Friday, April 26, 2019

Blissful Life ......

20 வயசு வரைக்கும் ஒண்ணும் தெரியல்லே !
20 - 40 ....ஒண்ணுமே புரியல்லே !
40 - 60 ....கொஞ்சம் கொஞ்சமா புரிய, கோபம் வந்தது, சண்டைகள் வந்தன !
60 - 70 ....பழசெல்லாம் மறக்க ஆரம்பித்து.. (நடுவில சில பக்கங்களை காணோம்) !
இப்போ 70 களிலே .... முதல்ல, நடுவில, நிறைய பக்கங்களை காணோம் !!
இன்று.... என்பது தான் ஞாபகம் !!
அதிலேயும் ... இப்போது என்பது தான் தெரிகிறது...
Blissful Life !!கடவுள் ரொம்ப think பண்ணித்தான் மறதியை குடுத்திருக்கிறார் !!!
அதனாலே, வாழ்க்கையை அதன் போக்கில விட்டா, அது பாட்டுக்கும் நம்மளை கரை சேர்க்கும்.!!!

Friday, April 19, 2019

இன்று ஒரு புதிய சிந்தனை ...

இன்று ஒரு புதிய சிந்தனை ...
It is true that Mother suffers the pain of labor; feeds the child; day & night takes care;
Father showers his Love; works hard to give a daughter what ever she needs.
Both struggle to see the girl married well.
But.. take my example - I have lived with my parents for 24 years & with my husband for nearly 52 years.
He has taken care of me all these years; worked hard for me & children; raised our status of living & comfort level;
Accepting a girl from a totally new family & environment - has handled me well at times of depression, crankiness;
At times I have been adamant; thrown tantrums; have been demanding;
Has taken me to places because I like travelling; Gets me eats that I like...
so on.... and so forth....
Under the parents' care I was less demanding; much less sick; very innocent; obedient; no comparison with any one else; so it must have been relatively easy for them to handle me.
They knew that one day I will part with them; after I moved out, they would have missed me ... but got adjusted to the reality.
But from the age of 24, till date, realizing that I have no place to go, missing me even if I am away for a couple of days, constantly in touch with me over the phone, enjoying the evenings sitting with me & watching stupid TV progs.;
taking me to the restaurant I like & remember to order what i want.... ENDLESS CARE !!!
How many of the ladies agree with me ?
WHY NOT CELEBRATE HUSBAND'S DAY !!!

Thursday, April 18, 2019

Madras nalla Madras .......

Madras nalla Madras - 
1959 ஜூன் - காலேஜுக்கு திருச்சி, மதுரை, மெட்ராஸ் எல்லா ஊருக்கும் அப்ளிகேஷன் போட, அப்பாக்கு மெட்றாஸ் தான் பிடித்தது என்பதால், அப்பா முதலில் மெட்ராஸ் வந்து, Q.M.C. அட்மிஷன் லிஸ்ட் பார்க்க அங்கேஇடம்கெடச்சிடுத்து..
உடனேதஞ்சாவூருக்குதந்திவந்தது.. ஒருவெள்ளிக்க்கிழமை.. அம்மாக்கு - "send vasantha immediately"
எனக்குசரியானதுணிமணிகள்இல்லை.. அதுவும்அப்பாசொல்படி - இரண்டுசெட்பாவாடைதாவணி...
அம்மாகடைக்குப்போய், சீட்டிபாவாடைதுணிவாங்கி, தையற் காரனிடம்குடுத்துஒரேநாளில்தைத்துவாங்கினார்...
அப்போடிக்கெட்reservationஎல்லாம்தெரியாது...
பக்கத்தாத்துகாராளிடம்எல்லாம்சொல்லிக்கொள்ள .. எல்லோரும் "நீதிரும்பவும்ஒருடாக்டராகஇந்தவூருக்குவரணும்" என்றஆசிகளுடன்அனுப்பிவைக்க... (அதுதான்என்கனவு... இன்றுவரை...)
ஞாயிற்றுக்கிழமைமாலைநாலுமணிக்குஅம்மாவும், அண்ணாவும்ரயிலடிக்குவந்துஏற்றிவிட, ஜன்னலோரசீட்பிடித்து, ராத்திரிக்கானதயிர்சாதமூட்டயுடனும் , ஐந்துரூபாய்டிகட்டுடனும், அம்மாவைவிட்டுபோகிறேனேஎன்றவேதனையுடனும்என்பிரயாணம்துவங்க, passenger train ...... மறுநாள்காலைஎக்மோர்ரயிலடியில்அப்பாகாத்திருக்க....
1959 ,ஜூனில் , என் வாழ்க்கையின் மெட்ராஸ் அத்தியாயம் தொடங்கியது.
13 ரூபாய் வாடகையுடன் , புரசைவாக்கத்தில் துடங்கிய மெட்ராஸ் வாழ்க்கை, இன்று வரை இன்றைய சென்னையில் தொடருகிறது.
மெட்ராஸ் வாரம் கொண்டாடும் இந்த நேரம், என் மனதில், இந்த 59 வருட சென்னை வாழ்க்கை படமாக ஓடுகிறது.

Friday, April 12, 2019

VK's life .. before and after marriage......

VK's life .. before and after marriage......
after marriage what all have increased for me ... secured feeling, more relatives, good children, husband who takes care at my present age, earning பத்தி கவலை இல்லாத வாழ்க்கை , நிறைய படிப்பு, maturity, acceptance & better மரியாதை in society, ஏதோ நாமும் achieve பண்ணி இருக்கோங்கற satisfaction, variety of entertainment ....இன்று வரை நிலைத்திருக்கும் உறவுகள், மூத்த மாட்டுப்பெண் என்ற மரியாதை, பேரக்குழந்தைகள், வயதான காலத்தில் நிம்மதியும் , நிறைவும் இன்னும் நிறைய....... இதெல்லாம் PLUS.
Loss of freedom, artificial life (கொஞ்ச வருஷங்கள் ), நிறைய உரிமைகளை இழந்தது, adjusting to totally new environment, getting cut of from sis & bro... கற்ற கலைகளை ஒதுக்கியது , தனக்கென நேரம் ஒதுக்காதது - இதெல்லாம் MINUS
Before marriage... true, கலப்படம் இல்லாத பாசம் , sisters, brothers கூட inhibition இல்லாத life, nothing artificial, nothing demanding, கவலை இல்லை , அனாவசியமாக யாருக்கும் பயப்பட தேவை இல்லை...... basic education over which i could build, சாப்பிட்டாயா என்று concern ஓட கேக்கற உறவுகள் ..... simple ஆ இருந்தாலும் புது ட்ரெஸ் ம் , festivals ம் குடுத்த மகிழ்ச்சி எப்பவும் விளையாட்டும் சிரிப்பும் , இன்னொருவர் mood & reaction பார்த்து பேச வேண்டிய அவசியமில்லாத innocent life, limited but good entertainment, Music (carnatic & Veenai)..... இதெல்லாம் Plus தான் .
நீ சின்னவள், உனக்கு ஒன்றும் தெரியாது ன்னு சொல்ற parents , bros., ஒரு தனித்துவம் develop ஆகாத சூழல் , sisters எல்லோரும் marriage ஆகி போனதும் உண்டான தனிமை,, aging parents who could not possibly give attention or pamper me .....இதெல்லாம் MINUS.
கூட்டி கழிச்சு பார்த்தா..... 24 வருஷ , கல்யாணத்துக்கு முன்னான வாழ்க்கையை விட, 53 வருஷ திருமண வாழ்க்கையில் PLUS அதிகம் தான்.
So, I think I have gained by marriage. (totally based on my life... not general)

Thursday, April 11, 2019

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் ..........

நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்கள், சம்பவங்கள் !
ஒரு நாள், பார்த்த சாரதி கோவிலுக்கு போனேன். (பக்தி ரசத்தில் அல்ல; ரசம் வைக்க ஈயச்சொம்பும், வத்தக் குழம்புக்கு கல் சட்டியும் வாங்க)
கோவிலை ஒட்டிய ஒரு சிறிய சந்தில், வரிசையான, ஸ்ட்ரீட் ஹவுசஸ். எல்லாம் பழைய வீடுகள். அந்த தெருவில் ஒரே ஒரு வீட்டில் தான் கல் சட்டி வியாபாரம்.
அந்த தெருவிற்கு போனதும், என்னை முதலில் கவர்ந்தது, ஒரு திண்ணை வைத்த வீடு. அந்த திண்ணையில் ஒரு மிக வயதான பாட்டி - உட்கார்ந்த வாக்கில் கை பம்ப் அடிக்கிறார். அவர்களை விட சற்றே சிறிய மாமி, குடத்தில் அதை பிடித்து, நாலு படி ஏறி உள்ளே கொண்டு நிரப்புகிறார்.
கல் சட்டி வியாபாரத்தை சட்டென்று முடித்து, சுவாதீன மாக அந்த திண்ணையில் போய் உக்கார்ந்தேன். பேச்சுக் கொடுத்தேன். இனி எங்கள் உரையாடல் :-
நான்... "பாட்டி, இந்த வயதில், நடமாட்டம் கூட இல்லாத நீங்கள், தண்ணீர் அடிக்கிறீர்கள்?"
பாட்டி : "அதனால் என்னம்மா? நம் வீட்டு வேலை தானே. இதோ எதிர்த்தார்ப் போல் நாராயணன்.. அவன் பார்த்துப்பான். நானா அடிக்கிறேன்; அவன் ன்னா என் கையில் புகுந்து அடிக்கிறான்!!"
நான் - "பாட்டி, தண்ணீர் பிடித்து நடையாய் நடந்து ரொப்புவது யார்?"
பாட்டி - "அவள் என் சின்ன ஒர்ப்பிடி. அவள் மூலமாகத்தான் நாராயணன் எனக்கு பிடி சாதம் தினமும் தருகிறான்"
நான் - "வேறு யார் யார் இருக்கிறார்கள்?"
பாட்டி - எனக்கு ரொம்ப சின்ன வயதில் கல்யாணமாகி, இந்தாத்துக்கு வந்தேன். ஏன் ஆத்துக்காரர், பெருமாளுக்கு சேவை செய்த குருக்கள். இந்த வீடு அப்போ, வாடகை இல்லாமல் கொடுத்தார்கள். எனக்கு குழந்தை பிறக்க வில்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தம் இல்லை. இவருக்கு கீழ் கடையில் மூன்று தம்பி, மூன்று தங்கைகள். எல்லாரும் என் குழந்தைகளாக வளர்த்தேன். நிறைய கஷ்டம் தான். ஆனால், அந்த பெருமாள் கோவில் கோபுரத்தை பார்த்தால் எதுவுமே கஷ்டமாக தெரியாது. எல்லாரும் கல்யாணம் பண்ணி, விட்டுச் சென்றார்கள். என் கணவரும் சீக்கிரமே இறக்க, நான் தனித்து விடப்பட்டேன்... இல்லை இல்லை... நாராயணன் துணை என்னிக்கும் உண்டு.
"எனக்கு இப்போது 87 வயது. ஒருவருமே என்னை வைத்துக்கொள்ளத பொது, என் கடைசி ஓர்ப்படி, என்னை பார்த்துக் கொள்கிறாள். அவளுக்கு ஒரே பெண். காலில் ஊனம். கஷ்டப்பட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து வருகிறாள்; கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறாள். என் ஒர்ப்படிக்கு (சுமார் 20 குடம் உள்ளே கொண்டு கொட்டியவருக்கு) 77 வயது. நான் திண்ணையிலே தான் வாசம். என்னால் முடிந்தது, பகவான் தெம்பு கொடுத்திருக்கும் கையால் தண்ணி அடிப்பது. சமையல் எல்லாம் ஒர்ப்படிதான். எனக்கு ஒரே வேளை, 12 மணிக்கு கொஞ்சம் மோர் சாதம். அவ்வளவு தான் என்னால் சாப்பிட முடியும். ராத்திரி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்"
"எனக்கு என்ன குடுப்பினை பாரும்மா... நாள் முழுதும், கோவில் தரிசனம். அவன் வந்து அழைத்துப் போவான். அது வரை இப்படியே என் காலம் ஓடும்"
நான் ... "பாட்டி, உங்களுக்கு ஒருத்தரும் செய்ய வில்லை என்ற வருத்தம் இல்லையா ?"
பாட்டி... "கண்ணம்மா.. யார் செய்தா, யார் செய்யாட்டா என்ன. பெருமாள் என்னை இங்கு அனுப்பிய காரணம் , இந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது. எல்லாம் செய்து விட்டேன். திருப்தி தான்; குறை இல்லை. அதே பெருமாள், என்னை பாத்துக்க ஒரு ஒர்ப்படியையும், ஒரு பெண்ணையும் கொடுத்திருக்கான். நீயும், வாழ்க்கையில் எந்த நேரத்திலும் குறை, கவலை படாதே. எல்லாம் பெருமாள் பாத்துப்பான். நீ செய்யும் செயல் அத்தனையும் நீ செய்ய வில்லை. கோவிந்தன் செய்ய வைக்கிறான். இதில் பிற மனுஷாளை எப்படி குத்தம் சொல்ல முடியும்?" நிம்மதியாக இரு.
பாட்டி இன்னும் ஏதேதோ... பாசிடிவாக பேசினாள் - இத்தனைக்கும் பள்ளிக்குப் போய் படித்தவள் இல்லை. அனுபவப்பாடம்; புரிந்து கொண்ட வாழ்க்கை தத்துவம்.
கடைசியாக நான், "பாட்டி பணம் தரேன்; வாங்கிக்கறேளா" என்றேன்... பாட்டி சிரித்தாள். அர்த்தம் பொதிந்த சிரிப்பு. "பணமா, எனக்கா, எதுக்கு; நான் என்ன பண்ணப் போறேன்"
"பாட்டி, உங்களுக்கு வேண்டியது ஏதாவது, அல்லது சாப்பிட... " என்று இழுத்தேன். அதற்கும் சிரிப்பு.
"கோவிந்தன் என் பெண் மூலமாக என்னை பார்த்துப்பான். இதே திண்ணையில், அவனை பார்த்துக்கொண்டே ஒரு நாள் போய் சேருவேன். அந்த நாளைக்காக நான் நொந்து போய் காத்திருக்க வில்லை. அதுவும் பெருமாளுக்கு தெரியும் என்னும் போது, நான் எதுவுமே யோசனை செய்ய அவசியம் என்ன. எனக்கு பணமெல்லாம் வேண்டாம்"
என் புத்தி...உள்ளே போய், (ரொம்ப சிறிய போர்ஷன்) ... ஒரே ரூம்; கொஞ்சம் தடுத்து சமையல் அறை.
"மாமி, உங்க கிட்ட பழைய நாள் பாத்திரம் எல்லாம் இருக்கா ? எனக்கு ஆசை " என்றேன்.
மாமி சிரித்துக் கொண்டே, "நானே பாத்திரம் தேய்ப்பதால், அதெல்லாம் கட்டி ஆளமுடியாமல் எல்லா வற்றையும் போட்டு விட்டேன். தேவைக்கு வேண்டியது மட்டும் இருக்கு"
பாட்டியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டேன்; கிளம்ப மனமே வரல்ல;
"பாட்டி, உங்க கிட்ட பேசினா, மனது லேசாகிறது !!"
"முடிந்தால் வாயேன்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு" என்று வழி அனுப்பினாள்.
ஒரு சலிப்பு, அலுப்பு கிடையாது; ஆசைகள் கிடையாது; அந்த திண்ணையில் ஒரு தவம் மாதிரி இருக்கிறாள்.
எனக்கு எப்போவாவது தோன்றினால், டல்லாக இருந்தால், அந்த பாட்டியை தேடிப்போய், எனெர்ஜி பூஸ்ட் எடுத்துக்கறேன்.
கடைசியாக இரண்டு மாதங்கள் முன்பு; மனதில் எப்போதும்.... இப்போது இருப்பாளா ?? போய் பார்க்க வேண்டும்.

Saturday, March 30, 2019

சபாவில் நான்......

நாரத காண சபாவுக்கு ட்ராமாக்களுக்கு போவேன். சில சமயம் கையில் புத்தகம் எடுத்துக்கொண்டு. அங்கே என் பார்வையும் எண்ணங்களும்.
வந்தவர்களின் average age 65 ! ஆண்கள் வேஷ்டியில். பெண்மணிகள் (மாமிகள்) சாதாரண புடவை கட்டு, தலைப்பைக் கொசுவி மேலே போட்டு, பலர், ஒரு நுனியை இடுப்பில் இழுத்துச் சொருகி... அநேகமாக முழுதும் வெள்ளையான முடியில் சின்ன கோடாலி முடிச்சு.. அதில் ஒரு கணு மல்லிகைப் பூ; நெற்றியில் அழகாக குங்குமம்..
அவர்கள் ஹாலில் நுழையும் போதே, சத்தமாக வும், சந்தொஷமாகவம், சிநேகிதர்களை, தினமும் சபாவில் meet பண்றவாளை greet பண்ணிக் கொண்டு. !!
ஒரு பக்கம் மாவடு, ஆவக்காய் போட்டு விட்டதைப் பற்றி பேச்சு... ஒரு பக்கம் அப்பளாம் இடும் கல்யாணம் ஆரம்பித்து விட்டதைப் பற்றி டிஸ்கஷன். எல்லாம் சத்தமாக.. ஒரு inhibition ம் இல்லாமல்... மச்சினர், ஓர்ப்படி, நாத்தனார் என்று செய்திகள்... எதுவுமே வம்பு தும்பு இல்லை.. சகஜமான தகவல்கள். நடு நடுவில் கையில் கொண்டு வந்திருக்கும் சுலோகப் புத்தகங்கள் படித்து...
பக்கத்தில் இருக்கும் மாமிகள் இருவரும், திங்கட் கிழமை கிளம்பப் போகும் அமேரிக்கா பயணம் பற்றி...
இப்போது நடுத்தர குடும்பங்களில் இது ரொம்ப சகஜமாக போய் விட்டது... பெண்கள் அசால்ட் டாக அமேரிக்கா போய் 6 மாதம் இருக்கிறார்கள்.. பெண்ணுக்கு பிரசவம், பிள்ளையின் குழந்தைகள் என்று அவர்களுக்கு ஏதோ காரணம் கிடைக்கும். ஆனால், கொஞ்சமும் மாறாமல், போன படியே திரும்பி வந்து, அதே யதார்த்த வாழ்க்கை வாழும் அவர்களைப் பற்றி appreciate பண்ணியே ஆக வேண்டும்.
அந்த ஹாலில் நான் மட்டும் , odd one out.
நான் மட்டும் வித்தியாசமாக ! ஒற்றையாக விட்ட பின் பண்ணிய தலைப்பு, (fashion parade மாதிரி) ; matching "jing-bing) ; கையில் ஜெயகாந்தன் புக் .. ரீடிங் cum listening ! ரொம்ப அன்னியமாக உணர்ந்தேன்...
ஏன் இப்படி கலந்து பேசத்தெரியாமல் ? மனம் பின்னோக்கி போக... அப்பாவின் attitude... அம்மா யாருடனும், அண்டை அசலில் அரட்டைக் கூடாது... அம்மாவுக்கு வழக்கமே இல்லாமல் போய், பேச மறந்தே போனாள்....
யாரோ சிநேகிதனுடன் தெரு மூலையில் நின்று பேசிய அண்ணா வாங்கிய 'பளார்' , எங்களுக்கு கூறாமல் கூறப் பட்ட கண்டிஷன்.
அப்படியே பழகி விட்டதோ? எப்பவும் உம்மணா மூஞ்சியாக... என் மாமியார் வீட்டிலும் முதலில் பயந்து பயந்து.. ஆனால்.. பின்னாளில் நிறைய பேசக் கற்றுக் கொண்டேன்.. நிறைய பேச சந்தர்ப்பம் அளித்தது .. இந்த முக நூல் தான்.
சரி, சபாவுக்கு வருவோம்... எல்லாரையும் ஒரு ரவுண்டு, பார்த்து, கேட்டு, மற்றவரைப் பற்றி கவலை இல்லாமல், அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்... நான் ஏன் இப்படி மாறு பட்டு இருக்கிறேன் ? என்று சிந்திக்க வைத்தது...
normal family போல்.. காலையில் ஸ்நானம் பண்ணி, கோடாலி முடிச்சு போட்டு, சுலோகம் சொல்லிக் கொண்டே சுவாமி விளக் கேற்றி, பில்டரில் தட்டி கொட்டி டிகாக்ஷன் இறக்கி, இரண்டு டம்ளர் கலந்து, பேசிக்கொண்டே சாப்பிட்டு... மறுபடியும் சமையல் அறையில் தஞ்சம் புகுந்து.. சமைத்து..உட்கார்ந்து சுலோகங்கள் சொல்லி.. . 9.30 மணிக்கு சுடச் சுட இவருக்கு இலையில் பரிமாறி, நானே பாத்திரங்களை ஒழித்துப் போட்டு, மிச்ச மீதிகளை, மேடை ஓரத்தில் அடுக்கி மூடி, அலுப்பு தீர கொஞ்சம் தலையை சாய்த்து, விகடனும், கல்கியும் படித்து... பின்னர் ராமாயணம் மகா பாரதம் இப்படி படித்து... ஒரு மணிக்கு காபி போட்டு... 3 மணிக்கு டிபன் பண்ணி... என் கற்பனை விரிந்தது... எதையோ மிஸ் பண்ணுகிற மாதிரி...
ஆனால் எல்லாம் அந்த அரை மணிதான்... வீட்டுக்கு வந்ததுமே, என் self ஆகி... ஓ... நான் இருப்பதுதான் எனக்கு natural. புலியை பாத்து பூனை சூடு போட்டுக் கொண்டால் அது செயற்கை என்று தெளிவு பெற்று, இதோ, FB இல் உக்காந்து, செய்வது தான் என் நியதி. அதை மாற்ற முடியாது. மாறினால், அது செயற்கை.. நிறைய அன்னியங்கள் இருக்கும்.. சொச்ச நாட்களை (வருடங்கள்? மாதங்கள்?) இப்படியோ தள்ளுவோம்... இல்லை இல்லை - வாழ்வோம் என்ற யதார்த்தக்கு வந்தேன்.
குறையொன்றும் இல்லை கண்ணா

Friday, March 22, 2019

VK & SURGERY


எனக்கு 2013 ல் ஒரு சின்ன ஆப்பரேஷன். இசபெல் ஆஸ்பத்திரியில். அந்த அனுபவங்கள் இங்கே .......

வியாழன், 26 செப்டம்பர் காலை, குளித்து, நல்ல ட்ரெஸ் (!!) பண்ணிக்கொண்டு, ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டு, தம்பதி சமேதராய் 9 மணிக்கு ஆஸ்பத்திரியில் ஆஜர். ரூம் காலி இல்லை என்று 11.30 வரை காத்திருக்க வைக்க, நானும் அங்கு வருபவர் போகிறவர் எல்லாரையும் வேடிக்கை பார்த்து, "அவர்களுக்கெல்லாம் என்ன வியாதியை இருக்கும்; எத்தனை பேர் என்னை விட குண்டு ; எத்தனை சல்வார் கமீஸ், எத்தனை புடவை; எவ்வளவு ஒல்லி ஒல்லி பெண்கள் என்று வித விதமான கணக்கெடுப்பு செய்து கொண்டு, நாடு நடுவில் SUDOCU போட்டுக்கொண்டு காத்திருந்தேன். பொறுமை போனபோது, டாக்டருக்கு போன் செய்ய, 15 நிமிஷத்தில் ரூம் கிடைத்து, போனேன். பலப் பல ஷோடக உபசாரங்கள்....
ஒன்றும் சாப்பிடக் கூடாது. ஆனால் பசிக்கவே இல்லையே !! அதான் மனசின் கண்ட்ரோல் !! மோட்டு வளையை பார்த்து, மனசில் ஏக கற்பனைகளோடு காத்திருந்தேன்.
என்ன கற்பனை என்கிறீர்களா...
எனக்கோ முழு மயக்க மருந்து... அப்படியே டாக்டர் ஒரு கிட்னி சத்தம் போடாமல் எடுத்து விடுகிறார். மற்றபடி ஆபரேஷன் முடிந்து, வெளியே வருகிறேன். வயிற்றில் தையல் போட்டிருப்பதை 2 நாள் கழித்துத்தான் உணருகிறேன்; சந்தேஹம் வர, வயிற்ரை அமுக்கிப் பார்க்கிறேன்; கொஞ்சம் வெற்றிடம் தெரிகிறது. ஒருவருக்கும் தெரியாமல், இன்னொரு டாக்டரிடம் காட்டியதில் கிட்னி பறி போனது தெரிய வருகிறது. கேஸ் போடுகிறேன்...
டாக்டர் உண்மையை ஒத்துக் கொண்டு, "வசந்தாதான் கிட்னி டொனேட் பண்ண ஆசைப் பட்டாள்" என்று தன வாதத்தை வைக்கிறாள்.
நான் ஒரு முறை டாக்டரை பார்க்கும்போது , சற்றே உணர்ச்சி வசப்பட்டு, "டாக்டர், எனக்கோ வசாயிடுத்து; ஒரு கிட்னியை வெச்சுண்டு சொச்ச நாளை கழிச்சா போரும்..யாருக்காவது வேணும்னா நான் தரேன்" என்று சொன்னதென்னவோ உண்மை தான். அதற்காக என்கிட்டே சொல்லாம எடுக்கலாமோ? " இது என் வாதம். அதாவது யாருக்காவது தேவைன்னா, என்னைக் கேட்டு எடுத்துக்க வேண்டியது தானே; அதென்ன திருட்டுத்தனம் ... என்பது என் வாதம்.
வழக்கு முடிந்து, டாக்டருக்கு 25 லட்சம் fine . அதை நான் வாங்கிக் கொள்ளாமல், என் கிட்னியை யாருக்கு பொருத்துகிறார்களோ, அவர்கள் மெடிக்கல் செலவுக்கு என்று கொடுத்து விடுகிறேன்....
இதையே விவரமாக கற்பனை செய்து கொண்டு படுத்திருந்தேன்.
அப்போது ஒரு நர்ஸ் நிறைய பேப்பர் கொண்டு வந்து கையெழுத்து வாங்கினாள். அதில் பொடி எழுத்தில் என்ன பிரிண்ட் பண்ணி இருந்தது என்று ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் எல்லா பக்கத்திலையும் SK கையெழுத்து... (!) நானும் போட்டு விட்டேன், என்கையெழுத்து ... இல்லை இல்லை ... என் தலை எழுத்தை ... படித்துப் பார்க்காமலேயே... படிக்க ஆரம்பித்தால் இரண்டு நாளாகும். என் சந்தேஹம் இப்போது பலத்த சந்தேஹம் ஆச்சு...

இப்போது நர்சுகள் வரிசை கட்டி உள்ளே நுழைய, என் கற்பனைகளை ஓரம் கட்டி, காரியத்தில் கவனம் செலுத்த ஆரம்பிக்க....
என்ன கொடுமை இது சரவணா?
ஒரு nurse வந்து, "உங்களுக்கு உடம்புக்கு என்ன.." என்று விசாரிக்க, நானும் அதௌ கீர்தனாரம்பித்திலே என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்ல, ஒரு reaction உம் காமிக்காமல் வெளியேறினாள்.
மறுபடி மற்றொரு நர்ஸ்... அதே கேள்வி... சற்றே சுருக்கமான பதில்...
மற்றொரு டாக்டர்... "உங்க ஹிஸ்டரிய" கேக்க வந்தேன்" அதே கேள்விகள்...
"
எத்தனை குழந்தைகள்; நார்மல் டெலிவெரியா; வேற ஆபேரஷன் என்னவெல்லாம் பண்ணியிருக்கு; இப்போ என்ன ப்ராப்ளம் .... "
இதையே எத்தனை தரம் சொல்றது...?
இனிமே history கேக்க வந்தா, என் புக் "வசந்த கால நினைவலைகள்" குடுத்து என் history படிக்க சொல்ல வேண்டியதுதான்.
இதற்கு அடுத்த ordeal - preparation for surgery.... முதல் நாள் தான் B.P. போய் oil massage பண்ணி, ஹேர் லூசாக, பறக்க விட்டு, pedicure பண்ணி, நல்ல சிகப்பு பாலிஷ் (symbolic ) போட்டுண்டு வந்தா, ஒருத்தி, தலைமுடியை இறுக்கி கட்டி, cap போட, மற்றொரு நர்ஸ், ஸ்பிரிட் குடுத்து பாலிஷ் எல்லாம் துடை என்கிறாள் !! கையிலும், காலிலும் எடுக்கப் பட்ட பாடு, பெரும் பாடு.
இந்த நர்ஸ் எல்லாம் பார்த்தால், 10 ம் , 11 ம் கிளாஸ் குழந்தைகளை கூட்டி வந்து, நர்ஸ் யூனிபார்ம் போட்ட மாதிரி இருந்தது.
இப்படியாக, எனக்கு ஒரு கவுனையும் மாட்டி, (யாராவது பாக்க வந்தா, நான் அழகாக இருக்கத்தானே Beauty Parlour. ??) ரெடி பண்ணி காத்திருந்தேன்.
ஒரு வழியாக 4.45 க்கு stretcher வந்தது. அதில் படுக்க வைத்து, போர்த்தி, நான் நாலு பக்கமும் பெருமையாக பார்க்க, தள்ளிக்கொண்டு போனது என்னமோ ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், என் ரூமுக்கும்.. ஆபரஷன் தியேட்டருக்கும் நடுவில் இருந்த கரடு முரடு பாதையில் தள்ளரச்சே, குலுங்கின குலுக்கலில், வயிறு கலங்கி த்தான் போனது. (ப்ரெக்னன்ட் ஆக இருந்தால், குழந்தை சுகப் பிரசவம் ஆகி இருக்கும்.

என்னை சுற்றி 3 நர்ஸ் , 2 வார்ட் பாய் , ஒரு சலைன் பாட்டில் ... 7 கடல், 7 மலை மாதிரி, ஈரேழு கதவுகள், ரூம்கள் எல்லாம் தாண்டி, ஒரு இடத்தில் நங்கூரம் பாச்சி stretcher நிக்க வைத்து....
அந்த பக்கம் பார்த்தால், சில பல ரூம்கள்... எல்லாம் காலிதான்... கண்ணாடி கதவுகளுடன். ரொம்ப பிசியாக சில நடமாட்டங்கள். அங்கே தான் ஆபரேஷன் தியேட்டர் ... என்னை தள்ளி வந்தவர்கள் கூவுகிறார்கள்... "யாராவது patient receive பண்ணுங்களேன்" என்று. அதற்குள் மற்றொரு patient . நாங்கள் இருவரும் friend ஆகி, பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால் யாருக்கும் எங்களை கூட்டி போக டைம் இல்லை. ஒரு வழியாக நர்ஸ்கள் வர, என்னை ஓரம் கட்டி விட்டு (!!) அந்த லேடியை அழைத்துப் போக, கொஞ்ச நேரத்தில் எனக்கும் அதிர்ஷ்டம் வந்தது.
ஆபரேஷன் டேபிளில் படுக்க வைத்து மயக்க ஊசி போடப் போவதாக ஒரு சின்ன அறிவிப்பு.
எனக்கு அதெல்லாம் தேவையே இல்லை. ஒரு டிவி சீரியல் போட்டு விட்டால், அசந்து தூங்கி விடுவேன். ஆனால் டிவி மட்டும் அணைக்கக் கூடாது. எத்தனை நேரமானாலும் ஆபரேஷன் பண்ணலாம் என்பது SK யின் ஜோக்.
கடைசியில், முதுகில் ஊசி போட்டு, மரத்துப் போக வைத்து, 3/4 டாக்டர்கள், 5/6 நர்சுகள் ... எல்லாரும் சந்தோஷமாக தயாரானார்கள் ! எனக்கு தூக்க ஊசி. என்னத்துக்கு. டிவி ஒரு சினிமா போடக் கூடாது. நான் பாட்டுக்கு பாத்துண்டிருப்பேன்.
5.30 க்கு ஆரம்பித்த ஆபரேஷன், முடிந்தது என்று டாக்டர் சொல்லும்போது 7.30. (ஹும்ம்ம்.... டிவி யில் நாதஸ்வரம் ஆரம்பித்திருக்கும் !!)
அப்படியே என்னை post operative ICU வில் தள்ளி விட்டு, "நிம்மதியாக தூங்குங்கள்" என்று சொல்லி விட்டு எல்லோரும் காயப். ஆனால், தூங்க விட்டார்களா என்னை !!
5
நிமிஷத்துக் கொருதரம் நர்ஸ் வந்து, BP , temp , பல்ஸ், எல்லாம் பாக்கறதும், அதை விட கொடுமை, என்னை எழுப்பி, "தூக்கம் வரதா, இல்லை இன்னொரு ஊசி போடணுமா" ன்னு கேட்டதுதான்.
மொத்தத்தில தூங்கவே விடல்லே.
வெள்ளி காலை 4 மணிக்கு எழுப்பி, வாய் கொப்பளிக்க சொல்லி - காபியா குடுக்கப் போறா - உடம்பைத் துடைத்து; கவுன் மாத்தி... அவாளுக்கும் பொழுது போக வேண்டாமா... 7 மணிக்கு அடுத்த செட் duty க்கு வந்து, BP பாத்து, டெம்ப். பாத்து, .... பாத்து...பாத்து... "நல்லா தூங்குங்க" என்ற அட்வைசுடன் போய், அரை மணியில் அடுத்த ரவுண்டு. அதற்குள் டாக்டரே வந்தாச்சு...
ஒரு வழியாக 1 மணிக்கு என் ரூமுக்கு transfer .

இப்படியாக ICU விலிருந்து, stretcher இல் ஏற்றப்பட்டு, ஆடி, குலுங்கி, அதிர்ந்து, வழியில் "அம்மா, அப்பா" என்று முனகி, ரூமிற்கு வந்தேன்....
பிறகென்ன... தண்ணீரில் ஆரம்பித்து, 2 நாள் வெறும் நீர் ஆகாரம்... என் பிரிய காப்பி மட்டும் கிடையாது... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாடு என்று 3 நாள் ரூமில்.
Style லாக டிவி பார்த்துக்கொண்டு, புக் படித்துக் கொண்டு , friends ஓடு பேசிக் கொண்டு....பொழுது போக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றும் பிடிக்கவில்லை...
நர்சும், அவள் எடுக்கும் இரத்த அழுத்தமும், ஜுர மானியும் (ஆகா... என்ன தமிழ், என்ன தமிழ்) ஊசிகளும் பழகிப் போக... அதுவே 3 நாட்கள் வாழ்க்கையானது. ஒரே இடத்தில், இடது கை புறங் கையில் , ஊசி குத்தி குத்தி, ஒரு பெரிய இட்லி சைசுக்கு அழகாக வீங்கிப் போனது... அந்த வீக்கத்தின் உப்புதலும், வழ வழப்பும் ரொம்ப அழகு. தடவி தடவி ஆனந்தப் பட்டேன். ஊசியை எடுத்து, வலது கையில் மாற்றிக் குத்தினாள் நர்ஸ். அந்த வீக்கம் வடிந்ததும் என் கை அழகே போய் விட்டது.
சில friends நான் மருத்துவ இல்லத்தில் இருக்கிறேன் என்று கேள்விப் பட்டு, என்னை பார்க்க சாத்துக் குடி, ஆப்பிள் சகிதம் வர, என்ன கொடுமை இது... அவர்களிடம் என்ன வியாதி என்று சொல்வது ?? ஆனந்த் சினிமாவில், ராஜேஷ் கன்னா "ah.. kyaa naam hai, lympho sychomaa of the intestine" என்று சொல்லி மகிழ்வார். அந்த அளவு வேண்டாம். சொல்லிக் கொள்ளும்படியாக நல்ல பெயர் உள்ள விதமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்புறம் ஒரு நல்ல இங்கிலீஷ் பேர் கண்டு பிடித்து ஸ்டைலாக சொல்ல ஆரம்பித்தேன்.
தனிமையில் இருக்கும் போது கற்பனை சிறகை தட்டி விட்டு , ஒரே கதைகள் தான் !!!!
கூட்டிக் கழித்துப் பார்த்தால்... இதுவும் ஒரு நல்ல அனுபவம் தான் !!