Thursday, July 23, 2020

பழைய நினைவுகள் !! தஞ்சாவூர் ...

பழைய நினைவுகள் !!
தஞ்சாவூர் ...
காலை 4 மணிக்கு ... 4 சகோதரிகள்... வாசலில் அப்பா போட்டுக்கொடுக்கும் ஒரு பல்பு விளக்கு 40 வாட்...
ஆளுக்கொரு கொட்டாங்கச்சி கோல மாவு ... ஒரே கோலம்... பெரிய கோலம்..
ஒற்றுமையாக இருக்கும்போது, கோலம் தவறில்லாமல், பெரியதாக, அழகாக, மகிழ்ச்சியாக உருவாகிறதே !!
அருகிலிருக்கும் கோவிலில் இருந்து திருப்பாவையும், திருவெம்பாவையும் ...
இப்படித்தானே 50 பாடல்களையும் கற்றோம் !!!
ஒரு சாரியில் வீடு... எதுத்த சாரியில்... கோட்டை சுவர்.. அதன் அப்பால் அகழி.. ராஜா காலத்தியது.. ... எதுத்த சாரியில் வீடு கிடையாது... கோலம் போட நிறைய இடம்...
கார் பஸ் என்று வாகன போக்குவரத்து கிடையாது... நடந்து செல்பவர்களும், கவனமாக, கோலத்தை மிதிக்காமல், நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து..
பெரிய கோலம் போட்டு, அதன் மேல் அங்கங்கே பரங்கி பூ வைத்து ..(ஒ, அந்த பரங்கிப்பூ வாடிக்கையாக கொடுக்கும் சிறிய பெண்ணின் முகம் கூட நினைவில் நிற்கிறது...!!)
கோலத்தை முடித்து... கொஞ்சம் தள்ளி நின்று, அதை முழுவதுமாக ரசித்து... 5 . 30 க்கு உள்ளே சென்று... அம்மா, அப்பாவை கூப்பிட்டு காமித்து.. அவர்களும் நம் மகிழ்ச்சியில் பங்கேற்று...
என்ன ஒரு சந்தோஷமான நிகழ்வுகள் ....
இன்னும் இரண்டு நாட்களில் மார்கழி பிறக்கிறது ...
சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில், பெரிய கோலமாவது, பரங்கி பூவாவது ...
பழைய நினைவுகளில் வாழ்கிறேன் !!!!

No comments:

Post a Comment