Saturday, April 18, 2020

Tanjore.....

நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில்.
அப்பா ஒரு கிறிஸ்டியன் பள்ளியில் கணக்கு வாத்தியார். அவருடைய ஒரு வருமானத்தில் - அதுவும் வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் வந்துவிட போகிறது - ஏழு குழந்தைகளை சாமர்த்தியமாக , நல்ல சாப்பாடு போட்டு வளர்த்தது அம்மாதான்.
பெரிய வீடு. அரண்மனையை சுற்றி நாலு வீதிகள்; நாலு அலங்கங்கள். நாங்கள் கீழலங்கம் . ராஜா காலத்தில் இந்த தெரு வீடுகள் எல்லாம் குதிரை படை ஆட்களுடையது என்று சொல்வார்கள். நான் சொல்வது சர ஃ போஜி ராஜா காலத்தில் .
எங்கள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் அகழி.
அப்போதெல்லாம் தெருவில் பஸ், கார் ஒன்றும் ஓடாது. ஜாலியாக விளையாடுவோம்.
அப்போ தஞ்சாவூரில் காலேஜ் இல்லாததால் என் சிஸ்டேர்ஸ் எல்லாம் ஸ்கூலோடு படிப்பை முடித்துக் கொள்ள , என் அண்ணாக்கள் மட்டும் , ட்ரெயினில் திருச்சி போய் படித்தார்கள்.
அப்போ சாப்பிட்ட கோதுமை கஞ்சியும், வேக வாய்த்த கடலை, வேக வாய்த்த சர்க்கரை வள்ளி கிழங்கு, நல்ல கறிகாய்கள், வாழை பழங்கள் - இன்று வரை நல்ல திடமான ஹெல்த் கொடுத்திருக்கிறது என்றால் மிகையில்லை. ஹோட்டல் எல்லாம் தெரியாது.
எவ்வளவு பண்டிகைகள் ..... எல்லாவற்றையும் எவ்வளவு இன்வால்வ்மெண்ட்டோடு கொண்டாடி இருப்போம். மாமா, அத்தை எல்லாம் கிராம வாசிகள். லீவுக்கு போயிருக்கிறோம். அப்போது தஞ்சை என்ன செழுமை....
எங்களுக்கு தெரிந்த அவுட்டிங் எல்லாம் அய்யங்கடை தெரு, சினிமா இவ்வளவு தான். பெரிய கோவில் கூட அதிகம் போனதில்லை.
தஞ்சை வாழ்க்கையை பற்றியும், அண்ணாக்கள், அக்காக்களோடு வாழ்ந்ததையும் (சண்டை எல்லாம் போட்டுக் கொண்டு தான் !!! ) சொல்வதென்றால் ஒரு புத்தகமே போடலாம்.

No comments:

Post a Comment