Thursday, September 1, 2016

MAARGAZHI CELEBRATION.....

மார்கழி கொண்டாட்டம்...

மார்கழி ஆரம்பிக்கறதுக்கு முன்னே... படிப்  படியா கோல மாவு வாங்கி யாயிடும்.அப்போ எல்லாம் கலர் பொடி  எல்லாம் கிடையாது... வெள்ளை புள்ளி கோலம் தான்...
காலம்பர நாலு மணிக்கு எழுந்துடுவோம்...
அப்பா எங்களுக்காக ஸ்பெஷல்லா wire இழுத்து, ஒரு நாப்பது வாட் பல்பை வாசலில் தொங்க விட்டுக்குடுப்பா - வெளிச்சத்துக் காக.

(அப்பாவுக்கு கோலத்தில் ரொம்ப ஆசை. அதையும் Maths மாதிரி, நோட்டில் ஸ்கேலால் அளவெடுத்து,புள்ளி வைத்து, பேனாவால் கோலம் போட்டு வைத்திருப்பார்...

பாரதியாருக்கு   எல்லாவற்றிலும் கண்ணன் தெரிந்த மாதிரி, அப்பாக்கு எல்லாத்திலையும் கணக்குதெரியும் !! மியூசிக்   notation கூட frequency கணக்குப் படி எப்படி வரதுன்னு சொல்லிக் குடுத்திருக்கா. அந்தகணக்கை வைத்து, கோட்டு வாத்தியம் பண்ணி வாசிச் சிருக்கா -- எதை பத்தி பேசினாலும்... அங்க அப்பாஇருக்கா !!!)

சரி - கோலத்துக்கு வருவோம்.


முதல் நாளே, மறு நாள் என்ன கோலம் னு தீர்மானிக்கறது பெரிய அக்கா தான். !!)
  எத்தனை புள்ளின்னும் அவதான் decision .
கோலத்தை ஒரு குறிப்பிட்ட கணக்கில் எவ்வளவு பெரிசாக வேணும்னாலும்
விஸ்தாரம் பண்ணலாம்.அந்த கணக்கும் அப்பா எழுதி வெச்சிருப்பா.
நேர் புள்ளி கோலம்னா ஒத்தை படை நம்பர் எது வேணா எடுத்துக்கலாம்... அதெல்லாம் சிக்கு கோலம்...

நாங்கள் அதிகமாக சிக்கு கோலம் போட மாட்டோம்.
காலம்பர ஆளுக்கொரு கொட்டாங்கச்சியில் மாவோடு வாசலுக்கு வந்து விடுவோம்...
வாசலில் தண்ணீர் தெளித்து, கட்டை துடைப் பத்தால் பெருக்கி...
 விடியறதுக்குள்ள கோலம் போட்டுட்டு உள்ளே போயிடணும்...
அந்த தெருவில எல்லாருக்கும் முன்னாடி, எல்லாரையும் விட பெரிசா போடணும்...


எத்தனை கவலைகள் !!
நடு வரிசையை அக்கா வைக்க, நாலு பாகமாக பிரித்து, நாலு பேரும் பெரிசா போடுவோம்... நாலு பேர்போட்டாலும், புள்ளி நடுவில் gap , symetry எல்லாம் கரெக்ட் ஆ இருக்கும்...
போட்டு  முடித்ததும்...
ஒரு சின்ன பெண் பரங்கி பூ கொண்டு வருவா.. அவகிட்ட மாசத்துக்கு பேசி இருப்போம்...
அதை இடம் பார்த்து, சாணி வைத்து, பூவை சொருகுவோம்...

பிறகு தள்ளி நின்று கோலத்தை ரசித்து விட்டு, அப்பாவை கூப்பிட்டு காமித்து விட்டு உள்ளே போவோம்..
கொஞ்ச நேரம் கழித்து ஒரு சர்வே   நடக்கும்...
யார் வீட்டு கோலம் பெரிசு ? யார் வீட்டிலாவது புதுசா கோலம் இருக்கா ? அப்படி இருந்தா, நோட்போக்கோடு ஆஜர்.. காப்பி  அடிக்க... அவா எல்லாம் கோச்சுக்க மாட்டா... infact சொல்லித் தருவா !!

முப்பது நாளும், ஒரு கோலத்தை மறு முறை போடாம, முடிச்சிடுவோம்..
போகி அன்னிக்கு... அக்கா கட்டம் கட்டமாக பிரிச்சுக்குடுப்பா... ஆளுக்கு இவ்வளவு கட்டம்னுஒதுக்கிடுவா... எங்க கட்டத்துக்குள்ள நாங்க சின்ன சின்னதா நெறைய கோலம் போடுவோம்...ஒவ்வொரு கட்டத்துக்கும் border கட்டுவோம்.. அதுவும் புள்ளி வைத்து...

பொங்கல் அன்று.. நடுவில் படிக்கோலம்... காவி வைத்து... அதை சுற்றி கட்டங்கள், கோலங்கள்....
எங்க வீட்டுக்கு இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்போம்... அவர்கள் permission னுடன்... எதிர்த்தாற்போல்வீடுகள் இல்லாத தெரு எங்கள் சௌகரியம்...

   

மார்கழின்னா இது மட்டுமா....


ஆண்கள், சப்பளாக் கட்டையுடன், கழுத்தில் muflar உடன் .. பஜனை....செய்து கொண்டே போவார்கள்
மார்கழியில் ozone லேயர் கீழாக இருப்பதால் உடம்புக்கு நல்லது...
ஆண்கள் அதில் நனைந்து நடந்து போக, பெண்களுக்கு அதற்கு அனுமதி இல்லாததால்... கோலம்போடும் சாக்கில் வெளிக் காற்று...

பக்கத்து கோவிலிலிருந்து  தினமும் 30 திருப்பாவை, 30 திருவெம்பாவை... எம்.எல்.வசந்த குமாரிபாடியது...
நான் இந்த 60 பாடல்களையும் கற்றுக்கொண்டது, மார்கழியில் தான்.. அதுவும் திருப்பாவை முழுவதும்...

எங்கள் concentration யும், aesthetic sense யும் வளர்த்தது இந்த கோலங்கள் தான்...

உட்காராமல், குனிந்து போட முடிந்தது... will power வளர்ந்தது....

இவைகளை தவிர...
தஞ்சாவூரில் பெரிய மார்கெட் , சின்ன மார்கெட் என்று இரண்டு உண்டு...
பெரியது whole sale ...  சின்னது... retail ...
பெரிசிலிருந்து, சின்னதுக்கு கூடை கூடையாக பச்சை பசேல் என்று காய் கறிகள் போகும்.. கூலி ஆள்கள்,பெண்களும் கூட அவைகளை தலையில் தூக்கிக் கொண்டு,  கையால் கூட பிடித்துக்கொள்ளாமல் வேகவேக மாக போவதை தினமும் வேடிக்கை பார்க்கலாம்...

அவரை, கொத்தவரை, புடலை, பாகை என்ற பந்தல் காய்கள் இந்த மாதம் ஏராளம்

ஜனவரி முதல் தேதி... ஒரு பெரிய தேர் கோலம்... எங்காத்து ஸ்பெஷல்...
(தேருக்கு அடியில் இரண்டு சக்கரங்கள், நடுவில் கருடன், மேலே கொடி, அதற்கு மேல் வருடம்...வாழ்க்கை சக்கரம் அப்படி ஓடுகிறதாம் !!)

 வைகுண்ட எகாதிசிக்கு ரங்கர் திண்டு  கோலம்,
 முடவன் முழுக்கு அன்னிக்கு எருக்கம் இலையை தலையில் வைத்து ஸ்நானம்,
திருவாதிரை பண்டிகை, அதற்கு களி, கூட்டு,
 கூடார வல்லி அன்று சர்க்கரை பொங்கல்
 இதெல்லாமும் இந்த மாத விசேஷ அனுபவங்கள் தான்...

இன்றைக்கும், நாங்கள் ஐவரும், எங்கெங்கே இருக்கிறோமோ, அங்கங்கே அன்று தேர் கோலம் உண்டு.
(family கோலம் !!)

இப்போது சென்னையில் flat இல்.. படிப்படியாக மாவாவது, கோலமாவது...
அதற்கு, நேரம், இடம், மனம், knowledge எதுவுமில்லை இந்த அவசர காலத்தில்...
பாதிப்பேர் வீட்டில் ஸ்டிக்கர் கோலம்... மீதிப்பேர் வீட்டில்.. நாலு இழைகள்...

இப்பவும் மார்கழியில் தஞ்சாவூர் பக்க கிராமங்களுக்குப் போய் பாருங்கள்.. அந்த மக்களின் உணர்வுகள்புரியும்...
ஆனால் இப்போ எல்லாரும் கலர் கோலம், ரங்கோலி என்று அசத்துகிறார்கள்...            

 ஏன் நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம் ?
அவசியமில்லை என்றா?
நேரமில்லை என்றா?
அமெரிக்கா வில் இதெல்லாம் கிடையாது என்றா?
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் ஐயும், பாடத்தையும் தவிர ஒரு உலகம் இருக்கிறது என்று தெரியஅவசியமில்லை என்று நினைத்து விட்டோமா?
வழி வழியாக வந்த இந்த வழக்கங்களும், அதற்கான முக்கியத்துவங்களும், உடல் நலத்தையும் , மனநலத்தையும், society உடன் சேர்ந்து வாழும் அவசியங்களும் ஏன் தெரியாது போயிற்று... !!

இவைகள் தான் நம் வாழ்வை முழுமை ஆக்கும் என்று நான் சொல்ல வில்லை...
இவைகளை அழியாமல் காப்பாற்றலாம் என்றுதான் சொல்கிறேன்....!!

West இல் social     life   க்கு அதிகமாக ஒன்றும் இல்லாது, மெஷின் வாழ்க்கை ஆனதால்,Mothers' day, Fathers' day, Valentines' day என்று கொண்டாடுகிறார்கள். அவைகளை காபி அடிக்கும் நாம் (நம்மூரில்அதெல்லாம் வியாபாரத்தை பெருக்க), நம் பண்டிகை களையும், கொண்டாட்டங்களையும் மறந்துபோனோம் !!


     

No comments:

Post a Comment