Friday, August 21, 2020

பிள்ளையார்........

 SK க்கு பிள்ளையார் இஷ்ட தெய்வம்... இன்றும் எங்கள் சுவாமி ரூமில் பெரிய பிள்ளையார் படம் மட்டும் தான்.

எங்கள் கல்யாண நிச்சயதார்த்தம் கூட பிள்ளையார் சதுர்த்தி அன்று தான் நடந்தது... அப்படி பிளான் பண்ணவில்லை. அதுவாக அமைந்தது. அந்த வருடம் செப்டம்பர் 7 ம் தேதி அன்று.

பூனாவில், எனக்கு கடைசி பையன் பிறந்து, ஆஸ்பத்திரியில் இருந்தபோது, என் கூட தங்க வீட்டிலிருந்து யாரும் இல்லாததால், ரூமில் தனியாகத்தான் இருந்தேன். தினமும் இரவு ஒரு மூஞ்சூர் தொட்டிலை சுற்றி ஓடி மறையும். எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கும். அப்போது வேண்டிக் கொண்டோம் - குழந்தைக்கு கணேஷ் என்று பெயர் வைப்பதாக. அப்படியே வைத்தோம் .

இன்னொரு சம்பவம். சென்னையில், அண்ணா நகரில் , தனி வீட்டில் குடி இருந்தோம். மூன்று குழந்தைகளும் சிறியவர்கள். இவர் ஆபீஸ் வேலையாக வெளிநாடு போனார் - ஒரு மாதத்திற்கு. சொன்னால் நம்புவதற்கு கஷ்டம். தினமும், இரவு, ஒரு மூஞ்சூர் ஹாலில் நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு, சுவாமி ரூமில் மறைந்து விடும். ஒரு மாதமும் தவறாமல் நடந்தது.

இப்படி அநேக விஷயங்கள் சொல்லலாம். எங்கள் குடும்பத்தை காப்பாற்றி, ஒவ்வொரு விஷயத்திலும் எங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க உதவுவது பிள்ளையார் தான்.... லஸ் பிள்ளையார் என் கடைசி பையன் கணேஷுக்கு ரொம்ப ஹெல்ப்.

எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை.

1 comment:

  1. எனக்கும் பிள்ளையார் மீது பாசமும், பக்தியும் அதிகம். லஸ் பிள்ளையார் மீது தனி பாசம். 

    ReplyDelete