Wednesday, August 24, 2016

PALLAKKU (CAR) FESTIVAL....

வருடம் ஒருமறை வரும் பல்லக்கு திருவிழா
மொத்தம் 11 பல்லக்குகள்
ஒவ்வொன்று ஒருவித அலங்காரம்
முத்து, பூ, மணி என்று.....


தெற்கு வீதி கோவிலில் இருந்து புறப்படும் ஒரு பல்லக்கு...
அது ஆடி அசைந்து வருகையில்
மேற்கு வீதி பல்லக்கு வரிசையில் சேர்ந்து கொள்ளும்
இப்படி 10 கோவில்களின் பல்லக்கு சேர்ந்து
எங்கள் கீழலங்கம் பிள்ளையார் கோவில் அருகில் வருகையில்
எங்கள் முத்து பல்லக்கு வரிசையில் சேரும்...

எங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோவில் பல்லக்கு முத்து பல்லக்கு
அதனாலேயே... மொத்த விழாவிற்கும் நாங்கள் சூட்டிய பெயர்
முத்து பல்லக்கு விழா !!

ஒவ்வொரு கோவிலும் போட்டி போட்டுக்கொண்டு
பெரியதாகவும், அழகாகவும் அலங்கரிப்பார்கள் !!
ஆக்க பூர்வமான போட்டிதான்...

ஒவ்வொரு பல்லக்கிலும் கோவில் குருக்கள் .. பூஜை செய்த வாறு...
சாமியை பார்ப்பதை விட, அந்த பல்லக்கின் அலங்கார பொம்மைகளையும், மணி சரங்களையும், பூ அலங்காரத்தையும் பார்ப்பதுதான் எங்கள் மகிழ்ச்சி...
வருடா வருடம் பார்ப்பதுதான் என்றாலும்... ஒவ்வொரு வருடமும்.. புதிதாய்.. முதல் முறை பார்ப்பது போல்...
எங்களுக்கு ஆளுக்கு 2 அணா உண்டு செலவுக்கு... கணக்கு கேட்கப்படாத காசு !!
வருடத்திற்கு ஒரு முறை pocket money !
8
காலணா !!!
கைக்கடிகார மிட்டாய் கண்டிப்பாக வாங்குவோம்...
அதைத்தவிர...
பலூன், குச்சியில் சுற்றும் ஓலை மணி, கிளி பொம்மை
கிரு கிரு .. டிக் டிக்... சத்தம் போடும் சுற்றும் பொம்மை...
எல்லா சாமான்களுக்கும்... ஆயுள் ஒரு நாள் தான்...
அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்கு ஒரு வருடம் காத்திருக்கலாம் !!

இருப்பதிலேயே (என்ன.. இரண்டோ.. மூன்றோ.. !!) பிடித்த பாவாடை , சட்டை..
தலை நிறைய பூ
கண்ணாடி வளையல்கள்

8 மணிக்கு தெருக்கோடிக்கு போனால்...
இரவு ஒரு மணி ஆகும் திரும்ப !!
அந்த மகிழ்ச்சி நீடிக்கும் ஒரு வருடம்...

இப்போதும் நடக்கிறது அந்த பல்லக்கு விழா..
நானும் என் சகோதரிகளும் இல்லாமல் !!!

No comments:

Post a Comment