Tuesday, November 21, 2017

Fashion & VK

Fashion ன்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ நான். காலேஜ் சேந்தப்புரம் ஒரே மலைப்பு city  பெண்களைப் பார்த்து. தெரியாதது மட்டுமில்லை.. நெறைய பிடிக்காது.. (வளர்ப்பு அப்படி).. கட்டுப்படி ஆகாது.. அதனால் அதைப்பத்தி யோசிச்சதே இல்லை.
காலேஜில் P.U.C யில் பாவாடை தாவணி, B.Sc. யிலிருந்து புடவை compulsory.

காலேஜ் வேலைக்குப் போனப்புறம், புடவை தலைப்பு, நீளும், குறையும், ஆனால் யாரும் பின்னு குத்தி பாக்க முடியாது. சல்வார் கமீஸ் போட யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த குட்டை தலைப்பை மட்டும் follow பண்ணினேன்.. எப்போ? அநேகமாக அந்த பேஷன் முடியிற தருவாயில். "ஹமேஷா தஸ் கதம் பீச்சே" அதாவது.. பத்தடி பின்னே..
80, 90 களில் ப்ளௌஸ் pattern மாற ஆரம்பித்தது. ஆனால் எனக்கு பயம்...
"நான் நீள கைக்கு போகையில், குட்டை கை தான் வந்தது...
குட்டை கை போகையில் (தையல் காரரை பிடித்து, அத்தனை கையையும் வெட்டி, தைத்து, அட்டகாசம் அடித்து) ..... பஃப் கை வந்தது.
இது சூட் ஆகுமா என்று, trial பாத்து, மாறும்போது, பேஷன் உம் மாறி விட்டது. அதுக்காக தூக்கிப் போட முடியுமா... எப்போதும் போல் அவுட் of பேஷன் தான்.

என்னோட டைலர் அதுக்கும் மேல. நான் ஏதாவது மாறுதல் சொன்னால் "கொஞ்சம் கை நீளத்தை குறை,நெக் back ஐ. கொஞ்சம் இறக்கு" ன்னு சொல்லிட்டு வந்தால், அதற்கு நேர் மாறாக, கொஞ்சம் நீள கை, கழுத்து வரை கழுத்து.. இப்படி "ஏன்" என்று கேட்டால், "அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம் மா" என்று, நான் என்னவோ சினிமாவில் சில்க் ஸ்மிதா மாதிரி act பண்ணப்போறேன். அதை தடுக்கணும் என்ற முடிவோட இருப்பான். யாரை எதிர்க்க முடியும் ? கோச்சுண்டா, அடுத்தது சாக்கை இரண்டு பக்கம் தையல் போட்டார் போல் இருக்கும்.

ஒரே ஒரு தடவை, சுமார் 6 வருஷத்துக்கு முன்ன, ஒரு துணி குடுத்து, படம் எல்லாம் வரஞ்சு, "தோளில் 3 சின்ன மடிப்பு; சின்ன பஃப்; குட்டை கை; கை விளிம்பில் கொஞ்சம் அகல பைப்பிங்" என்று சொல்லி குடுத்தேன். எனக்குள் மகா சந்தோஷம், முதல் முறை நானே பாஷனாக இருக்கப் போறேன் என்று.
அவனுக்கு புரியல்லே, தெரியல்லே ன்னா சொல்லி இருக்கலாம் இல்லையா? "அதெல்லாம் உங்களுக்கு சூட் ஆகாது" ன்னுட்டான். பேசாம வந்துட்டேன்.
இதில் கொடுமை என்னன்னா.. சரவணன்-மீனாக்ஷி யில் மீனாக்ஷி அதே மாதிரி போட்டுண்டு வரா!! எனக்கு எப்படி இருக்கும்? அநேகமாக, என் தையல் காரன் தான் நான் குடுத்த படத்தை வைத்து தைத்திருப்பான்.

சரி; இவனை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒரு லேடி , டிசைனுக்காக பரிசு எல்லாம் வாங்கியவள்; அவள் கிட்ட போனா, "கவலையை விடுங்கோ, நான் உங்களை அப்படியே மாத்திடறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டு, ஒரு நல்ல பட்டுப் புடவை சட்டையை, தைத்துக் கொடுத்தாள். ஆசையாக போட்டா... சட்டைக்கு முதுகு பக்கம் துணியே காணும் !! 2 இன்ச் துணி கீழே.. தடிமனான கயிறு மேலே.. !!
இதை போடப் பிடிக்குமா? அப்படியே கிடந்தது... இதில் தையல் காரரை குற்றம் சொல்ல என்ன வேண்டி இருக்கு??
இப்போ அதே கலர்ல துணி வாங்கி, ஜரிகை மட்டும் கட் பண்ணி வைத்து, தைத்துக் கொண்டேன்.
எனக்கு freedom for dressing 1947 க்கு பதில் 1997 இல் கிடைத்தது. சல்வாரில் ஆரம்பித்தேன். அதிலும், குட்டை டாப், டைட் leggings இதெல்லாம் கிடையாது. அனார்கலி, அமராவதி, லைலா ஒன்றும் கிடையாது.
ஒரு வழியாக அதெல்லாம் பழகி, மூன்று பேரக் குழந்தைகளுக்கு பாட்டி ஆனப்புறம், "why not jeans & top" ன்னு யோசிக்கரச்சே... அதை செயல் படுத்தரதுக்குள்ள, உடம்புக்குக் கூட பிடிக்காமல், என்னை தடுப்பதற்காக, கண்டபடி குண்டாயிட்டேன்.
இப்ப, மரியாதையா, காட்டன் புடவை, கொஞ்சம் லூசாக தைத்த சட்டை (இன்றைய லூஸ் நாளைய டைட்) என்று போகிறது வாழ்க்கை.

No comments:

Post a Comment