Thursday, June 25, 2020

Recipes........


பருப்புப் பொடி .

தேவையான சாமான்கள்
துவரம் பருப்பு - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
மிளகு, மிளகாய் வற்றல் - காரத்திற்கேற்ப.
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் தூள் - சிறிதளவு 
முந்திரி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்

பருப்பு வகைகளை dry roast செய்யவும்
அரை ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு மிளகையும், மிளகாய் வற்றலையும் வறுத்துக் கொள்ளவும் .
நெய்யில் முந்திரி பருப்பை பொறித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையையும் கடாயில் வறுத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு சுற்றி, ரவை சல்லடையால் சலித்துக் கொள்ளவும். கடைசியில் சிறிதளவு அரை படாமல் இருப்பதை, இரண்டு சுற்று சுற்றி கலந்து விடவும்.
மிகவும் சுவையான பருப்புப் பொடி தயார்.
சாதத்தில் நெய் விட்டு , பொடி போட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
------------------------------------------------------------

 உப்பு சீடை செய்யும் முறை. (வசந்தா ஸ்பெஷல்)
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷின் இல் அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(
இப்போதெல்லாம் processed maavu என்று கிடைக்கிறது)
அரிசி மாவு 8 டம்ளர்
மைதா மாவு 6 டம்ளர்
உப்பு, பெருங்காயம், ஊற வைத்த இரு பிடி கடலை பருப்பு, துருவிய தேங்காய் (ஒரு மூடி மித்தல் காய்)
வெண்ணை - 200 gm
(
தேவையானால் எள். இது எண்ணையில் தங்கும் அதனால் விட்டு விடலாம். )
[
வருத்த உளுந்து மாவெல்லாம் போடாதீங்க]
இப்போ செய் முறை - கவனமா படிங்க.
எல்லா சாமானையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். (தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. )
வேஷ்டியை விரித்து போட்டு வைத்து விட்டு, பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு
நன்கு கலந்த மாவில், நடுவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, (மாவில் மைதா, வெண்ணை கொஞ்ச பிசுக்கு கொடுக்கும்) , அந்த மாவை மட்டும் இடது கையில் வைத்துக்கொண்டு, வலது கட்டை விரல், ஆட்காட்டி விரலால் ரொம்ப கொஞ்சமாக கிள்ளி , சட்டென்று ஒரு உருட்டு உருட்டி வேஷ்டியில் போட வேண்டும்...
கை மாவு தீர்ந்து விட்டால், மறுபடியும் அதே போல், நடுவில் தண்ணி... பிசிறல்.. இடது கையில் வைத்துக்கொண்டு உருட்டல் ...
கணிசமாக உருட்டியதும் ... அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தட்டில் சீடைகளை எடுத்து, எண்ணையில் மெல்ல போட வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து, பிரவுன் நிறம் வந்ததும், ஜல்லி கரண்டியால் வரித்து எடுத்து டப்பாவில் போட வேண்டும்.
சூடு ஆறும் வரை டப்பாவை மூடக்கூடாது...
 --------------------------------------------------------------------------------
 Karadayam nombu adai (vellam and uppu):
1.அரிசியை நன்கு களைந்து, வடி கட்டி, துணியில் லேசாக உலர்த்தவும்
2.
வாணலியில் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, சிம் இல் வைத்து, இளம் பிரவுன் ஆக வறுக்கவும்
3.
மஷினில் குடுத்து சன்ன ரவை என்று சொல்லி உடைக்கவும்
4.
அரிசி ரவை - 4 கப்; தண்ணீர் - 10 கப்; வெல்லம் 4 -6 கப்
5.
தேங்காய் ஒரு மூடி.. மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும்
6.
காராமணி தனியாக வேக வைக்க வேண்டும்
7.
ஏலக்காய் பொடி செய்ய வேண்டும்
8.
அடி கெட்டியான பாத்திரத்தில் (பழைய குக்கர் !!!), தண்ணீர் விட்டு, அடுப்பில் ஏற்றி, கொதித்ததும், வெல்லம் போட்டு, தள தள என்று கொதிக்கும்போது, தேங்காய், காராமணி, ஏலக்காய் போட்டு, அரிசி ரவையை மெல்ல, இடது கையால் சரித்துக்கொண்டே, வலது கையால் கிளறவும்
9.
சீக்கிரம் கெட்டியாகி விடும்
10.
பெரிய தட்டில் பரவலாக போட்டு, கொஞ்சம் ஆறியதும் நன்றாக சேர்த்து பிசையவும்
வட்டமாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு வேட்டில் வைத்து எடுக்கவும்
உப்பு அடைக்கு :-
கடாயில் நல்ல எண்ணெய் விட்டு , கடுகு, .பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி தாளிக்கவும்
2
கப் ரவைக்கு, 4 கப் தண்ணீர்...
தாளித்ததும், தண்ணீர், காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசி ரவை போட்டு கிளறவும்
இறக்கி வைத்து, ஆறியதும், சேர்த்து பிசைந்து, வட்டமாகவோ, நீள பிடி குழக்கட்டையாகவோ செய்து வேட்டில் வைத்து எடுக்கவும்
வெண்ணை தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும்.
மாவை வறுத்து செய்வதை விட அரிசியை வறுத்து, சன்ன ரவையாக உடைத்து செய்வது டேஸ்ட் பிரமாதமாக இருக்கும், ஒட்டாது.
---------------------------------------------------------------------------------------- 

 திருவாதிரை களி..
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, அதனுடன் 1 பிடி பயத்தம் பருப்பு சேர்த்து ,கடாயில் போட்டு, பொரிய வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை மெஷினில் குடுத்து சன்னமான ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கெட்டியான பாத்திரத்தில், (குக்கரில் ,அல்லது வெண்கல பானையில்) ஒரு பங்கு ரவைக்கு 2 1/2 பங்கு என்ற விகிதத்தில் (நல்ல அரிசியாக இருந்தால் மூன்று பங்கு தாங்கும்) தண்ணீர் வைத்து, ஒரு பங்குக்கு 2 1/2 பங்கு விகிதத்தில் வெல்லத்தை உடைத்து போட வேண்டும்.(நான் 3 பங்கு வைப்பேன்.. இப்போதெல்லாம் வெல்லத்தில் தித்திப்பு குறைச்சலாக இருக்கிறது)
நீர் கொதித்து வரும்போது, ஒரு மூடி தேங்காய் துருவலையும் சேர்த்து, தள தள வென்று கொதிக்கும்போது, அடுப்பை சின்னதாக வைத்து, அரிசி நொய்யை சீராக கொட்டிக்கொண்டே கிளற வேண்டும்.
அப்பப்ப அடி பிடிக்காமல் கிளறிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
களி வெந்ததும் அதி ஏலக்காய் பொடி, வருத்த முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளற வேண்டும்.
அப்படியே மூடி வைத்தால், கொஞ்ச நேரத்தில் களி பொல பொல வென்று உதிர்ந்து கொள்ளும்.
நான் இப்போதெல்லாம் களி க்கான எல்லா சாமான்களையும் போட்டு, கிளறி, electric rice cooker க்கு மாற்றி விடுகிறேன். ஈசியாக இருக்கிறது.



No comments:

Post a Comment