Monday, June 10, 2019

அம்மாவின் பேய் கதைகள்......


நேத்திக்கு சபாக்கு கொஞ்சம் சீக்கிரமே போக, கையில் விகடன், 'Q ' வில் பொழுது போக
(எதற்கு அவசர ன்னு கேக்கறீங்களா.. ? நீங்க கேக்காட்டியும் சொல்லுவேன் !! அந்த ஹால் ல, L ரோ ல, கார்னர் 4 சீட் போட்டு, அங்கேதான் உக்காரணும்.
"ஏன் " கேக்கறீங்களா.. ? நீங்க கேக்காட்டியும் சொல்லுவேன் !! அது ஒரு விதமான, சைக்கோ பயித்தியம்.. என்னால சங்கீதத்தில achieve பண்ண முடியல்லைன் நாலும், இதுல பண்ணிடுவேன். friends , போனா போறது ன்னு SK ... எல்லாரும் சபாவில வருஷத்துக்கு ஒருதரம் மீட் பண்ணுவோம். )
கதைக்கு வருவோம்.
கச்சேரி கேக்கும்போது, அதை அனுபவிப்பேன். நடுவில் gap இருந்தால், ஹாலை சுற்றிப் பார்ப்பேன்... எல்லாருக்கும் கால் இருக்கா ன்னு. எங்கேயாவது, பாட்டுப் பிடித்த பேய் இருந்துது ன்னா ?
திரும்பி வரும்போது... நடந்து தான் ... ரோடில் போகிற வருகிற வங்களை எல்லாம் உத்துப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்
SK வரும் வரை வீட்டில் தனியாக.... எங்கம்மா பில்ட் அப் கொடுத்து சொன்ன பேய் கதைகளா ஞாபகம் வருது...
அதிலும் எத்தனை வகைகள்... நம் ஜாதி வகைகள் போல
பேய், பிசாசு, காட்டேரி, ரத்தக் காட்டேரி (பைரவி, ஆனந்த பைரவி ங்க ற மாதிரி ), முனி, கொள்ளி வாய் பிசாசு, மோகினி, தலை கீழ் தொங்கும் ஆவி...
எனக்கு நினைவு தெரிஞ்சு எங்கம்மா சொன்ன சாமி கதைகளை விட (சாமி கதை சொல்லி இருக்காளா எனா? ஏதோ ரெண்டு.. முருகன் பழத்துக்காக கோச்சுண்டது ... இப்படி, சின்ன சின்னதா ) பேய் கதைகள் அதிகம்.
ஆசைகள் நிறைவேறாமல் செத்துப்போன "கண்ணப்பா" ... பேயாக வந்து தாகம் தீர்த்துக்கொள்வது...
அல்ப ஆயுசில் செத்துப்போன "காஞ்சனா" ஆவியாக உலவி, தன் மனுஷாளை தேடுவது...
இந்த "காட்டேரிக்கும், ரத்தக் காட்டேரிக்கும்" அதிகம் வித்தியாசம் இல்லை (6 வித்தியாசங்கள் இருக்குமோ?) ... அவைகள், விபத்தில் அனாமத்தாக செத்துப் போய் , இப்போ காட்டேரியாக வந்து, கழுத்தை கடித்து, ரத்தத்தை உறிஞ்சுவது (விபத்தில் ரத்த சேதத்தினால், சோகை வந்து (அனீமியா ) இப்போது blood sucking ) ....
முனி... உடலை எரித்த பொது, ஆவி வேகாமல் (சில பெரியவங்க சொல்லுவாங்களே? " நீ வரல்லேன்னா என் ஆவி வேகாது" ன்னு - அது) , இப்போ half boiled ஆ சுத்துவது..
கல்யாணம் ஆகாமல் செத்துப்போன பெண், மோகினி யாக , அழகாக, அலங்காரமெல்லாம் பண்ணிக் கொண்டு, ஜல் ஜல் ன்னு (கொலுசு கண்டிப்பா போட்டுக்கும்) கொலுசு சத்தம் கேட்க வந்து, வாசலில் காத்துக்காக, கயிற்றுக் கட்டில் போட்டு படுத்திருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவது....
புளிய மரத்தில் தொங்கிக் கொண்டு... (அதற்கு கால் கிடையாது) , மரத்தடியில் நிற்பவரை பேய் பிடித்து, அவர்களை விடாமல், மேலே தொத்திக் கொண்டு படுத்துவது..
வீட்டிற்கு,நடு ராத்திரியில் வந்து, கடிகார முள்ளை தள்ளி வைத்து, ஏமாத்தி, வயலுக்கு கூட்டிப் போய் , அறையும் "விவசாயி " பேய் ;
வாயில் எப்போதும் நெருப்புடன் (பிணம் சரியாக எரிக்கப் படாத நிலையில், வெட்டியானை ஏமாற்றி விட்டு, ஓடி வந்தது ) சுற்றும் கொள்ளி வாய் பிசாசு..
அதுவும், எங்கம்மா இந்த தண்டனைகளை சொல்லும்போது, ஒரு back ground music கோடு தான் சொல்லுவாள் . (பளீர் பளீரென்று, மாடேர் மடேர் என்று ... இப்படியாக)
[ஐயோ, இப்ப மணி 4 தான், எனக்கு பயம்மா இருக்கு. நிறுத்திக்கிறேன் ]

No comments:

Post a Comment