Sunday, June 21, 2020

நாடோடிமன்னன்........

அப்பாவை பற்றி மறக்க முடியாத சம்பவங்கள் அநேகம் இருந்தாலும், அடி வாங்கின சம்பவம் ஒன்று உண்டு (அப்பா அடிக்கவே மாட்டார்.- கோபமாக ஒரு முறைப்பு. ஆனால் அவரே அடித்தார் என்றால்..... !!!!)
ஒரு முறை, என் பள்ளி சினேகிதி ஒருத்தி, தன் அப்பா , அம்மாவுடன் "நாடோடிமன்னன்" சினிமாவுக்கு போவதாகவும், நானும் உடன் வந்தால் ஜாலியாக இருக்கும் என்று அழைத்தாள் (ராகு காலத்தில் அழைத்திருப்பாள் என்று நினைக்கிறேன் ) நான் ஏற்கெனெவே அந்த படம் பார்த்தாச்சு. இருந்தாலும் ஒரு ஆசை. அப்பாவிடம் கேட்டால், முதலில் மறுத்து, நான் பிடிவாதம் பிடிக்க, 4 அணா குடுத்து அனுப்பினார்.
மாட்டினி ஷோவுக்கு போனேன். நேரம் ஆகிவிட்டது; அந்த friend & family காணோம். தியேட்டர் உள்ளே போய் உட்கார்ந்து விட்டேன். ஆனால், படத்தில் மனம் செல்லவே இல்லை. முடிந்ததும் வெளியில் வந்தால், அப்பா waiting - அழைத்துப் போவதற்கு ....
விஷயம் அதுவல்ல - அந்த சிநேகித குடும்பம் மாலை ஷோவுக்கு அங்கே வந்திருக்க, அப்பா பார்த்துவிட்டார். நான் பார்க்கவில்லை...
இரண்டு தவறுகள் -
1. மற்றவருடன் படத்திற்குப் போவது
2. அவர்கள் வராததால் வீட்டிற்கு திரும்பாமல் படம் பார்த்தது
விஷயம் தெரியாமல், கோப முகத்துடன் வரும் அப்பாவை சஸ்பென்சோடு பார்த்துக் கொண்டு, வீட்டிற்கு வந்தால், செம அடி ......
"மறக்க முடியவில்லை.... மறக்க முடியவில்லை...."


No comments:

Post a Comment