Wednesday, June 12, 2019

ஆஸ்திரேலியா தமாஷ்......



ஒரு தமாஷ் சொல்லட்டுமா !!
ஆஸ்திரேலியா என்றாலே நமக்கு கங்காரூ தான் ஞாபகத்தில் வரும்...
நாங்கள் ஆஸ்திரேலியா போக தீர்மானித்ததும் (1992), எனக்கு கங்காரூ பார்க்கப்போகும் குஷி.
முதலில் போனது சிட்னி என்று ஞாபகம். ஏர்போர்ட் டிலிருந்து ஹோட்டலுக்கு போகும்போது, ரோடை ஆவலாகப் பார்த்துக்கொண்டே போனேன்- கங்காரு பாக்க.
மறு நாள் சைட் சீயிங் போய் முடித்து, ரூமுக்கு வந்தப்புறம் இவரிடம், எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு ன்னு சொல்லவும் இவருக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் நினைத்திருந்தது, நம் ஊரில் தெருவில் எப்படி நாய்கள் திரியுமோ (அடேடே... இப்பல்லாம் தெருவில் நாய் பயம் இல்லாமல் ஆடு மாடு மோதாமல் சென்னையில் நடக்க முடிகிறதே ! எப்படி? அம்மாவின் ஆட்சியின் சாதனையா?)
அப்படி, அங்கே எங்கே பார்த்தாலும் கங்காரூ திரிந்து கொண்டிருக்கும் என்று "மடத்தனமாக" நினைத்திருந்தேன்.
அப்புறம்தான் SK சொன்னார்..அது wild அனிமல் ஜூவில் தான் இருக்கும் என்று !!
அப்புறம் என்ன.. ஜூ போய் ஆசை தீர, கங்காருவும், கோலா பேறும் (அது மரத்தில் ஒட்டிக்கொண்டு, நம்மளை முறைப்பது ரொம்ப அழகு) பார்த்தேன்.
அப்புறம் போன ஊரிலெல்லாம், முதலில் ஜூ தான்... கங்காரூ தான்.
ஒரு குட்டி எடுத்து வந்து வளர்த்திருக்கலாம்.
அங்கு ரொம்ப ரசித்து பார்த்தது டால் ஃ பின் ஷோ. மனிதர்களுக்கு சமமாக, sinchronised swimming எவ்வளவு அழகாக பண்ணுகிறது !. சூப்பர்.
Capital City யும் பார்லிமென்ட் building உம் அவ்வளவு நல்ல பிளான் .
கிரிக்கெட் ஸ்டேடியம் , மியூசிக் ஹால் (opera house) இரண்டும் பார்க்க வேண்டிய இடங்கள்.
இவைகளை தவிர அதிகம் இல்லை பார்க்க... பீச், அங்கு penguins ... மாலை சுமார் 6 மணிக்கு எல்லா penguins உம் கடலில் இருந்து கூட்டம் கூட்டமாக திரும்பி கரைக்கு வந்து அவைகளின் கூட்டுக்குள் (natural ) அடையும் . இதில் ஆச்சரியப்பட வைத்த விஷயம் :-
ஒரு கூட்டம் வெளியே ஒன்றாக வரும்போது, தங்களை சுற்றி பார்க்கும்; அதில் ஒரு பறவை குறைந்தாலும் எல்லாம் மறுபடியும் கடலுக்குள் போகும். இந்த மாதிரி நிறைய சிறு சிறு கூட்டங்கள் . சுமார் 30, 40 பறவைகள். அவைகளுக்கு இந்த சென்ஸ் எப்படி இருக்கிறது என்று ஒரே ஆச்சரியம்... ஒரே மாதிரி இருக்கும் பறவைகளில் அவைகளில் ஒன்றை எப்படி அடையாளம் கண்டு பிடித்து, ஒற்றுமையாக, தங்கள் தாங்கும் இடத்திற்கு போகிறது !!!
மற்றபடி, நம் இந்தியாவில் இருக்கும் அனேக அனேக சுவாரசியமான இடங்கள் வேறு எங்கும் கிடையாது.
ஔ ரங்கா பாத் போய் , அஜந்தா , எல்லோரா குகைகள் எத்தனை அதிசயம் !! ஆனால், அந்த ஊர் ரொம்ப கேவலம்.
tourism வளர்த்தால், நிறைய பணம் . ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.? வருத்தமாக இருக்கிறது.
எங்கே, எல்லாருக்கும் சண்டை போடவும், பொதுக் கூட்டம் போட்டு திட்டவும், தங்களுக்கு சொத்து சேர்க்கவுமே சரியாக இருக்கிறது.
common people கூட, நிறைய விஷயத்தில் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள்... என்னையும் சேர்த்துத்தான்... நான் மட்டும் என்ன செய்தேன் ?

No comments:

Post a Comment