Wednesday, June 12, 2019

ஆத்மா ஒன்றே துணை.......

நம் பிறவியை கடவுள் ஒரு புள்ளியில், ஒரு சிறிய micro level இல் அணுவாக , ஆத்மா ஒன்றே துணையாக ஆரம்பித்து வைக்கிறான்.
அது, பிறகு அம்மாவை சுற்றி, அம்மா மூலமாக அப்பாவையும் சேர்த்து சுற்றி ஒரு சிறு வட்டத்துக்குள் வாழ்கிறது.
நாம் வளர வளர, அம்மா அப்பாவைத்தவிர, உடன் பிறப்புகள் என்று வட்டத்தை பெரிதாக்கி சுற்றுகிறோம்.
இந்த வட்டம் மற்ற உறவுகள், நண்பர்கள் என்று பெரிதாகிக்கொண்டே போகிறது. வட்டம் பெரிதாக ஆக விட்டமும் பெரிதாகி , நாம் சுற்றும் வட்டம் 1,2 dimensions களை தாண்டி, கோளாகிறது (sphere).
இந்த வட்ட area, sphere volume களுடன் , துன்பங்களும், ஏமாற்றங்களும், தாபங்களும் பெரிதாகின்றன.
இந்த வட்டங்களில், ஒன்று உறவுகளின் மேல் பற்றுதல்; இரண்டு material பற்றுதல்.
இவ்விரண்டு வட்டங்களும், பாசங்களும், பந்தங்களும் அதிகமாக அதிகமாக, துன்பங்களும், துயரங்களும் அதிகம். பிறகு புலம்புகிறோம். ஆனால் இந்த வட்டத்தை பெரியதாக்கியவர்கள் நாம் தான் என்று மறந்து விடுகிறோம்.
expand பண்ண தெரிந்த நமக்கு , contract பண்ண தெரிவதில்லை.
பெரிய வட்டத்தில் சுற்றும்போது (பாசம், ஆசை) மூச்சு வாங்குகிறது, மூச்சை அடைக்கிறது. (suffocating) ......
ஒவ்வொரு வட்டமாக outer most லிருந்து குறையுங்கள். குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு புள்ளியில் முடிய வேண்டும். அந்த புள்ளியை மையப் படுத்தி தியானம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டால், வாழ்க்கை சுலபம்.
இதில் பலனை எதிர்பார்க்காத நட்பு வட்டங்கள் நமக்கு தேவையாய் இருக்கிறது... முக்கியமாக நம் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள.
"சந்தோஷம், துக்கம் இரண்டுமே என்னுடுய மனம் சார்ந்தது, பகிர வேண்டிய அவசியமில்லை " என்ற நிலையில் வருவது பூஜ்யம்.
அதில் ஆத்மா மட்டும்தான் .
அதனால் தான் பிள்ளையார் அம்மா, அப்பாவை மட்டும் சுற்றி வந்து நிறைவு கொண்டாரோ? அதிலும் நமக்கு பாடம் இருக்கிறது.
[ஆஹா, வசந்தா ஆனந்த மயி தாயே , நீ எங்கியோ போயிட்ட அம்மா. ]

No comments:

Post a Comment