Monday, May 21, 2018

ஈய சொம்பும் நானும்....


எங்கம்மா வீட்டில் குமுட்டி அடுப்பில் ஈய சொம்பில் ரசம் கொதித்து பார்த்திருக்கிறேன். சமைத்த அனுபவம் கிடையாது.
கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கும் அந்த ஆசை வந்தது. அம்மாவை தொந்தரவு பண்ணி ஒரு ஈய சொம்பு வாங்கினேன். 
ஈய சொம்பில் புளி கரைத்து, கட்டி பெருங்காய துண்டு போட்டு, மஞ்சள் தூள், ரஸப் பொடி, தக்காளி, கறிவேப்பிலை போட்டு, பக்கத்திலேயே நின்று, அதையே பார்த்துக்கொண்டிருந்து , கொஞ்சம் கொதித்ததும், வெந்த பருப்பை மசித்துப் போட்டு, வேணுங்கிற அளவு விளாவி, மிளகு, ஜீரகப் பொடி போட்டு, கொத்தமல்லி தழை போட்டு ..... ஒரு கொதி வந்ததும் அணைத்து, அப்பாடா என்று இறக்கி வைத்து....
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.....
ஒரு நாள் எலுமிச்சை ரசம் வைக்க ஆரம்பித்தேன். எலுமிச்சை ரசத்துக்கு, முதலில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி தாளித்து பிறகு தண்ணீர் விட வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதே போல் ஈய சொம்பை அடுப்பில் வைத்து, நெய் விட்டு, கடுகு போடுவதற்குள் சொம்பு உருகி சப்பையாக போய் விட்டது. ரொம்ப வருத்தமாக போய் விட்டது. அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு, அந்த வருத்தம் போனதும், மறுபடியும் ஒரு சொம்பு. இந்த தடவை ரொம்ப careful. ஆனால் அந்தோ... மறுபடியும் ஒரு தவறு. ரசம் கொதித்ததும், சூட்டோடு, இடுக்கியால் இறக்கினேன். அப்படியே இடுக்கி அமுக்கின இடம் நசுங்கி விட்டது.
கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம் என்று ..... ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ஈய சொம்பு ஆசை. கொஞ்சம் flame பெரிசாக வைக்க, சொம்பின் மேலே ஒரு ஓட்டை.
அதோடு ஈய சொம்பு ஆசையை விட்டேன்.
ஆனால் இப்போது தேறிவிட்டேன். ரசம் வைக்கும்போது, enough தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து, அந்தண்டை, இந்தண்டை நகராமல் low flame இல் வைத்து, ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, துணியால் இறங்குகிறேன். இருந்தாலும் சொம்பை பத்திரமாக இறக்கும் வரை டென்ஷன் தான்.
lesson learnt... to be learnt.....
Never move too far away from the kitchen when the rasam is being made. For if you do, you may neither find the rasam nor the sombu.

No comments:

Post a Comment