Friday, August 23, 2019

VK's School and College Life........


நான் படித்தது கிறிஸ்டியன் ஸ்கூல். (PROTESTANT )... அநேகமாக எல்லாருமே Christian lady teachers தான்.. girls ஸ்கூல் ஆச்சே !! 

விதி விலக்கு.. எங்கப்பா Maths , சயின்ஸ் க்கு ஒரு மாஸ்டர்,  Sanskrit க்கு ஒரு மாஸ்டர், Tamil  க்கு ஒரு மாஸ்டர்
எனக்கு தெரிஞ்சு, ஒரே ஒரு டீச்சர் ஐ தவிற எல்லாரும் கல்யாணம் பண்ணிக்காதவர்கள் தான்
(தப்பா புரிஞ்சுக்காதீங்க... விதி விலக்குGents Teachers நான்கு  பேரும் கல்யாணம் ஆனவங்க .. இல்லேன்னா நான் இப்போ இங்கே எழுதிண்டு இருக்க மாட்டேன் !! )

மிஸ் .பிலிப்ஸ் ன்னு ஒரு தையல் / டிராயிங் டீச்சர்.. எனக்கு ரெண்டுமே பிடிக்காது...
டிராயிங் இல் கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய் வரைய வேண்டும்..
இந்த காய்கள் எல்லாம் symmetrical ஆவா இருக்கு ? அனால் நோட்டில் அப்படித்தான் இருக்க வேண்டும்..! அழித்து அழித்து வரைந்து... அழுகிப்போன காய் மாதிரி இருக்கும் நெறைய குட்டு வாங்கி இருக்கேன் !

தையல் கிளாசில்... டீச்சரின் நடு விரலில், ஒரு கவசம் இருக்கும்.. ஊசி குத்தாம இருக்க..
 (ஒரு வேளை கர்ணன் மாதிரி அதோடே பிறந்திருப்பாளோ)
அந்த விரலாலேயே குட்டுவா...
நான் ஊசிய கீழே போட்டுட்டு, அதை தேடியே நேரத்தை ஓட்டிடுவேன் !!

எனக்கு பிடித்த மாதிரி, யங்கா, அழகா ஒரு சகுந்தலா டீச்சர் வந்தா... இங்கிலீஷ் டீச் பண்ணினா.. குரலும் அவ்வளவு இனிமை..
அவ்வளவுதான்... நான் ஒரே craze ! எனக்கு போட்டியாக இன்னும் சில பேர். நான் அவாளை போட்டியில் ஜெயிக்க, அவள் வீட்டை தெரிந்துகொண்டு, ஒரு லீவு நாளில் போய் கதவை தட்ட, டீச்சரின் அந்த mixed facial expression  ஐ இன்னி வரைக்கும் மறக்க முடியாது !! நாசூக்காக கட் பண்ணிட்டா..

காலேஜ் ல.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேர் வேறு... காலேஜ் போனதும்.. இந்த வால் தனம் எல்லாம் வந்துடும் போல !!

தமிழ் நாடகம் எடுத்த lecturer சந்திர குமாரி!   "சங்கீத குமாரி" என்று பெயர் வைத்தோம் .. proseநடையில் இருக்கும் வசனத்தை, பாட்டு மாதிரி படிப்பா.
Poetryஎடுத்த ராஜ மாணிக்கத்தை ரொம்ப பிடிக்கும்.. ஏன்னா.. குறுந்தொகை சொல்லிக்கொடுத்தா..!! (வயசுக்கோளாறு !)
Calculusஎடுத்த Dorathiஐ ரொம்ப பிடித்ததால்... அதில் எப்பவும் first மார்க்.. அவ இடது கை எழுத்து...
ஒரு நாள் அவ கிளாஸ் க்கு வர கொஞ்சம் லேட் ஆக, ஆர்வக்கோளாறினால்.. போர்டில் இடது கையால் எழுதிண்டிருந்தேன். வந்து ஒரு முறை முறைச்சா பாருங்க.. அன்னி பூர அழுது, மன்னிப்பு கேட்டு... அந்த lecturer இடம் அசடு வழிஞ்சிருக்கேன் !!

Physics சாந்தாவ எல்லாருக்கும் பிடிக்கும்..Heat / Sound / optics ... (பிடித்ததற்கு காரணம் பாடம் நன்னா சொல்லித்தந்தது மட்டும் இல்லை.. ரொம்ப வெளுப்பா, அழகா இருப்பா..
அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதா கேள்விப்பட்டதும் எவ்வளவு கவலை பட்டிருப்போம் ? மாப்பிள்ளையும் அழகா இருக்கணுமேன்னு !!


Dynamics , statics , Hydrostatics சொல்லிக்குடுத்த ரங்கநாயகி... சூப்பர் டீச்சிங் ! இன்னி வரைக்கும் நான் அதில் strong !

Electricity Class was for eating curd rice with nellikkaaioorugaai..ஏன்னா .. ஒரு  derivationboard   போட ஆரம்பிச்சாமுடியற வரைக்கும் திரும்ப மாட்டாமறந்து போயிடும்னு பயம் !! நாங்க 13 பேர் தான் !! இரண்டு row  வில உக்காந்துஜாலியா சாப்பிடுவோம்..
அதான்இப்ப வரைக்கும் எனக்கு electricity / Magnetism தகராறு... !!

Atomic Physics சௌந்தரம், Properties of Matter பிரபா ... (இவா ரெண்டு பேரும் ஏன் இன்னி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கல ன்னு மண்ட காச்சல்தான் ! .. ரெண்டு பேரும்.. இணை பிரியா தோழிகள்..)
மறக்க முடியுமா இவாளை எல்லாம் !!


way back in 1959, my school celebrated Golden Jubilee. grandceleb.was planned. ----

I was always there in every play for regular annual school days... always playing the role of the key man of the play !except once –

1956 - centenary celeb. of commencement of freedom struggle - sipoy mutiny - public function - I played JANSI RANI –

வீர வசனம் எல்லா practice பண்ணியாச்சு.  Rehearse ல பொம்மை horse மேலேஉக்காந்து, கத்தி பிடிச்சுண்டு பேசியாச்சு
actual staging க்கு போனா.... அங்க ஒரு நெஜ  போனி !! அதும் மேல உக்காருன்னு last minute ல.. ஒரு படுத்தல்.  அது ஒரு dress rehearsal . "போனி மேல எறல்லன்னா, உன்ன டிராமாலேர்ந்து தூக்கிடுவோம் னு ஒரு black mail வேர . அதுக்கு முன்னாடி நான்போனியே பாத்ததில்ல.. குதிர வண்டில கூட ஜாஸ்தி போனதில்ல.
ஒரு வழியா, மனச தேத்திண்டு, ஏறி, stage  குதிரையில உக்காந்து  (குதிரை ஓடாதுன்னு எனக்கு சமாதானம் வேர) , வசனம் பேசினா.. அது "வீர வசனம்" ஆவா இருக்கும் ? அதுக்கும் திட்டு. நான் ஒரே அழுகை... அதுக்கும் திட்டு.
அப்புறம் ஆத்துக்கு வந்து, அம்மா மோர் ல கம்பி காச்சி சொருகி (பயந்து போன, பேய் அறைஞ்சா மாதிரி இருந்த இது ஒரு வைத்தியம்) குடிக்க வெச்சா..
ஒரே சொப்பனம்... குதிர என்ன எடுத்துண்டு காடு மலை எல்லா சுத்தராப்பல... ஆனாஆசை யார விட்டது !
மறு நாள் மகா மெகா கூட்டம் அந்த function க்கு.
தைர்யமா, நன்னா பண்ணி, கலெக்டர் கையால பரிசு வாங்கிட்டேன் !!

Now I will come back to 1959... I has finished writing the Public Exam. The function was in April End. After the exams rehearsals were done.

school golden jubilee function la main item drama - jean val jean (I am not sure of the spelling !) ... The hero, a very poor soul, is given BUN by the Church father.... but in the night he escapes with two silver candle stand. when police catches him, the father rescues him saying, he only gave them to him as gifts. now the man repents & refines. This the story.

My eldest brother who was working outside Tanjore came only to witness this event. whole family was present !
The father gave BUN.... எனக்குstage fear இல்லேன்னாலும், கொஞ்சம்anxiety இருக்கும் இல்லையா.. நன்னா பண்ணனும்னு...

அந்த பன்ன அவசர அவசரமா கடிச்சு, (back stage ல சீக்கிரம், சீக்கிரம் ன்னு ஜாடை !! time factor ) , வாய் நிறைய பன்கண்ணுல  பயம்தொண்ட அடைக்கறது... father role பண்ணின பொண்னே கொஞ்ச பயந்து பொய், தண்ணி குடுத்தா.. (சிவாஜி தோத்தார் போங்கோ !!) ...
அந்த சீன, அப்படி ஒரு அப்ளாஸ்... !!
best actor prizeவேற !!

நான் இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது... School Day Program . ......
"அம்மா வைப்போல் பெரியவளானால் என்ன செய்வேன் தெரியுமா?" என்று ஒரு பெண்  -அம்மா  வேஷம் - புடவையில் 
"அப்பா வைப்போல் பெரியவரானால் என்ன செய்வேன் தெரியுமா ? " என்று நான் -அப்பாவாகவேஷ்டியில்.

{அம்மாசமைப்பாள்துணி துவைப்பாள்பாத்திரம் கழுவுவாள்குழந்தைகளை பேணுவாள் ..
அப்பாஆபீஸ் போவார்பணம் கொண்டு வருவார்கடைக்கு போவார்.... இப்படி 
இன்று வரை இந்த பாடங்கள் .. படங்களுடன் ... மாறவில்லை !!!}

While in 6th ... School Day - a rhyme with names of flowers; Some girls sang from behind stage; few of us were dressed up with a specific color of a flower, with a big flower made out of color paper fixed at our back.
I was DAISY in it.

These two, I can never forget !!

From 9th onwards, I used to be there in songs, playing Veena... all Christian Songs only !!

In 6th  Class, English was started for us. till then I didn't know even ABCD ! English started with Alphabets from 6th !!but reached a good standard by the time we were in S.S.LC.


No comments:

Post a Comment