Thursday, January 16, 2020

Subtraction .......

Subtraction is the only way to lead a peaceful life :-

As you age and the children grow up – subtract their childhood toys and junk collections

As you age and the children move out of your house – subtract whatever unnecessary things they have left behind

As you age - subtract your big car and go for a smaller one

As you age – subtract the vessels & things in the kitchen, and shrink them to the minimum you need just for two

As you age – subtract the big apartment / house and move to smaller one – easy maintenance

As you age – subtract your ego

As you age - subtract your talking and talk minimum – essential

As you age – subtract any material things that has not been used by you in 6 months time. you can survive without them

As you age – subtract attachment to material things

As you age – subtract attachment to other family members and your own children.

This is the only way to be happy and peaceful at old age !!

Thursday, December 26, 2019

குறை ஒன்றும் இல்லை கண்ணா,,,,,,,,,,,

நிறைய உழைத்துவிட்டேன் ; இப்போது ஓய்வு தேவை படுகிறது.
நிறைய கச்சேரி கேட்டுவிட்டேன்; இப்போது போதும் என்று தோன்றிவிட்டது.
நிறைய சினிமா பார்த்துவிட்டேன்; இப்போது குறைந்துவிட்டது.
நிறைய சமைத்துவிட்டேன்; இப்போது சலித்துவிட்டது.
நிறைய travel செய்து விட்டேன்; இப்போது அலுத்துவிட்டது.
நிறைய பேசிவிட்டேன்; இப்பொது குறைக்க தோன்றுகிறது.
நிறைய கதை புத்தகங்கள் படித்துவிட்டேன்; இப்போது படிக்க தோன்றவில்லை.
நிறைய நாவல்கள் சேர்த்துவிட்டேன்; இப்போது வாங்குவதை குறைத்துவிட்டேன்.
ராமாயணம், மஹாபாரதம், பாகவதம், நாராயணீயம், இன்ன பிற நூல்கள் பல தடவைகள் படித்தாகிவிட்டது. மறுபடியும் படிக்க தோன்றவில்லை.
முக நூலில் இந்த 11 வருடங்களில் நிறைய எழுதியாகி விட்டது. blog கிலும் தான். தினமும் எழுத ஒன்றும் தோன்ற வில்லை.
இப்போதைய பொழுது போக்கு , யு டியூபில் பாட்டும், su do cu வும் தான். + சாப்பாடு, தூக்கம் .
குறை ஒன்றும் இல்லை கண்ணா !!

Sunday, October 13, 2019

அம்மாவின் வைத்தியங்கள் ......

எங்கள் வீட்டில், எதெற்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போக கூடாது. அப்பாவின் ரூல்.
Private Practice பண்ணும் டாக்டரும் குறைவுதான். டாக்டர் பீஸ் 1 Re. - டாக்டர் குடுப்பது.. ஜுரம், இருமல் க்கு சிகப்பு தண்ணி.. (called mixture). வயிற்று கோளாறுக்கு - white mixture - called bismath mixture.
தீராதுன்னா ... Govt. ஆஸ்பத்திரி. - கம்பௌண்டர் , மருந்து சீட்டை பார்த்து, பெரிய ஜாடியிலிருந்து   2, 3 கலர் தண்ணியை, ounce glass இல் அளந்து, நாம் கொண்டு போகும் bottle இல் ஊத்தி குடுப்பார். இது எப்பவாவதுதான்....
for common minor ailments, அம்மாவின் வைத்தியம் தான். My mother was not educated. but, she had amazing practical knowledge & was very smart.
1. ஜுரம் என்றால் - முதலில் rest.. strict diet... அதிக ஜுரம் என்றால் , தண்ணீரில், eucalyptus oil விட்டு, வேஷ்டி துணியை கிழித்து, நெற்றியில் போடுவார்கள். ஜுரம் இறங்கி விடும்.

2. தொண்டையில் புண் என்றால், அப்பா, துடைப்ப குச்சியை உடைத்து , நுனியில் பஞ்சு சுத்தி, lotion இல் நனைத்து, வாயை திறக்க சொல்லி, உள் நாக்கில் மருந்து தடவுவார். ஒரு நாளைக்கு மூன்று தரம். அப்புறம் உப்பு தண்ணியில் gargle.

3. வயிற்று வலிக்கு , அம்மா, வெற்றிலையில் ஓமத்தை வைத்து மென்று திங்க சொல்லுவாள். "லங்கணம் பரம ஔஷதம்"

4. ஒரு முறை எனக்கு காலில் புண் வர, கால் முழுதும் பரவி விட.. ஆடு தொடா இலையை பறித்து வந்து, எண்ணெய் தடவி , இலைகளை காலின் பரத்தி, கட்டு போட்டாள்... சில நாட்களில் சரியாகிவிட்டது.

5 .அப்போதெல்லாம் Dentistry popular இல்லை. எனக்கு மட்டும் பல் சொத்தை வந்தது... (வீட்டை சுற்றி சுற்றி எவ்வளவு ஓடி இருப்பேன் பல் தேய்க்காமல் !! ) சொத்தை பல்லில், கிராம்பு தைலத்தை ink filler மூலம், இரண்டு சொட்டு விடுவாள். மெட்ராஸ் வந்து, இன்னி வரைக்கும் Dentist குத்தகை தான் !!!

6. அம்மை போட்டினால், எவ்வளவு care !! தனியாக வைத்து, நிறைய வேப்பிலை கையில் கொடுத்து, பாய் மேல் பரப்பி... ஒரு குழந்தைக்கு வந்தால் ,வரிசையாக  எல்லாருக்கும் வரும். ஒரு முறை, என் அக்காவிற்கு தலைக்கு ஜாலம் விடும்போது, எனக்கு வர, என் அக்காவை 3 நாட்கள் எதிர்த்த வீட்டில் விட்டு விட்டாள்.

7. இருமல் வந்தால் , சித்தரத்தை ஒரு துண்டு வாயில் அடக்கி கொள்ள வேண்டும்.

8 . வாயில் புண் இருந்தால், மணத்தக்காளி கீரை தான் மருந்து. மிஞ்சினால் riboflavin   tablets.

9 . simple அண்ட் healthy food .

10 . டென்ஷன் இல்லாத படிப்பும் , விளையாட்டும்.

இன்று வரை நல்ல health இருக்க அந்த வைத்தியமெல்லாம் அஸ்திவாரம்.

Saturday, October 12, 2019

ரேடியோ .....

அப்பாவுக்கு பாட்டு என்றால் பயித்தியம். ஆனால் கர்நாடக சங்கீதம் தான். நாங்கள் அடுத்த ஜெனெரேஷன் என்பதால் அப்பாக்கு தெரியாமல் சினிமா பாட்டு சேர்த்துக் கொண்டோம்.
அப்பா ஒரு GEC ரேடியோ வைத்திருந்தார். தஞ்சாவூரில் , திருச்சி மட்டும் நன்றாக எடுக்கும். மெட்றாஸ் சுமார்தான்.
அது ஒரு வால்வு ரேடியோ. ரேடியோவை போட்டால் கொஞ்சம் நேரம் கழித்துதான் ஆரம்பிக்கும்.
அப்பா கச்சேரியை போட்டுவிட்டு , ராகம் சொல்லும்போது சத்தத்தை குறைத்துவிட்டு, எங்களை கேட்பார். சரியாக சொல்லாவிட்டால் கோபம் வரும்.
இரண்டாவது உலகப் போர் டைமில் ரேடியோவை உள்ளே ஒளித்து வைத்து அப்பா நியூஸ் கேட்பார்.
டிசம்பர் மியூசிக் சீசனில் மெட்றாஸ் மியூசிக் அகாடெமி, தமிழிசை சங்கம், இன்னும் "நகரத்தில் நடக்கும் கச்சேரியிலிருந்து" ஒலிபரப்பப் பட்ட கச்சேரிகளை கேட்டு அனுபவிப்பது உண்டு.
அப்பா வீட்டில் இல்லாதபோது ரேடியோ சிலோன் தான். அப்போது ஆல் இண்டியா ரேடியோவில் விவித பாரதி , வேறு சினிமா பாட்டுக்கள் கிடையாது.
ரேடியோ சிலோன் அருமையாக இருக்கும். மயில் வாகனன் என்றொரு அறிவிப்பாளர். ரொம்ப பிரபலம்.
வித விதமான நிகழ்ச்சிகள். அதில் "ஜோடி மாற்றம்" என்றொரு நிகழ்ச்சி நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லா சினிமா பாட்டு புஸ்தகங்களும் வாங்கி விடுவோம். புஸ்தகம் இல்லாத பாட்டுகளை ரேடியோவில் வரும்போது எழுதிக் கொள்வோம்.

"பினாகா கீத் மாலா" என்றொரு சூப்பர் ப்ரோக்ராம் கேட்டுருக்கிறீர்களா?
பாட்டை தவிர திருச்சி வானொலியில் ஒலி பரப்பாகும் நாடகங்கள் சுவாரசியமானவை. பாப்பா மலரும் பிடிக்கும் . நாடகங்களை எல்லோரும் ரேடியோவை சுற்றி உட்கார்ந்து கேட்போம். ஒலிச்சித்திரம் என்று சினிமாவை ஒலிபரப்புவார்கள்.
அந்த ரேடியோ ரொம்ப நாள் உயிரோடு இருந்தது.
மெட்றாஸில் நான் வேலைக்கு போனபோது அப்பாக்கு ஒரு ஃ பிலிப்ஸ் ரேடியோ வாங்கி கொடுத்தேன். 25 ரூ. தான். என்று நினைவு.
அதற்குள் பயம் தெளிந்து விட்டதால் நிறைய சினிமா பாட்டுக்களை கேட்பேன்.
காலை சீக்கிரம் எழுந்து நாலு மணியிலிருந்து ரேடியோ மலேசியா, ரேடியோ சிலோன் , ரேடியோ சிங்கப்பூர் என்று சினிமா பாட்டுக்கள். அந்த பாடல்களின் வரிகளும், டியூணும் இன்று வரை மறக்க மாட்டேன் என்கிறது.
1967 வரை (அது என்ன கணக்கு என்று கேட்கிறீர்களா- 1967 என் கல்யாணம்) டி.வி. யம் இல்லாததால் ஒரே பொழுது போக்கு ரேடியோ தான்.

Thursday, October 3, 2019

முடிவில்லா விசாரணைகள்...



எனக்கு 21 வயசாகி, படிப்பும் முடிந்ததும், எல்லா மாமிகளும் எங்கம்மாவை கேட்க ஆரம்பித்தது "ஏன் மாமி, பொண்ணுக்கு ஏதாவது வரன் தெகஞ்சிதோ? ன்னு.  ரொம்ப கவலையா கேட்டுட்டு, தனக்கு தெரிஞ்சவா பொண்ணுக்கெல்லாம் எப்படி "டக்கு டக்கு
 ன்னு வரன்  குதுந்துதுன்னுபாதி நிஜம் பாதி "ரீல்" விட, அம்மா, அதுக்கப்புறம் சில வருஷங்கள், வெளியில போறது, கல்யாணம் காட்சி அட்டென்ட்  பண்றதுஎல்லாம் நிறுத்திண்டுட்டா. . வழியிலயாரையாவதுபாத்தாலும், பாக்காதது போல் போய் விடுவாள்.

கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துக்குள் அடுத்த கேள்வி. என்னன்னு உங்களுக்கெல்லாம் ஊகிக்க முடியும். இந்த கேள்விகளுக்கு பயந்துண்டு, ஒண்ணு என்ன, மூணு குழந்தைகள் பிறந்தாச்சு.

அதுக்கப்புறம் விட்டதா? அவா படிப்பு, உத்தியோகம், கல்யாணம், பேரன் பேத்திகள் எல்லா விசாரிப்பையும் தாண்டி, அறுபது வயசுக்கு மேல் அக்கடா என்று உக்காந்தால்....

ஒரு நாள், கொஞ்ச நாளாக பாக்காத மன்னியை ஆசையாக பாக்கப்போனால் " வசந்தா, உனக்கு முழங்கால் வலி வந்துடுத்தோ? மின்ன போல நடக்க முடியறதோ? ன்னு கேக்கறா. நானும் "ஆமாம் மன்னி, இப்பல்லாம் முடியவே இல்ல. கை காலெல்லாம் ஒரே வலி" ன்னு சொல்லி வைக்க, "அதான பாத்தேன். போக போக இன்னும் ஜாஸ்தியாகத்தான் ஆகும். இதுக்கு வைத்தியமும் கிடையாது" ன்னு நல்ல ஆசிகள் வழங்கி, குங்குமம் குடுத்து அனுப்பி வைத்தாள்.

என் அக்காவை பாத்த பொது, "மன்னி இப்படி கேக்கராடி" ன்னு சொன்னா, அவள்" அமாம் ஆமாம். அவள் கண்ணு பொல்லாதது. மாமியாரை விட்டு சுத்தி போடச்சொல்லு. ஆமாம், உனக்கு சுகர் வந்துடுத்தோ? " ங்கறா ! "இன்னும் இல்லியே" ன்னா, "எதுக்கும் அடிக்கடி செக் பண்ணிக்கோ. எப்ப வேணா வரும்" - இது அக்காவோட வார்னிங் !

ரோடில் யாரையாவது தெரிஞ்சவாளை பாக்க பயம்மா இருக்கு.
"பாத்து ரொம்ப நாளாச்சு வசந்தா. B.P. , Sugar  எல்லாம் வந்துடுத்தா ?" ன்னு ஏதோ பென்ஷன்  வரதாங்கர மாதிரி விசாரணை.
"சரி இவா எல்லாம் தன அனுபவத்துல சொல்றா" ன்னு போனா போறதுன்னு சகிச்சுண்டா -
ஏதோ ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் ன்னு டாக்டர் கிட்ட போனா, முதல் கேள்வி, "உங்களுக்கு சுகர் இருக்கா?" ங்கறதுதான். அதோடவா ! "எதுக்கும் Sugar, Cholestral, B.P., liver function, scan, echo, ECG எல்லாம் எடுத்துடலாம். பெட்டர் " ன்னு முழ நீள லிஸ்ட். பயம் வந்து, அவர் சொல்றா "கிளினிக்" போய் , எல்லா டெஸ்டும் எட்டாயிர ரூபா செலவழிச்சு பண்ணிண்டு, பயத்தோட ரிப்போர்ட் பாத்து,, எல்லாம் நார்மல் ஆக இருக்க, "இது வெறும் mild viral infection " ன்னு அந்த "mild " க்கு பேப்பர் நிறைய, வரிசையா, மருந்து பேர் !!
இது மட்டுமா ?

வயசாச்சு.
ரொம்ப நாழி கம்ப்யூட்டர் ல உக்காராதே.முதுகு வலி வரும்
ரொம்ப வாசிக்காதே. கண், தலை வலி வரும்
சாதம் சாப்பிடாதே. வயிறு உப்புசம் வந்து படுத்தும்
காலம்பர ராத்திரி காஞ்சி சாப்பிடு
வேணும்னா சப்பாத்தி ஒண்ணு ரெண்டு எடுத்துக்கோ.
கிழங்கு சாப்பிடாதே

தக்காளி சாபிடாதே. ஸ்டோன் வரும்னு ஒருத்தர். தக்காளி நிறைய சாப்பிடு. ஹார்ட்டுக்கு நல்லதுன்னு இன்னொருத்தர்.

வாழைபழம் சாப்பிடாதே. வெயிட் போடும்.... வாழப்பழம் தினமும் சாப்பிடு. constipation வராது...

இதல்லாம் ப்ரீ யா கிடைக்கிற அட்வைஸ்.. எல்லாம் உபமான, உபமேயங்களுடன் !!

இது மட்டுமா ?
ஆளுக்கொரு டாக்டர் suggest பண்ணி , ஒரு சாதாரண தலை வலி, brain tumor வரைக்கும் அலசப்படும்.

இதெல்லாமும் எப்படி?
"உனக்கு கோமளத்தை தெரியுமோ? அதாண்டி; நம்ம கமலாவோட நாத்தனார் பொண்ணு. அவளுக்கு இப்படித்தான் ... " என்று ஆரம்பித்து, ஒரு கதை.

"இப்படித்தான் அந்த ரங்கநாதனோட ஷட்டகர் பொண்ணு, (அந்த ரங்கநாதர் யாரென்று புரிஞ்சு கொள்ளவே தனி மூளையும் ஞாபக சக்தியும் வேணும் !!) , சின்ன வயசுக்காரி, கதவை தாப்பா போட்டுண்டு, குளிக்கப் போனவ, ரொம்ப நேரமாகி, கதவை உடைச்சுப் பாத்தா, மயக்கமா விழுந்திருக்கா ! மூலையில கட்டியம். கோமாவில இருக்கா. கைக்குழந்தை வேற" ன்னு, சொல்றா கதை, ஒரு மெகா சீரியல் எடுக்கலாம். மயக்கம் போட்ட பெண் கோமாவுக்கு போனது, ஆஸ்பத்திரிக்கு ஆனா செலவு, வீட்டில் வைத்து பார்ப்பது, nurse கிடைக்க படும் கஷ்டம், ஆத்துக்காரரின் அவஸ்தைகள், குழந்தை வளர்க்க யாரு ஹெல்ப்பு ...... !! நாம டாபிக் மாத்தினால ஒழிய இது நிக்காது !

இதை விட கொடுமை, ஒரு வருஷத்துக்கு அப்புறம் அதே மாமியை பாத்தால், விட்ட இடத்தில் இருந்து "போன வருஷம் சொன்னேனே, கோமால  இருக்கான்னு .. அவளுக்கு பெட் சோர் வந்து..." ன்னு ஆரம்பிச்சா, அடுத்த 500 எபிசொட் க்கு கதை ஓடும் !!

எல்லாம் சொல்லிட்டு, "ஹும்ம்... எல்லாம் பகவான் செயல். நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ. வயசாச்சு. குளிக்கும்போது கதவ தாள் போட்டுக்காதே. உங்காத்தில அந்த நாளத்திய கதவு. அப்புறம் உடைக்கணும்" ஞ்சு சொன்னா... அந்த மாமி கவலை படுவது என்னை பத்தியா, எங்காத்து கதவை பாத்தியான்னு தெரியல்ல. !!


ஸ்ரிங்கேரிக்கு போய் சாமி தரிசனம் பண்ணிட்டு ரயிலில் வரேன் .. ஒருவர்
 " மாமி, இந்தாங்கோ. இந்த புரோஷரை வெச்சுக்கோங்கோ. அரித்ரடீஸ் பத்தி இன்னிக்கு ஒரு அமெரிக்க டாக்டர் கோடம்பாக்கத்தில ஆறு மணிக்கு பேசறார். இந்த textஐ படிச்சுட்டு அந்த lectureகேக்க வாங்கோ. ரொம்ப usefulஆக இருக்கும்" ங்கறார் !! சும்மாவா சொன்னார். முப்பது நிமிஷம் அதை பத்தி பேச, கட் பண்ணிண்டு இந்தண்ட வர பட்ட பாடு இருக்கே !!! 

பிரயாணம் முடிந்து, வீட்டுக்கு வந்து, குளிச்சு, சாப்பிட்டு, relaxed   ஆ , ஒரு magazine ஐ திறந்தா...
"உங்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகி விட்டதா. இதை படியுங்கள்.." ன்னு ஒரு கட்டுரை...
புக்கை படக்கென்று மூடி தூக்கிப் போட்டேன். 

ஒரு அட்டையில் "எனக்கு இது வரை B.P., Sugar, Cholestral, Thyroid, arithraities, heart blockஒண்ணும் வரல்லை. வந்தால் உடனே உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்" ன்னு எழுதி கழுத்தில் தொங்க விட்டுக்கலாம் ன்னு நினைக்கிறேன் !!     

 









Friday, September 20, 2019

பல்லோடு நான் படும் பாடு ...



DENTIST’S CHAIR


பல்லோடு நான் படும் பாடு..... 

சுமார்பதினாலு வயதிலேயே சொத்தைப் பல் வந்தது... (சொத்து வந்ததோ இல்லையோ... சொத்தை நிறைய வந்தது !!!)

எனக்கு காரணம் எல்லாம் தெரியாது... பல் ஏன் கெட்டுப் போறதுன்னு... (தெரிஞ்சப்புறம்  மட்டும் ஏதாவது பண்ண முடிஞ்சுதா என்ன ? வந்துண்டேதான் இருந்தது..)
ஆனா ஒண்ணு.. போன ஜென்மத்தில, இந்தடாக்டர்ஸ்க்கெல்லாம் நெறைய கடன்பட்டு, இந்த ஜென்மத்தில தீக்கறேன் ன்னு மட்டும் நன்னா தெரியறது...என் பற்களுக்கு அவா போட்டிருக்கற சிமெண்ட், நான் குடுத்திருக்கற பணம்... எல்லாம் சேர்த்தால்... கண்டிப்பா, ஒரு வீடு வாங்கி இருக்கலாம் !!)

இங்க ஒண்ணு  சொல்லியே  ஆகணும்... தஞ்சாவூர்ல, எல்லாரும்  செங்கப்பொடியில  பல்  தேக்கரச்சே, நாங்க சலிச்ச அடுப்பு  சாம்பல்ல  பல் தேச்சோம்..
அவா  எல்லாம் சாம்பலுக்கு வரச்சே, நாங்க பல்பொடிக்கு மாறிட்டோம்...
அவா பல்பொடிக்கு வரச்சே...நாங்க மெட்ராஸ்வந்து, பேஸ்ட்டுக்கு மாறியாச்சு... 
பத்தடி  முன்னேதான்  !!!

நஞ்சங்கூடு, பயோரியா  பல்பொடிகளை  மறக்கமுடியுமா ?
பயோரியா கொஞ்சம்காரம்...(அதோட  இங்கிலீஷ்  ஸ்பெல்லிங்  வேற  ரொம்ப  கஷ்டம் !!)
நஞ்சங்கூடு  நன்னா  இருக்கும்... அதனாலே  தாராளமா  கையில  கொட்டிண்டுடுவோம்னு  அப்பா, சின்ன 
 சின்ன பேப்பர் துண்டுல, கோவில்  குருக்கள்  விபூதி  மடிக்கராப் போல , நீட்டா , அழகா, ஒரே சைஸ்ல பொட்டலம்  கட்டி  வெப்பா... 
தினமும்ஆளுக்கொண்ணு... 

அம்மா   வைவாளேன்னு, குழாஅடிக்குப்  போய்,   "போனேன்..வந்தேன்" ன்னு பல்  தேச்சுட்டு  வந்துடுவேன்...

தஞ்சாவூர்ல  பல்லுக்கெல்லாம்  பெரிசாவைத்தியம்  ஒண்ணும்  கிடையாது.  பல்வலிச்சா, கன்னத்தில கை வெச்சு அமுக்கி, அம்மான்னு  கத்தினா, அப்பா, ஒருதொடப்பக்குச்சில  கொஞ்சம்  பஞ்சுசுத்தி, கிராம்புதைலம், டின்க்ச்சர், எதிலயாவது  தோச்சு, அந்தபல்லுல  வெப்பா... வலி கொறஞ்சிடும்..

அங்க ஆஸ்பத்திரிக்குப்  போனாலும், மருந்துதான்  போட்டு  அனுப்புவா... இன்னொரு  நல்ல விஷயம்... அப்போ எல்லாம்  painkiller ன்னு  மாத்திரை குடுக்கவே  மாட்டா... எத்தனை  நல்ல  விஷயம் !!!

எங்க மாமா  பையன்  ஒருத்தன்  மெட்ராஸ்  போய்  வந்து, அங்க  பல்  டாக்டர், சொத்தைப்  பல்லை  சுரண்டி, சிமென்ட்  வெச்சு  அடைத்து  விட்டதை  சொன்னபோது, அதிசயத்துப்   போயிட்டேன் !! எனக்கும் 
 அந்த  நல்ல  நாள்  வந்தது...

மெட்ராஸ்வந்து... காலேஜ்   attendance  ஐவிட, பல்  டாக்டர் attendance ரெகுலர் !!

இங்கே  வந்து  பழக  ஒரு  வருஷம்  ஆகி, மறுபடியும்  அமுங்கி  இருந்த  பல்வலி  வெளிக்கிளம்ப, General Hospital உடன்  சேர்ந்த  Dental Wing பீச்ரோட்ல்  இருக்கு...அங்கே  போகஆரம்பித்தேன்...
பெரியநல்ல Hospital, free treatment; நெறைய  ஸ்டுடென்ட்  டாக்டர்ஸ்... ஜே..ஜே.. ன்னு  இருக்கும்..
காலம்பர  சீக்கிரம்  கிளம்பி, புரசவாக்கத்தில்  இருந்து  ஏழாம்  நம்பர்  பஸ்  பிடித்து, பல்  ஆஸ்பத்திரிக்குப்   போய், அதே  பீச்  ரோடில்  இருக்கும்  காலேஜுக்கு ,21ம்  நம்பர்  பஸ்  பிடித்துப்  போய்  சேர்ந்து விடுவேன்... 

இது   வருடக்கணக்கா  நடந்தது... என்னை  அறியாமல், பழக்க 
 தோஷத்தில்  7ம்  நம்பர்  பஸ்  பிடிப்பது  வாடிக்கை  ஆகி  விட்டது... 
நல்லவேளையாக  ஒரு  பல்லும்  பிடுங்கப்பட  வில்லை 

பெண்பாக்கும்போது, நல்லவேளை , என்  பல்லை  நன்றாகப்  பார்க்கவில்லை... ஒரு தெத்துப்பல்  வேறு (சிங்கப்பல்லாம், அதிர்ஷ்டமாம் !!).. 

பல்வலி, ஒருதருமத்துக்குக்  கட்டுப்பட்டு  சிலவருஷங்கள்  அடங்கி  இருந்தது... 
ஆனால்  குழந்தைகள்  பிறக்கவும், மறுபடி  ஆரம்பம்..

(அதுவரை, genetic problem ;   9 th child ; calcium deficiency      ன்னு  ஏதோகாரணம்  சொல்வேன்.. குழந்தை 
 பிறந்தப்புறம், child birth க்குப்பிறகு  இப்படித்தான் ஆகும்  என்று  சொல்ல  ஆரம்பித்தேன்.. இன்று 
 வரை  இப்படியாப்பட்ட  காரணங்கள்   கண்டுபிடிப்பேனே  தவிர, என்தப்பு, பல்லை  நன்னா maintain பண்ணவில்லை  என்று  சொல்ல  வேமாட்டேன் !!)

அப்புறம்  என்ன... ஒண்ணுவிட்டு  ஒரு  நாள்  எங்க outing ஏ... பல்  டாக்டர்  தான்...             
Technology has advanced very much....
From simple filling to root canal, bridge, extraction, denture.. I have had implant also !
In the process... how much of knowledge I have gained !! I am a theoretical dentist  - not practical !!

இப்ப என்  வாய்  நெறைய  பல்  இருக்கு.. ஆனா  எத்தனை  ஒரிஜினல்ன்னு  தெரியாது... ஒண்ணு ரெண்டு இருக்கலாம் !! அதுவும்  சிமென்ட்  பூசப்பட்டதாதான்  இருக்கும்...!! 

பல்பொடியால  பல்  தேக்கப்படுத்தினவ... அப்புறம் (பிரஷ் / பல்பொடி) combination க்குமாறி, (அதுவும், தஞ்சாவூர்ல, நாங்கதான் முதல்ன்னு  நினைக்கிறேன் )... அப்புறம்  மெட்ராஸ்  வந்து (பிரஷ் / பேஸ்ட் ) க்குவந்து... இரண்டு  வேளை தேய்த்து... 
இப்போ... floss , super floss ன்னு  கலக்கறேனாக்கும் !!

Mahabharatha Characters ஐ விட, நான் பல்லை காண்பித்த டாக்டர்ஸ் அதிகம் !!

ஆனா, இன்னி வரைக்கும், டென்டிஸ்ட் சேர்ல உக்காந்து, வாயை திறந்ததும், ஒரு instrument கொண்டு வருவாரு பாருங்க, சொரண்டரதுக்கு, அத கிட்ட எடுத்துண்டு வந்த உடனே , பயமான பயம்.. போக மாட்டேங் கிறது ! அந்த "கூசல்" ஐ அனுபவிச்ச வாளுக்கத் தான் தெரியும் ! 

அமாம், ஏன் இந்த பல் டாக்டர் எல்லாம் , நம்ம வாய்க்குள்ள, இன்ஸ்ட்ருமென்ட் ஐ வெச்சு, ட்ரீட் பண்றச்சே, கேள்வி கேக்கறா ? 
எல்லா பதிலையும் கண்ணாலே சொல்ல முடியுமா ??

இப்படிஎன் Medical Profession Interest ம் , Medical Articles எந்த Magazine  ல, internet ல  பாத்தாலும்  படித்து, டாக்டர்களிடம் டிஸ்கஸ்  பண்ணி,   சொந்த  அனுபவமும்  சேர்ந்து, dental மட்டும்  அல்ல...
General, Cardio, Neuro, Ortho, Ophthalmi, Gynic, Psychco, Gastro   doctors கிட்டபோனஅனுபவம்...
Skin, E.N.T., Brain இன்ன  பிறவற்றையும்  கொஞ்சம்  படித்து, 
மூன்று  குழந்தைகளை   வளர்த்ததில்  Pediatric  ம்  தெரிந்து... 
(குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்  ..பாதி டாக்டர் ஆகிவிடுவீர்கள் !!)...

நான் 75 % டாக்டர் !! Practice தான்பண்ணமுடியாது !! 

ஒரு surgery  பாக்க  ஆசை... அதற்கு  இன்னும்  நேரம்  வரல்ல .       

Saturday, September 7, 2019

எங்கள் கல்யாணம் நிச்சயம் ஆன நாள்........

செப்டம்பர் ஏழாம் தேதி...  பிள்ளையார் சதுர்த்தி அன்று எங்கள் கல்யாணம் நிச்சயம் ஆன நாள்.
மின்ன நாள்ல எல்லாம் அதுக்கு நிச்சயதார்த்தம் என்று பெயர் இல்லை. Engagement என்ற பிரயோகமே கிடையாது.
"பாக்கு, வெத்தலை மாற்றுவது " என்று பெயர். இது ஒரு சின்ன function . பிள்ளை வீட்டில் நடக்கும்.
அதிகம் பேரை கூப்பிடுவது இல்லை. முக்கியமான , மிக நெருங்கிய உறவினர் மட்டுமே.
எங்கள் வீட்டில் இருந்து அம்மா, அப்பா, அக்கா, அத்திம்பேர் ,மன்னி இவ்வளவு பேர் தான்.
கல்யாண பெண்ணை கூட்டிக் கொண்டு போகும் வழக்கம் கிடையாது. "பளிச்சுனு புடவை கட்டிக்கோ, தலை பின்னி பூ நிறைய வெச்சுக்கோ" என்று என்னை எல்லாம் செய்துக்க சொல்லி, விட்டு விட்டு போய் விட்டார்கள் !!எனக்கு துணையாக என் அத்தையை வைத்து விட்டு, எல்லோரும் போனார்கள்.
சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எங்கள் வீட்டிலிருந்து போனவர்கள் கொஞ்சம் லேட். அதற்குள் அந்த சைடில் டென்ஷன்.
வெற்றிலை பாக்கு, மஞ்சள், பல தினுசு பழங்கள் , தேங்காய், பூ, ஸ்வீட் - சில முக்கியமான வெள்ளி பாத்திரங்கள் இவைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போனார்கள்.
சாஸ்திரிகள் வந்து, லக்ன பத்திரிகை படித்து சம்பிரதாயப்படி வெற்றிலை பாக்கு தட்டை மாற்றிக் கொள்வார்கள்.
பிறகு எல்லோருக்கும் டிபன் . சாப்பாடு கிடையாது.
வைரத் தோடு நகைகள், வெள்ளி பாத்திரங்கள், பித்தளை , எவர் சில்வர் பாத்திரங்கள், துணி மணி, மாப்பிள்ளை டிரஸ் , சத்திரம் , சாப்பாடு எல்லாம் சேர்த்து 22 , ௦௦௦ ரூ. பட்ஜெட்டில் எங்கள் கல்யாணம் நிச்சயமாகி அக்டோபர் 25 என்று முஹூர்த்தம் நிச்சயிக்கப் பட்டது.

No Photos !!!
இப்போதெல்லாம் நிச்சய தார்த்தத்துக்கு beauty parlor க்கே 22 , ௦௦௦ ரூ. ஆகும் !!!!