Sunday, August 28, 2016

FESTIVALS (1) - AAVANI AVITTAM....


ஆவணி அவிட்டம் (YAJUR UPAKARMA)
  
"ஆவணி அவிட்டத்துக்கு அசடு கூட சமையல் முடித்துவிடுவாள்"என்பது ஒரு வஜனம்

சேமியா பாயசம்பிட்லைரசம்மோர் குழம்புகலத்துக்கு பருப்புபச்சடி,காரம் போட்ட 
கரிதேங்காய் போட்ட கரிகூட்டுஆம வடை, தேங்காய் போளிஅப்பளம்...

ஆண்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரே பண்டிகை இதுதான்!அதனால் கூடுதல் effort.
வாசலில் பெரிய படிக்கோலம், காவி இட்டு 

எங்கள் ஊரில்காலையில் ஆண்கள் குளித்துகாமோகாக்ஷி ஜபம்  பண்ணி,   சந்தி பண்ணி... கோவிலுக்கு  கிளம்ப வேண்டும்.
திரும்பி வர ஒரு மணியாகும். அதனால்தான் காலை டிபன் இட்லி, சட்னி, மிளகாய்பொடி, செகண்ட் டோஸ் காப்பி...
வாழை ஏட்டில் பரிமாறப்பட்டு, வயிறு நிறைய சாப்பிடுவார்கள்.

கோயிலுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக்கொண்டு .. கோவில் கிணத்தில் ஸ்நானம் பண்ணி.. பிறகுதான் ஹோமம். முடிந்து வந்ததும் ஆரத்தி எடுத்து, உள்ளே வந்ததும், எல்லாருக்கும் பிரசாதம் (அந்த தேங்காய் வெல்லம் ரொம்ப நன்னா இருக்கும் !), தீர்த்தம்... நமஸ்காரங்கள் ..

பிறகு, நுனி இல்லை போட்டு சாப்பாடு ! மிச்ச போளியை பண்ணி,சாயந்திரம் வடையோடு அம்மா குடுப்பா.

கல்யாணத்துக்கு அப்புறம்... மாமனார் ஆத்தில் எல்லோரும் வீட்டில் குளித்ததோடு சரி. கோவிலில் வசதிப்படாது என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது !! சென்னையில் எதுக்குத்தான் வசதி !!

எங்காத்தில், மாமனார், S.K., இரண்டு மச்சினர்கள், என் பையன்கள்... 6 பெரும் வரிசையாக,பட்டு கட்டி (காலை குழந்தைகளை எழுப்பி, குளிக்க வைத்து, சந்தியா வந்தனம் சொல்லிக் கொடுத்து பண்ண வைத்து...) கோவிலுக்கு போகும்போது... கண் திரிஷ்டிதான் படும்.. ! அவ்வளவு அழகு.

வரிசையாக உட்கார்ந்து, எல்லாருக்கும் பரிமாறி, நானும் என் மாமியாரும் சாப்பிட்டு முடிக்க 2 மணியாகும்.

இப்போது எல்லாமே business like !! 7, 9 என்று இரண்டு batch கோவிலில். இவர் முதல் batch க்கு போவார். அதனால் இட்லி கட் !

ஹோமம் எல்லாம்short cut, phataa fut !! 9 மணிக்கெல்லாம்வந்து, பத்து மணி சாப்பாடு !!

நிறைய பேர் வீட்டுக்கே சாஸ்திரிகளை வரச்சொல்லி செய்கிறார்கள். எனக்கென்னவோ கோவில் பிடிக்கும்.

சிறு வயதில் அப்பா என்னை அழைத்துப் போவார். கூஜாவுக்கு காவல் !!!

அன்று வீடே கல கல என்று ஒரு சந்தோஷம்  நிலவும் !

பண்டிகைக்காவது எல்லோரும் ஒன்று சேர்ந்த நாட்கள் போய்விட்டன !!

ஆனால் இன்னும் இந்த பண்டிகைகள் உயிரோடு இருப்பது சந்தோஷம் !!











No comments:

Post a Comment