Friday, June 5, 2020

நினைவுகள் - 2





ஸ்கூலில் எல்லா டிராமாவிலும் நான் இருப்பேன். காதலிக்க நேரமில்லை சச்சு மாதிரி இல்லை. நெஜம்மாவே மெயின் கதா பாத்திரத்தில்
1956 ல் சிப்பாய் கலகத்தின் நூற்றாண்டு விழா. பொது function . டிராமாவில் நான்தான் ஜான்சி ராணி.
வீர வசனம் எல்லா practice பண்ணியாச்சு. Rehearse ல பொம்மை horse மேலேஉக்காந்து, கத்தி பிடிச்சுண்டு பேசியாச்சு
actual staging க்கு போனா.... அங்க ஒரு நிஜ போனி !! அதும் மேல உக்காருன்னு last minute ல.. ஒரு படுத்தல். அது ஒரு dress rehearsal . "போனி மேல ஏறலன்னா , உன்ன டிராமாலேர்ந்து தூக்கிடுவோம் னு ஒரு black mail வேற . அதுக்கு முன்னாடி நான் போனியே பாத்ததில்ல.. குதிர வண்டில கூட ஜாஸ்தி போனதில்ல.
ஒரு வழியா, மனச தேத்திண்டு, ஏறி, stage ல குதிரையில உக்காந்து (குதிரை ஓடாதுன்னு எனக்கு சமாதானம் வேர) , வசனம் பேசினா.. அது "வீர வசனம்" ஆவா இருக்கும் ? அதுக்கும் திட்டு. நான் ஒரே அழுகை... அதுக்கும் திட்டு.
அப்புறம் ஆத்துக்கு வந்து, அம்மா மோர் ல கம்பி காச்சி சொருகி (பயந்து போன, பேய் அறைஞ்சா மாதிரி இருந்தா இது ஒரு வைத்தியம்) குடிக்க வெச்சா..
ஒரே சொப்பனம்... குதிர என்ன எடுத்துண்டு காடு மலை எல்லா சுத்தராப்பல... ஆனாஆசை யார விட்டது !
மறு நாள் மகா மெகா கூட்டம் அந்த function க்கு.
தைர்யமா, நன்னா பண்ணி, கலெக்டர் கையால பரிசு வாங்கிட்டேன் !!
---------------------------------------------------
1959... எங்கள் பள்ளியின் பொன் விழா. எனக்கு SSLC பரீக்ஷை கூட முடிஞ்சாச்சு. ஏப்ரலில் விழா.
மெயின் டிராமா "jean val jean " . அதில் ஹீரோ - ஏழை - சர்ச் பாதிரியார், அவனுக்கு சாப்பிட பன் கொடுக்கிறார். இரவு தங்க அனுமதிக்கிறார். ஆனால், அவன் இரண்டு வெள்ளி மெழுகுவர்த்தி ஸ்டாண்டை திருடிக்கொண்டு ஓட, போலீஸ் பிடித்துக் கொண்டு வர, அந்த பாதிரியார், "நான்தான் அவனுக்கு அவைகளை கொடுத்தேன்" என்று சொல்லி அவனை காப்பாற்றுகிறார். அவன் மனம் திருந்தி நல்லவனாகிறான். இதுதான் கதை.
இதில் நான்தான் அந்த திருடன் . பரீக்ஷைமுடிந்து விட்டதால் ஜாலியாக ஒத்திகைக்கெல்லாம் போனேன்.
என் மொத்த குடும்பமும் டிராமா பார்க்க ஆஜர்.
பாதிரியார் பன் கொடுத்தார். எனக்கு stage fear இல்லேன்னாலும், கொஞ்சம் anxiety இருக்கும் இல்லையா.. நன்னா பண்ணனும்னு...
அந்த பன்ன அவசர அவசரமா கடிச்சு, (back stage ல சீக்கிரம், சீக்கிரம் ன்னு ஜாடை !! time factor ) , வாய் நிறைய பன்; கண்ணுல பயம், தொண்ட அடைக்கறது... father role பண்ணின பொண்னே கொஞ்ச பயந்து பொய், தண்ணி குடுத்தா.. (சிவாஜி தோத்தார் போங்கோ !!) ...
அந்த சீனுக்கு, அப்படி ஒரு அப்ளாஸ்... !!
best actor prize வேற !!
----------------------------------------------------
நான் இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது... School Day Program . ......
"அம்மா வைப்போல் பெரியவளானால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஒரு பெண் -அம்மா வேஷம் - புடவையில்
"அப்பா வைப்போல் பெரியவரானால் என்ன செய்வேன் தெரியுமா ? " என்று நான் -அப்பாவாக, வேஷ்டியில்.
{அம்மா, சமைப்பாள், துணி துவைப்பாள், பாத்திரம் கழுவுவாள், குழந்தைகளை பேணுவாள் ..
அப்பா, ஆபீஸ் போவார், பணம் கொண்டு வருவார், கடைக்கு போவார்.... இப்படி
இன்று வரை இந்த பாடங்கள் .. படங்களுடன் ... மாறவில்லை !!!}

No comments:

Post a Comment