Friday, July 17, 2020

என் காரெக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே.............


"என் காரெக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே"
ஸ்டேஷன்ல ஒரே ஒரு சூட் கேசை ரோல் பண்ணி தள்ளிண்டு போனா, போர்ட்டர், "பாட்டிம்மா, வயசாவுதுல்ல; அத்த என்னாண்ட குட்த்துட்டு நீ போய்கினே இரு. நான் இஸ்தாறேன். நீ இன்னாத்துக்கு ரோதன படறே ? " ங்கறான். நான் எப்படி அவனுக்கு காமிக்கறது,. எனக்கு இளமை இன்னும் பாக்கி இருக்குன்னு. மனசு "ஹாயா, கை  வீசிண்டு நடக்கலாமே" ன்னு சொன்னாலும், SK கொஞ்சம் shameஆகி , எங்கிட்ட குடு ன்னு கேட்டாலும், (அதுக்கு வேற போர்டர் "ஏ பெரிசு. கம்முன்னு வா. நான் ரெண்டு துட்டு சம்பாரிக்கிறதை இஷ்பாயில் பண்ணாதே" ன்னு கமென்ட் ), நான் வீரமா, சூட் கேசை இழுத்துண்டு , ராஜ நடை போட்டு, புக்ஸ் வாங்கலாம்னு, ஒரு புக் வண்டிகிட்ட நின்னேன். 
நான் புக் வாங்கிட்டு, காசு குடுத்துத்துட்டு, புக்கையும் எடுத்துக்காம, சூட் கேசையும் விட்டுட்டு, நடந்துடுவேன் ன்னு என்னை நன்னா புரிஞ்சிண்டிருக்கிற SK மொதல்ல, சூட் கேசை "லபக்" ன்னு புடிங்கிண்டார். 
அதுதான் போட்டும்னா, புக் கடையில போய்,  "ரிபோர்டர் இருக்கா, குங்குமம் இருக்கா, ஜூனியர் விகடன் இருக்கா (நான் எப்பத்தான் அக்கப்போர் எல்லாம் படிக்கிறது) ன்னு பாத்திண்டிருந்தா, அந்த கடைக் காரன்,
"மாமி, இந்தாங்க "ஷக்தி விகடன், பக்தி மாலை, ஆன்மிகம்" இன்ன பிற புக்ஸா தரான். எனக்கு அதெல்லாம் வேண்டாம்னு, அக்கப்போர் புக் எடுத்தா, என்ன ஒரு மாதிரியா பாத்து, "ஹும்.. கலிகாலம் " ன்னு மனதில அவன் நெனக்கிறது, அவன் மூஞ்சில அப்பட்டமா தெரியறது... 
இப்படியாக என் பயணம் இனிதே துவங்கியது.
ரயிலுக்கேல்லாம் சாப்பாடு கட்டிண்டு போக எனக்கு பிடிக்காது. கெடக்கிறத சாப்டுண்டு போவேன். 
என்னோட வர friends (அவாளோட தான் நான் போறேன் !!), வேற கம்பார்ட் மென்டில இருக்கிறவா,   கோயம்புத்தூரில்,    எனக்கு வந்து, வீட்டிலேர்ந்து கட்டிண்டு வந்த சாப்பாட்டு பொட்டலம் - ச்சே ச்சே .. பாக்ஸ் குடுத்தா. நன்னாதான் இருந்துது, இட்லியும் தயிர் சாதமும்   - ஆனா "யசான காலத்தில ரயில் சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. ஜில்லுன்னு தயிர் சாதம் சாப்பிடுங்கோ " ங்கற கமென்ட், மத்த பிரயாணிகளுக்கு மத்தில.. அதான் கொஞ்சம் என்னமோ மாதிரி !!

No comments:

Post a Comment