Thursday, July 11, 2019

ராமாயணத்தில்.......

 நானும் ராமாயணத்தை - சின்ன வயதில் அப்படியே ஏற்றுக்கொண்டு, நடு வயதில் (அதாவது நாற்பதுகளில் ) இப்படி எல்லாம் வாதம் பண்ணி, இப்போது மறுபடியும் அப்படியே, கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொண்டேன்.
ராமாயணத்துக்கு நிறைய interpretation இருக்கு. மூல கதையான, வால்மீகி க்கு அப்புறம், பல பேர் பல விதமாக அனுபவித்திருக்கிறார்கள். அதைத்தான் காவியமாக படிக்கிறோம்.
கம்பன் விழாவின் போது, ராஜேஸ்வரி அரங்கத்தில் மூன்று நாள் அசத்துவார்கள் - நிறைய அர்த்தங்கள் சொல்லி.
வாலியை மறைந்திருந்து கொன்றதிலிருந்து , இப்படிப்பட்ட யதார்த்தமான கேள்விகள் அநேகம்.
எவ்வளவோ வருடங்களுக்கு முன் எழுதப் பட்ட காவிய காலம் அப்படி இருந்திருக்கலாம். இப்போதைய சமுதாய கண்ணோட்டத்தில், நமக்கு தவறாக தெரிபவை, அப்போது ஏற்றுக்கொள்ளப் பட்டது.
கண்ணகி கதையும் அப்படித்தான்... இப்போது அந்த "பத்தினி" என்கிற அடை மொழியே தவிர்க்கப் பட வேண்டியதாயிற்று.
வள்ளுவர் சொன்னது கூட நிறைய பொருந்தாது இப்போது... (தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள்..உதாரணத்துக்கு).
சீதையை ராமர், அந்நியன் தொட விடமாட்டார். அதனால் அக்னி பகவானை அழைத்து, சீதையை பாதுகாக்கவும், அவரே, சீதையாக, தீயாக மாறி ராவணனுடன் செல்லவும் பணித்ததாகவும், அதனால். சீதையை மீட்ட பிறகு , அக்னி சீதையை, அக்னியில் பிரவேசிக்கச் சொல்லி, நிஜ சீதையை வெளிக் கொண்டு வந்த தாகவும் ஒரு interpretation .
பார்க்கப் போனால், சீதையும் லக்ஷ்மணன் மீது சந்தேஹப்படுகிறாள்; அதற்கான தண்டனை இது என்று சொல்பவர்களும்  இருக்கிறார்கள்.
பரதனுக்கு ராமர் மேல் அண்ணா என்ற பாசத்தை விட பக்தி அதிகம். (unquestioning devotion). அதனால் தான் பரதாழ்வார் என்று சொல்லப் படுகிறார். அவருக்கு தொண்டன் சத்ருகனன். ஆழ்வார் மூலமாகவே கடவுளை காண்பவன்.
ராமாயணத்தில் இருக்கும் விஷயங்கள் அநேகம். politics, history, sociology, psychology என்று 

ஏன், ராமரை ஒரு ideal மனிதனாக கொண்டால், ஒரு மனிதன் அந்த கால கட்டத்தில் இப்படித்தான் இருந்திருக்கணும் என்று தோணும். அது சரியா, தவறா என்பது, நம் இன்றைய , பெண்கள் படித்த, பலவிதங்களில் தன்னை நிலை நிறுத்தி, தனி identity தேடும் நாளில் இது தவறாக தோன்றலாம் . அப்படிப் பார்த்தால், பார பட்சங்கள் என்று இன்றும் மனிதனிடம் காணும் குணம் தான்.
நான், ஒருவரையும்  wound பண்ணாமல் ஒன்று சொல்ல நினைக்கிறேன். ஆதியில் சமஸ்க்ரிதத்தில் (நமக்கு புரியாத) எழுதப்பட்ட காவியம் .. when we have become analytical ... நம்மை இப்படி விவாதிக்க வைக்கிறது. இப்போதைய கால கட்டத்தில், எவ்வளவோ ஏற்றுக்கொள்ளும் நாம், சிலவற்றிற்கு பொங்கி எழும் நாம் , இப்படி காவியங்களை விமரிசிக்கும் போது அதன் essence , message சிறியவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அதனால்தான் அவர்கள் நிறைய argue பண்ணுகிறார்கள். due to continuous changes of social values, we get lots of doubts.
ராமரை கடவுளாக வேண்டாம்; நல்ல மனிதராக எடுத்துக் கொள்ளலாம். என் வரையில் கிருஷ்ணர் கூட கடவுள் அவதாரம் என்றெல்லாம் நம்ப மாட்டேன். ஒரு சூப்பர் powered human being.
பிறகு வந்தவர்கள், இயேசு, நபிகள், புத்தர் மாதிரி  அவரையும் கடவுளாக்கி விட்டார்கள்.
ராமாயணத்தில், எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு. இப்போது யாரும் ராமரும் இல்லை யாரும் சீதையும் இல்லை. (வள்ளுவரின் படி, மனதால் கணவரை தவிர, வேறு ஆணை நினைக்கிறவள் கூட பத்தினி என்ற அந்தஸ்தை இழக்கிறாள். ஒரே மனைவியுடன் வாழ்கிறவர்கள் எல்லாரும் ராமர் அல்ல. மனத்தால், கண்ணால்... ராமர் தன்மையை இழக்கிறான்.
நாம் எல்லோருமே கற்றது கை மண்ணளவுதான் . ஒரு ஸ்டேஜில் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, கேள்வி கேட்காமல், காவியத்தின் இலக்கியத் தன்மையை மட்டும், அனுபவித்தால், நாம் அந்த படித்தலை இன்னும் அனுபவிப்போம். ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து எழுதப் பட்டது ராமாயணம். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, குழந்தைகளையும் நல்ல கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழக்கினால் தான் நல்லது.
என் பேரன்கள் இருவருக்கும் பூணல் போட பையனும், மாப்பிள்ளையும் சம்மதிக்க வில்லை. அதிகம் படித்தவர்கள், கேள்வி கேட்கிறார்கள். அர்த்தம் கேட்கிறார்கள்.!!!!!
நான் இரண்டு பெண்களை என் ட்ரிப்பில் சந்தித்தேன்...
ஒன்று, பிரான்ஸ் நாட்டுப் பெண் - கணவனும் அதே... அமெரிக்காவில் வாழ்கிறார்கள். (அந்த பெண்ணை அவள் மாமியார் ரொம்ப இன்சல்ட் பண்ணுகிறாளாம்  - அந்தஸ்தை காட்டி..!! எந்த நாடாக இருந்தாலும் மாமியார் மாமியார்தான் போல இருக்கு..) அவர்களை மூன்று முறை பார்த்தேன்... ஒன்றாக சாப்பிட போனபோது... அந்த ரூத் என்கிற Jew தினமும் காயத்ரி மந்திரம் சொல்கிறாள். எங்கள் இருவரையும் பார்த்து, பேசி, ஒரே நாளில் வெஜிடேரியனாக மாறினார்கள் இருவரும்.
மற்றொன்று air hostess - Malaysian .. Buddhist.....அவளுக்கு என்ன தோன்றியதோ... நான் su do cu  போடும்போது, இது, ஞாபகச் சக்தியை வளர்க்கும் என்று சொன்னவள், தான், தன சக்திக்காக, காயத்ரி மந்திரமும் , யஜுர்  வேதத்திலிருந்து நிறைய சுலோகங்களும் சொன்னாள் . சமஸ்க்ரிதம்  தெரியாது.. ஆனால் கஷ்டப்பட்டு, புக்ஸ், நெட் மூலமாக கற்றுக்கொண்டு, உச்சரிப்பிற்காக டேப், இன்டர்நெட் மூலம் கற்றுக் கொண்டு, she said, " the pronunciation & intonation should be correct for proper vibration "... அதனால் தான் சம்ஸ்க்ருதம் படித்து, சுலோகங்களையும் சைனீஸ் இலும், சமஸ்க்ரிதத்திலும்  எழுதி வைத்துக்கொண்டு சொல்வதாக சொன்னாள். இது தானே ஏற்றுக்கொண்ட மோடிவேஷன். இங்கே பசங்கள் தினமும் காயத்ரி சொனனால் மெமரி அதிகரிக்கும் என்று சொனனால், எப்படி என்று கேள்வி கேட்கிறார்கள்.
என்னை பொறுத்த வரை... பழைய காவியங்களை, முடிந்தால் பக்தியாக அல்லது இலக்கியமாக படித்தால் - மனதிற்கு நல்லது. வாழ்க்கை நெறிப்படும். இது மொத்தமும் என் அபிப்பிராயம்.
இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டு தோன்றுகிறது மனதில். ராமாயணத்தை படிக்கும்போது பாசிடிவ் எனெர்ஜி வரவேண்டும்; இப்படி சந்தேகங்களுடன் படித்தால், கொஞ்சம் நெகடிவ் சேர வாய்ப்பிருக்கிறது.
இதை சொல்ல எனக்கு இங்கே உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்... எல்லோருக்கும் என் ஆசிகள். ராமாயணம் , பாகவதம், திருப்பாவை, தேவி மகாத்மியம் , பாரதம் என்று எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும்போது படியுங்கள். முக்கூராரின் "கோதையின் பாதை" படிக்கப் படிக்க பரவசம்... அவ்வளவு அர்த்தம்.

No comments:

Post a Comment