Wednesday, June 12, 2019

சினிமா பாட்டும், நானும் ......

சினிமா பாட்டும், நானும் !!!
என்னதான் அப்பா கர்நாடக சங்கீதத்துக்கு importance குடுத்தாலும், சினிமா பாட்டும், நாங்களும் பிரிக்க முடியாதவை; பிரிக்க கூடாதவை !!
Radio Ceylon was the only sation having lot of Tamil Film songs Broadcast.
எல்லா பாட்டும் with Tune , Back ground Music- அத்துப்படி.
எந்த பாட்டு பாடினாலும், நடுவில், டொட்ட டோஇங் டோயங்... என்ற BGM நடு நடுவில், எங்களாலேயே பாடப்படும் ! (அதை சொல்லாமல் பாட வராது !!)
In Super Singer.. the judges talk about ATTITUDE (?), FEEL !
எனக்கு அது கொஞ்சம் அதிகமே !!
எனக்கு என்றைக்கும் தலை மேல் பலப் எறிந்ததும் இல்லை... மணி அடித்ததும் இல்லை...
ஆனால்.. பாடும்போது...
"அன்பே ..நீ அங்கே..நான் இங்கே.. வாழ்ந்தால்..
இன்பம் காண்பதும் எங்கே...."
என்று பாடினால்.. சோகத்தால் உருகி... அன்பே..அங்கே இருப்பதாக கற்பனை பண்ணி... என்ன பீல்..என்ன பீல்.. !!
"மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..."
என்று பாடும்போது... சத்தியமா சொல்றேங்க.. எனக்கு அர்த்தமே தெரியாது !!
"எல்லாம் மாயை தானா.." என்ற தேவதாஸ் பாட்டையும்
"அன்பே வா..அழைக்கின்றதெந்தன் மூச்சே..." என்ற 'அவன்' சினிமா பாட்டையும்
அழுதுக்கொண்டே பாடுவேன் !
"உன்னை கண் தேடுதே... " என்று விக்கிக்கொண்டே பாடுவேன்...!!
பெரிய SQAURE சமையல் அரை. ஒரு மூலையில், மண் மேடை போட்டு, மண் அடுப்பு.. ஒரு பக்கம் பின் ரேழிக்கு வரும் கதவு... ஒரு பக்கம் தோட்டத்துக்கு போகும் கதவு... நடுவில் மித்தம்.. மேலே கிரில் போட்டிருக்கும்...நாலு தூண்..
ஒரு தூண் பக்கத்தில் கல்லுரல்.
ஒன்று விட்டு ஒரு நாள் மாவு அரைக்க வேண்டும்.
அரைப்பது என் மூன்றாவது அக்கா.. அரிசியை தள்ளி விடுவது நான்...
அவளுக்கு சன்னமான குரல்.. அதனால் அவள் கதாநாயகி. நான் கதாநாயகன்...
அப்புறம் என்ன.. டூயட் தான்.. அரைத்து முடிக்கும் வரை...
சஹானாவில்.. "எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே..." என்று (T.M.S. / Gemini தோத்தார்கள்)
அந்த அக்காக்கு கல்யாணம் ஆகி போனதும் " நான் காண்பேனோ சோதரியாளை  - பார் மீதிலே..." என்று ஒரே சோகம் !!
College - B.Sc. படிக்கும்போதும்  இது தொடர்ந்தது...
லஞ்ச் டைம் இல் நானும், லலிதாவும்.. "முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே..." என்று உத்தம புத்திரன் பாட்டுதான் - அமர்க்களம் தான் !!
அது மட்டுமா...
அங்கே சில லூசு பெண்கள்.. Love இல் சிக்கி.. நேயர் விருப்பம் வேறே.
அவர்களுக்காக..
"கங்கை கரை தோட்டம்... கன்னிப்பெண்கள் கூட்டம் - கண்ணன் நடுவினிலே .."
"ஒருத்தி ஒருவனை நினைத்திருந்தால் அந்த உறவுக்கு பெயர் என்ன..."
"பொன்னென்பேன் .. சிறு பூவென்பேன்.."
இத்யாதி பாட்டுகள்.. மகா பெருமையாக.. ஏக பீலிங்குடன் !!!
இப்பொழுதும் பாடுகிறேன்... S.K. is the (escape panna mudiyaatha) audience !!
அதே பீலிங்க்ஸ் .. வார்த்தைகள் மறக்க வில்லை...
SUPER SINGER பார்க்கும்போது, எனக்கு புரிய வில்லை.."ஏன் இவர்கள் பீல் பண்ணி பாட மாட்டேன் என்கிறார்கள்? " என்று !!

No comments:

Post a Comment