள்.
(இது ஒரு கிளைக் கதை. ராஜா கதையில் இப்படி கிளைக் கதைகள் நிறைய வருமில்லையா? )
மாளிகை தயாரானதும், என் வீட்டு வேலைக்காரர்களை வைத்து, போரில் மடிந்த எதிரிகளை அகற்றி, சுத்தம் செய்து, மறுபடியும் , நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பினோம்.
அப்போதே நான் சொன்னேன்.. "இந்த மாளிகை வேண்டாம்.. உப்பரிகை அலுத்து விட்டது... சிறை மாதிரி இருக்கு. வேறு மாளிகைக்கு மாறலாம்" என்று. என் பட்டத்து ராசா வுக்கு பிடிவாதம் அதிகம். இளவரசர்கள் , இளவரசி சொன்னாலும் கேட்பதில்லை. விதியை நோவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு சில எதிரிகள் தப்பி ஓடி, இரண்டு வருடங்களாக படை சேர்த்து, மறுபடியும் அட்டாக்.... இந்த முறை போர் செய்ய எங்களுக்கு சக்தி இல்லை... பணமும் இல்லை.. அதனால் வேறு மாளிகை பார்க்கிறோம்..
இவ்வளவு கதை எதற்கு என்று பார்க்கிறீர்களா? சொல்கிறேன்...
ஒரு நாள் நான் வெளியே பொய் விட்டு வருகிறேன்.. அதிர்ச்சி... வீட்டில் ஒரு கட்டில், மெத்தை, சிம்மாசனம், நாற்காலி ஒன்றும் இல்லை.. எல்லாவற்றையும் விற்று விட்டார் !! எல்லாம் பெரியதாக இருக்காம்... அடுத்த மாளிகை இவ்வளவு பெரிசு இல்லை என்றால், சமாளிக்க முடியாதாம். !! நல்ல வேளை, என் கயிற்றுக் கட்டிலும், பாயும் இருந்தது... உட்கார இரண்டு மூன்று சாதாரண நாற்காலிகள்.
நல்லவேளை, இயல், இசை, நாட்டிய மன்றமும், திரையும் இருந்தது.. பொழுது போக !!
அடுத்த நாள் பார்த்தால், பரண் சாமானெல்லாம் இறக்கப் பட்டு, நிறைய ஒதுக்கப் பட்டு, லிகிதங்கள், ஓலைகள் எரிக்கப் பட்டு... பட்டு..பட்டு..
அதில் பொக்கிஷமாக இவர் தந்தை சேஷாத்ரி உடையார் வைத்திருந்த ஒரு ஒரு செப்பேடு இருந்தது. அதில் எங்கள் கல்யாணத்தின், வைதீக செலவு குறிக்கப் பட்டிருந்தது.
வைதீகத்திற்கு, 1 ரூ., 5 ரூ, அதிக பட்சமாக 50 ரூ. என்று பொறிக்கப்பட்டு, கூட்டுத் தொகை 173 ரூபாய்கள்.
சம்பந்திக்கு, அப்பக்கூடை, பொரியிடல், பதில் மரியாதை என்று 25 ரூபாய்களை என் மாமனார் வாரி இறைத்திருக்கிறார் !!
அப்புறம், பலதானம், பாலிகை என்று எல்லாமுமாக சேர்த்து....
வைதீக செலவு ..... சுமார் 220 பொற்காசுகள் செலவாகி இருக்கிறது.
நாம் அந்த மாதிரி செலவழிக்க முடியுமோ? ஏதோ என்னாலான செலவாக , மொத்தமாக என் பையன் கல்யாணத்திற்கு போக வர செலவை சேர்த்து 50000 ரூ. யும், பெண்ணிற்கு சீர் வரிசை சேர்த்து, 2,00,000 ரூ. செலவு -- சக்திக்கு மீறி, நஞ்சை, புஞ்சை நிலங்களை விற்று செலவு செய்தோம். நம் பெண் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா.
(ஒளறல் போறுமா ... ஹிஹிஹிஹி ... இன்னிக்கு வாக்கிங் போகல்லே.. லீவு விட்டுட்டேன்... அதான் இப்படி...)

Friday, August 23, 2019

VK's School and College Life........


நான் படித்தது கிறிஸ்டியன் ஸ்கூல். (PROTESTANT )... அநேகமாக எல்லாருமே Christian lady teachers தான்.. girls ஸ்கூல் ஆச்சே !! 

விதி விலக்கு.. எங்கப்பா Maths , சயின்ஸ் க்கு ஒரு மாஸ்டர்,  Sanskrit க்கு ஒரு மாஸ்டர், Tamil  க்கு ஒரு மாஸ்டர்
எனக்கு தெரிஞ்சு, ஒரே ஒரு டீச்சர் ஐ தவிற எல்லாரும் கல்யாணம் பண்ணிக்காதவர்கள் தான்
(தப்பா புரிஞ்சுக்காதீங்க... விதி விலக்குGents Teachers நான்கு  பேரும் கல்யாணம் ஆனவங்க .. இல்லேன்னா நான் இப்போ இங்கே எழுதிண்டு இருக்க மாட்டேன் !! )

மிஸ் .பிலிப்ஸ் ன்னு ஒரு தையல் / டிராயிங் டீச்சர்.. எனக்கு ரெண்டுமே பிடிக்காது...
டிராயிங் இல் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் வரைய வேண்டும்..
இந்த காய்கள் எல்லாம் symmetrical ஆவா இருக்கு ? அனால் நோட்டில் அப்படித்தான் இருக்க வேண்டும்..! அழித்து அழித்து வரைந்து... அழுகிப்போன காய் மாதிரி இருக்கும் நெறைய குட்டு வாங்கி இருக்கேன் !

தையல் கிளாசில்... டீச்சரின் நடு விரலில், ஒரு கவசம் இருக்கும்.. ஊசி குத்தாம இருக்க..
 (ஒரு வேளை கர்ணன் மாதிரி அதோடே பிறந்திருப்பாளோ)
அந்த விரலாலேயே குட்டுவா...
நான் ஊசிய கீழே போட்டுட்டு, அதை தேடியே நேரத்தை ஓட்டிடுவேன் !!

எனக்கு பிடித்த மாதிரி, யங்கா, அழகா ஒரு சகுந்தலா டீச்சர் வந்தா... இங்கிலீஷ் டீச் பண்ணினா.. குரலும் அவ்வளவு இனிமை..
அவ்வளவுதான்... நான் ஒரே craze ! எனக்கு போட்டியாக இன்னும் சில பேர். நான் அவாளை போட்டியில் ஜெயிக்க, அவள் வீட்டை தெரிந்துகொண்டு, ஒரு லீவு நாளில் போய் கதவை தட்ட, டீச்சரின் அந்த mixed facial expression  ஐ இன்னி வரைக்கும் மறக்க முடியாது !! நாசூக்காக கட் பண்ணிட்டா..

காலேஜ் ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேர் வேறு... காலேஜ் போனதும்.. இந்த வால் தனம் எல்லாம் வந்துடும் போல !!

தமிழ் நாடகம் எடுத்த lecturer சந்திர குமாரி!   "சங்கீத குமாரி" என்று பெயர் வைத்தோம் .. proseநடையில் இருக்கும் வசனத்தை, பாட்டு மாதிரி படிப்பா.
Poetryஎடுத்த ராஜ மாணிக்கத்தை ரொம்ப பிடிக்கும்.. ஏன்னா.. குறுந்தொகை சொல்லிக்கொடுத்தா..!! (வயசுக்கோளாறு !)
Calculusஎடுத்த Dorathiஐ ரொம்ப பிடித்ததால்... அதில் எப்பவும் first மார்க்.. அவ இடது கை எழுத்து...
ஒரு நாள் அவ கிளாஸ் க்கு வர கொஞ்சம் லேட் ஆக, ஆர்வக்கோளாறினால்.. போர்டில் இடது கையால் எழுதிண்டிருந்தேன். வந்து ஒரு முறை முறைச்சா பாருங்க.. அன்னி பூர அழுது, மன்னிப்பு கேட்டு... அந்த lecturer இடம் அசடு வழிஞ்சிருக்கேன் !!

Physics சாந்தாவ எல்லாருக்கும் பிடிக்கும்..Heat / Sound / optics ... (பிடித்ததற்கு காரணம் பாடம் நன்னா சொல்லித்தந்தது மட்டும் இல்லை.. ரொம்ப வெளுப்பா, அழகா இருப்பா..
அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதா கேள்விப்பட்டதும் எவ்வளவு கவலை பட்டிருப்போம் ? மாப்பிள்ளையும் அழகா இருக்கணுமேன்னு !!


Dynamics , statics , Hydrostatics சொல்லிக்குடுத்த ரங்கநாயகி... சூப்பர் டீச்சிங் ! இன்னி வரைக்கும் நான் அதில் strong !

Electricity Class was for eating curd rice with nellikkaaioorugaai..ஏன்னா .. ஒரு  derivationboard   போட ஆரம்பிச்சாமுடியற வரைக்கும் திரும்ப மாட்டாமறந்து போயிடும்னு பயம் !! நாங்க 13 பேர் தான் !! இரண்டு row  வில உக்காந்துஜாலியா சாப்பிடுவோம்..
அதான்இப்ப வரைக்கும் எனக்கு electricity / Magnetism தகராறு... !!

Atomic Physics சௌந்தரம், Properties of Matter பிரபா ... (இவா ரெண்டு பேரும் ஏன் இன்னி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கல ன்னு மண்ட காச்சல்தான் ! .. ரெண்டு பேரும்.. இணை பிரியா தோழிகள்..)
மறக்க முடியுமா இவாளை எல்லாம் !!


way back in 1959, my school celebrated Golden Jubilee. grandceleb.was planned. ----

I was always there in every play for regular annual school days... always playing the role of the key man of the play !except once –

1956 - centenary celeb. of commencement of freedom struggle - sipoy mutiny - public function - I played JANSI RANI –

வீர வசனம் எல்லா practice பண்ணியாச்சு.  Rehearse ல பொம்மை horse மேலேஉக்காந்து, கத்தி பிடிச்சுண்டு பேசியாச்சு
actual staging க்கு போனா.... அங்க ஒரு நெஜ  போனி !! அதும் மேல உக்காருன்னு last minute ல.. ஒரு படுத்தல்.  அது ஒரு dress rehearsal . "போனி மேல எறல்லன்னா, உன்ன டிராமாலேர்ந்து தூக்கிடுவோம் னு ஒரு black mail வேர . அதுக்கு முன்னாடி நான்போனியே பாத்ததில்ல.. குதிர வண்டில கூட ஜாஸ்தி போனதில்ல.
ஒரு வழியா, மனச தேத்திண்டு, ஏறி, stage  குதிரையில உக்காந்து  (குதிரை ஓடாதுன்னு எனக்கு சமாதானம் வேர) , வசனம் பேசினா.. அது "வீர வசனம்" ஆவா இருக்கும் ? அதுக்கும் திட்டு. நான் ஒரே அழுகை... அதுக்கும் திட்டு.
அப்புறம் ஆத்துக்கு வந்து, அம்மா மோர் ல கம்பி காச்சி சொருகி (பயந்து போன, பேய் அறைஞ்சா மாதிரி இருந்த இது ஒரு வைத்தியம்) குடிக்க வெச்சா..
ஒரே சொப்பனம்... குதிர என்ன எடுத்துண்டு காடு மலை எல்லா சுத்தராப்பல... ஆனாஆசை யார விட்டது !
மறு நாள் மகா மெகா கூட்டம் அந்த function க்கு.
தைர்யமா, நன்னா பண்ணி, கலெக்டர் கையால பரிசு வாங்கிட்டேன் !!

Now I will come back to 1959... I has finished writing the Public Exam. The function was in April End. After the exams rehearsals were done.

school golden jubilee function la main item drama - jean val jean (I am not sure of the spelling !) ... The hero, a very poor soul, is given BUN by the Church father.... but in the night he escapes with two silver candle stand. when police catches him, the father rescues him saying, he only gave them to him as gifts. now the man repents & refines. This the story.

My eldest brother who was working outside Tanjore came only to witness this event. whole family was present !
The father gave BUN.... எனக்குstage fear இல்லேன்னாலும், கொஞ்சம்anxiety இருக்கும் இல்லையா.. நன்னா பண்ணனும்னு...

அந்த பன்ன அவசர அவசரமா கடிச்சு, (back stage ல சீக்கிரம், சீக்கிரம் ன்னு ஜாடை !! time factor ) , வாய் நிறைய பன்கண்ணுல  பயம்தொண்ட அடைக்கறது... father role பண்ணின பொண்னே கொஞ்ச பயந்து பொய், தண்ணி குடுத்தா.. (சிவாஜி தோத்தார் போங்கோ !!) ...
அந்த சீன, அப்படி ஒரு அப்ளாஸ்... !!
best actor prizeவேற !!

நான் இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது... School Day Program . ......
"அம்மா வைப்போல் பெரியவளானால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஒரு பெண்  -அம்மா  வேஷம் - புடவையில் 
"அப்பா வைப்போல் பெரியவரானால் என்ன செய்வேன் தெரியுமா ? " என்று நான் -அப்பாவாகவேஷ்டியில்.

{அம்மாசமைப்பாள்துணி துவைப்பாள்பாத்திரம் கழுவுவாள்குழந்தைகளை பேணுவாள் ..
அப்பாஆபீஸ் போவார்பணம் கொண்டு வருவார்கடைக்கு போவார்.... இப்படி 
இன்று வரை இந்த பாடங்கள் .. படங்களுடன் ... மாறவில்லை !!!}

While in 6th ... School Day - a rhyme with names of flowers; Some girls sang from behind stage; few of us were dressed up with a specific color of a flower, with a big flower made out of color paper fixed at our back.
I was DAISY in it.

These two, I can never forget !!

From 9th onwards, I used to be there in songs, playing Veena... all Christian Songs only !!

In 6th  Class, English was started for us. till then I didn't know even ABCD ! English started with Alphabets from 6th !!but reached a good standard by the time we were in S.S.LC.