Wednesday, August 31, 2016

FESTIVALS (3) - VARALAKSHMI NOMBU....

அந்த நாளைய வரலக்ஷ்மி விரதம் 



வெள்ளிக்கிழமை நோம்பு என்றால் , வியாழன் படாத பாடு படும்.
நாங்க எல்லாம் ஸ்கூல் !! அம்மாதான் பாவம்.எல்லாம் செய்வாள். அப்போது அந்த
வேலையின் கஷ்டம் எனக்குத் தெரியவில்லை.
எங்களை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, தலைக்கு ஸ்நானம் செய்து, மடி உடுத்தி, சாப்பிடாமல்....
1. பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, தனித்தனியாக ஊற வெச்சத  கல்லுரலில்அரைப்பா.. உளுத்த மாவில் கொஞ்சம் பச்சரிசி மாவுடனும், மீதியை .பு.அரிசி மாவுடனும் கரைத்து வைப்பா. பச்சரிசி இட்லிநெய்வேத்யத்துக்கு.
3. தேங்காயை உடைத்து , துருவி, பூரணம் பண்ணுவா.
4. எள்ளை வறுத்து, எள் பூரணம்
5. பச்சரிசி களைந்து, உலக்கையால் இடித்து (வேலைக்காரி இடிக்க, அம்மா தள்ளிகொடுப்பாள்) ,சலித்து வைப்பாள் - கொழக்கட்டைக்கு.
6. அம்மன் முகமெல்லாம் அப்போது கிடையாது. காப்பர்/ வெண்கல  சொம்பில், சுண்ணாம்பை பூசி, காவியால் அம்மன் முகம் அப்பா வரைந்து வைப்பார். அதில் தேங்காய், மாவிலை வைத்து, சொம்பிற்குள் அரிசி, பருப்பு, வெல்லம், வெள்ளி, தங்க காசுகள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எல்லாம் போட்டு, கலசம் வைத்து, அலங்காரம் செய்து, பலகையில் இழை கோலம் போட்டு, வாழை நுனி இலை போட்டு, அதன் மேல் அரிசி பரத்தி, கலசத்தைவைப்பா. தெரிந்த அளவு அலங்காரம். (கண்ணுக்கு மை இட்டு, செயின் போட்டு)
7.  இழை கோலத்துக்கு, கல்லுரலில் அரிசி மாவு அரைத்து வைத்து
எல்லாவற்றையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு தான் சுமார் மூன்று மணிக்குசாப்பிடுவாள்.

8. மண்டபம் எல்லாம் இப்போது போல் வாழக் கன்று வைத்து காட்டுவதில்லை. அப்பா, சுவற்றில், சுண்ணாம்பு பூசி, காவியால், பிரஷ் வைத்து, scale வைத்து, மண்டபம் வரைந்து, நடுவில் கலசம், அதன் மேல் தேங்காய் etc. எல்லாம் வரைந்து, பல்லாங்குழி, கழக்கொடி(அம்மனுக்கு விளயாடவாம் !), நாகப்பழம், மண்டபத்தில் வாழை மரம் (தாரோடு) எல்லாம் வரைந்து...
(அந்த அழகை சொல்லி முடியாது. ஒரு போட்டோ கூட இல்லை) ரெடி பண்ணுவார்.
வாசலில், சுவாமி இடத்தில் இழை கோலங்கள் ராத்திரியே போட்டு விடுவோம்.



சாயந்திரம் அப்பா மார்கெட் போய் (அதற்கு மட்டும் நான் ஒட்டி கொள்வேன்)தேங்காய், பழம், தாழம்பூ, உதிரிப்பூ, தொடுத்த பூ, பிச்சோலை கருக மணி, பல வகைபழங்கள் எல்லாம் வாங்கி வருவார்.

ராத்திரிக்கு வெண் பொங்கல் தான் பலகாரம். சாப்பாட்டுக்கடை முடிந்ததும், அடுப்பு (மண்) மெழுகி, கோலம் போட்டு, சமையல் உள் அலம்பி...

பூஜை அன்று... அம்மா சுத்த பட்டினி.
இந்த பூஜை... மாலை பசுக்கள் மேய்ச்சலில் இருந்து திரும்பும் வேலையில் (சுமார் 5 மணிக்கு மேல் செய்ய வேண்டும் !!)
நிறைய நேரம் இருப்பதால், பூஜை சாமான்கள் எடுத்து வைத்து, அம்மன் அழைத்து, பாட்டு பாடி - எல்லாம் நிதானமாக நடக்கும்.

சாஸ்த்ரிகள் வந்து, பூஜையை சிரத்தையாக செய்து, சரடு கட்டும்போது 6 மணி ஆகிவிடும்
பிறகு என்ன.. நமஸ்காரம் செய்து எழுந்திருக்கும்போது... வடை, அப்பத்துடன் தான்எழுந்திருப்போம் !!
நெய்வேத்யத்துக்கு : இட்லி, சாதம், பருப்பு, கொழுக்கட்டை (வெல்ல பூரணம், எள்ளு, உளுத்தம் பூரணம்) , வடை, அப்பம்...
இட்லிக்கு சாம்பார்... வெளுத்து வாங்குவோம் சாப்பாட்டை.
அம்மா... 1922 to 1986 (64 years) இதே போல் பூஜை பண்ணி இருக்கா.



சென்னையில், எங்காத்துல  எல்லாம் காலை ராகு காலத்துக்கு அப்புறம் பூஜை.
வேலைக்கு போகும்போது, எங்க North Indian Principal க்கு சாஸ்த்ரிகள் வர லேட்ஆகும் என்று சொன்னால் புரியாது. லீவும்  கிடையாது.
அதனால், பூஜை காலை 7 மணிக்கு என்று ஆயிற்று !!

இப்போது  (சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது !!) : கடையில்வாங்கும் processed அரிசி மாவு, இட்லி மாவு, வீட்டு வேலை செய்பவள் துருவும் தேங்காய் / பொடிக்கும் வெல்லம் / ஏலக்காய்; முதல் நாள் இரவே அம்மன் அலங்காரம்; மறு நாள் காலை 4 மணிக்கு எழுந்து, எல்லாம் எய்து, 8 மணிக்கு பூஜை.  
சுருங்கித்தான் போய் விட்டது !!!

நோம்பு என்று சொல்லும்போது, எனக்கு அம்மாவை விட மாமியார் ஞாபகம் அதிகம் வருகிறது .
கல்யாணம் நிச்சயமாகியதும், மாமியாருக்கு நோம்பு உண்டு என்பது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

கல்யாணம் ஆன வருடம் விமரிசையாக நோம்பு எடுத்து வைத்தார்.
அம்மா எனக்கு சீராக வெள்ளி முகம், பித்தளை மணி, தூபக்கால், தீபக்கால் என்று பூஜை பாத்திரங்களும், வெற்றிலை பாக்கு பழம் என்று கொடுத்தாள். மாமியாருக்கு பரம திருப்தி.

மாமியாரும் காலை மடியாக எல்லாம் செய்து வைப்பார். பூனாவில் இருந்தபோது கூட, மாவு இடித்து தான் கொழக்கட்டை. அங்கே தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம். சுமார் 30 பேர் வெற்றிலை பாக்குக்கு வருவா. (அது 1974 to 1980.)



1966 to 1973 & 1980 to 1993 சென்னையில்.
இரண்டு நாத்தனார்களுக்கும் நோம்பு கிடையாது. எங்காத்துக்கு வந்துடுவா. நான் மெயின் சமையல் செய்தாலும், ரொம்ப ஹெல்ப் பண்ணுவா. ரொம்ப ஜாலியாக இருக்கும்.
மாமனார் , கலசம் கட்டி கொடுப்பார். வாழை கன்று மண்டபத்தில் கட்டி கொடுப்பார். centre table ஐ கவுத்துப்போட்டு, அலங்காரம். இரவு 11 மணியாகும் எல்லாம் முடிய. மடி புடவை எல்லாம் பக்கா வாக இருக்கணும் ! மாமியார் அதில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

நோம்பில் என் மாமியாரின் அம்மன் முகம் கலசத்திலும், கீழே என்னுதும் இருக்கும். பாட்டு பாடி, ஆரத்தி எடுத்து, அம்மன் அழைத்து... குழந்தைகளுக்கு பட்டு பாவாடை போட்டு...
அன்று முழுவதும் விரதம் இருந்து,  ஒரு வேளை  இட்லி, வடை, கொழுக்கட்டை சாப்பிட்டு, இரவு பட்டினி இருந்து.......

நெய்வேதியத்துக்கு கொஞ்சம் பண்ணி விட்டு, பாக்கியை வைத்து விட்டால், மாமியார் அலுக்காமல் கொழக்கட்டை பண்ணி கொடுப்பார்.

  சாயந்திரம் கட்டாயம் பாட்டு பாட வேண்டும். மறு நாள் புனர் பூஜை பண்ண வேண்டும். எவ்வளவு பூ....... அமர்க்களமாக இருக்கும்.

என் அம்மா இறந்த பிறகு, என் மாமியார், என் நாத்தனார்களுக்கு குடுப்பது போலவே, எனக்கும் வெத்திலை பாக்கில் பணம் வைத்து கொடுப்பார். (நான் feel பண்ணக்கூடாது என்று) அந்த நாள் என் மீது மிக ஆசையாக இருப்பார். அதை செயலில் காண்பிப்பார்.

என் மாமனார் இறந்ததும், நான் மட்டும் செய்வேன். மனசுக்கு கஷ்டமாக இருக்கும். But she had accepted it boldly.

the day she handed over her "mugam" to me, I was touched&moved.

இப்போது என் அம்மாவை விட மாமியாரை நினைத்து கண் கலங்குகிறேன். எங்கிருந்தாலும் என்னை நாளை வாழ்த்துவார்.

                                                                   மாமியார்



No comments:

Post a Comment