Friday, July 17, 2020

அம்மாவின் சாந்து.....

அம்மாவின் சாந்து.....
நெற்றிக்கு இட்டுக் கொள்ள , கருப்பு சாந்து, அம்மாவே ஆத்தில் பண்ணுவாள் .
சாந்து பண்ண, அரிசி மாவு; அதற்கு ஒரு "ஷைன்" கொடுக்க ஜவ்வரிசி மாவு.
ஜவ்வரிசியை ஏந்திரத்தில் மாவாக்கி, அரிசி மாவுடன் கலப்பாள்.
அந்த மாவை வெறும் இரும்பு இலுப்பச் சட்டியில் போட்டு, கிளறிக்கொண்டே இருந்தால், மாவு கறுப்பாகிவிடும் .
நன்றாக கறுப்பானவுடன், அதில் தண்ணீர் சேர்த்து கிளறுவாள்.
பதமாக, சாஃப்டாக வந்துவிடும்
அதை சாந்து கொட்டாங்கச்சியில் எடுத்து வைத்தால் காய்ந்துவிடும் .
நெற்றிக்கு இட்டுக் கொள்ளும்போது, நடுவில் சொட்டு தண்ணீர் விட்டு , சுட்டு விரலால் குழைத்து , இட்டுக் கொள்ள வேண்டும். அதை வட்டமாகவோ, திலகமாகவோ இடுவது ஒரு கலை !!
குழந்தைகளுக்கு இடும்போது, அம்மா வாயில் நாக்கை துருத்தி ஒரு சத்தம் ... குழந்தை கவனத்தை ஈர்க்க. கேட்டிருக்கிறீர்களா அந்த சத்தத்தை ?

No comments:

Post a Comment