Friday, July 17, 2020

அம்மா கூட்டிய கண் மை ....

அம்மா கூட்டிய கண் மை ....

நாங்க எல்லாம் சிறுமிகளாக இருந்த போது , கடையில கண் மை வாங்கியதே இல்லை. ஆத்தில் அம்மாதான் கூட்டுவாள்.
மூன்று செங்கல் வைத்து, அடுப்பு பண்ணி, ஒரு பெரிய மண் அகலில் நிறைய விளக்கெண்ணெய் விடுவாள்.
வேஷ்டி துணி எடுத்து , தோய்த்து போட்டு, அதில் கெட்டியாக , பெரிய திரி சுற்றுவாள்.
அந்த திரியை அகலில் போட்டு, ஏற்றுவாள்.
மார்க்கெட்டிலிருந்து, புது மண் தட்டு வாங்கி வருவாள்.
அந்த தட்டின் அடி பாகத்தில் விளக்கெண்ணெய் ஒரு கோட் பூசி விட்டு, அதை செங்கல் மேல் விளக்கின் சுடர் படும்படி வைத்து , மொத்தத்தையும் ஒரு புது கூடையால் மூடி விடுவாள்.
காலையில் பார்த்தால் , அந்த மண் மண் தட்டின் அடியில் கருப்பாக தூள் படிந்திருக்கும். அதை, ஒரு புது குச்சியால் ஒரு பேப்பரில் தள்ளி மடித்து வைத்து விடுவாள்.
அதில் கொஞ்சம் போடி எடுத்து , விளக்கெண்ணெய் துளித் துளியாக விட்டு, மையாக குழைத்து மை கூட்டில் அடைத்து வைத்து விடுவாள். மை ரொம்ப கருமையாக இருக்கும்.
எங்களுக்கெல்லாம் கல்யாணத்தின் போது கூட வெள்ளியில் இந்த மைக் கூடு சீராக உண்டு.

படம் கிடைக்கவில்லை. 

No comments:

Post a Comment