Friday, June 5, 2020

தாமஸ் மன்றோ...........


தாமஸ் மன்றோவின் ஆன்மீக அனுபவங்கள் - 1 

1750
ம் ஆண்டு, திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா , நாட்டையும், நாட்டின் அனைத்து சொத்துக்களையும் ஆள்வது பத்மநாப சுவாமி என்றும், அவர் தாசராகவே மன்னர்கள் நாட்டை பராமரிப்பார் என்றும் எழுதி வைத்தார். 

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்டப்படி, ஆண் வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுக்கு உடமை 

1813
ம் ஆண்டு, மார்த்தாண்ட வர்மா இறக்கும்போது, அவருக்கு வாரிசு இல்லை. 

அப்போது திருவாங்கூர் திவானாக இருந்தவர், சர் தாமஸ் மன்றோ.

பிரிட்டிஷ் அரசு, மன்றோவிடம், திருவாங்கூர் அரசின் அடுத்த வாரிசின் பெயரை கேட்டு நிர்ப்பந்தித்தது. 

பத்மநாப சுவாமி கோவில் பிரிட்டிஷ் அரசுக்கு போக கூடாது. அது சுவாமியின் தாசர்களிடம் (அரசர்களிடம்) தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார் மன்றோ.

ராணி கருவுற்றிருந்தும் , இன்னும் குழந்தை பிறக்காத நிலையில், , "ஆண் வாரிசு பிறந்து விட்டது" என்று மன்றோ எழுதி அனுப்பி விட்டார்.

விசாரணைக்கு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்று பல இரவுகள் தூங்காமல் கழித்த மன்றோ, பத்மநாப சுவாமி கோவிலுக்கு சென்றார்.

"
கடவுளே, நீ எங்கும் இருப்பாய் என்பது உண்மையானால், உடனே ராணிக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும்" என்று மனமார வேண்டிக்கொண்டு வந்தார். 

வந்த சில நிமிடங்களில், ராணிக்கு ஆண் வாரிசு பிறந்து விட்டது என்ற செய்தி வந்தது. 

அந்த குழந்தை தான் சுவாதி திருநாள்.

No comments:

Post a Comment