Tuesday, June 2, 2020

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. .

வாழ்க்கைய பத்தி ரொம்ப யோசிக்காதீங்க. . அது உங்களுக்கும், எனக்கும், யாருக்கும் புரி படாத மர்மம். யோசிக்க ஆரம்பித்தால், முடிவு, தெளிவு ஒன்றும் கிடைக்காது. குழப்பம் தான் மிஞ்சும். ஒவ்வொரு தடவை சிந்திக்கும் போதும், வெவேறு குழப்பங்கள் வரும். வெவேறு விளக்கம் வராது. நாம் மகான்கள் அல்ல. கடவுள் நமக்கு எவ்வளவு புரியணுமோ , அவ்வளவு ஞானம் தான் தந்திருக்கிறார்.

மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்.

சில நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவாரசியமாகவும் ஆக்கும். அந்த நம்பிக்கையை பற்றுக் கோடாக பிடித்து, "நம்மை நன்றாக இறைவன் படைத்திருக்கிறான்; அவனை நன்றாக துதிப்பதற்கு" என்று மட்டும் தினமும் நினைத்து எது சந்தோஷம் கொடுக்கிறதோ, அதை செய்து, (இங்கு அந்த சந்தோஷம், பிறருக்கு தீமையாக  இல்லாமல்) "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று அனுபவியுங்கள். இயற்கையை பார்த்து வியந்து போய் , அதே போல், நியமம் தவறாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல், முடிந்த உதவியை மனதார செய்து விட்டு, உங்கள் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் வேலையே முழு அர்ப்பணிப்புடன் செய்து, உடம்பை நன்றாக பார்த்துக் கொண்டு, சந்தோஷமாக இருங்கள்.

ignorance & innocence are some times blissful. மனம் குழந்தை மாதிரி குதூகலிக்கணும். பாரம் தெரியாது. நடப்பவை எல்லாம் நாராயணன் செயல்.

நமக்கும் சில, பல நல்ல அனுபவங்கள் தோன்றும்; கிடைக்கும்; இறைவன் யார் மூலமாவது காட்சி கொடுக்கிறான்; தன்னை உணர வைக்கிறான்;

அனாவசியமாக contemplate பண்ணுகிறேன், பேர்வழி" ன்னு குழம்பாதீங்க.

நாள் முழுவதும் , "ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே ; சஹஸ்ர  நாம தத்துல்யம் ராம நான வரானனே " என்று, மனதில் ஒட்டிக் கொண்டு, எது செய்தாலும் அதை திருந்தச் செய்து... ஒரு நாள் at a time வாழ்க்கையை அனுபவியுங்கள்.

நம்மை சுற்றி நடப்பவைகளை பார்த்து, கேட்டு, ரசிக்கக் கற்றுக் கொண்டாலே, வாழ்க்கை பாதி சுவாரசியமாக ஆகிவிடும்.

No comments:

Post a Comment