Friday, May 1, 2020

மாவடு.......





ஹும்ம்ம்...... வருடா வருடம், இத்தனை நாளைக்கு மாவடு போட்டிருப்பேன். இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.
"அந்த நாளில்....." என்று நான் தஞ்சாவூர் கதைகள் போடுவதை போல், இதுவும், இனி "அந்த நாளில்..." என்று ஆகிவிட்டது.
மைலாப்பூரில், வழக்கமாக நான் மாவடு வாங்குபவரின் போன் நம்பர் கூட இருக்கு. நான் போன் பண்ணினதும், " வாங்கம்மா, இன்னிக்குதான் நல்ல வடு வந்திருக்கிறது. கிலோ 250 ரூ. தான். உடனே வாங்க" என்று , என்று கேட்டாலும் அதே மாதிரி சொல்வாள். வார்த்தை மாறமாட்டாள். தினம் ஒரு பேச்சு கிடையாது. நானும் அதை நம்பி, உடனே ஓடி, சுமார் 6 கிலோ வாங்கி, கல் உப்பு வாங்கி, வரளி மஞ்சள், கடுகு வாங்கி, மெனக்கெட்டு போட்டு, என் பெண்ணிற்கும் பாதி குடுப்பேன்.
எனக்கு குழம்பு சாதத்திலிருந்து, தயிர் சாதம் வரை மாவடு தொட்டுக்க கொள்ள பிடிக்கும். இங்கே , சோளிங்க நல்லூர் வந்த பிறகு, அது பழங் கதை தான்.
வடு போட ஒரு பெரிய டப் வைத்திருந்தேன். அதில் போட்டு, வடு தண்ணீர் வீட்டுக் கொண்டு, கொஞ்சம் சுருங்கியதும், பெரிய கண்ணாடி பாட்டில்களில் மாற்றி விட்டு, ஒரு சிறிய ஜாடியில் தினப்படிக்கு கொஞ்சம் போட்டு டேபிளில் வைத்து விடுவேன்.
எல்லா பாத்திரங்களையும் , சாமான்களையும் விஸ்ராந்திக்கு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஹும்ம்ம்...... இனி மாவடு போடுவதெல்லாம், கனவாய், பழங் கதையாய் போய் விடும்.

No comments:

Post a Comment