Thursday, August 30, 2018

உப்பு சீடை....


உப்பு சீடை செய்யும் முறை. (வசந்தா ஸ்பெஷல்)... மறு பதிவு.
அரிசியை களைந்து, நிழல் உலர்த்தலாக உலர்த்தி, மெஷின் இல் அரைத்து வாங்கி, சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
(இப்போதெல்லாம் processed maavu என்று கிடைக்கிறது)
அரிசி மாவு 8 டம்ளர்
மைதா மாவு 6 டம்ளர்
உப்பு, பெருங்காயம், ஊற வைத்த இரு பிடி கடலை பருப்பு, துருவிய தேங்காய் (ஒரு மூடி மித்தல் காய்)
வெண்ணை - 200 gm
(தேவையானால் எள். இது எண்ணையில் தங்கும் அதனால் விட்டு விடலாம். )
[வருத்த உளுந்து மாவெல்லாம் போடாதீங்க]
இப்போ செய் முறை - கவனமா படிங்க.
எல்லா சாமானையும் போட்டு (ஒரு பெரிய அடுக்கு, தேக்குசா, உருளி, அருக்கஞ்சட்டி... இதெல்லாம் இல்லேன்னா... ஹிண்டலியம் குக்கர்), நன்றாக கலக்க வேண்டும். (தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. )
வேஷ்டியை விரித்து போட்டு வைத்து விட்டு, பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு உட்காரவும்.. (ஒரு கால நீட்டிக்கொள்ளலாம்)
நன்கு கலந்த மாவில், நடுவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து, (மாவில் மைதா, வெண்ணை கொஞ்ச பிசுக்கு கொடுக்கும்) , அந்த மாவை மட்டும் இடது கையில் வைத்துக்கொண்டு, சிறிய பிள்ளையார் (வெறுமே கூம்பு மாதிரி) பிடித்து, வைக்க வேண்டும்.
மீதி மாவை, வலது கட்டை விரல், ஆட்காட்டி விரலால் ரொம்ப கொஞ்சமாக கிள்ளி , சட்டென்று ஒரு உருட்டு உருட்டி வேஷ்டியில் போட வேண்டும்...
கை மாவு தீர்ந்து விட்டால், மறுபடியும் அதே போல், நடுவில் தண்ணி... பிசிறல்.. இடது கையில் வைத்துக்கொண்டு உருட்டல் ...
கணிசமாக உருட்டியதும் ... அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், தட்டில் சீடைகளை எடுத்து, எண்ணையில் மெல்ல போட வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் சிறியதாக வைத்து, பிரவுன் நிறம் வந்ததும், ஜல்லி கரண்டியால் வரித்து எடுத்து டப்பாவில் போட வேண்டும்.
சூடு ஆறும் வரை டப்பாவை மூடக்கூடாது...
தைரிய மாக செய்யுங்கள் ஒன்றும் தப்பாக போகாது. உப்பு போட மறக்க வேண்டாம். தூள் பெருங்காயம் அல்லது தண்ணீரில் ஊறவைத்த கட்டி பெருங்காய தண்ணீர்.
ரொம்ப சின்னதாக உருட்ட வேண்டும்... பழகி விடும்... சோம்பல் படக்கூடாது... எல்லாரும் "எப்படி இவ்வளவு கரகரப்பு ? " ன்னு கேப்பா...
அது தொழில் ரகசியம்... அதாவது.... இந்த மைதாவும், கொஞ்சம் அதிகப்படி வெண்ணையும், மொத்தமாக பிசையாததும் !!

No comments:

Post a Comment