Friday, August 23, 2019

குறை ஒன்றும் இல்லை கண்ணா .......

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது. நான் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு, சுலோகங்கள் படிக்கும்போது, என் மனதில் உள்ளவைகள் எல்லாம் (என்ன - ஏதாவது குறைகள், மனக் கஷ்டம் இவைகள் தான் ) கிருஷ்ணரிடம் வாய் விட்டு பேசி முறையிடுவேன்.
அப்படி ஒரு நாள் க்ரிஷ்ணரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கிராண்ட் ஸ்வீட்ஸ் போயிருந்த எங்கள் ட்ரைவர் பெல் அடித்தார். கதவை திறந்தால், என் கையில் "குறை ஒன்றும் இல்லை " முதல் பாகம் கொடுத்தார் . கிராண்ட் ஸ்வீட்சில் யாரோ எல்லோருக்கும் ஃ ப்ரீ யாக விநியோகம் செய்து கொண்டிருந்தாராம்.
எனக்கு புல்லரித்து விட்டது. அதை படித்து விட்டு, கிரி ட்ரேடர்ஸ் போய் எல்லா பாகமும் வாங்கி படித்தேன்.
இன்று வரை குறை ஒன்றும் இல்லை கண்ணா !!!

No comments:

Post a Comment