Sunday, October 22, 2017

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்???
(
ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி........
நம் மூளையில் ஆயிரக்கணக்கான கெமிகல்ஸ் இருக்கின்றன.. மில்லியன்ஸ் நரம்புகளும் நெட் வொர்க் ஆக தொடுக்கப் பட்டுள்ளது... சிக்கு கோலம் மாதிரி.
இந்த கெமிகல்ஸ் ஒரு பாலன்ஸ் இல் இருக்க வேண்டும்.. மிக துல்லிய கணக்கு ... கடவுளின் அற்புதமான ஏற்பாடு... மனிதனால் காபி அடிக்க முடியாதது.
இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம் மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...

[
மனம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும்; கோபமோ, வெறுப்போ, சலிப்போ, பொறாமையோ.... இந்த சமன் பாட்டை கெடுக்கும்.. அதுதான் எல்லா வியாதிகளுக்கும் (உடல், மனம் சார்ந்த ) மூல காரணம்... இது எப்படி சாத்தியம்... வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ஞானிகள், மூத்தவர்கள்... நம்மால் அதை கடை பிடிக்க முடிவதில்லை...

நாலைந்து நாட்களுக்கு முன் எழுதப்பட்டு, தொடரும் போட்ட இந்த போஸ்ட் , நடுவில் வால்மீகியை பார்க்கப் போய் விட்டதால் நின்று போய் விட்டது. இன்று தொடருகிறது....]

இந்த பாலன்ஸ் ஐ சரியான லெவலுக்கு வைக்க, இன்னும் பல பல சுரப்பிகள் துணை செய்கின்றன. இவை எல்லாமே, குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தே ஆகவேண்டும்.. இயற்கையில் இருக்கும். அதை கெடுப்பது நம்
மனமென்னும் குரங்கு. அதை சமன் செய்வதற்கு நம் பெரியவர்கள் அநேக வழி முறைகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்...

நம் மூலையில் உள்ள நரம்புகள், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு ஆர்கனுக்கு கனெக்ட் செய்யப்பட்டு, டெடிகேட் பண்ணப் பட்டுள்ளது. அவைகள் தான், அந்த உடல் பாகத்திலிருந்து செய்திகளை அனுப்பி, பதில் பெற்று, வேலை செய்கிறது. அதனால் நம் மூளை தான் மாஸ்டர்.

உதாரணமாக, அட்ரீனலின் என்ற ஒரு சுரப்பி. நாம் கோபப் படும்போதோ, கோபப் பட்டு கத்தும் போதோ, இது அதிகமாக சுரக்கிறது. இதயத்தின் பாலன்ஸ் ஐ சரியாக வைத்திருக்கும் இது, அதிக மாகும்போது, ஹைபர் டென்ஷன், மார் வலி, தலை வலி உண்டாகிறது. இதயத்தை பாதிக்கும்போது, மூச்சு விடுவதும் சிரமமாக, மூச்சு வாங்குகிறது. இது ரொம்ப கெடுதல்.

இதே போல், ஜீரண உறுப்புகள் மற்றும் லிவர், spleen என்று, ஒவ்வொன்றும் மூளையுடன் கோர்க்கப் பட்டு, இந்த நெட் வொர்க் சரியாக வேலை செய்ய வேண்டும். அப்படி செய்யாத போது, இயற்கையிலேயே, நம் உடலில் சில வீக் பாகங்கள் இருக்கலாம் . அவை பாதிக்கப் படுகின்றன.. அதனால் தான், துக்கம், வெறுப்பு, கோபம் ஏன் பொறாமை , பேராசை உணர்வுகள் கூட, இவ்வுருப்புகளை பாதிக்க, சிலருக்கு வாயிற்று ப்ராப்ளம், தலை வலி, கால், கை வலி, ஜுரம் என்று வருகிறது... சிலருக்கு அதீதமாக பயந்தால் கூட ஜுரம் வரும். இந்த பாதிப்புகள் அதோடு போகாது... நாம் எடுக்கும் மருந்துகள், ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உட் பகுதிகள் பாதிக்கப் படும்.

சரி... மனதை எப்படி அமைதியாக வைத்துக் கொள்வது... பலர் தியானம் என்று சொல்வார்கள் (இதை பற்றி ஒரு psychiatrist இடம் டிஸ்கஸ் செய்து வைத்திருக்கிறேன்... அது பிறகு...)

மனம் கடவுளிடம் ஒருமை பட்டு நிற்கும்போது, கேட்ட எண்ணங்கள் வருவது குறையும்; நிற்கும். அதாவது, சாமியிடம் (சாமி நமக்கெல்லாம் சுமை தாங்கி !!) உட்கார்ந்து பிரார்த்திக்கும் போது, மனம் வேறு எதையும் சிந்திக்காது; சிந்திக்கக் கூடாது. சாமியிடம் டீல் போடக் கூடாது; நமக்கு என்ன தேவை என்பது கடவுளுக்குத் தெரியும். அப்படியே மன நிம்மதிக்காக வேண்டினாலும், "லஞ்சம் தருவதாக (சம்திங்) " வேண்ட வேண்டாம். அந்த சில நாழிகையாவது மனம் கெடுதலை நினைக்காது (வேண்டுதலே, பிறர் கஷ்டப்பட வேண்டும், தண்டிக்கப் பட வேண்டும் என்று இருந்தால் கடவுளே ஒன்று செய்ய முடியாது). யாரையும் தண்டிக்கும் உரிமை நமக்கு கிடையாது... மனதளவில் கூட. அம்மாக்கள் மட்டும் தான், கோபம் வந்தால் "நாசம் அற்றுப் போக" என்பாள் !!!

இப்படி கொஞ்ச நேரமாவது மனம் நல்ல சிந்தனை அல்லது blank ஆக இருந்தால் , மூளையின் நரம்புகளும், கெமிகல்சும் பாலன்ஸ் உடன் இருக்கும். அல்லது சுலோகம் சொல்லிக் கொண்டிருக்கலாம். நிறைய பெண்கள் சமைக்கும் போது சுலோகம் சொல்லுவார்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். மன அமைதி; சமையலில் ருசி.. பாசிடிவ் வைப்ரஷன் - இவைகள், அந்த சாப்பாட்டை சாப்பிடுவர்களுக்கும் போய் சேரும். அதனால் தான் வீட்டு சாப்பாடு நல்லது. ஹோட்டலில் சமயத்தவரின் மன என்ன ஓட்டங்கள் நன்றாக இல்லாமல் போகலாம்.

இதே காரணத்துக்காக கோவில்.... 

கோவிலுக்குள் நிறைய பாசிடிவ் எனெர்ஜி இருக்கு... லைட் எனேஜி, சவுண்ட் எனெர்ஜி என்று. இவைகளைத் தவிர உச்சரிக் கப்பட்ட மந்திரங்கள் அலைகளாக காற்றில் இருக்கும். 

நம் சம்ஸ்க்ருதத்தில், உச்சரிப்பு, ஒலி வடிவமைப்பு ரொம்ப முக்கியம். அவைகள் நம் உடலில் ஒரு வைப்ரேஷனை ஏற்படுத்தும். அந்த வைப்ரஷன் சரியாக இருக்க வேண்டும். அது ரொம்ப பவர்புல் வைப்ரஷன். நமக்கு சொல்ல தெரிய வில்லை என்றால், தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்... அதனால் தான் காலையில் நாம் நல்ல சுலோகங்கள், சஹஸ்ரநாமம் இவைகளை பாட்டாக ஓட விட்டு கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

கோவிலுக்குள் போகும் போது, மனம் முழுதும் கடவுளிடம் ஈடு பட்டிருக்க வேண்டும். இறைவன் நாமத்தை தவிர, பிற வார்த்தைகள் பேசக்கூடாது... சில கோவில்களில் இந்த வாசகத்தை எழுதி வைத்திருப்பார்கள். வீட்டுக் கதை, கஷ்டங்கள் இவைகளை தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள கோவிலை ஒரு இடமாக எடுக்கக் கூடாது. 

கோவிலின் காற்றில் இருக்கும் வைப்ரஷனை உட்கொள்ள வேண்டும். நம் உடல் good conductor of electricity... so also earth... all signals are converted as electrical pulses & sent to brain. When we absorb the positive vibration, the negative gets drained through feet to the earth & the body, retains the positive.

அதனால் தான் பிரகாரத்தை சுற்றி மெள்ள நடக்க வேண்டும் (பைய பைய ) .... giving enough time to gain energy. 

இதை தவிர முக்கியமானது... புஷ்பங்கள், மரங்கள். அரச மரம், வெப்ப மரம் காற்று உடம்புக்கு நல்லது. அதனால் தான் அரச மாற பிரதட்சிணம். 

வாசனை மலர்கள் நம் மனதில் உள்ள எண்ணங்களை சிக்னலாக எடுத்துக் கொண்டு, சுவாமியை அடையும் தன்மை கொண்டவை. நாம் பூ வங்கி, மனத்தால் கடவுளை ச்மரித்து, குருக்களிடம் கொடுத்து, அவர் அதை சுவாமி மேல் சாத்தும் போது, நம் எண்ணங்களின் சிக்னல்கள் சுவாமியை சேருகின்றன. சுவாமி மேல் சார்த்திய புஷ்பத்தை நமக்கு தரும் போது, அந்த பூ கடவுளின் பதிலாக, கடவுளின் எனர்ஜியை தாங்கி வருகிறது. அதை அப்படியே தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வந்தாலும், பூவை ஒரு இடத்தில் 2 /3 நாட்கள் வைத்திருத்தல் நல்லது. 


பூக்களின் இந்த சக்தியை உணர்ந்ததனால் தான் ஆண்டாள், தான் இறை சிந்தனையுடன் கட்டிய மாலையை , தான் சூடி, பிறகு கண்ணனுக்கு சூட்டுகிறாள். இது ஒரு transfer of thoughts . 
நம் பெற்றோருக்கு தெரியாதா நமக்கு தேவையானது. இருந்தாலும், நாம் சொல்லிக்கொண்டே இருப்போம். அது மாதிரி தான் இது. தான் கண்ணனை அடைய நினைக்கும் நினைப்பை, தினமும் உறுதி செய்கிறாள். 

இது போல் கோவிலில் இருக்கும் சிறிது நேரம் மனதில் அமைதி. அதனால் தான், மாலை வேலை எல்லாம் முடித்து விட்டு , நிம்மதியாக கோவிலுக்கு போகிறோம்... அவசரப் பட வேண்டாம். பெரியவர்கள் , தான் கடமைகளை முடித்தவர்களுக்கு, இறைவனடி சேருவதுதான் ஒரே சிந்தனை. அதனால் தான், சிறிசுகள் "கிருஷ்ணா, ராமா என்று ஒரு இடத்தில் உட்காரு" என்று சொல்கிறார்கள் !! அந்த இடம் கோவிலாக இருந்தால், வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு கொஞ்ச நேர தனிமை, பெரியவர்களுக்கு கோவிலில் நிம்மதி. !!! 

அர்ச்சனைக்கு தேங்காய், புஷ்பம் தரும் போது, சிலர் சுவாமி பெருக்கே செய்யும்படி சொல்வார்கள் அது தவறு. நம் பெயர், கோத்ரம், நட்சத்திரம் என்று அடையாளப் படுத்தி கொடுக்கும் போது, நம் எண்ணங்களும் பகவானை அடையும். குடும்பத்தில் உள்ள எல்லார் பேரையும் சொல்லலாம். அல்லது பெரியவரின் பெயரை சொல்லி "சக குடும்பம்" என்று சொல்லலாம். 

ஆக, ஒரு நாளில், சில மணி நேரங்கள் தெய்வத்துடன் செலவழிக்கும் போது, குழந்தைகளுடன் செலவழிக்கும் போது ( because children are Gods & innocent. antha innocence nammayumthotrikkollum)

மனம் அமைதியாக இருப்பதால், நம் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, பாலன்சுடன் இருக்கும். அதனால் அனாவசிய உடல் கோளாறுகள் தவிர்க்கப் படும். 

No comments:

Post a Comment