Monday, October 9, 2017

எப்படி இருந்தேன்; மறந்தே விட்டதே....

எப்படி இருந்தேன்; மறந்தே விட்டதே....

நிறைய தலை முடி, நீளமாக, அடர்த்தியாக, இருந்த நாட்கள்...மறந்தே போய் விட்டது.
முடி நல்ல கருப்பாக, ஒரு காலத்தில் இருந்ததா.. யோசித்துப் பார்த்தாலும் அந்த நிறம் நினைவுக்கு வரவில்லை...
ஒல்லியாக, சிற்றிடையாக... நானும் இருந்தேனா; ஞாபகமே இல்லையே? 
எந்த பயமும், கவலையும் இல்லாமல், வெயிட் போடும் என்கிற பயமில்லாமல் நானும் சாப்பிட்டேனா... நினைவே இல்லை.
தோலெல்லாம் இன்னும் நிறமாக, இன்னும் ஸ்மூத் ஆக எனக்கும் இருந்ததா? எப்போது??
கண்ணாடி இல்லாமல் படிக்க முடிந்ததா? நம்ப முடியவில்லை...
இப்போ ...
நரைத்த முடியுடன் தலை...
கொஞ்சம் சுருக்கம் விழுந்த, நிறம் மங்கிய தோல்;
விமானத்தில், பெல்ட் சேர்த்து போட கஷ்டப்படும் இடை...
தினமும் ஒரு தையல் பிரித்து போடுமளவுக்கு சின்னதாகும் ரவிக்கை...
ஒன்றுமே நினைவுக்கு கொண்டு வர முடியாத மறதி
25 லிருந்து 50 வரை வாழ்க்கையை திரும்பி வாழ வாய்ப்புக் கிடைத்தால், கொஞ்சம் வித்தியாசமாக , மாடர்ன் ஆக வாழ்வேனோ??
வேண்டாம்... அதெல்லாம் முடிந்து போன கதை...
மறுபடியும் இதே நிலைக்கு வரும்போது, உலகம் இன்னும் முன்னேறி இருக்கும்...
திரும்ப திரும்ப 25-50 வேண்டாம்...
ஓய்வெடுப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது, புக்ஸ் படிப்பது, நினைத்தால் நினைத்தபடி வாழ்வது...
இதுவெல்லாம் தான் நிதர்சனம்....சுகம்.

No comments:

Post a Comment